சச்சார் குழு பரிந்துரைகள் செயல் வடிவம் பெற்றது
.சச்சார் குழு பரிந்துரைக்கான செயல் திட்டங்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளது. அரசுப் பணிகளில் முஸ்லிம்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் உருவாக்கப்படும் என்றும் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் போதிய அளவு இடம் வழங்காததை தவிர்க்க உயர்நிலைக் குழு ஒன்று உருவாக்கப்படும் என்றும் மக்களவையில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் அப்துர் ரஹ்மான் அந்துலே தெரிவித்திருக்கிறார்.
முஸ்லிம்களின் கல்வி, சமூகம் மற்றும் பொருளாதாரநிலை குறித்து ஆய்வு செய்த நீதிபதி ராஜிந்தர் சச்சார் தலைமையிலான உயர் மட்டக்குழு தனது அறிக்கையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அமைச்சரவையில் தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய 15 அம்ச செயல் திட்டத்தை மத்திய அரசுக்கு சச்சார் குழு தெரிவித்தது. இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்த சிறுழுôன்மையினர் நலத்துறை அமைச்சர் அந்துலே இது ஒரு சரித்திர சிறப்பு மிக்க அறிக்கை என்றும் அதை தாக்கல் செய்யும் இந்த நேரம் வரலாற்று சிறப்பு மிக்க தருணம் என்று அவர் குறிப்பிட்டார். அந்த அறிக்கையில் அரசுத்துறை, பொதுத்துறை நிறுவனங்கள் பொதுத்துறை வங்கிகள் ஆகியவற்றில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க ஏற்கெனவே தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் மற்றும் ஆட்சி முறையில் முஸ்லிம்களுக்குப் போதிய பங்கு வழங்கப்படாதது தொடர்பாக சச்சார் குழு கவலை தெரிவித்திருப்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் அந்துலே அந்தக் குறைபாடுகளைக் களைய உயர்நிலைக்குழு அமைக்கப்பட்ருப்பதாக தெரிவித்தார்.
சச்சார்குழு அறிக்கையில் கூறப்பட்டிருப்தைப் போல அக்குழு தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்யும். முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் தொகுதிகள் தலித்களுக்கு ஒதுக்கீடு செய்யாமல் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க இக்குழு பார்த்துக் கொள்ளும். இதன் மூலம் அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவதில் உள்ள குறைபாடுகள் களையப்படும் என்றும் அமைச்சர் அப்துர்ரஹ்ôன் அந்துலே கூறினார்.
முஸ்லிம்கள் அதிகம் வாழும் 90 மாவட்டங்களில் அடிப்படை வசதிகளையும், வேலை வாய்ப்பையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் 338 நகரங்களில் கட்டமைப்பு வசதிகளில் உள்ளக் குறைபாடுகளைக் களைவதும் அவர்களுக்குப் பொருளாதார வாய்ப்புகளை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அந்துலே தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களுக்காக மூன்று கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மவ்லானா ஆசாத் கல்வி அறக்கட்டளைக்கான மூலநிதி அதிகரிக்கப்படும். முஸ்லிம்களுக்கு தொழிற் பயிற்சி வழங்குதல் மற்றும் அவர்களுக்கு எளிதாகக் கடன் கிடைக்கச் செய்தல் ஆகியவற்றுக்கான விரிவாகத் திட்டத்தை உருவாக்கவும் அதைச் செயல்படுத்தி கண்காணிக்கவும் அமைச்சர்கள் குழு அமைக்கப்படும் என்றும் அந்துலே தெரிவிக்கிறார்.
முஸ்லிம் பெண்கள் உயர்கல்வி படிப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தேவையான இடங்களில் மகளிர் கல்விக் கூடங்கள் நிறுவப்படும். முஸ்லிம்கள் குறிப்பிட்ட அளவில் வாழும் பகுதிகளில் கஸ்தூரிபா காந்தி மழலையர் பள்ளிகள் திறக்கப்படும். முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இடைநிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளைத் திறக்க முன்னுரிமை அளிக்கப்படும். அந்தப் பகுதிகளில் சிறப்பு எழுத்தறிவு இயக்கம் நடத்தப்படும்.
முஸ்லிம்களுக்கு வங்கிக்கடன் வழங்குவதில் முன்னுரிமை வழங்குவதற்கு வசதியாக முஸ்லிம்கள் நிறைந்த பகுதிகளில் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகள் திறக்கப்படும்.
மதரஸாக் கல்வியை நவீனப்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்டும். மேலும் அவற்றில் உயர்கல்வி கற்பிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உர்து மொழி பிராந்திய மொழியாக அறிவிக்கப்பட்டு அதில் கல்வி கற்பிக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.மேலும் முஸ்லிம்களின் உடல்நலன் மற்றும் குடும்ப நிலை குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்துலே கூறினார்.
வக்ஃபு சொத்துக்களை பாதுகாக்கவும், அதன் மூலம் கிடைக்கும் வருவாயை உரிய முறையில் செலவிடவும் பொருத்தமான அமைப்பு உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.முஸ்லிம்களின் அவலநிலையை அகற்ற சமவாய்ப்பு ஆணையம் அமைக்கப்படும் என்று மேலும் அமைச்சர் உறுதி அளித்தார்
Sunday, September 2, 2007
Friday, August 31, 2007
ஹைதராபாத் குண்டுவெடிப்பு சூழ்ச்சியின் பின்னணிஹைதராபாத் நகரில் மக்கள் அதிகம் கூடும் லும்பினி பார்க் மற்றும் கோகுல்சாட் என்ற உணவகத்திலும் நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். குண்டுவெடிப்பு நடந்த பகுதி களில் இருந்து தடயங்களை சேகரித்த போது நியோஜெல்லி90 என்ற அமோனியம் நைட்ரோ ரசாயனம் கலந்த வெடிகுண்டு மருந்து பயன்படுத்தப்பட்டிருப் பதாக காவல்துறை கூறுகிறது.
இந்த சம்பவத்தில் அந்நிய நாட்டு தீவிரவாத சக்திகளின் கைவரிசை இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப் படுவார்கள் என இந்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் அறிவித்திருக்கிறார். ''மீண்டும் பொடா சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே தீவிரவாதத்தை ஒழிக்க முடியும்'' என குண்டு வெடிப்பு சம்பவ இடத்தைப் பார்வையிட வந்த அத்வானி வழக்கம்போல தெரிவித்திருக் கிறார்.
இந்த குண்டுவெடிப்பில் முஹம்மது அலி என்ற 6 வயது சிறுவன், அமீர் என்ற 8 வயது சிறுவன் மற்றும் மூன்று பெண்கள் உட்பட 11 முஸ்லிம்களும் பலியாகி உள்ளனர். மகாராஷ்டிரா வின் அஹமது நகர் மாவட்டத் தில் அமிருத் வாகினி பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மூன்று பேராசிரியர்களும் ஏழு மாணவர் களும் இச்சமயத்தில் கொல்லப் பட்டுள்ளனர். நாட்டையே உலுக்கிய இந்த குண்டுவெடிப்பில் ரஹீமுன்னிஸா பேகம் (48), முஹம்மது வாஹித் அலி (21), அஹ்யா அப்துல் காதர் (17), அக்ரமுல்லாஹ்கான் (22), அஹ்மது முஹினுத்தீன் (45), முஹம்மது சலீம் (47), ஃபரீதா நாஸ் (35), முஹம்மது அலி (6), அமீர் (8), இப்ராஹிம்கான் (43), மற்றும் இர்ஷாத் அஹ்மத் (19) ஆகியோர் பலியாகி உள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பில் ஒரு குடும்பமே கூண்டோடு பலியான பரிதாபச் சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
கோகுல் சாட் பண்டார் என்ற துரித உணவகத்தில் முஹம்மது சலீமின் குடும்பம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது நிகழ்ந்த குண்டுவெடிப்பில், அவரும் அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்களும் பலியாகி விட்டனர். ஹுமாயுன் நகர் என்ற பகுதியில் கோல்கொண்டா அடுக்குமாடி குடியிருப்பில் சலீமின் குடும்பம் வசித்து வந்துள்ளது.
சிதறிய சலீம் குடும்பத்தினரின் உடல்களைப் பார்த்து கோல் கொண்டா குடியிருப்புவாசிகள் கதறியது நெஞ்சைப் பிழியும் காட்சியாக இருந்தது.''ஹைதராபாத் நகரம் பாதுகாப்பு இல்லாத இடமாக மாறிவிட்டதே'' என்று ஒரு பெண் கூடியிருந்த செய்தியாளர்களைப் பார்த்து கதறினார்.
குண்டுவெடிப்பு குறித்த செய்தி கிடைத்ததும் சலீமின் சகோதரர் சமீர், அவரைத் தொடர்பு கொள்ள முயன்றிருக்கிறார். செல்பேசி அழைப்புக்கு பதில் வராததால் ஒவ்வொரு மருத்துவ மனையாகச் சென்று பார்த்திருக் கிறார். இறுதியில் உஸ்மானியா மருத்துவமனையில் அந்தக் குடும்பமே உடல் சிதறி இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்.''இந்த படுபாதகச் செயலை செய்தவர் யாராக இருந்தாலும் அவர்களை இழுத்து வந்து பொது இடத்தில் தூக்கிலிட்டுக் கொல்ல வேண்டும்'' என பலியானவர் களின் உறவினர்கள் குமுறலுடன் கூறினர்.
''பயங்கரவாதிகள், மனித நேயத்திற்கும் மதங்களுக்கும் எதிரானவர்கள்; இவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்'' என ஆவேசமாகக் குறிப்பிட்டார் அஸதுல்லாஹ் கான். இவர் இந்த குண்டுவெடிப் பில் தனது ஒரே மகனான அக்ரமுல்லாகானை பறிகொடுத் தவர். அம்பர்பேட் மையவாடியில் தனது ஒரே மகனை அடக்கம் செய்துவிட்டு அவர் பயங்கரவாதி களுக்கு எதிராக முழக்கமிட்டார். அந்தக் காட்சி கூடியிருந்தவர் களை உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஆழ்த்தியது.
''பயங்கரவாதிகள் மனிதகுலத்திற்கு எதிரானவர்கள் அவர்கள் ஹிந்துக்கள். முஸ்லிம் கள் என வேறுபாடு பார்க்காமல் அனைவரையும் கொன்று குவிப்பவர்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது ''என்கிறார் ஃபர்ஹா ஃபரூக்கி என்ற இளம்பெண் அதிர்ச்சி விலகாமல்.
இது மிகவும் கோழைத் தனமான செயல். குற்றவாளிகள் கண்டறியப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அதேநேரம் விசாரணைகள் வெளிப்படையாகவும் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறியும் வகையிலும் இருக்க வேண்டும் என தமுமுக தெரிவித்துள்ளது.
பயங்கரவாதிகளின் இலக்காக ஆந்திர மாநிலம், குறிப்பாக ஹைதராபாத் நகரம் ஏன் குறிவைக்கப்படுகிறது என்பதற்கு நடுநிலையாளர்கள் சில திடுக் கிடும் காரணங்களைக் கூறுகிறார் கள்.
நடுநிலையாளர்களும், சமூக ஆர்வலர்களும் ஆந்திர மாநிலப் பகுதியை சூழ்ச்சி வலையில் சிக்கவைக்கும் சதிகளுக்கான காரணங்கள் பற்றி கீழ்க்கண்ட வாறு பட்டியலிடுகிறார்கள்.
1. ஹைதராபாத் அதிநவீன தொழில்நுட்ப நகராக விஸ்வ ரூபம் எடுத்து வருகிறது. இது நம்நாட்டின் வளர்ச்சியைப் பிடிக்காத சக்திகளின் கண்களை உறுத்துகிறது.
2. ஹைதராபாத் நகரம் முஸ்லிம் களின் பாரம்பரிய பெருமைமிக்க நகராகத் திகழ்கிறது.
3. தென்னிந்திய மாநிலங்களில் காங்கிரஸின் கோட்டையாக ஆந்திர மாநிலம் விளங்குகிறது. காங்கிரசுக்கு அதிக அளவு நாடாளுமன்ற உறுப்பினர்களை வழங்கும் மாநிலமாக இருப்ப தோடு ஹிந்துத்துவ சக்திகள் சற்றே துளிர்விடக் கூட வாய்ப்பில்லாத பூமியாகவும் ஆந்திரம் விளங்குகிறது.
4. எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்து மக்க ளாலும் விரும்பப்படும் தலைவராக ஆந்திர முதல மைச்சர் டாக்டர் ஒய். ராஜசேகர ரெட்டி விளங்கு கிறார். குறிப்பாக சமூகத்தில் அழுத்தப்பட்டுக் கொண்டி ருக்கும் முஸ்லிம்களுக்காக, அவர்களது நிலையை மேம்படுத்த இடஒதுக் கீட்டுக்கு வழிசெய்தார்.
அதற்காக தடங்கல் ஏற்படுத்திய தடைகளை யெல்லாம் உடைத்து முஸ்லிம் களுக்கு இடஒதுக்கீடு வழங் கிட மும்முரம் காட்டினார்.
இத்தகைய பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட ஆந்திர அரசுக்கு இடைவிடாத தலைவலி கொடுத்து அரசியல் அரங்கில் அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே உள்ளூர் பயங்கரவாதிகளும், வெளிநாட்டு பயங்கரவாதிகளும் கைகோர்த்திருக்கக் கூடும் என நடுநிலையாளர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.
ஏற்கனவே ஆந்திர காவல் துறையில் சில கறுப்பாடுகள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத் தும் விதமாக, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புக்குப் பிறகு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் முஸ்லிம் அப்பாவிகளை சுட்டுக் கொன்றது, கம்யூனிஸ்ட்டுகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மூர்க்கத்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி ஏழைப் பாட்டாளிகளை சுட்டுக் கொன்றது போன்ற சம்பவங்களை கவனத்தில் கொண்டு அனைத்துவித நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த வேண்டும் என நாட்டு மக்கள் விரும்புகிறார்கள்.
இதற்கிடையில் குண்டுவைத்த வர்களுக்கு உதவியவர் என கோழிக்கறி கடைக்காரர் ஒருவர் கைது செய்யப்படுகிறார். மீண்டும் ஒரு காமெடிக் காட்சியை அரங்கேற்ற வேண்டாம் என காவல்துறையை நாட்டு மக்கள் கெஞ்சிக் கேட்கிறார்கள்.
இதற்கிடையில் மீண்டும் பொடா வேண்டும் என்ற கோரிக்கை காவி முகாமிலிருந்து எழுப்பப்படுகிறது. 'அறுக்கத் தெரியாதவன் இடுப்பில் அறுபத் தெட்டு அரிவாளாம்' என்ற பழமொழியை அவர்களின் கூற்று நினைவூட்டுகிறது. இந்தியாவின் இறையாண்மைக்கு உச்சக்கட்ட ஆபத்து இவர்களது ஆட்சியில் தான் ஏற்பட்டது என்பதை நாடு மறக்கவில்லை. இவர்கள் குட்டையைக் குழப்பாமல் விலகி இருப்பதே உத்தமம் என நாட்டு மக்கள் கருதுகிறார்கள்.
நாட்டு மக்களின் அமைதிக்கு வேட்டு வைக்க முயலும் பயங்கர வாதிகளின் படுபாதகச் செயல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பெங்களூரு அறிவியல் கழக துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் அப்பாவி முஸ்லிம்களை வளைத்து விசாரித்ததோடு சரி. ஓராண்டுக்கு மேல் ஆகியும் உண்மைக் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படவில்லை. அவ்வாறே, மாலேகான் பள்ளிவாசல் குண்டு வெடிப்பு மற்றும் ஹைதராபாத் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு போன்றவற்றில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். உண்மைக் குற்றவாளி கள் கண்டுபிடிக்கப்பட்டு உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப் பட்டிருந்தால் இத்தகைய செயல்கள் தொடராது என்பதே நடுநிலை யாளர்களின் கருத்தாக உள்ளது.
ஆந்திர அரசும், மத்திய அரசும் இணைந்து சதிகாரர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்
இந்த சம்பவத்தில் அந்நிய நாட்டு தீவிரவாத சக்திகளின் கைவரிசை இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப் படுவார்கள் என இந்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் அறிவித்திருக்கிறார். ''மீண்டும் பொடா சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே தீவிரவாதத்தை ஒழிக்க முடியும்'' என குண்டு வெடிப்பு சம்பவ இடத்தைப் பார்வையிட வந்த அத்வானி வழக்கம்போல தெரிவித்திருக் கிறார்.
இந்த குண்டுவெடிப்பில் முஹம்மது அலி என்ற 6 வயது சிறுவன், அமீர் என்ற 8 வயது சிறுவன் மற்றும் மூன்று பெண்கள் உட்பட 11 முஸ்லிம்களும் பலியாகி உள்ளனர். மகாராஷ்டிரா வின் அஹமது நகர் மாவட்டத் தில் அமிருத் வாகினி பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மூன்று பேராசிரியர்களும் ஏழு மாணவர் களும் இச்சமயத்தில் கொல்லப் பட்டுள்ளனர். நாட்டையே உலுக்கிய இந்த குண்டுவெடிப்பில் ரஹீமுன்னிஸா பேகம் (48), முஹம்மது வாஹித் அலி (21), அஹ்யா அப்துல் காதர் (17), அக்ரமுல்லாஹ்கான் (22), அஹ்மது முஹினுத்தீன் (45), முஹம்மது சலீம் (47), ஃபரீதா நாஸ் (35), முஹம்மது அலி (6), அமீர் (8), இப்ராஹிம்கான் (43), மற்றும் இர்ஷாத் அஹ்மத் (19) ஆகியோர் பலியாகி உள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பில் ஒரு குடும்பமே கூண்டோடு பலியான பரிதாபச் சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
கோகுல் சாட் பண்டார் என்ற துரித உணவகத்தில் முஹம்மது சலீமின் குடும்பம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது நிகழ்ந்த குண்டுவெடிப்பில், அவரும் அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்களும் பலியாகி விட்டனர். ஹுமாயுன் நகர் என்ற பகுதியில் கோல்கொண்டா அடுக்குமாடி குடியிருப்பில் சலீமின் குடும்பம் வசித்து வந்துள்ளது.
சிதறிய சலீம் குடும்பத்தினரின் உடல்களைப் பார்த்து கோல் கொண்டா குடியிருப்புவாசிகள் கதறியது நெஞ்சைப் பிழியும் காட்சியாக இருந்தது.''ஹைதராபாத் நகரம் பாதுகாப்பு இல்லாத இடமாக மாறிவிட்டதே'' என்று ஒரு பெண் கூடியிருந்த செய்தியாளர்களைப் பார்த்து கதறினார்.
குண்டுவெடிப்பு குறித்த செய்தி கிடைத்ததும் சலீமின் சகோதரர் சமீர், அவரைத் தொடர்பு கொள்ள முயன்றிருக்கிறார். செல்பேசி அழைப்புக்கு பதில் வராததால் ஒவ்வொரு மருத்துவ மனையாகச் சென்று பார்த்திருக் கிறார். இறுதியில் உஸ்மானியா மருத்துவமனையில் அந்தக் குடும்பமே உடல் சிதறி இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்.''இந்த படுபாதகச் செயலை செய்தவர் யாராக இருந்தாலும் அவர்களை இழுத்து வந்து பொது இடத்தில் தூக்கிலிட்டுக் கொல்ல வேண்டும்'' என பலியானவர் களின் உறவினர்கள் குமுறலுடன் கூறினர்.
''பயங்கரவாதிகள், மனித நேயத்திற்கும் மதங்களுக்கும் எதிரானவர்கள்; இவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்'' என ஆவேசமாகக் குறிப்பிட்டார் அஸதுல்லாஹ் கான். இவர் இந்த குண்டுவெடிப் பில் தனது ஒரே மகனான அக்ரமுல்லாகானை பறிகொடுத் தவர். அம்பர்பேட் மையவாடியில் தனது ஒரே மகனை அடக்கம் செய்துவிட்டு அவர் பயங்கரவாதி களுக்கு எதிராக முழக்கமிட்டார். அந்தக் காட்சி கூடியிருந்தவர் களை உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஆழ்த்தியது.
''பயங்கரவாதிகள் மனிதகுலத்திற்கு எதிரானவர்கள் அவர்கள் ஹிந்துக்கள். முஸ்லிம் கள் என வேறுபாடு பார்க்காமல் அனைவரையும் கொன்று குவிப்பவர்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது ''என்கிறார் ஃபர்ஹா ஃபரூக்கி என்ற இளம்பெண் அதிர்ச்சி விலகாமல்.
இது மிகவும் கோழைத் தனமான செயல். குற்றவாளிகள் கண்டறியப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அதேநேரம் விசாரணைகள் வெளிப்படையாகவும் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறியும் வகையிலும் இருக்க வேண்டும் என தமுமுக தெரிவித்துள்ளது.
பயங்கரவாதிகளின் இலக்காக ஆந்திர மாநிலம், குறிப்பாக ஹைதராபாத் நகரம் ஏன் குறிவைக்கப்படுகிறது என்பதற்கு நடுநிலையாளர்கள் சில திடுக் கிடும் காரணங்களைக் கூறுகிறார் கள்.
நடுநிலையாளர்களும், சமூக ஆர்வலர்களும் ஆந்திர மாநிலப் பகுதியை சூழ்ச்சி வலையில் சிக்கவைக்கும் சதிகளுக்கான காரணங்கள் பற்றி கீழ்க்கண்ட வாறு பட்டியலிடுகிறார்கள்.
1. ஹைதராபாத் அதிநவீன தொழில்நுட்ப நகராக விஸ்வ ரூபம் எடுத்து வருகிறது. இது நம்நாட்டின் வளர்ச்சியைப் பிடிக்காத சக்திகளின் கண்களை உறுத்துகிறது.
2. ஹைதராபாத் நகரம் முஸ்லிம் களின் பாரம்பரிய பெருமைமிக்க நகராகத் திகழ்கிறது.
3. தென்னிந்திய மாநிலங்களில் காங்கிரஸின் கோட்டையாக ஆந்திர மாநிலம் விளங்குகிறது. காங்கிரசுக்கு அதிக அளவு நாடாளுமன்ற உறுப்பினர்களை வழங்கும் மாநிலமாக இருப்ப தோடு ஹிந்துத்துவ சக்திகள் சற்றே துளிர்விடக் கூட வாய்ப்பில்லாத பூமியாகவும் ஆந்திரம் விளங்குகிறது.
4. எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்து மக்க ளாலும் விரும்பப்படும் தலைவராக ஆந்திர முதல மைச்சர் டாக்டர் ஒய். ராஜசேகர ரெட்டி விளங்கு கிறார். குறிப்பாக சமூகத்தில் அழுத்தப்பட்டுக் கொண்டி ருக்கும் முஸ்லிம்களுக்காக, அவர்களது நிலையை மேம்படுத்த இடஒதுக் கீட்டுக்கு வழிசெய்தார்.
அதற்காக தடங்கல் ஏற்படுத்திய தடைகளை யெல்லாம் உடைத்து முஸ்லிம் களுக்கு இடஒதுக்கீடு வழங் கிட மும்முரம் காட்டினார்.
இத்தகைய பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட ஆந்திர அரசுக்கு இடைவிடாத தலைவலி கொடுத்து அரசியல் அரங்கில் அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே உள்ளூர் பயங்கரவாதிகளும், வெளிநாட்டு பயங்கரவாதிகளும் கைகோர்த்திருக்கக் கூடும் என நடுநிலையாளர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.
ஏற்கனவே ஆந்திர காவல் துறையில் சில கறுப்பாடுகள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத் தும் விதமாக, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புக்குப் பிறகு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் முஸ்லிம் அப்பாவிகளை சுட்டுக் கொன்றது, கம்யூனிஸ்ட்டுகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மூர்க்கத்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி ஏழைப் பாட்டாளிகளை சுட்டுக் கொன்றது போன்ற சம்பவங்களை கவனத்தில் கொண்டு அனைத்துவித நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த வேண்டும் என நாட்டு மக்கள் விரும்புகிறார்கள்.
இதற்கிடையில் குண்டுவைத்த வர்களுக்கு உதவியவர் என கோழிக்கறி கடைக்காரர் ஒருவர் கைது செய்யப்படுகிறார். மீண்டும் ஒரு காமெடிக் காட்சியை அரங்கேற்ற வேண்டாம் என காவல்துறையை நாட்டு மக்கள் கெஞ்சிக் கேட்கிறார்கள்.
இதற்கிடையில் மீண்டும் பொடா வேண்டும் என்ற கோரிக்கை காவி முகாமிலிருந்து எழுப்பப்படுகிறது. 'அறுக்கத் தெரியாதவன் இடுப்பில் அறுபத் தெட்டு அரிவாளாம்' என்ற பழமொழியை அவர்களின் கூற்று நினைவூட்டுகிறது. இந்தியாவின் இறையாண்மைக்கு உச்சக்கட்ட ஆபத்து இவர்களது ஆட்சியில் தான் ஏற்பட்டது என்பதை நாடு மறக்கவில்லை. இவர்கள் குட்டையைக் குழப்பாமல் விலகி இருப்பதே உத்தமம் என நாட்டு மக்கள் கருதுகிறார்கள்.
நாட்டு மக்களின் அமைதிக்கு வேட்டு வைக்க முயலும் பயங்கர வாதிகளின் படுபாதகச் செயல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பெங்களூரு அறிவியல் கழக துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் அப்பாவி முஸ்லிம்களை வளைத்து விசாரித்ததோடு சரி. ஓராண்டுக்கு மேல் ஆகியும் உண்மைக் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படவில்லை. அவ்வாறே, மாலேகான் பள்ளிவாசல் குண்டு வெடிப்பு மற்றும் ஹைதராபாத் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு போன்றவற்றில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். உண்மைக் குற்றவாளி கள் கண்டுபிடிக்கப்பட்டு உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப் பட்டிருந்தால் இத்தகைய செயல்கள் தொடராது என்பதே நடுநிலை யாளர்களின் கருத்தாக உள்ளது.
ஆந்திர அரசும், மத்திய அரசும் இணைந்து சதிகாரர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்
Thursday, August 9, 2007
கிருஷ்ணா கமிஷன் அறிக்கை
கிருஷ்ணா கமிஷன் அறிக்கை
குற்றவாளிகள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் நடவடிக்கை உறுதி
மகாராஷ்ட்ரா அரசுஸ்ரீகிருஷ்ணா கமிஷனின் அறிக்கையை செயல்படுத்தக் கோரி நாடேங்கும் அழுத்தங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, மகராஷ்ட்ராவின் துணை முதல்வரும் உள்துறை அமைச்சருமான ஆர்.ஆர்.பாட்டில் காவல்துறை உயர்அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை மகராஷ்ட்ரா மாநில அரசின் தலைமைச் செயலகமான மந்த்ராலயாவில் நடந்தது.
முன்னதாக துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டிலை முஸ்லிம் தலைவர்கள் குழு ஒன்று சந்தித்தது. முன்னனி வழக்கறிஞரும் தேசியவாதக் கட்சியின் முக்கிய பிரமுகருமான மஜீத்மேமன் இக்குழுவிற்கு தலைமை வகித்தார். 1993ல் நிகழ்ந்த மும்பை கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி மேலும் தாமதிக்கப்படக்கூடாது என வலியுறுத்தினார்கள். முஸ்லிம் குழு சங்கத்துடன் தொடர்ச்சியாக காவல்துறை உயர் அதிகாரிகளுடனான மற்றும் துணை முதலமைச்சரின் கூட்டம் நடத்தப்படுவதாக கருதப்படுகிறது. உடனடியாக அரசு தலைமை வழக்கறிஞர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளைக் கூட்டி ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என மஜீத் மேமன் தெரிவித்திருந்தார். மும்பைக் கலவரக் குற்றவாளிகள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்டும் என ஆர்.ஆர்.பாட்டீல் உறுதி அளித்தார்.
குற்றவாளிகள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் நடவடிக்கை உறுதி
மகாராஷ்ட்ரா அரசுஸ்ரீகிருஷ்ணா கமிஷனின் அறிக்கையை செயல்படுத்தக் கோரி நாடேங்கும் அழுத்தங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, மகராஷ்ட்ராவின் துணை முதல்வரும் உள்துறை அமைச்சருமான ஆர்.ஆர்.பாட்டில் காவல்துறை உயர்அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை மகராஷ்ட்ரா மாநில அரசின் தலைமைச் செயலகமான மந்த்ராலயாவில் நடந்தது.
முன்னதாக துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டிலை முஸ்லிம் தலைவர்கள் குழு ஒன்று சந்தித்தது. முன்னனி வழக்கறிஞரும் தேசியவாதக் கட்சியின் முக்கிய பிரமுகருமான மஜீத்மேமன் இக்குழுவிற்கு தலைமை வகித்தார். 1993ல் நிகழ்ந்த மும்பை கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி மேலும் தாமதிக்கப்படக்கூடாது என வலியுறுத்தினார்கள். முஸ்லிம் குழு சங்கத்துடன் தொடர்ச்சியாக காவல்துறை உயர் அதிகாரிகளுடனான மற்றும் துணை முதலமைச்சரின் கூட்டம் நடத்தப்படுவதாக கருதப்படுகிறது. உடனடியாக அரசு தலைமை வழக்கறிஞர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளைக் கூட்டி ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என மஜீத் மேமன் தெரிவித்திருந்தார். மும்பைக் கலவரக் குற்றவாளிகள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்டும் என ஆர்.ஆர்.பாட்டீல் உறுதி அளித்தார்.
Friday, August 3, 2007
உ.பி.யில் ஒரு குஜராத் துவம்சம் செய்யப்பட்ட முஸ்லிம் கிராமம்
உ.பி.யில் ஒரு குஜராத் துவம்சம்
செய்யப்பட்ட முஸ்லிம் கிராமம்
சத்தியப்பிரியன்
சுதந்திர இந்தியாவில் நடக்காத ஒரு அக்கிரமம் உத்தரப்பிரதேசத்தின் ஒரு சிறிய கிராமத்தில் நடந்துள்ளது.
கூட்டம் கூட்டமாக குடியிருப்புகளில் புகுந்து பாலியல் வன்முறைகள், வீடுகள் தீ வைப்பு, சூறையாடு தல் என அத்தனைக் கொடுமைகளும் ஒரு கிராமத்தினரின் மீது ஏவப் பட்டன.
பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் முஸ்லிம்கள். இந்தக் கொடுமைகளை பாஜகவின் முன்னாள் எம்.எல்.ஏ.வும் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஓர் அமைச்சரின் அடிப்பொடிகளும் இந்த அக்கிரமத்தை அரங்கேற்றியுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் சரஸ்வதி மாவட்டத்தில் தானிதீ கிராமம். இங்கு 50 முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கின்றன. பண்டிட் திடுவதியின் 20 வயது மகள் வந்தனா. இவரை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய வைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே காதலித்த முஸ்லிம் வாலிபர் சலீமுடன் ஓடிவிட்டார்.
பிராமணர்களின் ரிமோட் கண்ட்ரோலில் நடப்பதாகக் கூறப்படும் மாயாவதி ஆட்சியில் நடந்த இந்தச் சம்பவம் அவர்களிடையே கடும் ஆத்திரத்தை ஏற்படுத்திவிட்டது.
இந்த ஒரு சம்பவத்தின் மூலம் ஒட்டுமொத்த கிராம முஸ்லிம்கள் அனைவரையும் குற்றவாளிகளாய் ஆளும் வர்க்கத்தினர் சித்தரித்தனர். அதனால் பழிவாங்கும் நடவடிக்கை களைத் தொடங்கினர்.
மாயாவதி அமைச்சரவையில் ஆயுர்வேதத்துறை அமைச்சரான மிஸ்ராவின் சகோதரர் அசோக் மிஸ்ராவின் ரவுடிகள் ஆயிரக்கணக் கானோர் வாகனங்களில் அந்த குட்டிக் கிராமத்தை சூழ்ந்தனர். ஆறு மணி நேரம் அது மோடியின் குஜராத்தாக மாறிவிட்டது. முஸ்லிம்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. குடியிருப்புகள் அனைத்தும் தீவைத்துக் கொளுத்தப் பட்டன. சிறுமிகளையும், இளம் பெண்களையும் அடித்து ஆடை களைக் களைந்து அவர்களை அவமானப்படுத்தியது மட்டுமல்லாமல் ஏளனமாக வும் சிரித்தனர். அதோடு அவமானத்தோடு ஓடி ஒளிந்த அந்த அபலைப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு இலக்காயினர்.
காலை 10 மணிக்கு வந்த அவர்கள் வெறியாட்டம் ஆடித் தீர்த்துவிட்டுச் சென்றனர். தங்களது பெண் வந்தனா வந்து சேரவில்லை என்றால் கிராமத்தையே நிர்மூலமாக்குவோம் என்று எச்சரித்துள்ளனர். இவர்க ளோடு சில காவல்துறையினரும் வந்துள் ளனர். 13 முஸ்லிம் இளைஞர்களை இழுத்துச் சென்று காவல்துறையினர் லாக்கப்பில் அடைத்தனர்.
பாலியல் வன்முறைக்கு இலக்காக் கப்பட்ட பெண்களில் இருவர் 50 வயது மேற்பட்டவர்கள்.
காலை 9.30 மணிக்கு ஒருசில காவலர்கள் வந்து நோட்டமிட்டுச் சென்ற பிறகே இந்த அக்கிரமச் செயல் நிகழ்ந்துள்ளது.
இந்தக் கொடூரமான தாக்குதலை திட்டமிட்ட முக்கிய விஷமிகள் அசோக் மிஸ்ரா மற்றும் ஞானஷ்யாம்பதக் என்ற இருவரும் ஆவர். இவர்களது தாக்குதலில் யாருக்கும் தலையில் காயமோ, வெளிக்காயமோ ஏற்படவில்லை. இத்தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை. எனினும் மிகவும் மோசமாக தாக்கப்பட் டனர். கச்சிதமாக கடுமையான உள்காயங் கள் ஏற்படும் வண்ணம் அவர்களது தாக்குதல் அமைந்திருந்தது. சங்பரிவாரத் தினர் மட்டுமே இவ்வாறு தாக்குதல் நடத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொடூரமான இந்நிகழ்வை அச்சத்தின் காரணமாக கிராம மக்கள் மறைத்து விட்டனர். உண்மை அறிந்து அந்தப் பகுதி காங்கிரஸ் தலைவர் முஹம்மது அஸ்லம் ரைனி செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டினார். அதோடு காவல்துறை அலுவலகத்திற்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டத்தையும் அறிவித்தார்.
அரசியல் கட்சிகள் வரிசையாக போராட்டத்தை அறிவித்தன. தானிதீனி கிராமத்தின் முஸ்லிம்களில் அதிகம் பேர் இன்னும் மறைந்ததே வாழ்கின் றனர். கிராமத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றம் நீடிக்கிறது. மாற்றங்களை ஏற்படுத்து வதாக நினைத்து மாயாவதி சிக்கலில் மாட்டிக்கொண்டார்
செய்யப்பட்ட முஸ்லிம் கிராமம்
சத்தியப்பிரியன்
சுதந்திர இந்தியாவில் நடக்காத ஒரு அக்கிரமம் உத்தரப்பிரதேசத்தின் ஒரு சிறிய கிராமத்தில் நடந்துள்ளது.
கூட்டம் கூட்டமாக குடியிருப்புகளில் புகுந்து பாலியல் வன்முறைகள், வீடுகள் தீ வைப்பு, சூறையாடு தல் என அத்தனைக் கொடுமைகளும் ஒரு கிராமத்தினரின் மீது ஏவப் பட்டன.
பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் முஸ்லிம்கள். இந்தக் கொடுமைகளை பாஜகவின் முன்னாள் எம்.எல்.ஏ.வும் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஓர் அமைச்சரின் அடிப்பொடிகளும் இந்த அக்கிரமத்தை அரங்கேற்றியுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் சரஸ்வதி மாவட்டத்தில் தானிதீ கிராமம். இங்கு 50 முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கின்றன. பண்டிட் திடுவதியின் 20 வயது மகள் வந்தனா. இவரை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய வைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே காதலித்த முஸ்லிம் வாலிபர் சலீமுடன் ஓடிவிட்டார்.
பிராமணர்களின் ரிமோட் கண்ட்ரோலில் நடப்பதாகக் கூறப்படும் மாயாவதி ஆட்சியில் நடந்த இந்தச் சம்பவம் அவர்களிடையே கடும் ஆத்திரத்தை ஏற்படுத்திவிட்டது.
இந்த ஒரு சம்பவத்தின் மூலம் ஒட்டுமொத்த கிராம முஸ்லிம்கள் அனைவரையும் குற்றவாளிகளாய் ஆளும் வர்க்கத்தினர் சித்தரித்தனர். அதனால் பழிவாங்கும் நடவடிக்கை களைத் தொடங்கினர்.
மாயாவதி அமைச்சரவையில் ஆயுர்வேதத்துறை அமைச்சரான மிஸ்ராவின் சகோதரர் அசோக் மிஸ்ராவின் ரவுடிகள் ஆயிரக்கணக் கானோர் வாகனங்களில் அந்த குட்டிக் கிராமத்தை சூழ்ந்தனர். ஆறு மணி நேரம் அது மோடியின் குஜராத்தாக மாறிவிட்டது. முஸ்லிம்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. குடியிருப்புகள் அனைத்தும் தீவைத்துக் கொளுத்தப் பட்டன. சிறுமிகளையும், இளம் பெண்களையும் அடித்து ஆடை களைக் களைந்து அவர்களை அவமானப்படுத்தியது மட்டுமல்லாமல் ஏளனமாக வும் சிரித்தனர். அதோடு அவமானத்தோடு ஓடி ஒளிந்த அந்த அபலைப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு இலக்காயினர்.
காலை 10 மணிக்கு வந்த அவர்கள் வெறியாட்டம் ஆடித் தீர்த்துவிட்டுச் சென்றனர். தங்களது பெண் வந்தனா வந்து சேரவில்லை என்றால் கிராமத்தையே நிர்மூலமாக்குவோம் என்று எச்சரித்துள்ளனர். இவர்க ளோடு சில காவல்துறையினரும் வந்துள் ளனர். 13 முஸ்லிம் இளைஞர்களை இழுத்துச் சென்று காவல்துறையினர் லாக்கப்பில் அடைத்தனர்.
பாலியல் வன்முறைக்கு இலக்காக் கப்பட்ட பெண்களில் இருவர் 50 வயது மேற்பட்டவர்கள்.
காலை 9.30 மணிக்கு ஒருசில காவலர்கள் வந்து நோட்டமிட்டுச் சென்ற பிறகே இந்த அக்கிரமச் செயல் நிகழ்ந்துள்ளது.
இந்தக் கொடூரமான தாக்குதலை திட்டமிட்ட முக்கிய விஷமிகள் அசோக் மிஸ்ரா மற்றும் ஞானஷ்யாம்பதக் என்ற இருவரும் ஆவர். இவர்களது தாக்குதலில் யாருக்கும் தலையில் காயமோ, வெளிக்காயமோ ஏற்படவில்லை. இத்தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை. எனினும் மிகவும் மோசமாக தாக்கப்பட் டனர். கச்சிதமாக கடுமையான உள்காயங் கள் ஏற்படும் வண்ணம் அவர்களது தாக்குதல் அமைந்திருந்தது. சங்பரிவாரத் தினர் மட்டுமே இவ்வாறு தாக்குதல் நடத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொடூரமான இந்நிகழ்வை அச்சத்தின் காரணமாக கிராம மக்கள் மறைத்து விட்டனர். உண்மை அறிந்து அந்தப் பகுதி காங்கிரஸ் தலைவர் முஹம்மது அஸ்லம் ரைனி செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டினார். அதோடு காவல்துறை அலுவலகத்திற்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டத்தையும் அறிவித்தார்.
அரசியல் கட்சிகள் வரிசையாக போராட்டத்தை அறிவித்தன. தானிதீனி கிராமத்தின் முஸ்லிம்களில் அதிகம் பேர் இன்னும் மறைந்ததே வாழ்கின் றனர். கிராமத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றம் நீடிக்கிறது. மாற்றங்களை ஏற்படுத்து வதாக நினைத்து மாயாவதி சிக்கலில் மாட்டிக்கொண்டார்
ஆந்திராவில் இரண்டு ஹனீஃப்கள்
முஹம்மத் ஹனீஃபுக்கு தீவிரவாத பழி சுமத்தி திருதிருவென விழித்து திக்கு முக்காடி தவித்த ஆஸ்திரேலியாவைப் பற்றி தற்போது பரபரப்பாக பேசப் படுகிறது. ஆனால் டாக்டர் ஹனீஃபை விட பல மடங்கு வேதனையையும் துன்பங்களையும் அனுபவித்த இளைஞர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
2001 செப்டம்பர் 11ல் நிகழ்ந்த நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதல் தொடர்பாக இரண்டு இந்திய இளைஞர்களை குறிப்பாக ஹைதராபாத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களை அமெரிக்க அரசு முதலில் சந்தேகத்தின் பேரில் கைது செய்தது.
முஹம்மது அய்யூப், ஜாவித் அஹ்மத் இருவரையும் இரட்டைக் கோபுர தாக்குதல் வழக்கில் தொடர்புடையவர்கள் என பல ஆண்டுகளாக சிறையி லடைத்தது.
கடந்த ஆண்டு இருவரையும் அமெரிக்க அரசு விடுதலை செய்தது. இவர்கள் இருவர் மீதான தீவிரவாத தொடர்பு நிரூபிக்கப்படவில்லை என்ப தால் அவர்கள் விடுதலை செய்யப் பட்டனர்.
முஹம்மத் ஹனீஃப், அவரது மனைவி ஃபிர்தவ்ஸ் அர்ஷியா மற்றும் அவர்களது குடும்பத்தினரின் உணர்வுகளை எங்களால் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. ஏனெனில் நாங்களும் அதைப் போன்ற ஒரு துன்பத்தை அனுபவித்த வர்கள் என்று ஜாவீத் அஸ்மத்தும் அவரது மனைவி தஸ்லீமும் கூறுகின் றனர்.
முஹம்மத் ஹனீஃப் என்ற கர்நாடக சகோதரருக்கு ஆஸ்திரேலியாவில் நேர்ந்தது தான் அமெரிக்காவில் எனக்கும் நடந்தது என்று குறிப்பிடும் ஜாவித் அஸ்மத், நான் உலக வர்த்தக வளாகத்தை தாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவன் என என்னைக் கைது செய்தார்கள். நான் சவூதி அரேபியாவின் பிரஜை என்றார் கள். அதற்கு போலியாக பாஸ்போர்டும், பிறப்புச் சான்றிதழும் புனைந்தார்கள். எனக்கு விமானம் ஓட்டத் தெரியும் என்று பொய்யாக ஒரு ஆவணத்தை தயார் செய்தார்கள். இதில் வேடிக்கை என்னவெனில் எனக்கு விமானம் ஓட்டத் தெரியாது. எங்கள் மீது கூறிய குற்றச்சாட்டுகள் எதையும் நீதிமன்றத்தில் அமெரிக்க அரசால் நிரூபிக்க முடிய வில்லை. வழக்கை இழுத்தடிக்கும் மிகக் கேவலமான தந்திரத்தை கையாண்டார் கள். இறுதியில் நீதிமன்றத்தால் நாங்கள் விடுதலை செய்யப்பட்டோம்.
ஹனீஃபுக்கு ஆதரவாக இந்திய அரசு களம் இறங்கியது. ஹனீஃப் குறித்த அனைத்து வி'யங்களும் பகிரங்கப் படுத்தன. அதனால் புனையப்பட்ட கற்பனை குற்றச்சாட்டுகள் மறைந்து உண்மைகள் வெளிவரத் துவங்கின என்று கூறிய ஜாவீத் இதற்கென இந்திய அரசை பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
தங்களை சிறையில் தள்ளியதற்கும் கண்ணியக் குறைவை ஏற்படுத்தியதற்கும் இழப்பீடு கோரி அமெரிக்க அரசை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கும் ஜாவீத் அஸ்மத் விரைவில் வெற்றி கிடைக்கும் என்றும் நம்புகிறார்
முஹம்மத் ஹனீஃபுக்கு தீவிரவாத பழி சுமத்தி திருதிருவென விழித்து திக்கு முக்காடி தவித்த ஆஸ்திரேலியாவைப் பற்றி தற்போது பரபரப்பாக பேசப் படுகிறது. ஆனால் டாக்டர் ஹனீஃபை விட பல மடங்கு வேதனையையும் துன்பங்களையும் அனுபவித்த இளைஞர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
2001 செப்டம்பர் 11ல் நிகழ்ந்த நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதல் தொடர்பாக இரண்டு இந்திய இளைஞர்களை குறிப்பாக ஹைதராபாத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களை அமெரிக்க அரசு முதலில் சந்தேகத்தின் பேரில் கைது செய்தது.
முஹம்மது அய்யூப், ஜாவித் அஹ்மத் இருவரையும் இரட்டைக் கோபுர தாக்குதல் வழக்கில் தொடர்புடையவர்கள் என பல ஆண்டுகளாக சிறையி லடைத்தது.
கடந்த ஆண்டு இருவரையும் அமெரிக்க அரசு விடுதலை செய்தது. இவர்கள் இருவர் மீதான தீவிரவாத தொடர்பு நிரூபிக்கப்படவில்லை என்ப தால் அவர்கள் விடுதலை செய்யப் பட்டனர்.
முஹம்மத் ஹனீஃப், அவரது மனைவி ஃபிர்தவ்ஸ் அர்ஷியா மற்றும் அவர்களது குடும்பத்தினரின் உணர்வுகளை எங்களால் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. ஏனெனில் நாங்களும் அதைப் போன்ற ஒரு துன்பத்தை அனுபவித்த வர்கள் என்று ஜாவீத் அஸ்மத்தும் அவரது மனைவி தஸ்லீமும் கூறுகின் றனர்.
முஹம்மத் ஹனீஃப் என்ற கர்நாடக சகோதரருக்கு ஆஸ்திரேலியாவில் நேர்ந்தது தான் அமெரிக்காவில் எனக்கும் நடந்தது என்று குறிப்பிடும் ஜாவித் அஸ்மத், நான் உலக வர்த்தக வளாகத்தை தாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவன் என என்னைக் கைது செய்தார்கள். நான் சவூதி அரேபியாவின் பிரஜை என்றார் கள். அதற்கு போலியாக பாஸ்போர்டும், பிறப்புச் சான்றிதழும் புனைந்தார்கள். எனக்கு விமானம் ஓட்டத் தெரியும் என்று பொய்யாக ஒரு ஆவணத்தை தயார் செய்தார்கள். இதில் வேடிக்கை என்னவெனில் எனக்கு விமானம் ஓட்டத் தெரியாது. எங்கள் மீது கூறிய குற்றச்சாட்டுகள் எதையும் நீதிமன்றத்தில் அமெரிக்க அரசால் நிரூபிக்க முடிய வில்லை. வழக்கை இழுத்தடிக்கும் மிகக் கேவலமான தந்திரத்தை கையாண்டார் கள். இறுதியில் நீதிமன்றத்தால் நாங்கள் விடுதலை செய்யப்பட்டோம்.
ஹனீஃபுக்கு ஆதரவாக இந்திய அரசு களம் இறங்கியது. ஹனீஃப் குறித்த அனைத்து வி'யங்களும் பகிரங்கப் படுத்தன. அதனால் புனையப்பட்ட கற்பனை குற்றச்சாட்டுகள் மறைந்து உண்மைகள் வெளிவரத் துவங்கின என்று கூறிய ஜாவீத் இதற்கென இந்திய அரசை பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
தங்களை சிறையில் தள்ளியதற்கும் கண்ணியக் குறைவை ஏற்படுத்தியதற்கும் இழப்பீடு கோரி அமெரிக்க அரசை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கும் ஜாவீத் அஸ்மத் விரைவில் வெற்றி கிடைக்கும் என்றும் நம்புகிறார்
Thursday, July 26, 2007
headlines
நாட்டின் முதல் சேவகி நான்.
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் எனது முயற்சிகள் அமையும் என வண்ணமிகு விழாவில் பதவியேற்ற புதிய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உரையாற்றினார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், இந்நாள் முன்னாள் பிரதமர்கள், காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி முதலமைச்சர் கருணாநிதி உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
குடியரசுத் தலைவர் பதவிக்காலம் முடிந்து அப்துல் கலாம் டெல்லியிலிருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான தனி விமானத்தில் சென்னை வந்தார். விமானநிலையத்தில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. நிதியமைச்சர் அன்பழகன், அமைச்சர் தாமோ.அன்பரசன் உட்பட முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்.
புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்றுள்ள நிலையில் மத்திய அமைச்சரவையில் சிறிய மாற்றம் செய்யப்பட உள்ளதாக தலைநகர் டெல்லியில் இருந்து வரும் சேதிகள் தெரிவிக்கின்றன. ராஜ்ய சபையின் துணைத் தலைவராக இருந்து வரும் ரஹ்மான்கான் கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்ட வந்த மரபின்படி எதிர்கட்சி கூட்டணிக்கு வழிவிட்டு தனது ராஜ்யசபைத் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரஹ்மான்கான் மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவார் என்றும் தமிழகத்தைச் சேர்ந்த புதுமுக எம்.பி மத்திய அமைச்சராவார் என்றும் அவரது பெயர் கனிமொழி என்றும் டெல்லி மற்றும் சென்னை தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும். அதைப்பற்றி மேற்கொண்டு தெரிவிக்க விரும்பவில்லை. நல்லது நடக்க இருக்கும் நிலையில் அதுபற்றி இப்போது விவாதிக்க வேண்டாம் என முதலமைச்சர் கருணாநிதி டெல்லியில் தமிழக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நதிகள் இணைப்பு தொடர்பாக முதல் அமைச்சர்கள் மாநாட்டை கூட்டுமாறு முதல் அமைச்சர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கேட்டுக் கொண்டதாக கருணாநிதி தெரிவித்திருக்கிறார்.
காங்கிரஸ் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் ஹமீத் அன்சாரி முதல்வர் கருணாநிதியை சந்தித்தார். இச்சந்திப்பின் போது மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு உடன் இருந்தார்.
கடத்தப்பட்ட சத்யம் கம்ப்யூட்டர்ஸின் மேலாளர் சத்யநாராயணா மீட்கப்பட்டார். இது தொடர்பாக சத்யநாரயணாவின் ஓட்டுநர் உள்பட நால்வர் கைது செய்யப்பட்டனர்.
பெட்ரோல் மற்றும் டீசலின் விலை விரைவில் உயர்த்தப்பட உள்ளதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்துள்ளார்.
நல்ல படிப்பு வருவதற்கு பூஜை செய்கிறேன் வா என்று கூறி ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமியை அழைத்துச் சென்று கற்பழிக்க முயற்சித்த சென்னை மேற்கு முகப்பேர் நடைபாதை கோவில் பூசாரி கோபிநாத் கைது செய்யப்பட்டார்.
காமவெறி பிடித்த பூசாரிக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
புதிய காவல்துறை உதவி ஆய்வாளர்களை தேர்ந்தெடுப்பதற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. தான் நன்றாக எழுத்துத் தேர்வு எழுதியுள்ளதாகவும் தன்னைவிட தகுதிக் குறைந்தவர்கள் மருத்துவ தகுதி தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தனக்கு அழைப்பு அனுப்பப்பட வில்லை என்றும் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த சங்கர் கணேஷ் என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து பதில் தருமாறு அரசுக்கு நீதிபதி கே. வெங்கட் ராமன் உத்தரவிட்டுள்ளார்.
புகைப்பட வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் விண்ணப்பங்களை துல்லியமாக சரி பார்ப்பதால் இறுதிப்பட்டியல் வெளியிட மேலும் ஒரு மாதம் கால தாமதம் ஆகும் என தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்திருக்கிறார்
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் எனது முயற்சிகள் அமையும் என வண்ணமிகு விழாவில் பதவியேற்ற புதிய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உரையாற்றினார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், இந்நாள் முன்னாள் பிரதமர்கள், காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி முதலமைச்சர் கருணாநிதி உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
குடியரசுத் தலைவர் பதவிக்காலம் முடிந்து அப்துல் கலாம் டெல்லியிலிருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான தனி விமானத்தில் சென்னை வந்தார். விமானநிலையத்தில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. நிதியமைச்சர் அன்பழகன், அமைச்சர் தாமோ.அன்பரசன் உட்பட முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்.
புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்றுள்ள நிலையில் மத்திய அமைச்சரவையில் சிறிய மாற்றம் செய்யப்பட உள்ளதாக தலைநகர் டெல்லியில் இருந்து வரும் சேதிகள் தெரிவிக்கின்றன. ராஜ்ய சபையின் துணைத் தலைவராக இருந்து வரும் ரஹ்மான்கான் கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்ட வந்த மரபின்படி எதிர்கட்சி கூட்டணிக்கு வழிவிட்டு தனது ராஜ்யசபைத் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரஹ்மான்கான் மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவார் என்றும் தமிழகத்தைச் சேர்ந்த புதுமுக எம்.பி மத்திய அமைச்சராவார் என்றும் அவரது பெயர் கனிமொழி என்றும் டெல்லி மற்றும் சென்னை தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும். அதைப்பற்றி மேற்கொண்டு தெரிவிக்க விரும்பவில்லை. நல்லது நடக்க இருக்கும் நிலையில் அதுபற்றி இப்போது விவாதிக்க வேண்டாம் என முதலமைச்சர் கருணாநிதி டெல்லியில் தமிழக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நதிகள் இணைப்பு தொடர்பாக முதல் அமைச்சர்கள் மாநாட்டை கூட்டுமாறு முதல் அமைச்சர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கேட்டுக் கொண்டதாக கருணாநிதி தெரிவித்திருக்கிறார்.
காங்கிரஸ் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் ஹமீத் அன்சாரி முதல்வர் கருணாநிதியை சந்தித்தார். இச்சந்திப்பின் போது மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு உடன் இருந்தார்.
கடத்தப்பட்ட சத்யம் கம்ப்யூட்டர்ஸின் மேலாளர் சத்யநாராயணா மீட்கப்பட்டார். இது தொடர்பாக சத்யநாரயணாவின் ஓட்டுநர் உள்பட நால்வர் கைது செய்யப்பட்டனர்.
பெட்ரோல் மற்றும் டீசலின் விலை விரைவில் உயர்த்தப்பட உள்ளதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்துள்ளார்.
நல்ல படிப்பு வருவதற்கு பூஜை செய்கிறேன் வா என்று கூறி ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமியை அழைத்துச் சென்று கற்பழிக்க முயற்சித்த சென்னை மேற்கு முகப்பேர் நடைபாதை கோவில் பூசாரி கோபிநாத் கைது செய்யப்பட்டார்.
காமவெறி பிடித்த பூசாரிக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
புதிய காவல்துறை உதவி ஆய்வாளர்களை தேர்ந்தெடுப்பதற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. தான் நன்றாக எழுத்துத் தேர்வு எழுதியுள்ளதாகவும் தன்னைவிட தகுதிக் குறைந்தவர்கள் மருத்துவ தகுதி தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தனக்கு அழைப்பு அனுப்பப்பட வில்லை என்றும் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த சங்கர் கணேஷ் என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து பதில் தருமாறு அரசுக்கு நீதிபதி கே. வெங்கட் ராமன் உத்தரவிட்டுள்ளார்.
புகைப்பட வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் விண்ணப்பங்களை துல்லியமாக சரி பார்ப்பதால் இறுதிப்பட்டியல் வெளியிட மேலும் ஒரு மாதம் கால தாமதம் ஆகும் என தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்திருக்கிறார்
Wednesday, July 25, 2007
செய்திகள் இன்று
இந்தியாவின் 12வது குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் இன்று மதியம் பதவியேற்றார்.
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை தனிப்பட்ட முறையில் திட்டியதாக ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மீது கடுமையான எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு எதிர்வரும் செப்டம்பர் 15க்குள் குடும்ப அட்டை வழங்கப்பட வேண்டும் என உணவுத்துறை அமைச்சர் எ.வ. வேலு உத்தரவிட்டார்.
சத்தியம் கம்யூட்டர்ஸ் குழுமத்தைச் சேர்ந்த பொது மேலாளர் சத்திய நாராணயனன் செகந்திராபாத்தில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.
சேது சமுத்திர திட்டப்பணிகளுக்கு இதுவரை 400 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அத்திட்ட தலைவர் என்.கே. ரகுபதி தெரிவித்திருக்கிறார்.
சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களை உறுதிப்படுத்த தேவைப்பட்டால் சட்ட திருத்தம் கொண்டுவரப்படும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
ஜம்முலிகாஷ்மீரில் ராணுவ வீரர் ஒருவர் ராணுவ மேஜரை சுட்டுக் கொன்றுள்ளார். இவ்வாறு ராணுவத் துறையினருக்குள்ளே மோதல் நடைபெறுவது இது ஆறாவது தடவையாகும்.
மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி பா.ம.கவின் ஜனநாயகக் கடமை தொடரும் இதற்கு யாரும் வாய்ப்பூட்டு போட முடியாது என ராமதாசு தெரிவித்திருக்கிறார். இது கருணாநிதியின் நேற்றைய பேச்சுக்கு பதிலளித்த அறிக்கையாக கருதப்படுகின்றது.
இன்று பதவி ஓய்வு பெற்ற குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சென்னை வருகிறார். குடியரசுத் தலைவர் பதவியிருந்து ஓய்வு பெற்றாலும் மக்களை தொடர்பு கொள்ளும் பணியில் இருந்து, ஓய்வு பெறப்போவதில்லை என அவர் தெரிவித்திருக்கிறார்.
பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவின் அனைத்து இதயங்களும் இணைக்கப்பட வேண்டும் என நாட்டு மக்களுக்கு உரையாற்றிய குடியரசு தலைவர் டாக்டர். ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் தெரிவித்திருக்கிறார். எதிர்வரும் 2020ல் இந்தியாவை வல்லரசாக ஆக்கும் முயற்சியில் உங்களுக்கு துணை நிற்பேன் என்றும் குடியரசுத் தலைவர் கூறினார். நாட்டு மக்களிடம் குடியரசு தலைவர் பிரியா விடை பெற்றார்.
திமுக அரசு மீதும் உயர் கல்வித்துறை மீதும் ராமதாஸ் கடும் விமர்சனங்களை கூறிவருவதைத் தொடர்ந்து எதற்கும் ஓர் எல்லையும் அளவும் வேண்டும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். பொன்முடி மீது டாக்டர் ராமதாசு கூறும் விமர்சனம் குறித்து கருணாநிதி பேசும்போது உயர்கல்வித் துறை அமைச்சர் அவருடைய சொந்த மாவட்டம் அல்லவா? அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் நல்ல பெயர் எடுக்க வேண்டும் எண்ணத்துடன் ராமதாசு தெரிவித்திருக்கக் கூடும். ஆனால் அதற்கும் ஓர் எல்லையும் அளவும் வேண்டும் என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.
அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் நாட்கள் தங்கியிருந்ததால் சிங்கப்பூர் சிறையில் வாடும் தமிழர்களை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்திருக்கிறார்.
பொறியியல் கல்விக்கான கலந்தாய்வில் கூடுதலாக ஆயிரம் இடங்கள் இந்த ஆண்டு உருவாக்கப்படும் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார்.
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் சங்கராச்சாரி உள்பட 12 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. சென்னை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரான சங்கராச்சாரி உள்பட 12 பேரின் குற்றச்சாட்டை நீதிபதி முஹமது இஷாக் வாசித்தார்.
ஹனீஃப் விவகாரத்தில் ஆஸ்திரேலிய காவல்துறையினர் நடந்து கொண்ட விதம் உலக அளவில் நகைப்புக்குரியதாகி விட்டது என அந்நாட்டு எதிர்கட்சியான கிரீன்ஸ்கட்சி தெரிவித்துள்ளது.
எங்கள் மண்ணின் மீது குண்டுகள் வீச அமெரிக்காவை அனுமதிக்க மாட்டோம் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை தனிப்பட்ட முறையில் திட்டியதாக ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மீது கடுமையான எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு எதிர்வரும் செப்டம்பர் 15க்குள் குடும்ப அட்டை வழங்கப்பட வேண்டும் என உணவுத்துறை அமைச்சர் எ.வ. வேலு உத்தரவிட்டார்.
சத்தியம் கம்யூட்டர்ஸ் குழுமத்தைச் சேர்ந்த பொது மேலாளர் சத்திய நாராணயனன் செகந்திராபாத்தில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.
சேது சமுத்திர திட்டப்பணிகளுக்கு இதுவரை 400 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அத்திட்ட தலைவர் என்.கே. ரகுபதி தெரிவித்திருக்கிறார்.
சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களை உறுதிப்படுத்த தேவைப்பட்டால் சட்ட திருத்தம் கொண்டுவரப்படும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
ஜம்முலிகாஷ்மீரில் ராணுவ வீரர் ஒருவர் ராணுவ மேஜரை சுட்டுக் கொன்றுள்ளார். இவ்வாறு ராணுவத் துறையினருக்குள்ளே மோதல் நடைபெறுவது இது ஆறாவது தடவையாகும்.
மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி பா.ம.கவின் ஜனநாயகக் கடமை தொடரும் இதற்கு யாரும் வாய்ப்பூட்டு போட முடியாது என ராமதாசு தெரிவித்திருக்கிறார். இது கருணாநிதியின் நேற்றைய பேச்சுக்கு பதிலளித்த அறிக்கையாக கருதப்படுகின்றது.
இன்று பதவி ஓய்வு பெற்ற குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சென்னை வருகிறார். குடியரசுத் தலைவர் பதவியிருந்து ஓய்வு பெற்றாலும் மக்களை தொடர்பு கொள்ளும் பணியில் இருந்து, ஓய்வு பெறப்போவதில்லை என அவர் தெரிவித்திருக்கிறார்.
பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவின் அனைத்து இதயங்களும் இணைக்கப்பட வேண்டும் என நாட்டு மக்களுக்கு உரையாற்றிய குடியரசு தலைவர் டாக்டர். ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் தெரிவித்திருக்கிறார். எதிர்வரும் 2020ல் இந்தியாவை வல்லரசாக ஆக்கும் முயற்சியில் உங்களுக்கு துணை நிற்பேன் என்றும் குடியரசுத் தலைவர் கூறினார். நாட்டு மக்களிடம் குடியரசு தலைவர் பிரியா விடை பெற்றார்.
திமுக அரசு மீதும் உயர் கல்வித்துறை மீதும் ராமதாஸ் கடும் விமர்சனங்களை கூறிவருவதைத் தொடர்ந்து எதற்கும் ஓர் எல்லையும் அளவும் வேண்டும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். பொன்முடி மீது டாக்டர் ராமதாசு கூறும் விமர்சனம் குறித்து கருணாநிதி பேசும்போது உயர்கல்வித் துறை அமைச்சர் அவருடைய சொந்த மாவட்டம் அல்லவா? அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் நல்ல பெயர் எடுக்க வேண்டும் எண்ணத்துடன் ராமதாசு தெரிவித்திருக்கக் கூடும். ஆனால் அதற்கும் ஓர் எல்லையும் அளவும் வேண்டும் என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.
அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் நாட்கள் தங்கியிருந்ததால் சிங்கப்பூர் சிறையில் வாடும் தமிழர்களை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்திருக்கிறார்.
பொறியியல் கல்விக்கான கலந்தாய்வில் கூடுதலாக ஆயிரம் இடங்கள் இந்த ஆண்டு உருவாக்கப்படும் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார்.
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் சங்கராச்சாரி உள்பட 12 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. சென்னை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரான சங்கராச்சாரி உள்பட 12 பேரின் குற்றச்சாட்டை நீதிபதி முஹமது இஷாக் வாசித்தார்.
ஹனீஃப் விவகாரத்தில் ஆஸ்திரேலிய காவல்துறையினர் நடந்து கொண்ட விதம் உலக அளவில் நகைப்புக்குரியதாகி விட்டது என அந்நாட்டு எதிர்கட்சியான கிரீன்ஸ்கட்சி தெரிவித்துள்ளது.
எங்கள் மண்ணின் மீது குண்டுகள் வீச அமெரிக்காவை அனுமதிக்க மாட்டோம் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது
Subscribe to:
Posts (Atom)