சச்சார் குழு பரிந்துரைகள் செயல் வடிவம் பெற்றது
.சச்சார் குழு பரிந்துரைக்கான செயல் திட்டங்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளது. அரசுப் பணிகளில் முஸ்லிம்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் உருவாக்கப்படும் என்றும் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் போதிய அளவு இடம் வழங்காததை தவிர்க்க உயர்நிலைக் குழு ஒன்று உருவாக்கப்படும் என்றும் மக்களவையில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் அப்துர் ரஹ்மான் அந்துலே தெரிவித்திருக்கிறார்.
முஸ்லிம்களின் கல்வி, சமூகம் மற்றும் பொருளாதாரநிலை குறித்து ஆய்வு செய்த நீதிபதி ராஜிந்தர் சச்சார் தலைமையிலான உயர் மட்டக்குழு தனது அறிக்கையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அமைச்சரவையில் தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய 15 அம்ச செயல் திட்டத்தை மத்திய அரசுக்கு சச்சார் குழு தெரிவித்தது. இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்த சிறுழுôன்மையினர் நலத்துறை அமைச்சர் அந்துலே இது ஒரு சரித்திர சிறப்பு மிக்க அறிக்கை என்றும் அதை தாக்கல் செய்யும் இந்த நேரம் வரலாற்று சிறப்பு மிக்க தருணம் என்று அவர் குறிப்பிட்டார். அந்த அறிக்கையில் அரசுத்துறை, பொதுத்துறை நிறுவனங்கள் பொதுத்துறை வங்கிகள் ஆகியவற்றில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க ஏற்கெனவே தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் மற்றும் ஆட்சி முறையில் முஸ்லிம்களுக்குப் போதிய பங்கு வழங்கப்படாதது தொடர்பாக சச்சார் குழு கவலை தெரிவித்திருப்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் அந்துலே அந்தக் குறைபாடுகளைக் களைய உயர்நிலைக்குழு அமைக்கப்பட்ருப்பதாக தெரிவித்தார்.
சச்சார்குழு அறிக்கையில் கூறப்பட்டிருப்தைப் போல அக்குழு தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்யும். முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் தொகுதிகள் தலித்களுக்கு ஒதுக்கீடு செய்யாமல் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க இக்குழு பார்த்துக் கொள்ளும். இதன் மூலம் அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவதில் உள்ள குறைபாடுகள் களையப்படும் என்றும் அமைச்சர் அப்துர்ரஹ்ôன் அந்துலே கூறினார்.
முஸ்லிம்கள் அதிகம் வாழும் 90 மாவட்டங்களில் அடிப்படை வசதிகளையும், வேலை வாய்ப்பையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் 338 நகரங்களில் கட்டமைப்பு வசதிகளில் உள்ளக் குறைபாடுகளைக் களைவதும் அவர்களுக்குப் பொருளாதார வாய்ப்புகளை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அந்துலே தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களுக்காக மூன்று கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மவ்லானா ஆசாத் கல்வி அறக்கட்டளைக்கான மூலநிதி அதிகரிக்கப்படும். முஸ்லிம்களுக்கு தொழிற் பயிற்சி வழங்குதல் மற்றும் அவர்களுக்கு எளிதாகக் கடன் கிடைக்கச் செய்தல் ஆகியவற்றுக்கான விரிவாகத் திட்டத்தை உருவாக்கவும் அதைச் செயல்படுத்தி கண்காணிக்கவும் அமைச்சர்கள் குழு அமைக்கப்படும் என்றும் அந்துலே தெரிவிக்கிறார்.
முஸ்லிம் பெண்கள் உயர்கல்வி படிப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தேவையான இடங்களில் மகளிர் கல்விக் கூடங்கள் நிறுவப்படும். முஸ்லிம்கள் குறிப்பிட்ட அளவில் வாழும் பகுதிகளில் கஸ்தூரிபா காந்தி மழலையர் பள்ளிகள் திறக்கப்படும். முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இடைநிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளைத் திறக்க முன்னுரிமை அளிக்கப்படும். அந்தப் பகுதிகளில் சிறப்பு எழுத்தறிவு இயக்கம் நடத்தப்படும்.
முஸ்லிம்களுக்கு வங்கிக்கடன் வழங்குவதில் முன்னுரிமை வழங்குவதற்கு வசதியாக முஸ்லிம்கள் நிறைந்த பகுதிகளில் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகள் திறக்கப்படும்.
மதரஸாக் கல்வியை நவீனப்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்டும். மேலும் அவற்றில் உயர்கல்வி கற்பிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உர்து மொழி பிராந்திய மொழியாக அறிவிக்கப்பட்டு அதில் கல்வி கற்பிக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.மேலும் முஸ்லிம்களின் உடல்நலன் மற்றும் குடும்ப நிலை குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்துலே கூறினார்.
வக்ஃபு சொத்துக்களை பாதுகாக்கவும், அதன் மூலம் கிடைக்கும் வருவாயை உரிய முறையில் செலவிடவும் பொருத்தமான அமைப்பு உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.முஸ்லிம்களின் அவலநிலையை அகற்ற சமவாய்ப்பு ஆணையம் அமைக்கப்படும் என்று மேலும் அமைச்சர் உறுதி அளித்தார்
Sunday, September 2, 2007
Friday, August 31, 2007
ஹைதராபாத் குண்டுவெடிப்பு சூழ்ச்சியின் பின்னணிஹைதராபாத் நகரில் மக்கள் அதிகம் கூடும் லும்பினி பார்க் மற்றும் கோகுல்சாட் என்ற உணவகத்திலும் நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். குண்டுவெடிப்பு நடந்த பகுதி களில் இருந்து தடயங்களை சேகரித்த போது நியோஜெல்லி90 என்ற அமோனியம் நைட்ரோ ரசாயனம் கலந்த வெடிகுண்டு மருந்து பயன்படுத்தப்பட்டிருப் பதாக காவல்துறை கூறுகிறது.
இந்த சம்பவத்தில் அந்நிய நாட்டு தீவிரவாத சக்திகளின் கைவரிசை இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப் படுவார்கள் என இந்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் அறிவித்திருக்கிறார். ''மீண்டும் பொடா சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே தீவிரவாதத்தை ஒழிக்க முடியும்'' என குண்டு வெடிப்பு சம்பவ இடத்தைப் பார்வையிட வந்த அத்வானி வழக்கம்போல தெரிவித்திருக் கிறார்.
இந்த குண்டுவெடிப்பில் முஹம்மது அலி என்ற 6 வயது சிறுவன், அமீர் என்ற 8 வயது சிறுவன் மற்றும் மூன்று பெண்கள் உட்பட 11 முஸ்லிம்களும் பலியாகி உள்ளனர். மகாராஷ்டிரா வின் அஹமது நகர் மாவட்டத் தில் அமிருத் வாகினி பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மூன்று பேராசிரியர்களும் ஏழு மாணவர் களும் இச்சமயத்தில் கொல்லப் பட்டுள்ளனர். நாட்டையே உலுக்கிய இந்த குண்டுவெடிப்பில் ரஹீமுன்னிஸா பேகம் (48), முஹம்மது வாஹித் அலி (21), அஹ்யா அப்துல் காதர் (17), அக்ரமுல்லாஹ்கான் (22), அஹ்மது முஹினுத்தீன் (45), முஹம்மது சலீம் (47), ஃபரீதா நாஸ் (35), முஹம்மது அலி (6), அமீர் (8), இப்ராஹிம்கான் (43), மற்றும் இர்ஷாத் அஹ்மத் (19) ஆகியோர் பலியாகி உள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பில் ஒரு குடும்பமே கூண்டோடு பலியான பரிதாபச் சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
கோகுல் சாட் பண்டார் என்ற துரித உணவகத்தில் முஹம்மது சலீமின் குடும்பம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது நிகழ்ந்த குண்டுவெடிப்பில், அவரும் அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்களும் பலியாகி விட்டனர். ஹுமாயுன் நகர் என்ற பகுதியில் கோல்கொண்டா அடுக்குமாடி குடியிருப்பில் சலீமின் குடும்பம் வசித்து வந்துள்ளது.
சிதறிய சலீம் குடும்பத்தினரின் உடல்களைப் பார்த்து கோல் கொண்டா குடியிருப்புவாசிகள் கதறியது நெஞ்சைப் பிழியும் காட்சியாக இருந்தது.''ஹைதராபாத் நகரம் பாதுகாப்பு இல்லாத இடமாக மாறிவிட்டதே'' என்று ஒரு பெண் கூடியிருந்த செய்தியாளர்களைப் பார்த்து கதறினார்.
குண்டுவெடிப்பு குறித்த செய்தி கிடைத்ததும் சலீமின் சகோதரர் சமீர், அவரைத் தொடர்பு கொள்ள முயன்றிருக்கிறார். செல்பேசி அழைப்புக்கு பதில் வராததால் ஒவ்வொரு மருத்துவ மனையாகச் சென்று பார்த்திருக் கிறார். இறுதியில் உஸ்மானியா மருத்துவமனையில் அந்தக் குடும்பமே உடல் சிதறி இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்.''இந்த படுபாதகச் செயலை செய்தவர் யாராக இருந்தாலும் அவர்களை இழுத்து வந்து பொது இடத்தில் தூக்கிலிட்டுக் கொல்ல வேண்டும்'' என பலியானவர் களின் உறவினர்கள் குமுறலுடன் கூறினர்.
''பயங்கரவாதிகள், மனித நேயத்திற்கும் மதங்களுக்கும் எதிரானவர்கள்; இவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்'' என ஆவேசமாகக் குறிப்பிட்டார் அஸதுல்லாஹ் கான். இவர் இந்த குண்டுவெடிப் பில் தனது ஒரே மகனான அக்ரமுல்லாகானை பறிகொடுத் தவர். அம்பர்பேட் மையவாடியில் தனது ஒரே மகனை அடக்கம் செய்துவிட்டு அவர் பயங்கரவாதி களுக்கு எதிராக முழக்கமிட்டார். அந்தக் காட்சி கூடியிருந்தவர் களை உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஆழ்த்தியது.
''பயங்கரவாதிகள் மனிதகுலத்திற்கு எதிரானவர்கள் அவர்கள் ஹிந்துக்கள். முஸ்லிம் கள் என வேறுபாடு பார்க்காமல் அனைவரையும் கொன்று குவிப்பவர்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது ''என்கிறார் ஃபர்ஹா ஃபரூக்கி என்ற இளம்பெண் அதிர்ச்சி விலகாமல்.
இது மிகவும் கோழைத் தனமான செயல். குற்றவாளிகள் கண்டறியப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அதேநேரம் விசாரணைகள் வெளிப்படையாகவும் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறியும் வகையிலும் இருக்க வேண்டும் என தமுமுக தெரிவித்துள்ளது.
பயங்கரவாதிகளின் இலக்காக ஆந்திர மாநிலம், குறிப்பாக ஹைதராபாத் நகரம் ஏன் குறிவைக்கப்படுகிறது என்பதற்கு நடுநிலையாளர்கள் சில திடுக் கிடும் காரணங்களைக் கூறுகிறார் கள்.
நடுநிலையாளர்களும், சமூக ஆர்வலர்களும் ஆந்திர மாநிலப் பகுதியை சூழ்ச்சி வலையில் சிக்கவைக்கும் சதிகளுக்கான காரணங்கள் பற்றி கீழ்க்கண்ட வாறு பட்டியலிடுகிறார்கள்.
1. ஹைதராபாத் அதிநவீன தொழில்நுட்ப நகராக விஸ்வ ரூபம் எடுத்து வருகிறது. இது நம்நாட்டின் வளர்ச்சியைப் பிடிக்காத சக்திகளின் கண்களை உறுத்துகிறது.
2. ஹைதராபாத் நகரம் முஸ்லிம் களின் பாரம்பரிய பெருமைமிக்க நகராகத் திகழ்கிறது.
3. தென்னிந்திய மாநிலங்களில் காங்கிரஸின் கோட்டையாக ஆந்திர மாநிலம் விளங்குகிறது. காங்கிரசுக்கு அதிக அளவு நாடாளுமன்ற உறுப்பினர்களை வழங்கும் மாநிலமாக இருப்ப தோடு ஹிந்துத்துவ சக்திகள் சற்றே துளிர்விடக் கூட வாய்ப்பில்லாத பூமியாகவும் ஆந்திரம் விளங்குகிறது.
4. எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்து மக்க ளாலும் விரும்பப்படும் தலைவராக ஆந்திர முதல மைச்சர் டாக்டர் ஒய். ராஜசேகர ரெட்டி விளங்கு கிறார். குறிப்பாக சமூகத்தில் அழுத்தப்பட்டுக் கொண்டி ருக்கும் முஸ்லிம்களுக்காக, அவர்களது நிலையை மேம்படுத்த இடஒதுக் கீட்டுக்கு வழிசெய்தார்.
அதற்காக தடங்கல் ஏற்படுத்திய தடைகளை யெல்லாம் உடைத்து முஸ்லிம் களுக்கு இடஒதுக்கீடு வழங் கிட மும்முரம் காட்டினார்.
இத்தகைய பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட ஆந்திர அரசுக்கு இடைவிடாத தலைவலி கொடுத்து அரசியல் அரங்கில் அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே உள்ளூர் பயங்கரவாதிகளும், வெளிநாட்டு பயங்கரவாதிகளும் கைகோர்த்திருக்கக் கூடும் என நடுநிலையாளர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.
ஏற்கனவே ஆந்திர காவல் துறையில் சில கறுப்பாடுகள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத் தும் விதமாக, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புக்குப் பிறகு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் முஸ்லிம் அப்பாவிகளை சுட்டுக் கொன்றது, கம்யூனிஸ்ட்டுகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மூர்க்கத்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி ஏழைப் பாட்டாளிகளை சுட்டுக் கொன்றது போன்ற சம்பவங்களை கவனத்தில் கொண்டு அனைத்துவித நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த வேண்டும் என நாட்டு மக்கள் விரும்புகிறார்கள்.
இதற்கிடையில் குண்டுவைத்த வர்களுக்கு உதவியவர் என கோழிக்கறி கடைக்காரர் ஒருவர் கைது செய்யப்படுகிறார். மீண்டும் ஒரு காமெடிக் காட்சியை அரங்கேற்ற வேண்டாம் என காவல்துறையை நாட்டு மக்கள் கெஞ்சிக் கேட்கிறார்கள்.
இதற்கிடையில் மீண்டும் பொடா வேண்டும் என்ற கோரிக்கை காவி முகாமிலிருந்து எழுப்பப்படுகிறது. 'அறுக்கத் தெரியாதவன் இடுப்பில் அறுபத் தெட்டு அரிவாளாம்' என்ற பழமொழியை அவர்களின் கூற்று நினைவூட்டுகிறது. இந்தியாவின் இறையாண்மைக்கு உச்சக்கட்ட ஆபத்து இவர்களது ஆட்சியில் தான் ஏற்பட்டது என்பதை நாடு மறக்கவில்லை. இவர்கள் குட்டையைக் குழப்பாமல் விலகி இருப்பதே உத்தமம் என நாட்டு மக்கள் கருதுகிறார்கள்.
நாட்டு மக்களின் அமைதிக்கு வேட்டு வைக்க முயலும் பயங்கர வாதிகளின் படுபாதகச் செயல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பெங்களூரு அறிவியல் கழக துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் அப்பாவி முஸ்லிம்களை வளைத்து விசாரித்ததோடு சரி. ஓராண்டுக்கு மேல் ஆகியும் உண்மைக் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படவில்லை. அவ்வாறே, மாலேகான் பள்ளிவாசல் குண்டு வெடிப்பு மற்றும் ஹைதராபாத் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு போன்றவற்றில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். உண்மைக் குற்றவாளி கள் கண்டுபிடிக்கப்பட்டு உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப் பட்டிருந்தால் இத்தகைய செயல்கள் தொடராது என்பதே நடுநிலை யாளர்களின் கருத்தாக உள்ளது.
ஆந்திர அரசும், மத்திய அரசும் இணைந்து சதிகாரர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்
இந்த சம்பவத்தில் அந்நிய நாட்டு தீவிரவாத சக்திகளின் கைவரிசை இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப் படுவார்கள் என இந்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் அறிவித்திருக்கிறார். ''மீண்டும் பொடா சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே தீவிரவாதத்தை ஒழிக்க முடியும்'' என குண்டு வெடிப்பு சம்பவ இடத்தைப் பார்வையிட வந்த அத்வானி வழக்கம்போல தெரிவித்திருக் கிறார்.
இந்த குண்டுவெடிப்பில் முஹம்மது அலி என்ற 6 வயது சிறுவன், அமீர் என்ற 8 வயது சிறுவன் மற்றும் மூன்று பெண்கள் உட்பட 11 முஸ்லிம்களும் பலியாகி உள்ளனர். மகாராஷ்டிரா வின் அஹமது நகர் மாவட்டத் தில் அமிருத் வாகினி பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மூன்று பேராசிரியர்களும் ஏழு மாணவர் களும் இச்சமயத்தில் கொல்லப் பட்டுள்ளனர். நாட்டையே உலுக்கிய இந்த குண்டுவெடிப்பில் ரஹீமுன்னிஸா பேகம் (48), முஹம்மது வாஹித் அலி (21), அஹ்யா அப்துல் காதர் (17), அக்ரமுல்லாஹ்கான் (22), அஹ்மது முஹினுத்தீன் (45), முஹம்மது சலீம் (47), ஃபரீதா நாஸ் (35), முஹம்மது அலி (6), அமீர் (8), இப்ராஹிம்கான் (43), மற்றும் இர்ஷாத் அஹ்மத் (19) ஆகியோர் பலியாகி உள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பில் ஒரு குடும்பமே கூண்டோடு பலியான பரிதாபச் சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
கோகுல் சாட் பண்டார் என்ற துரித உணவகத்தில் முஹம்மது சலீமின் குடும்பம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது நிகழ்ந்த குண்டுவெடிப்பில், அவரும் அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்களும் பலியாகி விட்டனர். ஹுமாயுன் நகர் என்ற பகுதியில் கோல்கொண்டா அடுக்குமாடி குடியிருப்பில் சலீமின் குடும்பம் வசித்து வந்துள்ளது.
சிதறிய சலீம் குடும்பத்தினரின் உடல்களைப் பார்த்து கோல் கொண்டா குடியிருப்புவாசிகள் கதறியது நெஞ்சைப் பிழியும் காட்சியாக இருந்தது.''ஹைதராபாத் நகரம் பாதுகாப்பு இல்லாத இடமாக மாறிவிட்டதே'' என்று ஒரு பெண் கூடியிருந்த செய்தியாளர்களைப் பார்த்து கதறினார்.
குண்டுவெடிப்பு குறித்த செய்தி கிடைத்ததும் சலீமின் சகோதரர் சமீர், அவரைத் தொடர்பு கொள்ள முயன்றிருக்கிறார். செல்பேசி அழைப்புக்கு பதில் வராததால் ஒவ்வொரு மருத்துவ மனையாகச் சென்று பார்த்திருக் கிறார். இறுதியில் உஸ்மானியா மருத்துவமனையில் அந்தக் குடும்பமே உடல் சிதறி இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்.''இந்த படுபாதகச் செயலை செய்தவர் யாராக இருந்தாலும் அவர்களை இழுத்து வந்து பொது இடத்தில் தூக்கிலிட்டுக் கொல்ல வேண்டும்'' என பலியானவர் களின் உறவினர்கள் குமுறலுடன் கூறினர்.
''பயங்கரவாதிகள், மனித நேயத்திற்கும் மதங்களுக்கும் எதிரானவர்கள்; இவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்'' என ஆவேசமாகக் குறிப்பிட்டார் அஸதுல்லாஹ் கான். இவர் இந்த குண்டுவெடிப் பில் தனது ஒரே மகனான அக்ரமுல்லாகானை பறிகொடுத் தவர். அம்பர்பேட் மையவாடியில் தனது ஒரே மகனை அடக்கம் செய்துவிட்டு அவர் பயங்கரவாதி களுக்கு எதிராக முழக்கமிட்டார். அந்தக் காட்சி கூடியிருந்தவர் களை உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஆழ்த்தியது.
''பயங்கரவாதிகள் மனிதகுலத்திற்கு எதிரானவர்கள் அவர்கள் ஹிந்துக்கள். முஸ்லிம் கள் என வேறுபாடு பார்க்காமல் அனைவரையும் கொன்று குவிப்பவர்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது ''என்கிறார் ஃபர்ஹா ஃபரூக்கி என்ற இளம்பெண் அதிர்ச்சி விலகாமல்.
இது மிகவும் கோழைத் தனமான செயல். குற்றவாளிகள் கண்டறியப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அதேநேரம் விசாரணைகள் வெளிப்படையாகவும் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறியும் வகையிலும் இருக்க வேண்டும் என தமுமுக தெரிவித்துள்ளது.
பயங்கரவாதிகளின் இலக்காக ஆந்திர மாநிலம், குறிப்பாக ஹைதராபாத் நகரம் ஏன் குறிவைக்கப்படுகிறது என்பதற்கு நடுநிலையாளர்கள் சில திடுக் கிடும் காரணங்களைக் கூறுகிறார் கள்.
நடுநிலையாளர்களும், சமூக ஆர்வலர்களும் ஆந்திர மாநிலப் பகுதியை சூழ்ச்சி வலையில் சிக்கவைக்கும் சதிகளுக்கான காரணங்கள் பற்றி கீழ்க்கண்ட வாறு பட்டியலிடுகிறார்கள்.
1. ஹைதராபாத் அதிநவீன தொழில்நுட்ப நகராக விஸ்வ ரூபம் எடுத்து வருகிறது. இது நம்நாட்டின் வளர்ச்சியைப் பிடிக்காத சக்திகளின் கண்களை உறுத்துகிறது.
2. ஹைதராபாத் நகரம் முஸ்லிம் களின் பாரம்பரிய பெருமைமிக்க நகராகத் திகழ்கிறது.
3. தென்னிந்திய மாநிலங்களில் காங்கிரஸின் கோட்டையாக ஆந்திர மாநிலம் விளங்குகிறது. காங்கிரசுக்கு அதிக அளவு நாடாளுமன்ற உறுப்பினர்களை வழங்கும் மாநிலமாக இருப்ப தோடு ஹிந்துத்துவ சக்திகள் சற்றே துளிர்விடக் கூட வாய்ப்பில்லாத பூமியாகவும் ஆந்திரம் விளங்குகிறது.
4. எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்து மக்க ளாலும் விரும்பப்படும் தலைவராக ஆந்திர முதல மைச்சர் டாக்டர் ஒய். ராஜசேகர ரெட்டி விளங்கு கிறார். குறிப்பாக சமூகத்தில் அழுத்தப்பட்டுக் கொண்டி ருக்கும் முஸ்லிம்களுக்காக, அவர்களது நிலையை மேம்படுத்த இடஒதுக் கீட்டுக்கு வழிசெய்தார்.
அதற்காக தடங்கல் ஏற்படுத்திய தடைகளை யெல்லாம் உடைத்து முஸ்லிம் களுக்கு இடஒதுக்கீடு வழங் கிட மும்முரம் காட்டினார்.
இத்தகைய பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட ஆந்திர அரசுக்கு இடைவிடாத தலைவலி கொடுத்து அரசியல் அரங்கில் அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே உள்ளூர் பயங்கரவாதிகளும், வெளிநாட்டு பயங்கரவாதிகளும் கைகோர்த்திருக்கக் கூடும் என நடுநிலையாளர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.
ஏற்கனவே ஆந்திர காவல் துறையில் சில கறுப்பாடுகள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத் தும் விதமாக, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புக்குப் பிறகு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் முஸ்லிம் அப்பாவிகளை சுட்டுக் கொன்றது, கம்யூனிஸ்ட்டுகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மூர்க்கத்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி ஏழைப் பாட்டாளிகளை சுட்டுக் கொன்றது போன்ற சம்பவங்களை கவனத்தில் கொண்டு அனைத்துவித நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த வேண்டும் என நாட்டு மக்கள் விரும்புகிறார்கள்.
இதற்கிடையில் குண்டுவைத்த வர்களுக்கு உதவியவர் என கோழிக்கறி கடைக்காரர் ஒருவர் கைது செய்யப்படுகிறார். மீண்டும் ஒரு காமெடிக் காட்சியை அரங்கேற்ற வேண்டாம் என காவல்துறையை நாட்டு மக்கள் கெஞ்சிக் கேட்கிறார்கள்.
இதற்கிடையில் மீண்டும் பொடா வேண்டும் என்ற கோரிக்கை காவி முகாமிலிருந்து எழுப்பப்படுகிறது. 'அறுக்கத் தெரியாதவன் இடுப்பில் அறுபத் தெட்டு அரிவாளாம்' என்ற பழமொழியை அவர்களின் கூற்று நினைவூட்டுகிறது. இந்தியாவின் இறையாண்மைக்கு உச்சக்கட்ட ஆபத்து இவர்களது ஆட்சியில் தான் ஏற்பட்டது என்பதை நாடு மறக்கவில்லை. இவர்கள் குட்டையைக் குழப்பாமல் விலகி இருப்பதே உத்தமம் என நாட்டு மக்கள் கருதுகிறார்கள்.
நாட்டு மக்களின் அமைதிக்கு வேட்டு வைக்க முயலும் பயங்கர வாதிகளின் படுபாதகச் செயல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பெங்களூரு அறிவியல் கழக துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் அப்பாவி முஸ்லிம்களை வளைத்து விசாரித்ததோடு சரி. ஓராண்டுக்கு மேல் ஆகியும் உண்மைக் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படவில்லை. அவ்வாறே, மாலேகான் பள்ளிவாசல் குண்டு வெடிப்பு மற்றும் ஹைதராபாத் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு போன்றவற்றில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். உண்மைக் குற்றவாளி கள் கண்டுபிடிக்கப்பட்டு உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப் பட்டிருந்தால் இத்தகைய செயல்கள் தொடராது என்பதே நடுநிலை யாளர்களின் கருத்தாக உள்ளது.
ஆந்திர அரசும், மத்திய அரசும் இணைந்து சதிகாரர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்
Thursday, August 9, 2007
கிருஷ்ணா கமிஷன் அறிக்கை
கிருஷ்ணா கமிஷன் அறிக்கை
குற்றவாளிகள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் நடவடிக்கை உறுதி
மகாராஷ்ட்ரா அரசுஸ்ரீகிருஷ்ணா கமிஷனின் அறிக்கையை செயல்படுத்தக் கோரி நாடேங்கும் அழுத்தங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, மகராஷ்ட்ராவின் துணை முதல்வரும் உள்துறை அமைச்சருமான ஆர்.ஆர்.பாட்டில் காவல்துறை உயர்அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை மகராஷ்ட்ரா மாநில அரசின் தலைமைச் செயலகமான மந்த்ராலயாவில் நடந்தது.
முன்னதாக துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டிலை முஸ்லிம் தலைவர்கள் குழு ஒன்று சந்தித்தது. முன்னனி வழக்கறிஞரும் தேசியவாதக் கட்சியின் முக்கிய பிரமுகருமான மஜீத்மேமன் இக்குழுவிற்கு தலைமை வகித்தார். 1993ல் நிகழ்ந்த மும்பை கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி மேலும் தாமதிக்கப்படக்கூடாது என வலியுறுத்தினார்கள். முஸ்லிம் குழு சங்கத்துடன் தொடர்ச்சியாக காவல்துறை உயர் அதிகாரிகளுடனான மற்றும் துணை முதலமைச்சரின் கூட்டம் நடத்தப்படுவதாக கருதப்படுகிறது. உடனடியாக அரசு தலைமை வழக்கறிஞர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளைக் கூட்டி ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என மஜீத் மேமன் தெரிவித்திருந்தார். மும்பைக் கலவரக் குற்றவாளிகள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்டும் என ஆர்.ஆர்.பாட்டீல் உறுதி அளித்தார்.
குற்றவாளிகள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் நடவடிக்கை உறுதி
மகாராஷ்ட்ரா அரசுஸ்ரீகிருஷ்ணா கமிஷனின் அறிக்கையை செயல்படுத்தக் கோரி நாடேங்கும் அழுத்தங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, மகராஷ்ட்ராவின் துணை முதல்வரும் உள்துறை அமைச்சருமான ஆர்.ஆர்.பாட்டில் காவல்துறை உயர்அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை மகராஷ்ட்ரா மாநில அரசின் தலைமைச் செயலகமான மந்த்ராலயாவில் நடந்தது.
முன்னதாக துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டிலை முஸ்லிம் தலைவர்கள் குழு ஒன்று சந்தித்தது. முன்னனி வழக்கறிஞரும் தேசியவாதக் கட்சியின் முக்கிய பிரமுகருமான மஜீத்மேமன் இக்குழுவிற்கு தலைமை வகித்தார். 1993ல் நிகழ்ந்த மும்பை கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி மேலும் தாமதிக்கப்படக்கூடாது என வலியுறுத்தினார்கள். முஸ்லிம் குழு சங்கத்துடன் தொடர்ச்சியாக காவல்துறை உயர் அதிகாரிகளுடனான மற்றும் துணை முதலமைச்சரின் கூட்டம் நடத்தப்படுவதாக கருதப்படுகிறது. உடனடியாக அரசு தலைமை வழக்கறிஞர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளைக் கூட்டி ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என மஜீத் மேமன் தெரிவித்திருந்தார். மும்பைக் கலவரக் குற்றவாளிகள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்டும் என ஆர்.ஆர்.பாட்டீல் உறுதி அளித்தார்.
Friday, August 3, 2007
உ.பி.யில் ஒரு குஜராத் துவம்சம் செய்யப்பட்ட முஸ்லிம் கிராமம்
உ.பி.யில் ஒரு குஜராத் துவம்சம்
செய்யப்பட்ட முஸ்லிம் கிராமம்
சத்தியப்பிரியன்
சுதந்திர இந்தியாவில் நடக்காத ஒரு அக்கிரமம் உத்தரப்பிரதேசத்தின் ஒரு சிறிய கிராமத்தில் நடந்துள்ளது.
கூட்டம் கூட்டமாக குடியிருப்புகளில் புகுந்து பாலியல் வன்முறைகள், வீடுகள் தீ வைப்பு, சூறையாடு தல் என அத்தனைக் கொடுமைகளும் ஒரு கிராமத்தினரின் மீது ஏவப் பட்டன.
பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் முஸ்லிம்கள். இந்தக் கொடுமைகளை பாஜகவின் முன்னாள் எம்.எல்.ஏ.வும் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஓர் அமைச்சரின் அடிப்பொடிகளும் இந்த அக்கிரமத்தை அரங்கேற்றியுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் சரஸ்வதி மாவட்டத்தில் தானிதீ கிராமம். இங்கு 50 முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கின்றன. பண்டிட் திடுவதியின் 20 வயது மகள் வந்தனா. இவரை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய வைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே காதலித்த முஸ்லிம் வாலிபர் சலீமுடன் ஓடிவிட்டார்.
பிராமணர்களின் ரிமோட் கண்ட்ரோலில் நடப்பதாகக் கூறப்படும் மாயாவதி ஆட்சியில் நடந்த இந்தச் சம்பவம் அவர்களிடையே கடும் ஆத்திரத்தை ஏற்படுத்திவிட்டது.
இந்த ஒரு சம்பவத்தின் மூலம் ஒட்டுமொத்த கிராம முஸ்லிம்கள் அனைவரையும் குற்றவாளிகளாய் ஆளும் வர்க்கத்தினர் சித்தரித்தனர். அதனால் பழிவாங்கும் நடவடிக்கை களைத் தொடங்கினர்.
மாயாவதி அமைச்சரவையில் ஆயுர்வேதத்துறை அமைச்சரான மிஸ்ராவின் சகோதரர் அசோக் மிஸ்ராவின் ரவுடிகள் ஆயிரக்கணக் கானோர் வாகனங்களில் அந்த குட்டிக் கிராமத்தை சூழ்ந்தனர். ஆறு மணி நேரம் அது மோடியின் குஜராத்தாக மாறிவிட்டது. முஸ்லிம்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. குடியிருப்புகள் அனைத்தும் தீவைத்துக் கொளுத்தப் பட்டன. சிறுமிகளையும், இளம் பெண்களையும் அடித்து ஆடை களைக் களைந்து அவர்களை அவமானப்படுத்தியது மட்டுமல்லாமல் ஏளனமாக வும் சிரித்தனர். அதோடு அவமானத்தோடு ஓடி ஒளிந்த அந்த அபலைப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு இலக்காயினர்.
காலை 10 மணிக்கு வந்த அவர்கள் வெறியாட்டம் ஆடித் தீர்த்துவிட்டுச் சென்றனர். தங்களது பெண் வந்தனா வந்து சேரவில்லை என்றால் கிராமத்தையே நிர்மூலமாக்குவோம் என்று எச்சரித்துள்ளனர். இவர்க ளோடு சில காவல்துறையினரும் வந்துள் ளனர். 13 முஸ்லிம் இளைஞர்களை இழுத்துச் சென்று காவல்துறையினர் லாக்கப்பில் அடைத்தனர்.
பாலியல் வன்முறைக்கு இலக்காக் கப்பட்ட பெண்களில் இருவர் 50 வயது மேற்பட்டவர்கள்.
காலை 9.30 மணிக்கு ஒருசில காவலர்கள் வந்து நோட்டமிட்டுச் சென்ற பிறகே இந்த அக்கிரமச் செயல் நிகழ்ந்துள்ளது.
இந்தக் கொடூரமான தாக்குதலை திட்டமிட்ட முக்கிய விஷமிகள் அசோக் மிஸ்ரா மற்றும் ஞானஷ்யாம்பதக் என்ற இருவரும் ஆவர். இவர்களது தாக்குதலில் யாருக்கும் தலையில் காயமோ, வெளிக்காயமோ ஏற்படவில்லை. இத்தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை. எனினும் மிகவும் மோசமாக தாக்கப்பட் டனர். கச்சிதமாக கடுமையான உள்காயங் கள் ஏற்படும் வண்ணம் அவர்களது தாக்குதல் அமைந்திருந்தது. சங்பரிவாரத் தினர் மட்டுமே இவ்வாறு தாக்குதல் நடத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொடூரமான இந்நிகழ்வை அச்சத்தின் காரணமாக கிராம மக்கள் மறைத்து விட்டனர். உண்மை அறிந்து அந்தப் பகுதி காங்கிரஸ் தலைவர் முஹம்மது அஸ்லம் ரைனி செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டினார். அதோடு காவல்துறை அலுவலகத்திற்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டத்தையும் அறிவித்தார்.
அரசியல் கட்சிகள் வரிசையாக போராட்டத்தை அறிவித்தன. தானிதீனி கிராமத்தின் முஸ்லிம்களில் அதிகம் பேர் இன்னும் மறைந்ததே வாழ்கின் றனர். கிராமத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றம் நீடிக்கிறது. மாற்றங்களை ஏற்படுத்து வதாக நினைத்து மாயாவதி சிக்கலில் மாட்டிக்கொண்டார்
செய்யப்பட்ட முஸ்லிம் கிராமம்
சத்தியப்பிரியன்
சுதந்திர இந்தியாவில் நடக்காத ஒரு அக்கிரமம் உத்தரப்பிரதேசத்தின் ஒரு சிறிய கிராமத்தில் நடந்துள்ளது.
கூட்டம் கூட்டமாக குடியிருப்புகளில் புகுந்து பாலியல் வன்முறைகள், வீடுகள் தீ வைப்பு, சூறையாடு தல் என அத்தனைக் கொடுமைகளும் ஒரு கிராமத்தினரின் மீது ஏவப் பட்டன.
பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் முஸ்லிம்கள். இந்தக் கொடுமைகளை பாஜகவின் முன்னாள் எம்.எல்.ஏ.வும் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஓர் அமைச்சரின் அடிப்பொடிகளும் இந்த அக்கிரமத்தை அரங்கேற்றியுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் சரஸ்வதி மாவட்டத்தில் தானிதீ கிராமம். இங்கு 50 முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கின்றன. பண்டிட் திடுவதியின் 20 வயது மகள் வந்தனா. இவரை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய வைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே காதலித்த முஸ்லிம் வாலிபர் சலீமுடன் ஓடிவிட்டார்.
பிராமணர்களின் ரிமோட் கண்ட்ரோலில் நடப்பதாகக் கூறப்படும் மாயாவதி ஆட்சியில் நடந்த இந்தச் சம்பவம் அவர்களிடையே கடும் ஆத்திரத்தை ஏற்படுத்திவிட்டது.
இந்த ஒரு சம்பவத்தின் மூலம் ஒட்டுமொத்த கிராம முஸ்லிம்கள் அனைவரையும் குற்றவாளிகளாய் ஆளும் வர்க்கத்தினர் சித்தரித்தனர். அதனால் பழிவாங்கும் நடவடிக்கை களைத் தொடங்கினர்.
மாயாவதி அமைச்சரவையில் ஆயுர்வேதத்துறை அமைச்சரான மிஸ்ராவின் சகோதரர் அசோக் மிஸ்ராவின் ரவுடிகள் ஆயிரக்கணக் கானோர் வாகனங்களில் அந்த குட்டிக் கிராமத்தை சூழ்ந்தனர். ஆறு மணி நேரம் அது மோடியின் குஜராத்தாக மாறிவிட்டது. முஸ்லிம்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. குடியிருப்புகள் அனைத்தும் தீவைத்துக் கொளுத்தப் பட்டன. சிறுமிகளையும், இளம் பெண்களையும் அடித்து ஆடை களைக் களைந்து அவர்களை அவமானப்படுத்தியது மட்டுமல்லாமல் ஏளனமாக வும் சிரித்தனர். அதோடு அவமானத்தோடு ஓடி ஒளிந்த அந்த அபலைப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு இலக்காயினர்.
காலை 10 மணிக்கு வந்த அவர்கள் வெறியாட்டம் ஆடித் தீர்த்துவிட்டுச் சென்றனர். தங்களது பெண் வந்தனா வந்து சேரவில்லை என்றால் கிராமத்தையே நிர்மூலமாக்குவோம் என்று எச்சரித்துள்ளனர். இவர்க ளோடு சில காவல்துறையினரும் வந்துள் ளனர். 13 முஸ்லிம் இளைஞர்களை இழுத்துச் சென்று காவல்துறையினர் லாக்கப்பில் அடைத்தனர்.
பாலியல் வன்முறைக்கு இலக்காக் கப்பட்ட பெண்களில் இருவர் 50 வயது மேற்பட்டவர்கள்.
காலை 9.30 மணிக்கு ஒருசில காவலர்கள் வந்து நோட்டமிட்டுச் சென்ற பிறகே இந்த அக்கிரமச் செயல் நிகழ்ந்துள்ளது.
இந்தக் கொடூரமான தாக்குதலை திட்டமிட்ட முக்கிய விஷமிகள் அசோக் மிஸ்ரா மற்றும் ஞானஷ்யாம்பதக் என்ற இருவரும் ஆவர். இவர்களது தாக்குதலில் யாருக்கும் தலையில் காயமோ, வெளிக்காயமோ ஏற்படவில்லை. இத்தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை. எனினும் மிகவும் மோசமாக தாக்கப்பட் டனர். கச்சிதமாக கடுமையான உள்காயங் கள் ஏற்படும் வண்ணம் அவர்களது தாக்குதல் அமைந்திருந்தது. சங்பரிவாரத் தினர் மட்டுமே இவ்வாறு தாக்குதல் நடத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொடூரமான இந்நிகழ்வை அச்சத்தின் காரணமாக கிராம மக்கள் மறைத்து விட்டனர். உண்மை அறிந்து அந்தப் பகுதி காங்கிரஸ் தலைவர் முஹம்மது அஸ்லம் ரைனி செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டினார். அதோடு காவல்துறை அலுவலகத்திற்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டத்தையும் அறிவித்தார்.
அரசியல் கட்சிகள் வரிசையாக போராட்டத்தை அறிவித்தன. தானிதீனி கிராமத்தின் முஸ்லிம்களில் அதிகம் பேர் இன்னும் மறைந்ததே வாழ்கின் றனர். கிராமத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றம் நீடிக்கிறது. மாற்றங்களை ஏற்படுத்து வதாக நினைத்து மாயாவதி சிக்கலில் மாட்டிக்கொண்டார்
ஆந்திராவில் இரண்டு ஹனீஃப்கள்
முஹம்மத் ஹனீஃபுக்கு தீவிரவாத பழி சுமத்தி திருதிருவென விழித்து திக்கு முக்காடி தவித்த ஆஸ்திரேலியாவைப் பற்றி தற்போது பரபரப்பாக பேசப் படுகிறது. ஆனால் டாக்டர் ஹனீஃபை விட பல மடங்கு வேதனையையும் துன்பங்களையும் அனுபவித்த இளைஞர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
2001 செப்டம்பர் 11ல் நிகழ்ந்த நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதல் தொடர்பாக இரண்டு இந்திய இளைஞர்களை குறிப்பாக ஹைதராபாத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களை அமெரிக்க அரசு முதலில் சந்தேகத்தின் பேரில் கைது செய்தது.
முஹம்மது அய்யூப், ஜாவித் அஹ்மத் இருவரையும் இரட்டைக் கோபுர தாக்குதல் வழக்கில் தொடர்புடையவர்கள் என பல ஆண்டுகளாக சிறையி லடைத்தது.
கடந்த ஆண்டு இருவரையும் அமெரிக்க அரசு விடுதலை செய்தது. இவர்கள் இருவர் மீதான தீவிரவாத தொடர்பு நிரூபிக்கப்படவில்லை என்ப தால் அவர்கள் விடுதலை செய்யப் பட்டனர்.
முஹம்மத் ஹனீஃப், அவரது மனைவி ஃபிர்தவ்ஸ் அர்ஷியா மற்றும் அவர்களது குடும்பத்தினரின் உணர்வுகளை எங்களால் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. ஏனெனில் நாங்களும் அதைப் போன்ற ஒரு துன்பத்தை அனுபவித்த வர்கள் என்று ஜாவீத் அஸ்மத்தும் அவரது மனைவி தஸ்லீமும் கூறுகின் றனர்.
முஹம்மத் ஹனீஃப் என்ற கர்நாடக சகோதரருக்கு ஆஸ்திரேலியாவில் நேர்ந்தது தான் அமெரிக்காவில் எனக்கும் நடந்தது என்று குறிப்பிடும் ஜாவித் அஸ்மத், நான் உலக வர்த்தக வளாகத்தை தாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவன் என என்னைக் கைது செய்தார்கள். நான் சவூதி அரேபியாவின் பிரஜை என்றார் கள். அதற்கு போலியாக பாஸ்போர்டும், பிறப்புச் சான்றிதழும் புனைந்தார்கள். எனக்கு விமானம் ஓட்டத் தெரியும் என்று பொய்யாக ஒரு ஆவணத்தை தயார் செய்தார்கள். இதில் வேடிக்கை என்னவெனில் எனக்கு விமானம் ஓட்டத் தெரியாது. எங்கள் மீது கூறிய குற்றச்சாட்டுகள் எதையும் நீதிமன்றத்தில் அமெரிக்க அரசால் நிரூபிக்க முடிய வில்லை. வழக்கை இழுத்தடிக்கும் மிகக் கேவலமான தந்திரத்தை கையாண்டார் கள். இறுதியில் நீதிமன்றத்தால் நாங்கள் விடுதலை செய்யப்பட்டோம்.
ஹனீஃபுக்கு ஆதரவாக இந்திய அரசு களம் இறங்கியது. ஹனீஃப் குறித்த அனைத்து வி'யங்களும் பகிரங்கப் படுத்தன. அதனால் புனையப்பட்ட கற்பனை குற்றச்சாட்டுகள் மறைந்து உண்மைகள் வெளிவரத் துவங்கின என்று கூறிய ஜாவீத் இதற்கென இந்திய அரசை பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
தங்களை சிறையில் தள்ளியதற்கும் கண்ணியக் குறைவை ஏற்படுத்தியதற்கும் இழப்பீடு கோரி அமெரிக்க அரசை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கும் ஜாவீத் அஸ்மத் விரைவில் வெற்றி கிடைக்கும் என்றும் நம்புகிறார்
முஹம்மத் ஹனீஃபுக்கு தீவிரவாத பழி சுமத்தி திருதிருவென விழித்து திக்கு முக்காடி தவித்த ஆஸ்திரேலியாவைப் பற்றி தற்போது பரபரப்பாக பேசப் படுகிறது. ஆனால் டாக்டர் ஹனீஃபை விட பல மடங்கு வேதனையையும் துன்பங்களையும் அனுபவித்த இளைஞர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
2001 செப்டம்பர் 11ல் நிகழ்ந்த நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதல் தொடர்பாக இரண்டு இந்திய இளைஞர்களை குறிப்பாக ஹைதராபாத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களை அமெரிக்க அரசு முதலில் சந்தேகத்தின் பேரில் கைது செய்தது.
முஹம்மது அய்யூப், ஜாவித் அஹ்மத் இருவரையும் இரட்டைக் கோபுர தாக்குதல் வழக்கில் தொடர்புடையவர்கள் என பல ஆண்டுகளாக சிறையி லடைத்தது.
கடந்த ஆண்டு இருவரையும் அமெரிக்க அரசு விடுதலை செய்தது. இவர்கள் இருவர் மீதான தீவிரவாத தொடர்பு நிரூபிக்கப்படவில்லை என்ப தால் அவர்கள் விடுதலை செய்யப் பட்டனர்.
முஹம்மத் ஹனீஃப், அவரது மனைவி ஃபிர்தவ்ஸ் அர்ஷியா மற்றும் அவர்களது குடும்பத்தினரின் உணர்வுகளை எங்களால் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. ஏனெனில் நாங்களும் அதைப் போன்ற ஒரு துன்பத்தை அனுபவித்த வர்கள் என்று ஜாவீத் அஸ்மத்தும் அவரது மனைவி தஸ்லீமும் கூறுகின் றனர்.
முஹம்மத் ஹனீஃப் என்ற கர்நாடக சகோதரருக்கு ஆஸ்திரேலியாவில் நேர்ந்தது தான் அமெரிக்காவில் எனக்கும் நடந்தது என்று குறிப்பிடும் ஜாவித் அஸ்மத், நான் உலக வர்த்தக வளாகத்தை தாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவன் என என்னைக் கைது செய்தார்கள். நான் சவூதி அரேபியாவின் பிரஜை என்றார் கள். அதற்கு போலியாக பாஸ்போர்டும், பிறப்புச் சான்றிதழும் புனைந்தார்கள். எனக்கு விமானம் ஓட்டத் தெரியும் என்று பொய்யாக ஒரு ஆவணத்தை தயார் செய்தார்கள். இதில் வேடிக்கை என்னவெனில் எனக்கு விமானம் ஓட்டத் தெரியாது. எங்கள் மீது கூறிய குற்றச்சாட்டுகள் எதையும் நீதிமன்றத்தில் அமெரிக்க அரசால் நிரூபிக்க முடிய வில்லை. வழக்கை இழுத்தடிக்கும் மிகக் கேவலமான தந்திரத்தை கையாண்டார் கள். இறுதியில் நீதிமன்றத்தால் நாங்கள் விடுதலை செய்யப்பட்டோம்.
ஹனீஃபுக்கு ஆதரவாக இந்திய அரசு களம் இறங்கியது. ஹனீஃப் குறித்த அனைத்து வி'யங்களும் பகிரங்கப் படுத்தன. அதனால் புனையப்பட்ட கற்பனை குற்றச்சாட்டுகள் மறைந்து உண்மைகள் வெளிவரத் துவங்கின என்று கூறிய ஜாவீத் இதற்கென இந்திய அரசை பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
தங்களை சிறையில் தள்ளியதற்கும் கண்ணியக் குறைவை ஏற்படுத்தியதற்கும் இழப்பீடு கோரி அமெரிக்க அரசை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கும் ஜாவீத் அஸ்மத் விரைவில் வெற்றி கிடைக்கும் என்றும் நம்புகிறார்
Thursday, July 26, 2007
headlines
நாட்டின் முதல் சேவகி நான்.
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் எனது முயற்சிகள் அமையும் என வண்ணமிகு விழாவில் பதவியேற்ற புதிய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உரையாற்றினார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், இந்நாள் முன்னாள் பிரதமர்கள், காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி முதலமைச்சர் கருணாநிதி உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
குடியரசுத் தலைவர் பதவிக்காலம் முடிந்து அப்துல் கலாம் டெல்லியிலிருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான தனி விமானத்தில் சென்னை வந்தார். விமானநிலையத்தில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. நிதியமைச்சர் அன்பழகன், அமைச்சர் தாமோ.அன்பரசன் உட்பட முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்.
புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்றுள்ள நிலையில் மத்திய அமைச்சரவையில் சிறிய மாற்றம் செய்யப்பட உள்ளதாக தலைநகர் டெல்லியில் இருந்து வரும் சேதிகள் தெரிவிக்கின்றன. ராஜ்ய சபையின் துணைத் தலைவராக இருந்து வரும் ரஹ்மான்கான் கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்ட வந்த மரபின்படி எதிர்கட்சி கூட்டணிக்கு வழிவிட்டு தனது ராஜ்யசபைத் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரஹ்மான்கான் மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவார் என்றும் தமிழகத்தைச் சேர்ந்த புதுமுக எம்.பி மத்திய அமைச்சராவார் என்றும் அவரது பெயர் கனிமொழி என்றும் டெல்லி மற்றும் சென்னை தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும். அதைப்பற்றி மேற்கொண்டு தெரிவிக்க விரும்பவில்லை. நல்லது நடக்க இருக்கும் நிலையில் அதுபற்றி இப்போது விவாதிக்க வேண்டாம் என முதலமைச்சர் கருணாநிதி டெல்லியில் தமிழக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நதிகள் இணைப்பு தொடர்பாக முதல் அமைச்சர்கள் மாநாட்டை கூட்டுமாறு முதல் அமைச்சர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கேட்டுக் கொண்டதாக கருணாநிதி தெரிவித்திருக்கிறார்.
காங்கிரஸ் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் ஹமீத் அன்சாரி முதல்வர் கருணாநிதியை சந்தித்தார். இச்சந்திப்பின் போது மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு உடன் இருந்தார்.
கடத்தப்பட்ட சத்யம் கம்ப்யூட்டர்ஸின் மேலாளர் சத்யநாராயணா மீட்கப்பட்டார். இது தொடர்பாக சத்யநாரயணாவின் ஓட்டுநர் உள்பட நால்வர் கைது செய்யப்பட்டனர்.
பெட்ரோல் மற்றும் டீசலின் விலை விரைவில் உயர்த்தப்பட உள்ளதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்துள்ளார்.
நல்ல படிப்பு வருவதற்கு பூஜை செய்கிறேன் வா என்று கூறி ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமியை அழைத்துச் சென்று கற்பழிக்க முயற்சித்த சென்னை மேற்கு முகப்பேர் நடைபாதை கோவில் பூசாரி கோபிநாத் கைது செய்யப்பட்டார்.
காமவெறி பிடித்த பூசாரிக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
புதிய காவல்துறை உதவி ஆய்வாளர்களை தேர்ந்தெடுப்பதற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. தான் நன்றாக எழுத்துத் தேர்வு எழுதியுள்ளதாகவும் தன்னைவிட தகுதிக் குறைந்தவர்கள் மருத்துவ தகுதி தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தனக்கு அழைப்பு அனுப்பப்பட வில்லை என்றும் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த சங்கர் கணேஷ் என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து பதில் தருமாறு அரசுக்கு நீதிபதி கே. வெங்கட் ராமன் உத்தரவிட்டுள்ளார்.
புகைப்பட வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் விண்ணப்பங்களை துல்லியமாக சரி பார்ப்பதால் இறுதிப்பட்டியல் வெளியிட மேலும் ஒரு மாதம் கால தாமதம் ஆகும் என தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்திருக்கிறார்
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் எனது முயற்சிகள் அமையும் என வண்ணமிகு விழாவில் பதவியேற்ற புதிய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உரையாற்றினார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், இந்நாள் முன்னாள் பிரதமர்கள், காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி முதலமைச்சர் கருணாநிதி உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
குடியரசுத் தலைவர் பதவிக்காலம் முடிந்து அப்துல் கலாம் டெல்லியிலிருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான தனி விமானத்தில் சென்னை வந்தார். விமானநிலையத்தில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. நிதியமைச்சர் அன்பழகன், அமைச்சர் தாமோ.அன்பரசன் உட்பட முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்.
புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்றுள்ள நிலையில் மத்திய அமைச்சரவையில் சிறிய மாற்றம் செய்யப்பட உள்ளதாக தலைநகர் டெல்லியில் இருந்து வரும் சேதிகள் தெரிவிக்கின்றன. ராஜ்ய சபையின் துணைத் தலைவராக இருந்து வரும் ரஹ்மான்கான் கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்ட வந்த மரபின்படி எதிர்கட்சி கூட்டணிக்கு வழிவிட்டு தனது ராஜ்யசபைத் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரஹ்மான்கான் மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவார் என்றும் தமிழகத்தைச் சேர்ந்த புதுமுக எம்.பி மத்திய அமைச்சராவார் என்றும் அவரது பெயர் கனிமொழி என்றும் டெல்லி மற்றும் சென்னை தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும். அதைப்பற்றி மேற்கொண்டு தெரிவிக்க விரும்பவில்லை. நல்லது நடக்க இருக்கும் நிலையில் அதுபற்றி இப்போது விவாதிக்க வேண்டாம் என முதலமைச்சர் கருணாநிதி டெல்லியில் தமிழக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நதிகள் இணைப்பு தொடர்பாக முதல் அமைச்சர்கள் மாநாட்டை கூட்டுமாறு முதல் அமைச்சர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கேட்டுக் கொண்டதாக கருணாநிதி தெரிவித்திருக்கிறார்.
காங்கிரஸ் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் ஹமீத் அன்சாரி முதல்வர் கருணாநிதியை சந்தித்தார். இச்சந்திப்பின் போது மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு உடன் இருந்தார்.
கடத்தப்பட்ட சத்யம் கம்ப்யூட்டர்ஸின் மேலாளர் சத்யநாராயணா மீட்கப்பட்டார். இது தொடர்பாக சத்யநாரயணாவின் ஓட்டுநர் உள்பட நால்வர் கைது செய்யப்பட்டனர்.
பெட்ரோல் மற்றும் டீசலின் விலை விரைவில் உயர்த்தப்பட உள்ளதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்துள்ளார்.
நல்ல படிப்பு வருவதற்கு பூஜை செய்கிறேன் வா என்று கூறி ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமியை அழைத்துச் சென்று கற்பழிக்க முயற்சித்த சென்னை மேற்கு முகப்பேர் நடைபாதை கோவில் பூசாரி கோபிநாத் கைது செய்யப்பட்டார்.
காமவெறி பிடித்த பூசாரிக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
புதிய காவல்துறை உதவி ஆய்வாளர்களை தேர்ந்தெடுப்பதற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. தான் நன்றாக எழுத்துத் தேர்வு எழுதியுள்ளதாகவும் தன்னைவிட தகுதிக் குறைந்தவர்கள் மருத்துவ தகுதி தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தனக்கு அழைப்பு அனுப்பப்பட வில்லை என்றும் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த சங்கர் கணேஷ் என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து பதில் தருமாறு அரசுக்கு நீதிபதி கே. வெங்கட் ராமன் உத்தரவிட்டுள்ளார்.
புகைப்பட வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் விண்ணப்பங்களை துல்லியமாக சரி பார்ப்பதால் இறுதிப்பட்டியல் வெளியிட மேலும் ஒரு மாதம் கால தாமதம் ஆகும் என தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்திருக்கிறார்
Wednesday, July 25, 2007
செய்திகள் இன்று
இந்தியாவின் 12வது குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் இன்று மதியம் பதவியேற்றார்.
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை தனிப்பட்ட முறையில் திட்டியதாக ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மீது கடுமையான எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு எதிர்வரும் செப்டம்பர் 15க்குள் குடும்ப அட்டை வழங்கப்பட வேண்டும் என உணவுத்துறை அமைச்சர் எ.வ. வேலு உத்தரவிட்டார்.
சத்தியம் கம்யூட்டர்ஸ் குழுமத்தைச் சேர்ந்த பொது மேலாளர் சத்திய நாராணயனன் செகந்திராபாத்தில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.
சேது சமுத்திர திட்டப்பணிகளுக்கு இதுவரை 400 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அத்திட்ட தலைவர் என்.கே. ரகுபதி தெரிவித்திருக்கிறார்.
சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களை உறுதிப்படுத்த தேவைப்பட்டால் சட்ட திருத்தம் கொண்டுவரப்படும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
ஜம்முலிகாஷ்மீரில் ராணுவ வீரர் ஒருவர் ராணுவ மேஜரை சுட்டுக் கொன்றுள்ளார். இவ்வாறு ராணுவத் துறையினருக்குள்ளே மோதல் நடைபெறுவது இது ஆறாவது தடவையாகும்.
மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி பா.ம.கவின் ஜனநாயகக் கடமை தொடரும் இதற்கு யாரும் வாய்ப்பூட்டு போட முடியாது என ராமதாசு தெரிவித்திருக்கிறார். இது கருணாநிதியின் நேற்றைய பேச்சுக்கு பதிலளித்த அறிக்கையாக கருதப்படுகின்றது.
இன்று பதவி ஓய்வு பெற்ற குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சென்னை வருகிறார். குடியரசுத் தலைவர் பதவியிருந்து ஓய்வு பெற்றாலும் மக்களை தொடர்பு கொள்ளும் பணியில் இருந்து, ஓய்வு பெறப்போவதில்லை என அவர் தெரிவித்திருக்கிறார்.
பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவின் அனைத்து இதயங்களும் இணைக்கப்பட வேண்டும் என நாட்டு மக்களுக்கு உரையாற்றிய குடியரசு தலைவர் டாக்டர். ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் தெரிவித்திருக்கிறார். எதிர்வரும் 2020ல் இந்தியாவை வல்லரசாக ஆக்கும் முயற்சியில் உங்களுக்கு துணை நிற்பேன் என்றும் குடியரசுத் தலைவர் கூறினார். நாட்டு மக்களிடம் குடியரசு தலைவர் பிரியா விடை பெற்றார்.
திமுக அரசு மீதும் உயர் கல்வித்துறை மீதும் ராமதாஸ் கடும் விமர்சனங்களை கூறிவருவதைத் தொடர்ந்து எதற்கும் ஓர் எல்லையும் அளவும் வேண்டும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். பொன்முடி மீது டாக்டர் ராமதாசு கூறும் விமர்சனம் குறித்து கருணாநிதி பேசும்போது உயர்கல்வித் துறை அமைச்சர் அவருடைய சொந்த மாவட்டம் அல்லவா? அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் நல்ல பெயர் எடுக்க வேண்டும் எண்ணத்துடன் ராமதாசு தெரிவித்திருக்கக் கூடும். ஆனால் அதற்கும் ஓர் எல்லையும் அளவும் வேண்டும் என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.
அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் நாட்கள் தங்கியிருந்ததால் சிங்கப்பூர் சிறையில் வாடும் தமிழர்களை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்திருக்கிறார்.
பொறியியல் கல்விக்கான கலந்தாய்வில் கூடுதலாக ஆயிரம் இடங்கள் இந்த ஆண்டு உருவாக்கப்படும் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார்.
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் சங்கராச்சாரி உள்பட 12 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. சென்னை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரான சங்கராச்சாரி உள்பட 12 பேரின் குற்றச்சாட்டை நீதிபதி முஹமது இஷாக் வாசித்தார்.
ஹனீஃப் விவகாரத்தில் ஆஸ்திரேலிய காவல்துறையினர் நடந்து கொண்ட விதம் உலக அளவில் நகைப்புக்குரியதாகி விட்டது என அந்நாட்டு எதிர்கட்சியான கிரீன்ஸ்கட்சி தெரிவித்துள்ளது.
எங்கள் மண்ணின் மீது குண்டுகள் வீச அமெரிக்காவை அனுமதிக்க மாட்டோம் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை தனிப்பட்ட முறையில் திட்டியதாக ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மீது கடுமையான எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு எதிர்வரும் செப்டம்பர் 15க்குள் குடும்ப அட்டை வழங்கப்பட வேண்டும் என உணவுத்துறை அமைச்சர் எ.வ. வேலு உத்தரவிட்டார்.
சத்தியம் கம்யூட்டர்ஸ் குழுமத்தைச் சேர்ந்த பொது மேலாளர் சத்திய நாராணயனன் செகந்திராபாத்தில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.
சேது சமுத்திர திட்டப்பணிகளுக்கு இதுவரை 400 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அத்திட்ட தலைவர் என்.கே. ரகுபதி தெரிவித்திருக்கிறார்.
சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களை உறுதிப்படுத்த தேவைப்பட்டால் சட்ட திருத்தம் கொண்டுவரப்படும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
ஜம்முலிகாஷ்மீரில் ராணுவ வீரர் ஒருவர் ராணுவ மேஜரை சுட்டுக் கொன்றுள்ளார். இவ்வாறு ராணுவத் துறையினருக்குள்ளே மோதல் நடைபெறுவது இது ஆறாவது தடவையாகும்.
மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி பா.ம.கவின் ஜனநாயகக் கடமை தொடரும் இதற்கு யாரும் வாய்ப்பூட்டு போட முடியாது என ராமதாசு தெரிவித்திருக்கிறார். இது கருணாநிதியின் நேற்றைய பேச்சுக்கு பதிலளித்த அறிக்கையாக கருதப்படுகின்றது.
இன்று பதவி ஓய்வு பெற்ற குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சென்னை வருகிறார். குடியரசுத் தலைவர் பதவியிருந்து ஓய்வு பெற்றாலும் மக்களை தொடர்பு கொள்ளும் பணியில் இருந்து, ஓய்வு பெறப்போவதில்லை என அவர் தெரிவித்திருக்கிறார்.
பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவின் அனைத்து இதயங்களும் இணைக்கப்பட வேண்டும் என நாட்டு மக்களுக்கு உரையாற்றிய குடியரசு தலைவர் டாக்டர். ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் தெரிவித்திருக்கிறார். எதிர்வரும் 2020ல் இந்தியாவை வல்லரசாக ஆக்கும் முயற்சியில் உங்களுக்கு துணை நிற்பேன் என்றும் குடியரசுத் தலைவர் கூறினார். நாட்டு மக்களிடம் குடியரசு தலைவர் பிரியா விடை பெற்றார்.
திமுக அரசு மீதும் உயர் கல்வித்துறை மீதும் ராமதாஸ் கடும் விமர்சனங்களை கூறிவருவதைத் தொடர்ந்து எதற்கும் ஓர் எல்லையும் அளவும் வேண்டும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். பொன்முடி மீது டாக்டர் ராமதாசு கூறும் விமர்சனம் குறித்து கருணாநிதி பேசும்போது உயர்கல்வித் துறை அமைச்சர் அவருடைய சொந்த மாவட்டம் அல்லவா? அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் நல்ல பெயர் எடுக்க வேண்டும் எண்ணத்துடன் ராமதாசு தெரிவித்திருக்கக் கூடும். ஆனால் அதற்கும் ஓர் எல்லையும் அளவும் வேண்டும் என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.
அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் நாட்கள் தங்கியிருந்ததால் சிங்கப்பூர் சிறையில் வாடும் தமிழர்களை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்திருக்கிறார்.
பொறியியல் கல்விக்கான கலந்தாய்வில் கூடுதலாக ஆயிரம் இடங்கள் இந்த ஆண்டு உருவாக்கப்படும் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார்.
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் சங்கராச்சாரி உள்பட 12 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. சென்னை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரான சங்கராச்சாரி உள்பட 12 பேரின் குற்றச்சாட்டை நீதிபதி முஹமது இஷாக் வாசித்தார்.
ஹனீஃப் விவகாரத்தில் ஆஸ்திரேலிய காவல்துறையினர் நடந்து கொண்ட விதம் உலக அளவில் நகைப்புக்குரியதாகி விட்டது என அந்நாட்டு எதிர்கட்சியான கிரீன்ஸ்கட்சி தெரிவித்துள்ளது.
எங்கள் மண்ணின் மீது குண்டுகள் வீச அமெரிக்காவை அனுமதிக்க மாட்டோம் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது
Friday, July 20, 2007
இந்திய இளைஞர்களை குறி வைக்கும் சர்வதேச பயங்கரவாதம் அதிர்ச்சி தகவல்கள்
இந்திய இளைஞர்களை குறி வைக்கும் சர்வதேச பயங்கரவாதம் அதிர்ச்சி தகவல்கள்
பிரிட்டனின விமான நிலையத்தின் முன்புறம் கஃபில் என்பவர் கேஸ் சிலிண்டர்களை நிரப்பிய வாகனத்துடன் தன் மீதும் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு மோதியதால் வாகனம் தீப்பிடித்தது. கஃபில் மனையில் தற்போது பிரிட்டன் மருத்துவ மனையில் உயிருக்குப் போராடி வருகிறார். 92 சதவீதம் உடல் எரிந்த நிலையில் அவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ள தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கிளாஸ்கோ விமான நிலையத்தின் முன்புறத் தில் இருந்த பாதுகாப்புத் தடுப்புகளை மீறிச் சென்று காரிலிருந்து குதித்த நபரை கைது செய்து விட்டதாக பிரிட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. அவர் ஈராக்கைச் சேர்ந்த டாக்டர் பிலால் அப்துல்லாஹ் என்றும் அவரும் இந்த வெடிக்காத குண்டு வெடிப்பில் முக்கிய தொடர்புடையவர் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.
டாக்டர்களின் சதி எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த நிகழ்வில் எட்டு பேருக்கு தொடர்பு இருக்கக்கூடும் என பிரிட்டிஷ் புலனாய்வுத்துறையினரால் நம்பப்படுகிறது.
கஃபில் இனி உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லாத நிலையில் பிரிட்டிஷ் புலனாய்வுத் துறை வெளியிடும் தகவல்கள் மட்டுமே உலகம் நம்ப வேண்டியதாயிற்று.
எரிவாயு நிரம்பிய வாகனத்தை கஃபில் ஒட்டி வந்ததாக பிரிட்டன் காவல்துறை கூறுகிறது. எரிவாயுவால் வாகனம் ஓட்டப்படுவது பல்லாண்டு காலமாக நடந்து வருகிறது. உலகின் பல நாடுகளில் வாகனங்கள் எரிவாயு சிலிண்டர்களில் ஓடுகின்றன.
ஆனால் எரிவாயு சிலிண்டர் நிரம்பிய வாகனத்தை ஓட்டி வந்தாரா? மோதினாரா? அல்லது நடந்தது விபத்தா? உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி வந்த வாகனத்தை மோதச் செய்த போது 90 சதவீதத்திற்கும் மேலாக கஃபிலின் உடல் எரிந்து போனதாக காவல்துறை கூறுகிறது. ஆனால் அருகிலிருந்து அதே ஜீப்பிலிருந்து குதித்தாகக் கூறப்படும் பிலால் அப்துல்லாஹ்வுக்கு காயம் ஏதும் ஏற்படாமல் பத்திரமாக குதித்தது எப்படி? என்பது போன்ற விடை தெரியாத வினாக்கள் விடைத்து நிற்கின்றன.
ஆனால் இது குறித்து எந்த மேற்குலக ஊடகங்களும் கண்டு கொள்ளவில்லை. இந்திய ஊடகங்களும் வாய் திறக்கவில்லை.
கஃபிலை யாரும் பார்க்கவும் காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இன்னும் அவரை விசாரித்து வருவதாகக் கூறிக் கொள்கிறது.
கிளாஸ்கோ விமான நிலைய முகப்பில் எரிந்த நிலையில் விழுந்தவன் தனது மகன் தான் என கஃபிலின் பெற்றோர்கள் உறுதியாக தெரிவித்தாகவும் செய்திகள் வெளியாயின.
இந்திய புலனாய்வுத் துறையும் கஃபிலின் மீது சந்தேகம் இருப்பதாகவே தெரிவித்திருக்கிறது.
ஒரு தலைச்சார்பான இந்த தகவல்களே சந்தேகத்திற்குரியவை தான் என்பதே நடுநிலையாளர்களின் வாதம்.
இந்நிலையில் கிளாஸ்கோ சம்பவம் நிகழ்ந்து பரபரப்பான தகவல்கள் வெளிவந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து பெங்களூருக்கு செல்ல விமான நிலையம் வந்த டாக்டர் ஹனீஃப் என்ற 27 வயது இளைஞரை ஆஸ்திரேலிய நிர்வாகம் விசாரணை வளையத்தில் வைத்தது.
டாக்டர் ஹனீஃப் சமீபத்தில் பிறந்த தனது பெண் குழந்தையை பார்ப்பதற்காக ஆசையுடன் புறப்பட்டவருக்கு ஆஸ்திரேலிய நிர்வாகத்தின் இச்செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹனீஃபின் குடும்பத்தினரும் கடும் சோகத்தில் மூழ்கினர்.
ஏதும் குற்றச்சாட்டுகள் அவர் மீது நிரூபணமாகாத நிலையில், அவரை விசாரணைக்காக முடக்கி வைத்த ஆஸ்தி ரேலிய நிர்வாகத்தின் மீது கடும் விமர்சனங் கள் எழுந்தன.
ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரென்டன் நெல்சனும், பிரதமர் ஜான் ஹோவர்டும் ஹனீஃபின் மீது இது வரை எந்தக் குற்றச் சாட்டும் நிரூபிக்கப் படவில்லை என்று கூறினார். அவர் மீதான விசாரணை முடிந்த பிறகு அவர் விடுவிக்கப்படுவார், நாளை விடுவிக்கப்படுவார் என இந்திய செய்தி ஏடுகளும் ஆருடங்களை கூறிவந்தன.
ஏற்கனவே பெங்களூர் காவல்துறை யும் டாக்டர் ஹனீஃபை குற்றவாளியாக உறுதிபடுத்தும் விதத்தில் எந்தவகையான ஆதாரமும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹனீஃப் ஆஸ்ரேலிய நிர்வாகத்தின் அனுமதியின் பேரில் ஒரு நிமிடம் தனது மனைவியிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது தான் விரைவில் விடுவிக்கப்படுவேன் என்று நம்பிக்கை யுடன் பேசினார். தனக்காக வீட்டிலுள் ளோர் அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதனை டாக்டர் ஹனீஃபின் மனைவி ஃபிர்தவ்ஸ் அர்ஷியா தெரிவித்திருந்தார்.14.07.07 அன்று டாக்டர் ஹனீஃப் தாயகம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் 14 நாட்கள் விசாரணையில் வைத்திருந்து திடீரென அவர் மீது குற்றச்சாட்டை ஆஸ்திரேலிய அரசு சுமத்தியது.
இதனிடையே டாக்டர் ஹனீஃபை விரைவில் விடுவிக்க வேண்டும் என சர்வதேச பொது மன்னிப்பு சபை வேண்டுகோள் விடுத்தது.
அனைத்தையும் அலட்சியம் செய்து ஆஸ்திரேலிய அரசு டாக்டர் ஹனீஃப் மீது குற்றச் சாட்டை பதிவு செய்தது. ஹனீஃப் தனது தூரத்து உறவினரான கஃபீலுக்கு சிம்கார்டு ஒன்றை கொடுத்ததாக குற்றம் சாட்டுகிறது.
ஆஸ்திரேலிய அரசின் இந்தச் செயல் ஒரு நாடகம் என ஆஸ்திரேலியாவிலுள்ள இந்திய தூதரகம் கூறியது. இது நாடகக் காட்சி போன்றே இருப்பதாக ஆஸ்திரேலியாவுக்கான முன்னாள் இந்தியத் தூதர் சி.ஜே. ராவ் தெரிவித்தார்.
வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாதுகாப்புக்கு இந்திய அரசு உத்தரவாதம் தரவேண்டும் என சி.ஜே. ராவ் தெரிவித்தார்.
ஒருவருக்கு சிம்கார்டு கொடுப்பது ஒன்றும் குற்றச்செயலல்ல. இது அடிப்படையற்றது என ஹனீஃபின் மனைவி அர்ஷியா தெரிவித்தார்.
இதற்கிடையில் ஹனீஃபுக்கு ஜாமீன் தரக்கோரி அவரது வழக்கறிஞர் பீட்டர் ரூசோ நீதிமன்றத்தில் மனு செய்தார். 16.07.07 அன்று ஹனீஃபுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்தது.
வெடிக்காத குண்டு விவகாரத்தில், உண்மை நிலவரங்கள் வெளிவராத நிலையே நீடிக்கிறது. பயங்கரவாத அச்சுறுத்தல், தீவிரவாத தாக்குதல் என பீடிகைகள் பலமாக இருந்தாலும் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவன் ஒரு முஸ்லிம் இளைஞர்தான். இந்நிலையில் எங்கும் எவரும் பாதிக்கப்படாத சூழ்நிலையில் இந்திய முஸ்லிம்கள் குறித்து உலகெங்கும் வாதப் பிரதிவாதங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
'ஏப்ர்க்ஷஹப் ஓங்ட்ஹக்' உலகம் தழுவிய ஜிஹாத் இந்தியாவில் பரவி வருவதாக ஒரு சாரார் இது போன்ற சம்பவத்துக் காகவே காத்திருந்தது போல் தங்கள் கண்டுபிடிப்புகளை (!) கருத்துக்களாக தெரிவித்து வருகிறார்கள்.
இந்தச் சதிச்செயலுக்கு 'டாக்டர்கள் சதி' என்று பெயரிடப்பட்டது ஏன்? கைது செய்யப்பட்டுள்ள கஃபிலின் சகோதரர் சபீல் மற்றும் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள முஹம்மது ஹனீஃப் இருவர் மட்டுமே டாக்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நடக்காதவைகளை பெரிதுபடுத்தி அதன் விசாரணை விவரங்களைக்கூட வெளியிடாமல் முஸ்லிம்களை சந்தேக வளையத்தில் சிக்க வைக்கும் செயலை முன்னணிப் பத்திரிக்கையாளர் அஸ்கர் அலி என்ஜினியர் கண்டித்திருக்கிறார்.இந்த சமுதாயம் தீவிரவாதிகளை ஆதரித்ததற்கு எந்த ஆதாரமும் இதுவரை கிடைத்ததில்லை என பொருளாதார அறிஞரும் சச்சார் குழுவின் உறுப்பினருமான டாக்டர் அபூசாலிஹ் ஷெரிப் தெரிவித்தார்.
உலகளாவிய பயங்கரவாதம் என்பது மேற்குலகால் உருவாக்கப்பட்டது அதற்கும் இஸ்லாத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என ஜமியத்தே உலமாயே ஹிந்த்தின் மஹ்மூத் மதானி தெரிவித்தார்.
இந்த ஒரு சமுதாயத்தை மட்டும் முத்திரை குத்தி குற்றம் சாட்டுவது ஏன் ஐ.ஆர்.ஏ என்ற ஐரீஷ் தேச தீவிரவாதப் படை எந்த செயலை செய்தாலும் அதற்கு கத்தோலிக்கர்களை குற்றம் சாட்டுவ தில்லையே? ஆனால் முஸ்லிம்களை மட்டும் குற்றம் சாட்டுவது ஏன் என குமுறுகிறார் டெல்லிப் பல்கலைக் கழக மாணவர் அக்தர் அலிகான்.
மும்பை ரெயில் குண்டு வெடிப்பு நிகழ்ந்து ஓராண்டுக்குப் பிறகு அதன் சோக சம்பவங்களை அனைத்து ஊடகங்களும் விரிவாக வெளியிடுகின் றன. ஆனால் மும்பையில் நிகழ்ந்த முஸ்லிம் விரோத வன்முறை குறித்தோ, குஜராத் கலவரங்கள் குறித்தோ இதுவரை அவர்கள் சிறிய செய்தியையாவது வெளியிட்டது உண்டா? என ஆவேசமாகக் கேட்கிறார் அஸ்கர் அலி என்ஜினியர்.
முஸ்லிம்கள் மீதான கொடுமைகளை மீடியாக்கள் மறந்து விடுகின்றன. 92ல் நடந்த மும்பை கலவரத்தில் தொடர்புடை யவர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப் படவில்லை. ஆனால் மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடை யவருக்கு 14 ஆண்டு சிறைத் தண்டனை கொடுக்கப்படுகிறது. மீடியாக்கள் கூறாமல் கூறும் மவுனச் செய்தி இது தான் ''முஸ்லிம்களின் பிரச்சினைகளை நாங்கள் கண்டு கொள்மாட்டோம் ஆனால் முஸ்லிம்களை பிரச்சினைக்குரியவர்களா சித்தரிப்போம்'' என்பதே அது. எந்த இந்திய முஸ்லிமும் எந்த சர்வதேச தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடை யவர்கள் அல்ல என ராஜ்யசபா எம்.பியும் ஜமாத்தே உலமாவின் பொதுச் செயலாளருமான மஹ்மூத் மதானி தெரிவித்திருக்கிறார்.
முஸ்லிம் அறிவுஜீவிகள், இந்தியா விலும் உலக அளவிலும் தற்போது நடைபெற்று வரும் சில மின்னல் வேக மாற்றங்களுக்கும் தற்போது வரும் செய்திகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
'அல்காய்தா ஹிந்த்' என்ற பெயரில் அல்காயிதாவின் இந்தியப் பிரிவு ஒன்று வீடியோ மூலம் இந்திய அரசுக்கும், காஷ்மீர் மாநில தலைவர்களுக்கும் மிரட்டல் விடுத்திருந்தது. இந்தியாவில் அல்காய்தா என்று இந்தியாவில் உள்ள அனைத்து ஊடகங்களும் செய்தியை பரப்பின.
இந்த பரபரப்பான செய்தி குறித்து முஸ்லிம் அறிவு ஜீவிகள் குழு சந்தேகம் தெரிவித்தது. இஸ்ரேலியப் படைப்பிரிவு இந்தியா வந்த பிறகே இம்மாதிரியான வினோதமான செய்திகள் வெளிவருவ தாகவும் இஸ்ரேலிய உளவுப் பிரிவுக்கும், இந்த புதிர் செய்திகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என ஙஒஎ எனும் அந்த அமைப்பு சந்தேகம் தெரிவித்துள்ளது. ஙஒஎலின் ஒருங்கிணைப்பாளர் பெரோஸ் மிதிபோர்வாலா வெளியிட்ட அறிக்கை யில் சமீபத்தில் வெளியிடப்பட்ட அல்காயிதா வீடியோ இஸ்ரேலிய உளவுப் பிரிவின் ஆலோசனையின்படி வெளியிட்டதாக இருக்கலாம் என ஙஒஎ தெரிவித்திருக்கிறது. இது இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் பெரும் உதவிகரமாக விளங்கியுள்ளது.
அல்காய்தா என்பது சி.ஐ.ஏ மற்றும் மொசாட்டின் முன்னணி அமைப்பே தவிர வேறல்ல, அமெரிக்க யூத உளவுத்துறை யினரே உலகமெங்கும் பயங்கரவாதங் களை கட்டவிழ்த்து விடுகின்றன என்பது சமீபத்தில் லண்டன் மற்றும் லால் மஸ்ஜித் சம்பவங்களிலிருந்து தெரிய வருகிறது. மறைந்த பாலஸ்தீனத் தலைவர் யாசர் அராஃபாத் பகிரங்கமாக வெளியிட்ட அறிக்கையில் மொசாத் அல்காய்தாவின் திட்டங்களை அட்டவணை போட்டுக் கொடுக்கிறது என்று தெரிவித்ததை பெரோஸ் நினைவு கூர்ந்தார்.
சிரியாவின் அதிபர் பஷருல் ஆஸாத் தும் அல்காய்தா அமைப்பு இஸ்ரேலின் மொசாட்டால் இயக்கப்படுகிறது என்று கூறினார். இன்று 50 சதவீதத்திற்கும் அதிகமான அமெரிக்கர்கள் 9/11 நியூயார்க் உலக வர்த்தக வளாகத் தாக்குதல் சி.ஐ.ஏ மற்றும் மொசாட்டின் கைவரிசையே என்றும் நம்புவதாக பெரோஸ் தெரிவித்திருக்கிறார்.
பொறியாளர் கஃபீலின் பெற்றோர்
இந்தியாவில் மதக்கலவரங்களால் முஸ்லிம்கள் மோசமாக பாதிக்கப்படும் பொழுது அதை சிறிதாக்கி காட்டுவதற்காக அதை மறக்கடிப்பதற்காக குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி முஸ்லிம்களின் மாண்பினை குலைக்கும் சதி அகில இந்திய அளவில் திட்டமிடப்படுகிறதா? என்ற சந்தேகம் எழுகின்றது.
பயங்கரவாதத்திற்கு எதிரான பேரில்(?) தற்போது ஆஸ்திரேலியாவும் இணைக் கப்படுகிறது. விசாரணையில் வைக்கப் பட்டிருந்த டாக்டர். ஹனீப் 10 நாட்களுக்கும் மேலாக எவ்வித குற்றச் சாட்டையும் சுமத்தாமல் இருந்தபோது பிரிட்டினிலிருந்து காவல்துறை படை ஒன்று ஆஸ்திரேலிய அதிகாரிகளை சந்தித்த பின்பு திடீரென டாக்டர் ஹனீஃப் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு பெங்களூரில் அறிவியல் கழகத்தில் விஞ்ஞான பேராசிரியர் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அது தொடர்பாக அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை அள்ளிச்சென்று அக்குவேறு ஆணிவேறாக விசாரித்தனர். விசாரிக்கப்பட்ட அனைவரும் எவ்வித குற்றமும் செய்யவில்லை என விடுவிக்கப்பட்டனர். ஆனால் அப்போது பெங்களூர் தீவிரவாதிகளின் குறியாக மாறிவிட்டது என்றார்கள். ஓராண்டு கடந்த பின்பும் உண்மைக் குற்றவாளி யைக் கண்டு பிடித்த பாடில்லை.
தற்போது பிரிட்டன் கிளாஸ்கோ விமான நிலைய சம்பவம் தொடர்பாக தெளிவற்ற ஒரு கதையைக் கூறி குழப்பி வருகிறார்கள்.
இந்தியா சுயசார்புடன் எழுந்து நின்று விடக்கூடாது. இனமோதல்களை உருவாக்க பிணங்களை குவித்தால் தங்கள் நாட்டின் பொருளாதாரவளத் தினை மேம்படுத்த முடியும். வல்லரசுக் கனவில் இருக்கும் இந்தியாவை இற்றுப் போக செய்யலாம் என முடிவெடுத்தே அமெரிக்க மற்றும் இஸ்ரேலில் சக்திகள் செயல்படத் துவங்கியுள்ளதாகத் தெரிகிறது.
இந்தியாவில் முப்பது கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்ந்து வரும் நிலையில் ஒருங்கிணைந்த சக்தியான முஸ்லிம்களை பலவீனப் படுத்தினால் விளையும் குழப்பங்களை வைத்து குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கவே மேற்குலக சக்திகள் முனைப்போடு செயல்படுகின்றன.
சொல்லி வைத்தாற்போல் இந்திய ஊடகங்கள் இந்திய முஸ்லிம் இளைஞர் களுக்கும் சர்வதேச பயங்கரவாத இயக்கங்கள் என்று அழைக்கப்படும் அமைப்புகளுக்கும் தொடர்புண்டா? இல்லையா? என்பது குறித்து விவாதங்கள் தொடங்கி விட்டன.
அனைத்துக் காட்சிகளையும் தயாரித்து இயக்குபவர்கள் யார் என்பது விவர மறிந்தோர் அனைவருக்கும் தெரியும். புல்லுருவிகளின் வஞ்சகங்களுக்கு இடம் அளிக்காது 100 கோடி இந்தியர்களும் ஒற்றுமையுடன் கை கோர்ப்பதே அந்த கருங்காலிகளின் முகங்களில் கரி பூசுவதாக அமையும்
பிரிட்டனின விமான நிலையத்தின் முன்புறம் கஃபில் என்பவர் கேஸ் சிலிண்டர்களை நிரப்பிய வாகனத்துடன் தன் மீதும் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு மோதியதால் வாகனம் தீப்பிடித்தது. கஃபில் மனையில் தற்போது பிரிட்டன் மருத்துவ மனையில் உயிருக்குப் போராடி வருகிறார். 92 சதவீதம் உடல் எரிந்த நிலையில் அவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ள தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கிளாஸ்கோ விமான நிலையத்தின் முன்புறத் தில் இருந்த பாதுகாப்புத் தடுப்புகளை மீறிச் சென்று காரிலிருந்து குதித்த நபரை கைது செய்து விட்டதாக பிரிட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. அவர் ஈராக்கைச் சேர்ந்த டாக்டர் பிலால் அப்துல்லாஹ் என்றும் அவரும் இந்த வெடிக்காத குண்டு வெடிப்பில் முக்கிய தொடர்புடையவர் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.
டாக்டர்களின் சதி எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த நிகழ்வில் எட்டு பேருக்கு தொடர்பு இருக்கக்கூடும் என பிரிட்டிஷ் புலனாய்வுத்துறையினரால் நம்பப்படுகிறது.
கஃபில் இனி உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லாத நிலையில் பிரிட்டிஷ் புலனாய்வுத் துறை வெளியிடும் தகவல்கள் மட்டுமே உலகம் நம்ப வேண்டியதாயிற்று.
எரிவாயு நிரம்பிய வாகனத்தை கஃபில் ஒட்டி வந்ததாக பிரிட்டன் காவல்துறை கூறுகிறது. எரிவாயுவால் வாகனம் ஓட்டப்படுவது பல்லாண்டு காலமாக நடந்து வருகிறது. உலகின் பல நாடுகளில் வாகனங்கள் எரிவாயு சிலிண்டர்களில் ஓடுகின்றன.
ஆனால் எரிவாயு சிலிண்டர் நிரம்பிய வாகனத்தை ஓட்டி வந்தாரா? மோதினாரா? அல்லது நடந்தது விபத்தா? உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி வந்த வாகனத்தை மோதச் செய்த போது 90 சதவீதத்திற்கும் மேலாக கஃபிலின் உடல் எரிந்து போனதாக காவல்துறை கூறுகிறது. ஆனால் அருகிலிருந்து அதே ஜீப்பிலிருந்து குதித்தாகக் கூறப்படும் பிலால் அப்துல்லாஹ்வுக்கு காயம் ஏதும் ஏற்படாமல் பத்திரமாக குதித்தது எப்படி? என்பது போன்ற விடை தெரியாத வினாக்கள் விடைத்து நிற்கின்றன.
ஆனால் இது குறித்து எந்த மேற்குலக ஊடகங்களும் கண்டு கொள்ளவில்லை. இந்திய ஊடகங்களும் வாய் திறக்கவில்லை.
கஃபிலை யாரும் பார்க்கவும் காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இன்னும் அவரை விசாரித்து வருவதாகக் கூறிக் கொள்கிறது.
கிளாஸ்கோ விமான நிலைய முகப்பில் எரிந்த நிலையில் விழுந்தவன் தனது மகன் தான் என கஃபிலின் பெற்றோர்கள் உறுதியாக தெரிவித்தாகவும் செய்திகள் வெளியாயின.
இந்திய புலனாய்வுத் துறையும் கஃபிலின் மீது சந்தேகம் இருப்பதாகவே தெரிவித்திருக்கிறது.
ஒரு தலைச்சார்பான இந்த தகவல்களே சந்தேகத்திற்குரியவை தான் என்பதே நடுநிலையாளர்களின் வாதம்.
இந்நிலையில் கிளாஸ்கோ சம்பவம் நிகழ்ந்து பரபரப்பான தகவல்கள் வெளிவந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து பெங்களூருக்கு செல்ல விமான நிலையம் வந்த டாக்டர் ஹனீஃப் என்ற 27 வயது இளைஞரை ஆஸ்திரேலிய நிர்வாகம் விசாரணை வளையத்தில் வைத்தது.
டாக்டர் ஹனீஃப் சமீபத்தில் பிறந்த தனது பெண் குழந்தையை பார்ப்பதற்காக ஆசையுடன் புறப்பட்டவருக்கு ஆஸ்திரேலிய நிர்வாகத்தின் இச்செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹனீஃபின் குடும்பத்தினரும் கடும் சோகத்தில் மூழ்கினர்.
ஏதும் குற்றச்சாட்டுகள் அவர் மீது நிரூபணமாகாத நிலையில், அவரை விசாரணைக்காக முடக்கி வைத்த ஆஸ்தி ரேலிய நிர்வாகத்தின் மீது கடும் விமர்சனங் கள் எழுந்தன.
ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரென்டன் நெல்சனும், பிரதமர் ஜான் ஹோவர்டும் ஹனீஃபின் மீது இது வரை எந்தக் குற்றச் சாட்டும் நிரூபிக்கப் படவில்லை என்று கூறினார். அவர் மீதான விசாரணை முடிந்த பிறகு அவர் விடுவிக்கப்படுவார், நாளை விடுவிக்கப்படுவார் என இந்திய செய்தி ஏடுகளும் ஆருடங்களை கூறிவந்தன.
ஏற்கனவே பெங்களூர் காவல்துறை யும் டாக்டர் ஹனீஃபை குற்றவாளியாக உறுதிபடுத்தும் விதத்தில் எந்தவகையான ஆதாரமும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹனீஃப் ஆஸ்ரேலிய நிர்வாகத்தின் அனுமதியின் பேரில் ஒரு நிமிடம் தனது மனைவியிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது தான் விரைவில் விடுவிக்கப்படுவேன் என்று நம்பிக்கை யுடன் பேசினார். தனக்காக வீட்டிலுள் ளோர் அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதனை டாக்டர் ஹனீஃபின் மனைவி ஃபிர்தவ்ஸ் அர்ஷியா தெரிவித்திருந்தார்.14.07.07 அன்று டாக்டர் ஹனீஃப் தாயகம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் 14 நாட்கள் விசாரணையில் வைத்திருந்து திடீரென அவர் மீது குற்றச்சாட்டை ஆஸ்திரேலிய அரசு சுமத்தியது.
இதனிடையே டாக்டர் ஹனீஃபை விரைவில் விடுவிக்க வேண்டும் என சர்வதேச பொது மன்னிப்பு சபை வேண்டுகோள் விடுத்தது.
அனைத்தையும் அலட்சியம் செய்து ஆஸ்திரேலிய அரசு டாக்டர் ஹனீஃப் மீது குற்றச் சாட்டை பதிவு செய்தது. ஹனீஃப் தனது தூரத்து உறவினரான கஃபீலுக்கு சிம்கார்டு ஒன்றை கொடுத்ததாக குற்றம் சாட்டுகிறது.
ஆஸ்திரேலிய அரசின் இந்தச் செயல் ஒரு நாடகம் என ஆஸ்திரேலியாவிலுள்ள இந்திய தூதரகம் கூறியது. இது நாடகக் காட்சி போன்றே இருப்பதாக ஆஸ்திரேலியாவுக்கான முன்னாள் இந்தியத் தூதர் சி.ஜே. ராவ் தெரிவித்தார்.
வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாதுகாப்புக்கு இந்திய அரசு உத்தரவாதம் தரவேண்டும் என சி.ஜே. ராவ் தெரிவித்தார்.
ஒருவருக்கு சிம்கார்டு கொடுப்பது ஒன்றும் குற்றச்செயலல்ல. இது அடிப்படையற்றது என ஹனீஃபின் மனைவி அர்ஷியா தெரிவித்தார்.
இதற்கிடையில் ஹனீஃபுக்கு ஜாமீன் தரக்கோரி அவரது வழக்கறிஞர் பீட்டர் ரூசோ நீதிமன்றத்தில் மனு செய்தார். 16.07.07 அன்று ஹனீஃபுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்தது.
வெடிக்காத குண்டு விவகாரத்தில், உண்மை நிலவரங்கள் வெளிவராத நிலையே நீடிக்கிறது. பயங்கரவாத அச்சுறுத்தல், தீவிரவாத தாக்குதல் என பீடிகைகள் பலமாக இருந்தாலும் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவன் ஒரு முஸ்லிம் இளைஞர்தான். இந்நிலையில் எங்கும் எவரும் பாதிக்கப்படாத சூழ்நிலையில் இந்திய முஸ்லிம்கள் குறித்து உலகெங்கும் வாதப் பிரதிவாதங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
'ஏப்ர்க்ஷஹப் ஓங்ட்ஹக்' உலகம் தழுவிய ஜிஹாத் இந்தியாவில் பரவி வருவதாக ஒரு சாரார் இது போன்ற சம்பவத்துக் காகவே காத்திருந்தது போல் தங்கள் கண்டுபிடிப்புகளை (!) கருத்துக்களாக தெரிவித்து வருகிறார்கள்.
இந்தச் சதிச்செயலுக்கு 'டாக்டர்கள் சதி' என்று பெயரிடப்பட்டது ஏன்? கைது செய்யப்பட்டுள்ள கஃபிலின் சகோதரர் சபீல் மற்றும் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள முஹம்மது ஹனீஃப் இருவர் மட்டுமே டாக்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நடக்காதவைகளை பெரிதுபடுத்தி அதன் விசாரணை விவரங்களைக்கூட வெளியிடாமல் முஸ்லிம்களை சந்தேக வளையத்தில் சிக்க வைக்கும் செயலை முன்னணிப் பத்திரிக்கையாளர் அஸ்கர் அலி என்ஜினியர் கண்டித்திருக்கிறார்.இந்த சமுதாயம் தீவிரவாதிகளை ஆதரித்ததற்கு எந்த ஆதாரமும் இதுவரை கிடைத்ததில்லை என பொருளாதார அறிஞரும் சச்சார் குழுவின் உறுப்பினருமான டாக்டர் அபூசாலிஹ் ஷெரிப் தெரிவித்தார்.
உலகளாவிய பயங்கரவாதம் என்பது மேற்குலகால் உருவாக்கப்பட்டது அதற்கும் இஸ்லாத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என ஜமியத்தே உலமாயே ஹிந்த்தின் மஹ்மூத் மதானி தெரிவித்தார்.
இந்த ஒரு சமுதாயத்தை மட்டும் முத்திரை குத்தி குற்றம் சாட்டுவது ஏன் ஐ.ஆர்.ஏ என்ற ஐரீஷ் தேச தீவிரவாதப் படை எந்த செயலை செய்தாலும் அதற்கு கத்தோலிக்கர்களை குற்றம் சாட்டுவ தில்லையே? ஆனால் முஸ்லிம்களை மட்டும் குற்றம் சாட்டுவது ஏன் என குமுறுகிறார் டெல்லிப் பல்கலைக் கழக மாணவர் அக்தர் அலிகான்.
மும்பை ரெயில் குண்டு வெடிப்பு நிகழ்ந்து ஓராண்டுக்குப் பிறகு அதன் சோக சம்பவங்களை அனைத்து ஊடகங்களும் விரிவாக வெளியிடுகின் றன. ஆனால் மும்பையில் நிகழ்ந்த முஸ்லிம் விரோத வன்முறை குறித்தோ, குஜராத் கலவரங்கள் குறித்தோ இதுவரை அவர்கள் சிறிய செய்தியையாவது வெளியிட்டது உண்டா? என ஆவேசமாகக் கேட்கிறார் அஸ்கர் அலி என்ஜினியர்.
முஸ்லிம்கள் மீதான கொடுமைகளை மீடியாக்கள் மறந்து விடுகின்றன. 92ல் நடந்த மும்பை கலவரத்தில் தொடர்புடை யவர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப் படவில்லை. ஆனால் மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடை யவருக்கு 14 ஆண்டு சிறைத் தண்டனை கொடுக்கப்படுகிறது. மீடியாக்கள் கூறாமல் கூறும் மவுனச் செய்தி இது தான் ''முஸ்லிம்களின் பிரச்சினைகளை நாங்கள் கண்டு கொள்மாட்டோம் ஆனால் முஸ்லிம்களை பிரச்சினைக்குரியவர்களா சித்தரிப்போம்'' என்பதே அது. எந்த இந்திய முஸ்லிமும் எந்த சர்வதேச தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடை யவர்கள் அல்ல என ராஜ்யசபா எம்.பியும் ஜமாத்தே உலமாவின் பொதுச் செயலாளருமான மஹ்மூத் மதானி தெரிவித்திருக்கிறார்.
முஸ்லிம் அறிவுஜீவிகள், இந்தியா விலும் உலக அளவிலும் தற்போது நடைபெற்று வரும் சில மின்னல் வேக மாற்றங்களுக்கும் தற்போது வரும் செய்திகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
'அல்காய்தா ஹிந்த்' என்ற பெயரில் அல்காயிதாவின் இந்தியப் பிரிவு ஒன்று வீடியோ மூலம் இந்திய அரசுக்கும், காஷ்மீர் மாநில தலைவர்களுக்கும் மிரட்டல் விடுத்திருந்தது. இந்தியாவில் அல்காய்தா என்று இந்தியாவில் உள்ள அனைத்து ஊடகங்களும் செய்தியை பரப்பின.
இந்த பரபரப்பான செய்தி குறித்து முஸ்லிம் அறிவு ஜீவிகள் குழு சந்தேகம் தெரிவித்தது. இஸ்ரேலியப் படைப்பிரிவு இந்தியா வந்த பிறகே இம்மாதிரியான வினோதமான செய்திகள் வெளிவருவ தாகவும் இஸ்ரேலிய உளவுப் பிரிவுக்கும், இந்த புதிர் செய்திகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என ஙஒஎ எனும் அந்த அமைப்பு சந்தேகம் தெரிவித்துள்ளது. ஙஒஎலின் ஒருங்கிணைப்பாளர் பெரோஸ் மிதிபோர்வாலா வெளியிட்ட அறிக்கை யில் சமீபத்தில் வெளியிடப்பட்ட அல்காயிதா வீடியோ இஸ்ரேலிய உளவுப் பிரிவின் ஆலோசனையின்படி வெளியிட்டதாக இருக்கலாம் என ஙஒஎ தெரிவித்திருக்கிறது. இது இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் பெரும் உதவிகரமாக விளங்கியுள்ளது.
அல்காய்தா என்பது சி.ஐ.ஏ மற்றும் மொசாட்டின் முன்னணி அமைப்பே தவிர வேறல்ல, அமெரிக்க யூத உளவுத்துறை யினரே உலகமெங்கும் பயங்கரவாதங் களை கட்டவிழ்த்து விடுகின்றன என்பது சமீபத்தில் லண்டன் மற்றும் லால் மஸ்ஜித் சம்பவங்களிலிருந்து தெரிய வருகிறது. மறைந்த பாலஸ்தீனத் தலைவர் யாசர் அராஃபாத் பகிரங்கமாக வெளியிட்ட அறிக்கையில் மொசாத் அல்காய்தாவின் திட்டங்களை அட்டவணை போட்டுக் கொடுக்கிறது என்று தெரிவித்ததை பெரோஸ் நினைவு கூர்ந்தார்.
சிரியாவின் அதிபர் பஷருல் ஆஸாத் தும் அல்காய்தா அமைப்பு இஸ்ரேலின் மொசாட்டால் இயக்கப்படுகிறது என்று கூறினார். இன்று 50 சதவீதத்திற்கும் அதிகமான அமெரிக்கர்கள் 9/11 நியூயார்க் உலக வர்த்தக வளாகத் தாக்குதல் சி.ஐ.ஏ மற்றும் மொசாட்டின் கைவரிசையே என்றும் நம்புவதாக பெரோஸ் தெரிவித்திருக்கிறார்.
பொறியாளர் கஃபீலின் பெற்றோர்
இந்தியாவில் மதக்கலவரங்களால் முஸ்லிம்கள் மோசமாக பாதிக்கப்படும் பொழுது அதை சிறிதாக்கி காட்டுவதற்காக அதை மறக்கடிப்பதற்காக குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி முஸ்லிம்களின் மாண்பினை குலைக்கும் சதி அகில இந்திய அளவில் திட்டமிடப்படுகிறதா? என்ற சந்தேகம் எழுகின்றது.
பயங்கரவாதத்திற்கு எதிரான பேரில்(?) தற்போது ஆஸ்திரேலியாவும் இணைக் கப்படுகிறது. விசாரணையில் வைக்கப் பட்டிருந்த டாக்டர். ஹனீப் 10 நாட்களுக்கும் மேலாக எவ்வித குற்றச் சாட்டையும் சுமத்தாமல் இருந்தபோது பிரிட்டினிலிருந்து காவல்துறை படை ஒன்று ஆஸ்திரேலிய அதிகாரிகளை சந்தித்த பின்பு திடீரென டாக்டர் ஹனீஃப் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு பெங்களூரில் அறிவியல் கழகத்தில் விஞ்ஞான பேராசிரியர் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அது தொடர்பாக அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை அள்ளிச்சென்று அக்குவேறு ஆணிவேறாக விசாரித்தனர். விசாரிக்கப்பட்ட அனைவரும் எவ்வித குற்றமும் செய்யவில்லை என விடுவிக்கப்பட்டனர். ஆனால் அப்போது பெங்களூர் தீவிரவாதிகளின் குறியாக மாறிவிட்டது என்றார்கள். ஓராண்டு கடந்த பின்பும் உண்மைக் குற்றவாளி யைக் கண்டு பிடித்த பாடில்லை.
தற்போது பிரிட்டன் கிளாஸ்கோ விமான நிலைய சம்பவம் தொடர்பாக தெளிவற்ற ஒரு கதையைக் கூறி குழப்பி வருகிறார்கள்.
இந்தியா சுயசார்புடன் எழுந்து நின்று விடக்கூடாது. இனமோதல்களை உருவாக்க பிணங்களை குவித்தால் தங்கள் நாட்டின் பொருளாதாரவளத் தினை மேம்படுத்த முடியும். வல்லரசுக் கனவில் இருக்கும் இந்தியாவை இற்றுப் போக செய்யலாம் என முடிவெடுத்தே அமெரிக்க மற்றும் இஸ்ரேலில் சக்திகள் செயல்படத் துவங்கியுள்ளதாகத் தெரிகிறது.
இந்தியாவில் முப்பது கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்ந்து வரும் நிலையில் ஒருங்கிணைந்த சக்தியான முஸ்லிம்களை பலவீனப் படுத்தினால் விளையும் குழப்பங்களை வைத்து குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கவே மேற்குலக சக்திகள் முனைப்போடு செயல்படுகின்றன.
சொல்லி வைத்தாற்போல் இந்திய ஊடகங்கள் இந்திய முஸ்லிம் இளைஞர் களுக்கும் சர்வதேச பயங்கரவாத இயக்கங்கள் என்று அழைக்கப்படும் அமைப்புகளுக்கும் தொடர்புண்டா? இல்லையா? என்பது குறித்து விவாதங்கள் தொடங்கி விட்டன.
அனைத்துக் காட்சிகளையும் தயாரித்து இயக்குபவர்கள் யார் என்பது விவர மறிந்தோர் அனைவருக்கும் தெரியும். புல்லுருவிகளின் வஞ்சகங்களுக்கு இடம் அளிக்காது 100 கோடி இந்தியர்களும் ஒற்றுமையுடன் கை கோர்ப்பதே அந்த கருங்காலிகளின் முகங்களில் கரி பூசுவதாக அமையும்
Thursday, July 19, 2007
ச்சும்மா
தமிழக அரசு புதிதாகப் பொறியியல் கல்லூரிகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. அந்தக் கல்லூரிகளை அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த அண்ணா பல்கலைக் கழகங்களே நடத்துவது குறித்தும் பரிசீலிக்கப்படும் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருக்கிறார். இதன்படி நெல்லையில் புதிய அண்ணாப் பல்கலைக் கழகம் துவங்கப்பட உள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான அணைகள் நிரம்பத் தொடங்கியுள்ளன. நேற்று மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு நீர் திறந்து விடப்பட்டது. இதனால் 11 மாவட்டங்களில் குறுவை 1.50 லட்சம் ஏக்கரும், 11 லட்சம் ஏக்கர் சம்பா நிலமும் பயனடையும் என பொதுப் பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வங்கிகள், பெட்ரோல் நிலையங்களை அடுத்து நாடு முழுவதும் உள்ள தபால் அலுவலங்களில் ரயில் டிக்கட்டுகள் விற்பனை செய்யும் திட்டம் விரைவில் தொடங்க உள்ளதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தல் மூலம் புதிய குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதன் முடிவுகள் சனிக்கிழமை தெரியவரும். குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏக்களின் அவசர கூட்டத்தை ஜெயலலிதா கூட்டியிருக்கிறார். இதனிடையில் பிரதீபா பற்றி குற்றச்சாட்டுகள் குறித்த புதிய புத்தகம் இன்று காலை டெல்லியில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் உளவு செயற்கை கோளை வாணிப ரீதியில் எதிர்வரும் செப்டம்பரில் விண்ணில் செலுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இஸ்ரேல் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்துவதால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு 60 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.
இந்தியா அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் இறுதி கட்டத்தை நெருங்கியிருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருக்கிறார்.
1993லில் நிகழ்ந்த மும்பை குண்டு வழக்கில் மூன்று பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து தடா நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. நேற்று மரணதண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரையும் சேர்த்து மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்ற சாட்டப்பட்ட நூறு பேரில் 81 பேருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 14பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு உதவியுடன் மருத்துவம் படித்துவிட்டு பாமர மக்களுக்கு புரியாத ஆங்கிலத்தில் பேசி மருத்துவம் செய்வது வேதனை அளிப்பதாக இருக்கிறது என கவிஞர் கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
தினமலர் நாளேட்டின் நிர்வாகியும் ராமசுப்பு என்ற அந்துமணி என்ற ரமேஷ் மீது பெண்கள் மீதான கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட்ட மூன்று சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்துமணி முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்
தமிழகத்தின் பெரும்பாலான அணைகள் நிரம்பத் தொடங்கியுள்ளன. நேற்று மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு நீர் திறந்து விடப்பட்டது. இதனால் 11 மாவட்டங்களில் குறுவை 1.50 லட்சம் ஏக்கரும், 11 லட்சம் ஏக்கர் சம்பா நிலமும் பயனடையும் என பொதுப் பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வங்கிகள், பெட்ரோல் நிலையங்களை அடுத்து நாடு முழுவதும் உள்ள தபால் அலுவலங்களில் ரயில் டிக்கட்டுகள் விற்பனை செய்யும் திட்டம் விரைவில் தொடங்க உள்ளதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தல் மூலம் புதிய குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதன் முடிவுகள் சனிக்கிழமை தெரியவரும். குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏக்களின் அவசர கூட்டத்தை ஜெயலலிதா கூட்டியிருக்கிறார். இதனிடையில் பிரதீபா பற்றி குற்றச்சாட்டுகள் குறித்த புதிய புத்தகம் இன்று காலை டெல்லியில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் உளவு செயற்கை கோளை வாணிப ரீதியில் எதிர்வரும் செப்டம்பரில் விண்ணில் செலுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இஸ்ரேல் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்துவதால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு 60 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.
இந்தியா அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் இறுதி கட்டத்தை நெருங்கியிருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருக்கிறார்.
1993லில் நிகழ்ந்த மும்பை குண்டு வழக்கில் மூன்று பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து தடா நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. நேற்று மரணதண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரையும் சேர்த்து மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்ற சாட்டப்பட்ட நூறு பேரில் 81 பேருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 14பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு உதவியுடன் மருத்துவம் படித்துவிட்டு பாமர மக்களுக்கு புரியாத ஆங்கிலத்தில் பேசி மருத்துவம் செய்வது வேதனை அளிப்பதாக இருக்கிறது என கவிஞர் கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
தினமலர் நாளேட்டின் நிர்வாகியும் ராமசுப்பு என்ற அந்துமணி என்ற ரமேஷ் மீது பெண்கள் மீதான கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட்ட மூன்று சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்துமணி முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்
அப்பாவிகளின் ரத்ததால் சிவந்த சிவப்பு மஸ்ஜித்
பாகிஸ்தானின் புகழ்பெற்ற லால் மஸ்ஜிதில் பாகிஸ்தானின் ராணுவம் நடத்திய தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் பலியாயினர்
. அதில் பெரும்பாலானோர் அப்பாவி மதரஸா மாணவர்கள் மற்றும் மாணவிகள். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இதயப் பகுதியில் அமைந்துள்ளது லால் மஸ்ஜித். இந்த சிவப்பு பள்ளிவாசல் வளாகத்தில் ஜாமியா ஹஃப்ஸா என்ற பெண்கள் மதரஸாவும், ஜாமியா ஃபரிதிய்யா என்ற ஆண்கள் படிக்கும் மதரஸாவும் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு துவக்கத்திலிருந்தே 'லால் மஸ்ஜித்' முதல் பக்க செய்தியானது. மார்ச் மாதம் 27ல் விபச்சார விடுதியில் தேடுதல் வேட்டையை நடத்தி குற்றவாளிகளை சிறைப்பிடித்தது.
மார்ச் 28ல் இதைத் தட்டிக் கேட்ட மதரஸா மாணவிகளை சிறைப் பிடித்ததற்கு பதிலடியாக, மூன்று காவல்துறையினரை மதரஸா மாணவிகள் சிறைப்பிடித்தனர்.மார்ச் 30ல் ஆபாச சி.டி.க்களை விற்பனை செய்துவரும் கடைகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
ஏப்ரல் 6ல் லால் மஸ்ஜிதில் ஷரீஅத் நீதிமன்றம் நிறுவப்பட்டது.
ஏப்ரல் 9ம் தேதி ஷரீஅத் நீதிமன்றத்தில் முதன்முதலாக ஃபத்வா பிரயோகிக்கப்பட்டது. கிளைடர் விமானத்தில் பறந்த அமைச்சர் நிலோஃபர் பக்தியார் ஆபாச உடை உடுத்தியதற்காக அவர் மீது ஃபத்வா பிரயோகிக்கப்பட்டது.
மே 19ம் தேதி மதரஸா மாணவர்களை கைது செய்ததற்காக நான்கு காவல்துறையினரை மதரஸா மாணவர்கள் சிறைப் பிடித்தனர்.
ஜூன் 23ம் தேதி அக்குபஞ்சர் மருத்துவமனை என்ற பெயரில் விபச்சார விடுதி நடத்தியதாக குற்றம்சாட்டி சீனாவைச் சேர்ந்த ஆறு பெண்கள் உட்பட 9 பேர் கடத்தப்பட்டனர். அத்தோடு சீன அரசின் கடும் ஆட்சேபனை பாகிஸ்தான் அதிபரிடம் தெரிவிக்கப் பட்டது.
இதனிடையில் அரசுக் கும் லால் மஸ்ஜிதுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமடை வதைத் தடுக்க இருதரப் பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சவுத்ரி சுஜாத் ஹுஸைன் மற்றும் பிரதமர் சவுகத் அஜீஸ் இருவரிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. ஜூன் முதல் வாரத்தில் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு புனித மக்கா ஹரம் ஷரீஃபின் இமாம் சுதைஷ் முயற்சி மேற்கொண்டு நான்கு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதற்கிடையில் சீனப் பெண்களைக் கடத்திய சம்பவத்தால் இருதரப்புக்கும் இடையிலான தொடர்பு மோசமானது.
ராணுவ நடவடிக்கை எடுக்க முடிவெடுத்ததைத் தொடர்ந்து 1,250 மாணவர்கள் சரணடைந்தனர்.
'ஆபரேஷன் சைலன்ஸ்' ஆரம்ப மானது. முதலில் ராணுவத்தை எதிர்த்து மாணவர்கள் தாக்குப் பிடித்தனர். ராணுவ துணைத் தளபதி உள்பட 10 கமாண்டோக்கள் பலியாயினர்.
லால் மஸ்ஜிதின் மீது தாக்குதல் நடத்தினால், தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மதரஸா மாணவர்கள் தங்களுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் குதிப்பார் கள் என தப்புக் கணக்கு போட்டனர் அப்துல் அஜீசும் அப்துல் ரஷீதும். தேவ்பந்த் (5,400 மாணவர்கள்) பர்லவியில் (3000 மாணவர்கள் லி 46 மதரஸாக்கள்) அஹ்லே ஹதீத் (200 மாணவர்கள் லி 2 மதரஸாக்கள்) எட்டு ஷியா மதரஸாக் களில் 700 மாணவர்கள் மற்றும் ஜமாஅத்தே இஸ்லாமியின் ரபிதா அல் மதரஸா (இதில் 18 மதரஸாக்களில் உள்ள 1500 மாணவர்களும்) இவர்கள் அனை வரும் தங்களுக்காக போராட்டத்தில் குதிப்பார்கள் என எதிர்பார்த்து ஏமாந்தனர்.
கடைசியில் மாணவிகளோடு மறைந்து பர்தா அணிந்து தப்பிக்க முயன்ற அப்துல் அஜீஸ் கைது செய்யப்பட்டார்.
இறுதிவரை போராடி இளையவர் அப்துல் ரஷீத் மரணமடைந்தார். அப்துல் ரஷீத், அப்துல் அஜீஸ் சகோதரர்களின் 80 வயது தாயாரும் மரணமடைந்தார்.
இதில் அப்துல் ரஷீத், ராணுவ தாக்குதலில் பலியான நேரத்தில், அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அவரது மனைவி ஹுமைரா தனது சகோதரன் வீட்டில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
நூற்றுக்கும் குறைந்த அளவே ராணுவ நடவடிக்கையில் பலியானதாக அரசு தெரிவித்தது. ஆனால் அதே அரசு 400 கஃபன்களை (சவத்துணி) தயாரிக்குமாறு அப்துல் சத்தார் எத்ஹி பவுன்டேஷன் எனும் தன்னார்வ நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. அப்துல் சத்தார் ஊடகங் களிலும் உண்மையை போட்டுடைத்தார்.
ஏராளமான அப்பாவிகளின் உயிரைக் குடிக்கும் அளவு நிலைமையை முற்றவிட்ட லால் மஸ்ஜித் நிர்வாகத்தின் செயல்அனைத்து மார்க்க பெரியவர்களாலும் கடுமையாக கண்டிக்கப்பட்டது.
வன்முறைகளாலும் கட்டாயப்படுத்து தலாலும் மிரட்டலினாலும் 'நல்ல குறிக்கோள்களே' ஆனாலும் அது கடும் விமர்சனத்துக்குள்ளானது.
அநேகமாக இந்த 21ஆம் நூற்றாண்டில் சொந்த மக்களைக் கொன்ற ஒரே நாட்டின் அதிபர் முஷாரப் மட்டுமே என நடுநிலையாளர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் அரசு நிலைமையை சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் முயற்சி செய்யாமல் இரக்கமற்ற முறையில் செயல்பட்டது நிச்சயம் கண்டிக்கத்தக்கது.
சீன அதிபரும், அமெரிக்க நிர்வாகமும் திருப்தியடைந்தால் போதும் என்ற அளவில் செயல்பட்ட முஷாரப், முழுமையான ஆதரவை அரசியல் கட்சிகளிடம் பெற்று விட்டாலும், உலக அளவில் தனது கவுரவத்தை சற்றுக் குறைத்துக் கொண்டு விட்டார் என்றே சொல்ல வேண்டும்.
பாகிஸ்தான் இன்று முஷாரப் எதிர்ப்புணர்வால் தகித்துக் கொண்டிருக் கிறது. மேற்குலகில் முஷாரப் தனது நடவடிக்கைகளுக்காக பாராட்டப் படுகிறார். நூற்றுக்கணக்கான அப்பாவி களின் உயிர்களுக்கு யாரால் பதில் சொல்ல முடியும்
. அதில் பெரும்பாலானோர் அப்பாவி மதரஸா மாணவர்கள் மற்றும் மாணவிகள். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இதயப் பகுதியில் அமைந்துள்ளது லால் மஸ்ஜித். இந்த சிவப்பு பள்ளிவாசல் வளாகத்தில் ஜாமியா ஹஃப்ஸா என்ற பெண்கள் மதரஸாவும், ஜாமியா ஃபரிதிய்யா என்ற ஆண்கள் படிக்கும் மதரஸாவும் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு துவக்கத்திலிருந்தே 'லால் மஸ்ஜித்' முதல் பக்க செய்தியானது. மார்ச் மாதம் 27ல் விபச்சார விடுதியில் தேடுதல் வேட்டையை நடத்தி குற்றவாளிகளை சிறைப்பிடித்தது.
மார்ச் 28ல் இதைத் தட்டிக் கேட்ட மதரஸா மாணவிகளை சிறைப் பிடித்ததற்கு பதிலடியாக, மூன்று காவல்துறையினரை மதரஸா மாணவிகள் சிறைப்பிடித்தனர்.மார்ச் 30ல் ஆபாச சி.டி.க்களை விற்பனை செய்துவரும் கடைகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
ஏப்ரல் 6ல் லால் மஸ்ஜிதில் ஷரீஅத் நீதிமன்றம் நிறுவப்பட்டது.
ஏப்ரல் 9ம் தேதி ஷரீஅத் நீதிமன்றத்தில் முதன்முதலாக ஃபத்வா பிரயோகிக்கப்பட்டது. கிளைடர் விமானத்தில் பறந்த அமைச்சர் நிலோஃபர் பக்தியார் ஆபாச உடை உடுத்தியதற்காக அவர் மீது ஃபத்வா பிரயோகிக்கப்பட்டது.
மே 19ம் தேதி மதரஸா மாணவர்களை கைது செய்ததற்காக நான்கு காவல்துறையினரை மதரஸா மாணவர்கள் சிறைப் பிடித்தனர்.
ஜூன் 23ம் தேதி அக்குபஞ்சர் மருத்துவமனை என்ற பெயரில் விபச்சார விடுதி நடத்தியதாக குற்றம்சாட்டி சீனாவைச் சேர்ந்த ஆறு பெண்கள் உட்பட 9 பேர் கடத்தப்பட்டனர். அத்தோடு சீன அரசின் கடும் ஆட்சேபனை பாகிஸ்தான் அதிபரிடம் தெரிவிக்கப் பட்டது.
இதனிடையில் அரசுக் கும் லால் மஸ்ஜிதுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமடை வதைத் தடுக்க இருதரப் பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சவுத்ரி சுஜாத் ஹுஸைன் மற்றும் பிரதமர் சவுகத் அஜீஸ் இருவரிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. ஜூன் முதல் வாரத்தில் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு புனித மக்கா ஹரம் ஷரீஃபின் இமாம் சுதைஷ் முயற்சி மேற்கொண்டு நான்கு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதற்கிடையில் சீனப் பெண்களைக் கடத்திய சம்பவத்தால் இருதரப்புக்கும் இடையிலான தொடர்பு மோசமானது.
ராணுவ நடவடிக்கை எடுக்க முடிவெடுத்ததைத் தொடர்ந்து 1,250 மாணவர்கள் சரணடைந்தனர்.
'ஆபரேஷன் சைலன்ஸ்' ஆரம்ப மானது. முதலில் ராணுவத்தை எதிர்த்து மாணவர்கள் தாக்குப் பிடித்தனர். ராணுவ துணைத் தளபதி உள்பட 10 கமாண்டோக்கள் பலியாயினர்.
லால் மஸ்ஜிதின் மீது தாக்குதல் நடத்தினால், தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மதரஸா மாணவர்கள் தங்களுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் குதிப்பார் கள் என தப்புக் கணக்கு போட்டனர் அப்துல் அஜீசும் அப்துல் ரஷீதும். தேவ்பந்த் (5,400 மாணவர்கள்) பர்லவியில் (3000 மாணவர்கள் லி 46 மதரஸாக்கள்) அஹ்லே ஹதீத் (200 மாணவர்கள் லி 2 மதரஸாக்கள்) எட்டு ஷியா மதரஸாக் களில் 700 மாணவர்கள் மற்றும் ஜமாஅத்தே இஸ்லாமியின் ரபிதா அல் மதரஸா (இதில் 18 மதரஸாக்களில் உள்ள 1500 மாணவர்களும்) இவர்கள் அனை வரும் தங்களுக்காக போராட்டத்தில் குதிப்பார்கள் என எதிர்பார்த்து ஏமாந்தனர்.
கடைசியில் மாணவிகளோடு மறைந்து பர்தா அணிந்து தப்பிக்க முயன்ற அப்துல் அஜீஸ் கைது செய்யப்பட்டார்.
இறுதிவரை போராடி இளையவர் அப்துல் ரஷீத் மரணமடைந்தார். அப்துல் ரஷீத், அப்துல் அஜீஸ் சகோதரர்களின் 80 வயது தாயாரும் மரணமடைந்தார்.
இதில் அப்துல் ரஷீத், ராணுவ தாக்குதலில் பலியான நேரத்தில், அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அவரது மனைவி ஹுமைரா தனது சகோதரன் வீட்டில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
நூற்றுக்கும் குறைந்த அளவே ராணுவ நடவடிக்கையில் பலியானதாக அரசு தெரிவித்தது. ஆனால் அதே அரசு 400 கஃபன்களை (சவத்துணி) தயாரிக்குமாறு அப்துல் சத்தார் எத்ஹி பவுன்டேஷன் எனும் தன்னார்வ நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. அப்துல் சத்தார் ஊடகங் களிலும் உண்மையை போட்டுடைத்தார்.
ஏராளமான அப்பாவிகளின் உயிரைக் குடிக்கும் அளவு நிலைமையை முற்றவிட்ட லால் மஸ்ஜித் நிர்வாகத்தின் செயல்அனைத்து மார்க்க பெரியவர்களாலும் கடுமையாக கண்டிக்கப்பட்டது.
வன்முறைகளாலும் கட்டாயப்படுத்து தலாலும் மிரட்டலினாலும் 'நல்ல குறிக்கோள்களே' ஆனாலும் அது கடும் விமர்சனத்துக்குள்ளானது.
அநேகமாக இந்த 21ஆம் நூற்றாண்டில் சொந்த மக்களைக் கொன்ற ஒரே நாட்டின் அதிபர் முஷாரப் மட்டுமே என நடுநிலையாளர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் அரசு நிலைமையை சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் முயற்சி செய்யாமல் இரக்கமற்ற முறையில் செயல்பட்டது நிச்சயம் கண்டிக்கத்தக்கது.
சீன அதிபரும், அமெரிக்க நிர்வாகமும் திருப்தியடைந்தால் போதும் என்ற அளவில் செயல்பட்ட முஷாரப், முழுமையான ஆதரவை அரசியல் கட்சிகளிடம் பெற்று விட்டாலும், உலக அளவில் தனது கவுரவத்தை சற்றுக் குறைத்துக் கொண்டு விட்டார் என்றே சொல்ல வேண்டும்.
பாகிஸ்தான் இன்று முஷாரப் எதிர்ப்புணர்வால் தகித்துக் கொண்டிருக் கிறது. மேற்குலகில் முஷாரப் தனது நடவடிக்கைகளுக்காக பாராட்டப் படுகிறார். நூற்றுக்கணக்கான அப்பாவி களின் உயிர்களுக்கு யாரால் பதில் சொல்ல முடியும்
Wednesday, July 18, 2007
கலாம் அடுத்த நாளே அண்ணாப் பல்கலைக் கழகத்திற்கு
கலாம்
அடுத்த நாளே அண்ணாப் பல்கலைக் கழகத்திற்கு
குடியரசுத் தலைவர் பதவியிலிருந்த ஓய்வு பெற்ற உடன் அப்துல் கலாம் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் பணியை துவங்குகிறார். இத்தகவலை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் விசுவநாதன் தெரிவித்திருக்கிறார். தான் குடியரசுத் தலைவர் பதவியை விட்டு ஓய்வு பெற்றதும் ஆசிரியர் பணிக்குத் திரும்புவேன் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
கலாமின் பதவிக்காலம் இம்மாதம் 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு மறுநாளே அவர் அண்ணா பல்கலைக் கழத்துக்கு வருவதும் கௌரவ பேராசிரியர் பணியில் இணைவதும் சிறப்புக்குரியது. அண்ணா பல்கலைக் கழகக்ததிலிருந்து வீடியோ கான்ஃப்ரன்ஸ் வழியாக தமிழகத்தின் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் கலாம் வகுப்பெடுக்க உள்ளதாக அண்ணா பல்கலைக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பாக அண்ணாப் பல்கலைக் கழக துணை வேந்தர் டி. விசுவநானிடம் கலாம் தொலைபேசியில் பேசியுள்ளார். எனினும் தனக்கு வரவேற்பு விழா எதையும் ஏற்பாடு செய்யக் கூடாது என திட்டவட்டமாக கலாம் தெரிவித்து விட்டார்.
அடுத்த நாளே அண்ணாப் பல்கலைக் கழகத்திற்கு
குடியரசுத் தலைவர் பதவியிலிருந்த ஓய்வு பெற்ற உடன் அப்துல் கலாம் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் பணியை துவங்குகிறார். இத்தகவலை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் விசுவநாதன் தெரிவித்திருக்கிறார். தான் குடியரசுத் தலைவர் பதவியை விட்டு ஓய்வு பெற்றதும் ஆசிரியர் பணிக்குத் திரும்புவேன் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
கலாமின் பதவிக்காலம் இம்மாதம் 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு மறுநாளே அவர் அண்ணா பல்கலைக் கழத்துக்கு வருவதும் கௌரவ பேராசிரியர் பணியில் இணைவதும் சிறப்புக்குரியது. அண்ணா பல்கலைக் கழகக்ததிலிருந்து வீடியோ கான்ஃப்ரன்ஸ் வழியாக தமிழகத்தின் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் கலாம் வகுப்பெடுக்க உள்ளதாக அண்ணா பல்கலைக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பாக அண்ணாப் பல்கலைக் கழக துணை வேந்தர் டி. விசுவநானிடம் கலாம் தொலைபேசியில் பேசியுள்ளார். எனினும் தனக்கு வரவேற்பு விழா எதையும் ஏற்பாடு செய்யக் கூடாது என திட்டவட்டமாக கலாம் தெரிவித்து விட்டார்.
Wednesday, July 11, 2007
தூய உள்ளங்களுக்கு ஓர் ஒத்தடம்
200பேரை ப்லி கொண்ட அந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்து இன்று ஓராண்டு ஆகிவிட்டது
.ஈடு செய்யமுடியாத இழப்பினை சந்தித்தவர்களுக்கு ஆறுதல் கூறும் மனோதிடம் யாருக்கும் இல்லை எனினும் அவர்களின் ஆறுதலுக்காகவும் மனநிம்மதிக்காகவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்
.கொடுமையான அந்த நிகழ்வுக்குப்பிறகு ஏராளமான அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை வளைத்துப்பிடித்து சிறைகொட்டடிகளில் அடைக்கப்பட்ட மனித உரிமை மீறலை மன்னிக்கவே முடியாது.
ஆனால் அதே வேளையில் முஸ்லிம் சமுதாயத்தின் மீது வெறுப்புனர்வை புல்லுருவிகள் எங்கும் பரப்பிய நேரத்திலும் கூட தங்கள் உயிரை துச்சமாக எண்ணிஉயிர் காக்க விரைந்த அந்த தியாக உள்ளங்களை மறக்கமுடியுமா?
அந்த தூய உள்ளங்களை பாராட்டும் விதமாக அவர்கள் இதயங்களுக்கு ஒத்தடம் போடும் வகையில் இந்த செய்திக்கட்டுரையை வெளியிடுவதில் பெருமிதம்கொள்கிறோம்..மும்பை:
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய முஸ்லிம்கள்!அபூசாலிஹ்
இந்தியாவின் 'நியூயார்க்' என அழைக்கப்படும் மும்பையில் ஜூலை 11ஆம் தேதி பதற வைக்கும் பயங்கர தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. உழைத்து களைத்து மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பும் பரபரப்பான மாலை நேரத்தில் போர்வில்லி, ஜோகேஸ்வரி, பாந்த்ரா, மாதுங்கா உள்ளிட்ட ஏழு புறநகர் ரயில் நிலைய மின்சார ரயில்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததாக தகவல் கள் பரவின. 200க்கும் அதிகமான உயிர்களைப் பலிகொண்ட ஏறக்குறைய 700 பேருக்கு மேல் படுகாயம் அடைந்த இந்தக் கோர நிகழ்வில் தன்னலம் கருதாது சேவைகளாற்றிய கருணை உள்ளங்களைப் பற்றி தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.காவல்துறைக்கு முன்பாகவே களத்தில்...ஃபயாஸ் என்ற 30 வயது இளைஞர் தனது வீடு இருக்கும் நவ்படா பகுதியை நோக்கி மேம்பாலத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்தார். இதயத்தை அதிர வைக்கும் சத்தம் ரயில் பாதையில் கேட்டது. ரயில் வரும் திசை நோக்கி ஃபயாஸ் ஓடினார். ஏதோவொரு பெட்டியிலிருந்து கறும்புகை வந்து கொண்டிருக்கிறது. ரயில் நகர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் மனிதர்கள் வெளியே விழுந்து கொண்டே இருக்கிறார்கள். பிணமாகவும், குற்று யிராகவும் அருகிலுள்ள பாலத்தை அடைந்தபோது ரயில் தானாகவே நின்றுவிட்டது.
குண்டுவெடிப்பினால் ரயில் பெட்டியின் துண்டுகள் 80லிருந்து 100 மீட்டர்கள் வரை சிதறி இருக்கின்றன.இதயத்தைக் கிழித்துப் போடும் கூக்குரலைக் கேட்ட ஃபயாஸ், உதவிக்கு ஆட்களை அழைத்துவர ஓடினார். நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் மீட்புப் பணிகளில் இறங்கினர்.கோர நிகழ்வு நிகழ்ந்து நெடுநேரம் ஆகியும் சம்பவ இடத்திற்கு காவல் துறையினரும் வரவில்லை, ரயில்வே அதிகாரிகளும் வரவில்லை. நாங்கள் செல்லத் தேவையில்லை, நீங்கள் முதலில் செல்ல வேண்டும் என்று இரண்டு துறையினருக்கும் குடுமிபிடிச் சண்டைகள் நடந்த தகவல் பின்னர் தெரிய வந்தது. ரயில்வே எல்லைக்குள் பொது காவல் துறையிருக்கு அதிகாரம் இல்லை என்பதும் ஒரு காரணம்.பாதிக்கப்பட்டவர்களை மீட்க மிகவும் சிரமப்பட வேண்டி இருந்ததாக சொலன்கர் கூறுகிறார். இவரைப் போன்ற இளைஞர்கள் 'அல்லிஹிந்த் ஏக்தா சொஸைட்டி' ஒருங்கிணைத்தது.பல உடல்கள் சிதைந்த நிலையில் இருந்தன. சில மட்டுமே எளிதில் அடையாளம் காணக்கூடிய நிலையில் இருந்தன. சில உடல்கள் திகிலூட்டும் வண்ணம் இருந்தன. தாமதமாக வந்த காவல்துறையினர், நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்ததாக சொலன்கர் குறிப்பிடுகிறார்.
பிணங்களையோ, படுகாயமுற்றவர்களையோ அவர்கள் தொட்டுத் தூக்க முயற் சிக்கக் கூட இல்லையாம். கைகளை இழந்த மக்கள், தோள்பட்டை நசுங்கிய வர்கள், மற்றும் உறுப்புகள் இடுக்குகளில் சிக்கி வேதனை பொறுக்க இயலாமல் கதறியவர்கள் அனைவரையும் மீட்டு சிகிச்சைக்கு அனுப்ப வேண்டிய மிகக்கடினமான பணி இந்த இளைஞர்களுக்கு. பாதிக்கப்பட்டோரை உடைந்த ரயில் பெட்டி யில் இருந்து மீட்கும்போது மிகுந்த உடல் சிரமமும் சமயோகிதமும் தேவைப் பட்டது. ரயில் நிலையத்தில் இரண்டு ஸ்ட்ரெச்சர் மட்டுமே இருந்தன. படுகாயம் அடைந்த வர்களையும், பலியானவர்களையும் போர்வைகளில் தூக்கிப் போட்டுக் கொண்டு செல்ல வேண்டிய நிலை.படுகாயம் அடைந்தவர்களை தூக்கிச் செல்லும்போது தோள் பட்டைகள் வலியெடுக்க ஆரம்பித்ததால் அடுத்து பாதிக்கப்பட்டவர்களைத் தூக்குவதற்கு முன் நொறுங்கிக் கிடந்த முதல் வகுப்பு பெட்டியிலிருந்த இருக்கைகளை முழு பலத்தையும் பிரயோகித்து எடுத்து அந்த இருக்கைகளின் மீது பாதிக்கப்பட்டவர் களும், படுகாயம் அடைந்தவர்களும் வைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.முஸ்லிம் சேவைப் படையினர் சுற்றுப்புறங்களில் கிடந்த மொபைல் போன்களையும், உடைமைகளையும் அருகிலுள்ள காவல் நிலையங்களில் ஒப்படைத்து, அதை முறைப்படி அறிவிக்கவும் செய்தனர்.குண்டு வெடித்தபோது பாந்த்ரா ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள கரிப் நகர மக்கள் கேஸ் சிலிண்டர் வெடித்ததாக நினைத்திருந்தனர். ஆனால் சலீம் குரைஷி என்ற காங்கிரஸ் பிரமுகர் மட்டும் தனது வீடியோ கேமராவை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். ஏதோ விபரீதம் ஏற்பட்டுள்ளது என்று அவரது உள் மனது கூறியதாம். நில அதிர்வும் கரும்புகையும் நடந்தது குண்டுவெடிப்புதான் என்பதை உணர்த்தவே, தனது வீடியோ காமிராவில் நடப்பதைப் பதிவு செய்யத் தொடங்கி யுள்ளார். இறந்த உடல்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.காயம் அடைந்தவர்களில் பெரும் பாலோரின் நிலை மிகவும் அபாயக் கட்டத்தில் இருந்ததையும் அது காட்டியது. சில உடல்கள் தலைகள் இல்லாமல் கிடந்தன. சலீம் குரைஷியின் வீடியோ காட்சிகள் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்டன. பல மீட்புப் பணிகள் பதிவாகி உள்ளன. அஸ்லம் என்ற ரிக்ஷாகாரர் உடல்களை அடுக்கி நகர்த்த முடியாமல் கிட்டத்தட்ட தவழ்ந்து செல்வதைப் போல தனது ரிக்ஷா வாகனத்தில் உடல்களைக் கொண்டு சென்றதையும் அந்த படப்பதிவு காட்டியது.மருத்துவமனை நோக்கி...ஜோகேஸ்வரி ரயில் நிலையத்துக்கு வெளியே தையற்கடை வைத்திருக்கும் அக்தர் ஹுஸைன், குண்டுவெடித்த சப்தத்தைக் கேட்டவுடன் நண்பர்களை அழைத்துக் கொண்டு மீட்புப் பணிகளில் ஈடுபட்டார். மீட்புப் பணிக்கு வசதியாக மதில் சுவரின் ஒரு பகுதியை இடித்த பின்பு அவர்கள் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். தங்கள் தோள்களில் காயம்பட்டோரையும், பலியானோரையும் சுமக்க ஆரம்பித் தனர்.13 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஜோகேஸ்வரி பகுதியில் இருந்த முஸ்லிம்கள் பலர் இருப்பிடங்களை விட்டு விரட்டப்பட்டனர். இன்றுவரை அந்தக் காட்சி என் முன்பே நிழலாடியது. ஆனால் இப்போது அது மறைந்து என் ஹிந்து சகோதரர்களை காப்பாற்றுவதே என் முன் உள்ள ஒரே குறிக்கோளாக இருந்தது என்கிறார் அக்தர் ஹுஸைன்.மீட்புப் பணிகளுக்கு மேலும் ஆட்கள் தேவையாக இருக்கவே முமீன் காலனி மற்றும் ஹாஜுர்வாடி பகுதியிலுள்ள இளைஞர்களும் அழைக்கப்பட்டனர். ஆதரவுக் கரங்கள் அதிகரிக்கவும் உதவிகளும் வரத் தொடங்கின.முமீன் காலனி முஸ்லிம் இளைஞர்கள் தங்கள் வீடுகளிலிருந்து சிறிய மெத்தை கள், மற்றும் போர்வைகள் எடுத்து வந்தனர். அந்த மெத்தைகளும், போர்வைகளும் இறந்தவர்களை தூக்கிச் செல்ல பயன்படுத்தப்பட்டன. இந்த சேவையில் 65 வயது முதியவரான அக்தரின் தந்தையும் பங்கேற்றார்.மருத்துவமனைகளில் காத்திருந்த அதிர்ச்சிபாதிக்கப்பட்டவர்களையும், பலியானவர்களையும் சுமந்து சென்ற கருணை உள்ளங்கள் மேலும் ஒரு அதிர்ச்சியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நாடே பதறிய மும்பை மாநகரே கதறிய அந்தக் கொடிய சம்பவத்தைக் கண்ட பிறகும் தனியார் மருத்துவமனை கள், காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தது. இளைஞர்களுக்கு ஆத்திரம் பீறிட்டது, எனினும் அடக்கிக் கொண்டனர். இதில் சில மருத்துவ மனைகள் கதவுகளை அடைத்துக் கொண்டன (என்னே மனிதாபிமானம்?)படுகாயம் அடைந்தவர்களையும், பலியானவர்களின் உடல்களையும் சுமந்து கொண்டு கூப்பர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.ரத்த தானம் செய்வதிலும் முன்னின்ற முஸ்லிம் இளைஞர்கள்சித்தார்த் மருத்துவமனையின் ரத்த வங்கியில் முண்டியடித்துக் கொண்டி ருக்கும் ஒரு முஸ்லிம் இளைஞர் கூட்டம்.இந்த ரத்தம் ஒரு உயிரைக் காக்கப் பயன்படும் என்றால் எனக்கு மகிழ்ச்சியே என்கிறார் அப்துல் கான். இதை ராய்ட்டர் செய்தி நிறுவனம் பதிவு செய்துள்ளது.சிலர் மக்களின் ஒற்றுமையைக் குலைக்க முயற்சித்தார்கள். ஆனால் அவர்கள் தோற்றுக் கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள் என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் இஸ்லாமியா அராபியா பள்ளிவாசலின் முக்கியஸ்தர் பாஷா மியான் ஷேக்.மக்களைப் பிரிக்கும் கொள்கையாளர்கள் இவர்களைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றார் முன்னணி முஸ்லிம் பிரமுகர் மவ்லானா ஜலாலுத்தீன் உமரி.குண்டு வெடிப்புகளால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு மும்பை மாநகரில் பிரபல இஸ்லாமியா அராபியா பள்ளிவாசலின் கதவுகள் நாள் முழுவதும் திறந்திருந்தன. காயம் அடைந்தவர்களுக்கு உறைவிடம், உணவு, குடிநீர், அவசர மருத்துவ வசதிக்கான பணியில் மும்பை இஸ்லாமிய அராபியா பள்ளிவாசல் சேவை சின்னமாக பாராட்டப் பெற்றது.ரத்தம் வழங்கிய முஸ்லிம் சகோதரர்களுக்கு தங்களின் கண்ணீரால் நன்றி செலுத் தினர் ஹிந்து சமுதாய மக்கள்.இது மும்பையின் நிஜ முகம். இனி இதை யாராலும் வெல்ல முடியாது என்று கூறுகிறார் குண்டு வெடிப்பில் காயம் அடைந்து சிகிச்சைப் பெற்றுவரும் லதா சிரிஷா என்ற ஹிந்து சகோதரி.குண்டு வெடிப்பு தொடர்பான செய்திகளை வெளியிடும் ஊடகங்களில் பெரும்பாலானவை முஸ்லிம்களை நேரடியாகவோ அல்லது மறைமுக மாகவோ வேதனைப்படுத்தும் வண்ணமே செய்திகளை வெளியிடுகின்றன.அவர்களுக்கெல்லாம் 'சகோதரத்துவ' பாடங்களை வழங்கும் வண்ணம் முஸ்லிம் இளைஞர்களின் சேவை அமைந்திருக்கிறது.நவ்படா, கரிப் நகர், பெஹ்ராம்படா போன்ற பகுதிகள் 1992லி93ல் சிவசேனையினர் நிகழ்த்திய வெறியாட்டத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏராளமானவர்கள் உடமைகளை இழந்தனர். உறைவிடங்களையும் இழந்தனர். அப்போது நாட்டு மக்களின் அனுதாபத்தைப் பெற்ற அவர்கள் தற்போது தேசத்தின் ஒட்டுமொத்த கண்ணியத்தையும் பெற்று விட்டார்கள்.குண்டு வெடிப்பினைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்காக உரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங், இந்தியாவை எவராலும் மண்டியிட வைக்க முடியாது என்றார்.உண்மைதான். ஃபயாஸ் போன்ற வர்களும், அக்தர் ஹுஸைன் போன்ற வர்களும் இருக்கும்வரை இந்திய மக்களின் ஒற்றுமையை எவனும் குலைக்க முடியாது.பதவி சுகத்திற்காக மக்களை மோதவிட்டு ரத்தம் குடிக்கும் உள்நாட்டு பயங்கர வாதிகளும், அன்னிய நாட்டின் ஒத்துழைப்போடு சதிச்செயல் புரியும் வெளிநாட்டு பயங்கரவாதிகளும் தோல்வியைத் தழுவுவது திண்ணம்
.ஈடு செய்யமுடியாத இழப்பினை சந்தித்தவர்களுக்கு ஆறுதல் கூறும் மனோதிடம் யாருக்கும் இல்லை எனினும் அவர்களின் ஆறுதலுக்காகவும் மனநிம்மதிக்காகவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்
.கொடுமையான அந்த நிகழ்வுக்குப்பிறகு ஏராளமான அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை வளைத்துப்பிடித்து சிறைகொட்டடிகளில் அடைக்கப்பட்ட மனித உரிமை மீறலை மன்னிக்கவே முடியாது.
ஆனால் அதே வேளையில் முஸ்லிம் சமுதாயத்தின் மீது வெறுப்புனர்வை புல்லுருவிகள் எங்கும் பரப்பிய நேரத்திலும் கூட தங்கள் உயிரை துச்சமாக எண்ணிஉயிர் காக்க விரைந்த அந்த தியாக உள்ளங்களை மறக்கமுடியுமா?
அந்த தூய உள்ளங்களை பாராட்டும் விதமாக அவர்கள் இதயங்களுக்கு ஒத்தடம் போடும் வகையில் இந்த செய்திக்கட்டுரையை வெளியிடுவதில் பெருமிதம்கொள்கிறோம்..மும்பை:
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய முஸ்லிம்கள்!அபூசாலிஹ்
இந்தியாவின் 'நியூயார்க்' என அழைக்கப்படும் மும்பையில் ஜூலை 11ஆம் தேதி பதற வைக்கும் பயங்கர தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. உழைத்து களைத்து மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பும் பரபரப்பான மாலை நேரத்தில் போர்வில்லி, ஜோகேஸ்வரி, பாந்த்ரா, மாதுங்கா உள்ளிட்ட ஏழு புறநகர் ரயில் நிலைய மின்சார ரயில்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததாக தகவல் கள் பரவின. 200க்கும் அதிகமான உயிர்களைப் பலிகொண்ட ஏறக்குறைய 700 பேருக்கு மேல் படுகாயம் அடைந்த இந்தக் கோர நிகழ்வில் தன்னலம் கருதாது சேவைகளாற்றிய கருணை உள்ளங்களைப் பற்றி தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.காவல்துறைக்கு முன்பாகவே களத்தில்...ஃபயாஸ் என்ற 30 வயது இளைஞர் தனது வீடு இருக்கும் நவ்படா பகுதியை நோக்கி மேம்பாலத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்தார். இதயத்தை அதிர வைக்கும் சத்தம் ரயில் பாதையில் கேட்டது. ரயில் வரும் திசை நோக்கி ஃபயாஸ் ஓடினார். ஏதோவொரு பெட்டியிலிருந்து கறும்புகை வந்து கொண்டிருக்கிறது. ரயில் நகர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் மனிதர்கள் வெளியே விழுந்து கொண்டே இருக்கிறார்கள். பிணமாகவும், குற்று யிராகவும் அருகிலுள்ள பாலத்தை அடைந்தபோது ரயில் தானாகவே நின்றுவிட்டது.
குண்டுவெடிப்பினால் ரயில் பெட்டியின் துண்டுகள் 80லிருந்து 100 மீட்டர்கள் வரை சிதறி இருக்கின்றன.இதயத்தைக் கிழித்துப் போடும் கூக்குரலைக் கேட்ட ஃபயாஸ், உதவிக்கு ஆட்களை அழைத்துவர ஓடினார். நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் மீட்புப் பணிகளில் இறங்கினர்.கோர நிகழ்வு நிகழ்ந்து நெடுநேரம் ஆகியும் சம்பவ இடத்திற்கு காவல் துறையினரும் வரவில்லை, ரயில்வே அதிகாரிகளும் வரவில்லை. நாங்கள் செல்லத் தேவையில்லை, நீங்கள் முதலில் செல்ல வேண்டும் என்று இரண்டு துறையினருக்கும் குடுமிபிடிச் சண்டைகள் நடந்த தகவல் பின்னர் தெரிய வந்தது. ரயில்வே எல்லைக்குள் பொது காவல் துறையிருக்கு அதிகாரம் இல்லை என்பதும் ஒரு காரணம்.பாதிக்கப்பட்டவர்களை மீட்க மிகவும் சிரமப்பட வேண்டி இருந்ததாக சொலன்கர் கூறுகிறார். இவரைப் போன்ற இளைஞர்கள் 'அல்லிஹிந்த் ஏக்தா சொஸைட்டி' ஒருங்கிணைத்தது.பல உடல்கள் சிதைந்த நிலையில் இருந்தன. சில மட்டுமே எளிதில் அடையாளம் காணக்கூடிய நிலையில் இருந்தன. சில உடல்கள் திகிலூட்டும் வண்ணம் இருந்தன. தாமதமாக வந்த காவல்துறையினர், நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்ததாக சொலன்கர் குறிப்பிடுகிறார்.
பிணங்களையோ, படுகாயமுற்றவர்களையோ அவர்கள் தொட்டுத் தூக்க முயற் சிக்கக் கூட இல்லையாம். கைகளை இழந்த மக்கள், தோள்பட்டை நசுங்கிய வர்கள், மற்றும் உறுப்புகள் இடுக்குகளில் சிக்கி வேதனை பொறுக்க இயலாமல் கதறியவர்கள் அனைவரையும் மீட்டு சிகிச்சைக்கு அனுப்ப வேண்டிய மிகக்கடினமான பணி இந்த இளைஞர்களுக்கு. பாதிக்கப்பட்டோரை உடைந்த ரயில் பெட்டி யில் இருந்து மீட்கும்போது மிகுந்த உடல் சிரமமும் சமயோகிதமும் தேவைப் பட்டது. ரயில் நிலையத்தில் இரண்டு ஸ்ட்ரெச்சர் மட்டுமே இருந்தன. படுகாயம் அடைந்த வர்களையும், பலியானவர்களையும் போர்வைகளில் தூக்கிப் போட்டுக் கொண்டு செல்ல வேண்டிய நிலை.படுகாயம் அடைந்தவர்களை தூக்கிச் செல்லும்போது தோள் பட்டைகள் வலியெடுக்க ஆரம்பித்ததால் அடுத்து பாதிக்கப்பட்டவர்களைத் தூக்குவதற்கு முன் நொறுங்கிக் கிடந்த முதல் வகுப்பு பெட்டியிலிருந்த இருக்கைகளை முழு பலத்தையும் பிரயோகித்து எடுத்து அந்த இருக்கைகளின் மீது பாதிக்கப்பட்டவர் களும், படுகாயம் அடைந்தவர்களும் வைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.முஸ்லிம் சேவைப் படையினர் சுற்றுப்புறங்களில் கிடந்த மொபைல் போன்களையும், உடைமைகளையும் அருகிலுள்ள காவல் நிலையங்களில் ஒப்படைத்து, அதை முறைப்படி அறிவிக்கவும் செய்தனர்.குண்டு வெடித்தபோது பாந்த்ரா ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள கரிப் நகர மக்கள் கேஸ் சிலிண்டர் வெடித்ததாக நினைத்திருந்தனர். ஆனால் சலீம் குரைஷி என்ற காங்கிரஸ் பிரமுகர் மட்டும் தனது வீடியோ கேமராவை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். ஏதோ விபரீதம் ஏற்பட்டுள்ளது என்று அவரது உள் மனது கூறியதாம். நில அதிர்வும் கரும்புகையும் நடந்தது குண்டுவெடிப்புதான் என்பதை உணர்த்தவே, தனது வீடியோ காமிராவில் நடப்பதைப் பதிவு செய்யத் தொடங்கி யுள்ளார். இறந்த உடல்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.காயம் அடைந்தவர்களில் பெரும் பாலோரின் நிலை மிகவும் அபாயக் கட்டத்தில் இருந்ததையும் அது காட்டியது. சில உடல்கள் தலைகள் இல்லாமல் கிடந்தன. சலீம் குரைஷியின் வீடியோ காட்சிகள் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்டன. பல மீட்புப் பணிகள் பதிவாகி உள்ளன. அஸ்லம் என்ற ரிக்ஷாகாரர் உடல்களை அடுக்கி நகர்த்த முடியாமல் கிட்டத்தட்ட தவழ்ந்து செல்வதைப் போல தனது ரிக்ஷா வாகனத்தில் உடல்களைக் கொண்டு சென்றதையும் அந்த படப்பதிவு காட்டியது.மருத்துவமனை நோக்கி...ஜோகேஸ்வரி ரயில் நிலையத்துக்கு வெளியே தையற்கடை வைத்திருக்கும் அக்தர் ஹுஸைன், குண்டுவெடித்த சப்தத்தைக் கேட்டவுடன் நண்பர்களை அழைத்துக் கொண்டு மீட்புப் பணிகளில் ஈடுபட்டார். மீட்புப் பணிக்கு வசதியாக மதில் சுவரின் ஒரு பகுதியை இடித்த பின்பு அவர்கள் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். தங்கள் தோள்களில் காயம்பட்டோரையும், பலியானோரையும் சுமக்க ஆரம்பித் தனர்.13 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஜோகேஸ்வரி பகுதியில் இருந்த முஸ்லிம்கள் பலர் இருப்பிடங்களை விட்டு விரட்டப்பட்டனர். இன்றுவரை அந்தக் காட்சி என் முன்பே நிழலாடியது. ஆனால் இப்போது அது மறைந்து என் ஹிந்து சகோதரர்களை காப்பாற்றுவதே என் முன் உள்ள ஒரே குறிக்கோளாக இருந்தது என்கிறார் அக்தர் ஹுஸைன்.மீட்புப் பணிகளுக்கு மேலும் ஆட்கள் தேவையாக இருக்கவே முமீன் காலனி மற்றும் ஹாஜுர்வாடி பகுதியிலுள்ள இளைஞர்களும் அழைக்கப்பட்டனர். ஆதரவுக் கரங்கள் அதிகரிக்கவும் உதவிகளும் வரத் தொடங்கின.முமீன் காலனி முஸ்லிம் இளைஞர்கள் தங்கள் வீடுகளிலிருந்து சிறிய மெத்தை கள், மற்றும் போர்வைகள் எடுத்து வந்தனர். அந்த மெத்தைகளும், போர்வைகளும் இறந்தவர்களை தூக்கிச் செல்ல பயன்படுத்தப்பட்டன. இந்த சேவையில் 65 வயது முதியவரான அக்தரின் தந்தையும் பங்கேற்றார்.மருத்துவமனைகளில் காத்திருந்த அதிர்ச்சிபாதிக்கப்பட்டவர்களையும், பலியானவர்களையும் சுமந்து சென்ற கருணை உள்ளங்கள் மேலும் ஒரு அதிர்ச்சியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நாடே பதறிய மும்பை மாநகரே கதறிய அந்தக் கொடிய சம்பவத்தைக் கண்ட பிறகும் தனியார் மருத்துவமனை கள், காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தது. இளைஞர்களுக்கு ஆத்திரம் பீறிட்டது, எனினும் அடக்கிக் கொண்டனர். இதில் சில மருத்துவ மனைகள் கதவுகளை அடைத்துக் கொண்டன (என்னே மனிதாபிமானம்?)படுகாயம் அடைந்தவர்களையும், பலியானவர்களின் உடல்களையும் சுமந்து கொண்டு கூப்பர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.ரத்த தானம் செய்வதிலும் முன்னின்ற முஸ்லிம் இளைஞர்கள்சித்தார்த் மருத்துவமனையின் ரத்த வங்கியில் முண்டியடித்துக் கொண்டி ருக்கும் ஒரு முஸ்லிம் இளைஞர் கூட்டம்.இந்த ரத்தம் ஒரு உயிரைக் காக்கப் பயன்படும் என்றால் எனக்கு மகிழ்ச்சியே என்கிறார் அப்துல் கான். இதை ராய்ட்டர் செய்தி நிறுவனம் பதிவு செய்துள்ளது.சிலர் மக்களின் ஒற்றுமையைக் குலைக்க முயற்சித்தார்கள். ஆனால் அவர்கள் தோற்றுக் கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள் என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் இஸ்லாமியா அராபியா பள்ளிவாசலின் முக்கியஸ்தர் பாஷா மியான் ஷேக்.மக்களைப் பிரிக்கும் கொள்கையாளர்கள் இவர்களைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றார் முன்னணி முஸ்லிம் பிரமுகர் மவ்லானா ஜலாலுத்தீன் உமரி.குண்டு வெடிப்புகளால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு மும்பை மாநகரில் பிரபல இஸ்லாமியா அராபியா பள்ளிவாசலின் கதவுகள் நாள் முழுவதும் திறந்திருந்தன. காயம் அடைந்தவர்களுக்கு உறைவிடம், உணவு, குடிநீர், அவசர மருத்துவ வசதிக்கான பணியில் மும்பை இஸ்லாமிய அராபியா பள்ளிவாசல் சேவை சின்னமாக பாராட்டப் பெற்றது.ரத்தம் வழங்கிய முஸ்லிம் சகோதரர்களுக்கு தங்களின் கண்ணீரால் நன்றி செலுத் தினர் ஹிந்து சமுதாய மக்கள்.இது மும்பையின் நிஜ முகம். இனி இதை யாராலும் வெல்ல முடியாது என்று கூறுகிறார் குண்டு வெடிப்பில் காயம் அடைந்து சிகிச்சைப் பெற்றுவரும் லதா சிரிஷா என்ற ஹிந்து சகோதரி.குண்டு வெடிப்பு தொடர்பான செய்திகளை வெளியிடும் ஊடகங்களில் பெரும்பாலானவை முஸ்லிம்களை நேரடியாகவோ அல்லது மறைமுக மாகவோ வேதனைப்படுத்தும் வண்ணமே செய்திகளை வெளியிடுகின்றன.அவர்களுக்கெல்லாம் 'சகோதரத்துவ' பாடங்களை வழங்கும் வண்ணம் முஸ்லிம் இளைஞர்களின் சேவை அமைந்திருக்கிறது.நவ்படா, கரிப் நகர், பெஹ்ராம்படா போன்ற பகுதிகள் 1992லி93ல் சிவசேனையினர் நிகழ்த்திய வெறியாட்டத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏராளமானவர்கள் உடமைகளை இழந்தனர். உறைவிடங்களையும் இழந்தனர். அப்போது நாட்டு மக்களின் அனுதாபத்தைப் பெற்ற அவர்கள் தற்போது தேசத்தின் ஒட்டுமொத்த கண்ணியத்தையும் பெற்று விட்டார்கள்.குண்டு வெடிப்பினைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்காக உரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங், இந்தியாவை எவராலும் மண்டியிட வைக்க முடியாது என்றார்.உண்மைதான். ஃபயாஸ் போன்ற வர்களும், அக்தர் ஹுஸைன் போன்ற வர்களும் இருக்கும்வரை இந்திய மக்களின் ஒற்றுமையை எவனும் குலைக்க முடியாது.பதவி சுகத்திற்காக மக்களை மோதவிட்டு ரத்தம் குடிக்கும் உள்நாட்டு பயங்கர வாதிகளும், அன்னிய நாட்டின் ஒத்துழைப்போடு சதிச்செயல் புரியும் வெளிநாட்டு பயங்கரவாதிகளும் தோல்வியைத் தழுவுவது திண்ணம்
Saturday, July 7, 2007
முதல் இந்திய சுதந்திரப் போர்1857;
வரலாற்றுப் பக்கங்களில் மறைக்கப்பட்ட மாவீரர்கள் அபூசாலிஹ்
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்த முஸ்லிம்களின் தியாகம், வரலாற்றின் நெடிய பக்கங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டது.பகதூர்ஷா ஜாஃபரும், சிராஜுத் தவ்லாவும், மைசூர் வேங்கை ஹைதர் அலியும், அவரது மகன் வீரத் திப்புவும், கரிய மனம் கொண்ட கயவர் களாலும் மறைக்க முடியாத அளவு மக்களின் மனதில் நிலை நிறுத்தப்பட்டதால் வரலாற்றின் பக்கங்களில் இந்த வீரக் கதாநாயகர் களின் வாழ்வு வெளிச் சத்துக்கு வந்தது. இந்த வெளிச்சத்தின் ஒளிச் சத்து பரவி இன்றும் இந்தியத் தலைமுறை யினரின் நாடி நரம்பு களை முறுக்கேற்றி நாட்டுப் பற்றும் வீர உணர்வும் பெருக் கெடுத்து ஓடச் செய்து வருகிறது. மறைக்கப்பட்ட மாவீரர்களின் உயிர்த் தியாகம் பாடநூல்களிலும் வரலாற்று ஆய்வுகளிலும் வெளிவந்தால் இந்திய மக்களின் மனதில் புதிய உத்வேகமும் வீர உணர்வும் கூர் தீட்டப்படும்.'முதல் இந்திய சுதந்திரப் போர்' என்ற சிப்பாய் புரட்சிக்கு முன்பாகவே ஆங்கிலேயரை எதிர்த்து ஆர்த்தெழுந்த வர்கள் முஸ்லிம் மாவீரர்களே. அதிலும் முஸ்லிம் மார்க்க அறிஞர்களின் தியாகம் லி வீரப் போர், மெய்சிலிர்க்க வைத்தது.2 லட்சம் பேர் சிப்பாய் புரட்சியில் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். அதில் 51,200 பேர் உலமாக்கள் எனப்படும் முஸ்லிம் அறிஞர்கள் ஆவார்கள். அவர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்தனர், வீரமரணம் அடைந்தனர். தலைநகர் டெல்லியில் மட்டும் 500 உலமாக்கள் வீரமரணம் அடைந்தனர் என்ற உண்மைகள் எத்தனைப் பேருக்குத் தெரியும்?மன்னர் பகதூர்ஷாஆனால் மார்க்க நெறிகளை மட்டுமே வரையறைப்படுத்திய அந்த உலமா பெரு மக்கள் சிந்திய ரத்தம் இந்திய நாடு என்ற கம்பீர கட்டிடத்தின் ஒவ் வொரு செங்கலையும் சிவப்பாக்கி விட்டது.முதல் அமைப்பு ரீதியான இந்திய சுதந்திரப் போர் அல்லது இந்தியப் புரட்சி என்பது 1857ல் ஏற்பட்டது. இதுவே சிப்பாய் புரட்சி என்றும் அழைக்கப்பட்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து நிகழ்ந்த ஆயுதம் தாங்கிய புரட்சியை சிப்பாய் புரட்சி என்றே வரலாற்று நூல்களில் குறிக்கப்படுகின்றன.பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கம் முடிவடைந்து பிரிட்டிஷ் அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இந்தியா கொண்டு வரப்பட்டது. அந்த வகையில் முதல் சுதந்திரப் போர் முதல் வெற்றியை ஈட்டியது. அதன்பிறகு இந்தியத் துணைக்கண்டம் 90 ஆண்டுகாலம் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. லண்டன் இந்திய நிர்வாகத்தின் தலைமைப்பீடமாக மாறியது. லண்டனில் உள்ள பிரிவியூ கவுன்சில் இந்தியாவின் உச்சநீதிமன்றமாக அறியப்பட்டது.உத்தரப்பிரதேசத்தின் முஸாஃபர் நகர் மாவட்டத்தில் உள்ள தானா பவனிலும் ஆங்கிலேயருக்கு எதிராக முஸ்லிம்கள் பொங்கி வெடித்தனர். உலமாக்கள் பிரிட்டிஷாரை எதிர்த்து வீர சமர் புரிந்தனர். ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிரி மக்கீ என்பவரின் தலைமையில் நடைபெற்ற புரட்சிப் போர் ஆங்கிலேயரை அதிர வைத்தது. ஷம்லி என்ற இடத்தில் நடைபெற்ற போரில் ஆங்கிலேயர்கள் சிதறடிக்கப்பட்டனர். இதில் உலமாக்கள் காட்டிய வீரம் செறிந்த போரினை ஆங்கிலேயர்கள் மறக்க இயலாது. தற்போது முதல் சுதந்திரப் போரின் 150ஆம் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. முதல் இந்திய சுதந்திரப் போர் வரலாற்றில் மறைக்கப்பட்ட மாவீரர்களின் வரிசையில் ஹாஜி இம்தாதுல் லாஹ் முஹாஜிரி மக்கி போற்றப்பட்டிருக்க வேண்டிய மாவீரர் ஆவார்.உலமாக்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இயல்பாகவே அடக்குமுறைகளையும், அக்கிரமங்களையும் எதிர்ப்பதை அடிப்படை கடமையாக இஸ்லாம் போதிப்பதால் அதை வழிமொழிந்து பின்பற்ற வேண்டிய முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து ஆர்த்தெழுந்ததில் வியப்பில்லை.வங்காள மாவீரன் சிராஜுத் தவ்லா, கிழக்கிந்திய கம்பெனியின் படைகளை எதிர்த்து வீரமரணம் அடைந்ததிலிருந்தே முஸ்லிம்களின் வீரப்போர் தொடங்கி விட்டது என்பதே வரலாற்று உண்மையாகும்.உலமாக்களின் வீரம் செறிந்த விடுதலைப் போர் தியாக வரலாறு குறித்து பிரிட்டிஷ் தரைப்படைத் தளபதி தாம்ஸன் (தங்க்ஷங்ப்ப்ண்ர்ய் ஈப்ங்ழ்ண்ஸ்ரீள் பக்கம் 49ல்) தெளிவாகக் குறிப்பிடுகிறார்.ஷா வலியுல்லாஹ் (1703லி1762)ஷா வலியுல்லாஹ் தெஹ்லவி, ஆங்கிலே யருக்கு எதிரான புரட் சிக்கு தலைமை தாங்கி னார். ஐரோப்பிய ஆட்சி யாளர்கள் ஊழல் முறை கேடுகளுடன் இந்த உலகின் பல பகுதிகளை யும் அடக்குமுறைக்கு உட்படுத்தினார்கள். முழுக்க ஐரோப்பிய ஆதிக்கத்துக்கு எதிராகவே பொங்கியெழ வேண்டும் என அழைப்பு விடுத்தார். அவர் ஹஜ் புனிதப் பயணத்தின் போது ஆக்கிரமிப்பு சக்திகளை அகற்றி சமத்துவம் சமநீதி கொண்ட சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்ற ஆர்வம் அவரது உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரிந்தது.முகலாயப் பேரரசின் வீழ்ச்சியையும் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளிலும் மக்கள் விரும்பிய ஆட்சி வீழ்த்தப்பட்ட காட்சிகளையும் அவர் கண்டார். 1707ல் மாமன்னர் அவ்ரங்கஜேப் காலமானார். ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி தனது அதிகார ஆட்டத்தைத் துவங்கியது. 1757ல் பிளாசி போர்முனையில் வங்கத்து மாவீரன் சிராஜுத் தவ்லாவை துரோகத்தின் துணை கொண்டு ஆங்கிலேயர் வீழ்த்தினர். மனிதநேயத்தை மீட்கவும் அடிமைத் தனத்தை அழிக்கவும் ஷா வலியுல்லாஹ் உறுதி பூண்டார். 'ஹுஜ்ஜத்துல்லாஹி பலிகா' என்ற தனது நூலில், உழைக்கும் மக்களே சமுதாயத்தின் உண்மைச் சொத்து என்றார். சமூகத்திற்கு உடலாலும் மூளையாலும் உழைப்பவர்கள் யாரோ அவரே சிறந்தவராக இருக்க முடியும் என்றார். விடுதலை உரிமை நம்நாட்டு சொத்துக் களின் மீதான பாதுகாப்பு உணர்வு ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டும் என்றார். இவரது வரலாறு லி பாடப்புத்தகங்களில் மறக்கடிக்கப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது.திப்பு சுல்தானின் தியாக பூமிவீரத் திப்புவின் தியாகம் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஊக்கத்தையும் உத்வேகத் தையும் அளித்தது. 1757 முதல் 1857 வரை அவ்ரங்கஜேப்பின் வாரிசுகள் தனியாக பலம் பொருந்திய ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்டனர். முஸ்லிம்கள் அனை வருக்கும் சுதந்திர நெருப்பூட்டியவர் மாவீரன் திப்பு சுல்தான். மே மாதம் 4ஆம் தேதி 1799ல் திப்பு சுல்தான் ஸ்ரீரங்கப்பட்டினம் போர்க் களத்தில் வீர மரணம் அடைந்தபோது, தரையில் வீழ்ந்து கிடந்த அவரது உடலைப் பார்த்து ஆங்கிலேய ஆட்சியாளர் லார்டு ஹாரிஸ் என்பவன் கொக்கரித்தான். 'இப்போது இந்தியா எங்களுடையதாகி விட்டது' என் றான். அந்த மாவீரனின் மறைவுக்குப் பிறகு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு சவால்விடும் அளவுக்கு எந்த ஆட்சியாளரும் தோன்ற வில்லை என்பதே வரலாற்று உண்மை.பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிரான ஃபத்வாக்கள்1803ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஏகாதி பத்தியம் டெல்லியை கைப்பற்றியது. கொதித்தெழுந்தார் மார்க்க அறிஞர் ஷா வலியுல்லாஹ்வின் மகன் ஷா அப்துல் அஜீஸ் தெஹ்லவி. ஆங்கிலேய ஆதிக்கத் துக்கு எதிரான ஃபத்வாக்களை பிரயோகித் தார். முதல் ஃபத்வா நமது நாடு அடிமைப் படுத்தப்பட்டுள்ளது, நாட்டின் அடிமைத் தனத்தை மீட்க விடுதலைப் போராட்டத்தை துவக்குவது நமது முக்கியக் கடமை என அந்த ஃபத்வா குறிப்பிடுகிறது.ஸையத் அஹ்மத் ஷஹீத் (1786லி1831)ஸையத் அஹ்மத் ஷஹீத், உத்தரப்பிரதேச மாநில ரெய்பரேலியின் விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். ஆங்கில அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தினார் இந்த மார்க்க அறிஞர். 1808ல் இவரது வீர வரலாறு தொடங்குகிறது. மஹாராஜா ஜஸ்வந்த் ராவ் மற்றும் நவாப் அமீர் அலிகான் இருவரும் இணைந்து ஆங்கில அரசுக்கு எதிராகப் போராடினர். மார்க்க அறிஞர் ஷா அப்துல் அஜீஸ் தனது மாணவருக்கு கட்டளையிட்டார். உடனடியாக ஸையத் அஹ்மத் ஷஹீத் தனது படையை நவாப் அமீர் அலி படையினருடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றார். இருவரும் இணைந்து ஆறு ஆண்டுகள் ஆங்கில அரசை எதிர்த்துப் போராடினார்கள். ஸையத் அஹ்மத் ஷஹீத் தலைமையில் எல்லைப்புறத்தில் தற்காலிக சுதந்திர இந்திய அரசை துவக்கினர். அது பல ஆண்டுகள் நீடித்தது. பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தை எதிர்த்து முதன்முறையாக எழுந்த அரசு அது என்பது குறிப்பிடத்தக்கது.நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு முன்பாகவே ஓர் சுதந்திர அரசை நிறுவியவர் ஒரு முஸ்லிம் மார்க்க அறிஞர்தான் என்பது வரலாற்றின் பக்கங்களில் சரியாகப் பதிவு செய்யப்படவில்லை. பஞ்சாபை ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து மீட்பதற்காகப் போராடிய ரஞ்சித்சிங் குறித்து மட்டும்தான் பாடப்புத்தகங்ளில் காணப்படுகிறது. இன்றைய பாகிஸ்தான் பகுதியிலுள்ள பஞ்சாபின் முஜாஹிதீன்களின் உதவியுடன் சுதேசி பட்டான் படை என்ற பெயரில் புரட்சி நடத்திய மக்களின் பலகோட் போர்க்களத்தில் ஆங்கிலேயர்களை வீரத்துடன் எதிர்த்த மக்களைப் பற்றிய குறிப்பும், பலகோட் போர்க்களத்தில் 300 பேர் வீரமரணம் அடைந்தனர் என்ற உண்மை வரலாறும் ஒன்றுபட்ட இந்தியாவை ஆங்கிலேயரிட மிருந்து மீட்க உயிர்த்தியாகம் செய்த தகவல்கள் பதிவு செய்யப்படவே இல்லை.இந்தப் போராட்டத்தை சாதிப்பூர் உலமா முன்னெடுத்தார். 1845 முதல் 1871 வரை ஆங்கிலேயரை எதிர்த்து சாதிப்பூர் உலமா தலைமையிலான போராட்டம் தீவிர மடைந்தது. 1857ல் நிகழ்ந்த முதல் சுதந்திரப் போரில் ஆங்கிலேயருக்கு எதிரான உடனடிப் போரை தொடங்க வேண்டும் என 34 உலமாக்கள் ஃபத்வா வழங்கினர். மவ்லானா காசிம் (தேவ்பந்த் மதரஸாவின் நிறுவனர்) மற்றும் மவ்லானா ரஷீத் அஹ்மத் மற்றும் ஹஃபீஸ் ஜமீன் உள்ளிட்ட உலமாக்களும் ஹாஜி இம்தாதுல்லாஹ் தலைமையில் ஷாம்லி போர்க்களத்தில் போராடி வீர மரணம் அடைந்தனர்.பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வர்த்தக சமூகத்திற்கும் ஆதிக்கசாதிகளுக்கும் ஆதரவு கொடுக்கும் விதமாகவே செயல்பட்டு வந்தனர். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் எந்த ராணுவமும் இத்தனைக் கொடூரமாக நடந்திருக்க முடியாது என நினைக்கும் வண்ணம் படுகொலைகளை இந்தியாவெங்கும் நடத்தி வந்தனர். இது ஒரு பிரிட்டிஷ் வீரரின் உரிமை என்றே அவர்கள் கருதினர்.முஸ்லிம் சிற்றரசான அவ்த்தில் மட்டும் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதில் ஒரு லட்சம் பேர் பொதுமக்கள் என்பது அதிரவைக்கும் உண்மையாகும். சிறந்த உருதுக்கவிஞரான மிர்ஸா காலிஃப் எழுதுகிறார்: ''என் முன்னால் ரத்த ஆறு ஓடியதை நான் பார்க்கிறேன். ஒவ்வொருவரும் கொல்லப் படுவதை நான் பார்த்தேன். ஒருபுறம் மக்களின் பொருட்கள் கொள்ளையடிக் கப்படுவதைப் பார்த்தேன்'' என்று தனது கவிதையில் குறிப்பிடுகிறார்.பஹதூர்ஷா ஜாஃபரின் வீர புதல்வர்கள் மூவரும் ஹூனி தர்வாஜா என்ற பகுதியில் பொதுமக்களின் மத்தியில் படுகொலை செய்யப்பட்டனர். கண்கள் குருடாக்கப் பட்ட நிலையில் பஹதூர்ஷா ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார். 1862ல் உயிர் துறந்தார். சற்றும் கருணை காட்டாத பிரிட்டிஷ் அரசின் கொடூரச் செயல் கண்டு பஹதூர்ஷா ஜாஃபர் மனம் கலங்காது மரணத்தை எதிர்கொண்டார். அவர் உயிர் பிரியும்போது உடல் சற்று ஆடியிருக்கலாம். ஆனால் அவரது தியாக மரணம் பிரிட்டிஷ் ஆட்சியை அசைத்துப் பார்த்தது என தாமஸ் லோவே தெரிவித்தார். பலமிக்க பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்து உலமாக்கள் வீர சமர் புரிந்தார்கள்.1857 முதல் சுதந்திரப் போர் தோல்வியில் முடிந்தது என்று கூறுவார்கள். ஆனால் ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியை அதுதான் விரட்டியடித்தது. 'மவ்லவி' என்ற சொல்லைக் கேட்டாலே ஆங்கிலேயர்கள் அலறினர். தீவிரவாதிகள் என்ற பெயரிட்டு ஆவணங்களிலும் குறித்தார்கள். ஜான்ஸிராணி லக்குமிபாய், மங்கள் பாண்டே போன்றவர்களை மட்டுமே போற்றிப் பாடும் இந்திய வரலாற்று ஆசிரியர்கள், கல்வித்துறை வல்லுனர்கள்(!) உண்மைகளை மறைத்து விட்டனர். இருப்பினும் எம் இந்திய தேசம் முழுக்க முழுக்க அறிவார்ந்த மக்களைக் கொண்ட நாடாக மாறும்போது மவ்லவிகள் உள்ளிட்ட அனைத்து மாவீரர்கள் பற்றிய உண்மைகளும் உலகில் உரத்து ஒலிக்கும்
வரலாற்றுப் பக்கங்களில் மறைக்கப்பட்ட மாவீரர்கள் அபூசாலிஹ்
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்த முஸ்லிம்களின் தியாகம், வரலாற்றின் நெடிய பக்கங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டது.பகதூர்ஷா ஜாஃபரும், சிராஜுத் தவ்லாவும், மைசூர் வேங்கை ஹைதர் அலியும், அவரது மகன் வீரத் திப்புவும், கரிய மனம் கொண்ட கயவர் களாலும் மறைக்க முடியாத அளவு மக்களின் மனதில் நிலை நிறுத்தப்பட்டதால் வரலாற்றின் பக்கங்களில் இந்த வீரக் கதாநாயகர் களின் வாழ்வு வெளிச் சத்துக்கு வந்தது. இந்த வெளிச்சத்தின் ஒளிச் சத்து பரவி இன்றும் இந்தியத் தலைமுறை யினரின் நாடி நரம்பு களை முறுக்கேற்றி நாட்டுப் பற்றும் வீர உணர்வும் பெருக் கெடுத்து ஓடச் செய்து வருகிறது. மறைக்கப்பட்ட மாவீரர்களின் உயிர்த் தியாகம் பாடநூல்களிலும் வரலாற்று ஆய்வுகளிலும் வெளிவந்தால் இந்திய மக்களின் மனதில் புதிய உத்வேகமும் வீர உணர்வும் கூர் தீட்டப்படும்.'முதல் இந்திய சுதந்திரப் போர்' என்ற சிப்பாய் புரட்சிக்கு முன்பாகவே ஆங்கிலேயரை எதிர்த்து ஆர்த்தெழுந்த வர்கள் முஸ்லிம் மாவீரர்களே. அதிலும் முஸ்லிம் மார்க்க அறிஞர்களின் தியாகம் லி வீரப் போர், மெய்சிலிர்க்க வைத்தது.2 லட்சம் பேர் சிப்பாய் புரட்சியில் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். அதில் 51,200 பேர் உலமாக்கள் எனப்படும் முஸ்லிம் அறிஞர்கள் ஆவார்கள். அவர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்தனர், வீரமரணம் அடைந்தனர். தலைநகர் டெல்லியில் மட்டும் 500 உலமாக்கள் வீரமரணம் அடைந்தனர் என்ற உண்மைகள் எத்தனைப் பேருக்குத் தெரியும்?மன்னர் பகதூர்ஷாஆனால் மார்க்க நெறிகளை மட்டுமே வரையறைப்படுத்திய அந்த உலமா பெரு மக்கள் சிந்திய ரத்தம் இந்திய நாடு என்ற கம்பீர கட்டிடத்தின் ஒவ் வொரு செங்கலையும் சிவப்பாக்கி விட்டது.முதல் அமைப்பு ரீதியான இந்திய சுதந்திரப் போர் அல்லது இந்தியப் புரட்சி என்பது 1857ல் ஏற்பட்டது. இதுவே சிப்பாய் புரட்சி என்றும் அழைக்கப்பட்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து நிகழ்ந்த ஆயுதம் தாங்கிய புரட்சியை சிப்பாய் புரட்சி என்றே வரலாற்று நூல்களில் குறிக்கப்படுகின்றன.பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கம் முடிவடைந்து பிரிட்டிஷ் அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இந்தியா கொண்டு வரப்பட்டது. அந்த வகையில் முதல் சுதந்திரப் போர் முதல் வெற்றியை ஈட்டியது. அதன்பிறகு இந்தியத் துணைக்கண்டம் 90 ஆண்டுகாலம் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. லண்டன் இந்திய நிர்வாகத்தின் தலைமைப்பீடமாக மாறியது. லண்டனில் உள்ள பிரிவியூ கவுன்சில் இந்தியாவின் உச்சநீதிமன்றமாக அறியப்பட்டது.உத்தரப்பிரதேசத்தின் முஸாஃபர் நகர் மாவட்டத்தில் உள்ள தானா பவனிலும் ஆங்கிலேயருக்கு எதிராக முஸ்லிம்கள் பொங்கி வெடித்தனர். உலமாக்கள் பிரிட்டிஷாரை எதிர்த்து வீர சமர் புரிந்தனர். ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிரி மக்கீ என்பவரின் தலைமையில் நடைபெற்ற புரட்சிப் போர் ஆங்கிலேயரை அதிர வைத்தது. ஷம்லி என்ற இடத்தில் நடைபெற்ற போரில் ஆங்கிலேயர்கள் சிதறடிக்கப்பட்டனர். இதில் உலமாக்கள் காட்டிய வீரம் செறிந்த போரினை ஆங்கிலேயர்கள் மறக்க இயலாது. தற்போது முதல் சுதந்திரப் போரின் 150ஆம் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. முதல் இந்திய சுதந்திரப் போர் வரலாற்றில் மறைக்கப்பட்ட மாவீரர்களின் வரிசையில் ஹாஜி இம்தாதுல் லாஹ் முஹாஜிரி மக்கி போற்றப்பட்டிருக்க வேண்டிய மாவீரர் ஆவார்.உலமாக்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இயல்பாகவே அடக்குமுறைகளையும், அக்கிரமங்களையும் எதிர்ப்பதை அடிப்படை கடமையாக இஸ்லாம் போதிப்பதால் அதை வழிமொழிந்து பின்பற்ற வேண்டிய முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து ஆர்த்தெழுந்ததில் வியப்பில்லை.வங்காள மாவீரன் சிராஜுத் தவ்லா, கிழக்கிந்திய கம்பெனியின் படைகளை எதிர்த்து வீரமரணம் அடைந்ததிலிருந்தே முஸ்லிம்களின் வீரப்போர் தொடங்கி விட்டது என்பதே வரலாற்று உண்மையாகும்.உலமாக்களின் வீரம் செறிந்த விடுதலைப் போர் தியாக வரலாறு குறித்து பிரிட்டிஷ் தரைப்படைத் தளபதி தாம்ஸன் (தங்க்ஷங்ப்ப்ண்ர்ய் ஈப்ங்ழ்ண்ஸ்ரீள் பக்கம் 49ல்) தெளிவாகக் குறிப்பிடுகிறார்.ஷா வலியுல்லாஹ் (1703லி1762)ஷா வலியுல்லாஹ் தெஹ்லவி, ஆங்கிலே யருக்கு எதிரான புரட் சிக்கு தலைமை தாங்கி னார். ஐரோப்பிய ஆட்சி யாளர்கள் ஊழல் முறை கேடுகளுடன் இந்த உலகின் பல பகுதிகளை யும் அடக்குமுறைக்கு உட்படுத்தினார்கள். முழுக்க ஐரோப்பிய ஆதிக்கத்துக்கு எதிராகவே பொங்கியெழ வேண்டும் என அழைப்பு விடுத்தார். அவர் ஹஜ் புனிதப் பயணத்தின் போது ஆக்கிரமிப்பு சக்திகளை அகற்றி சமத்துவம் சமநீதி கொண்ட சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்ற ஆர்வம் அவரது உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரிந்தது.முகலாயப் பேரரசின் வீழ்ச்சியையும் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளிலும் மக்கள் விரும்பிய ஆட்சி வீழ்த்தப்பட்ட காட்சிகளையும் அவர் கண்டார். 1707ல் மாமன்னர் அவ்ரங்கஜேப் காலமானார். ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி தனது அதிகார ஆட்டத்தைத் துவங்கியது. 1757ல் பிளாசி போர்முனையில் வங்கத்து மாவீரன் சிராஜுத் தவ்லாவை துரோகத்தின் துணை கொண்டு ஆங்கிலேயர் வீழ்த்தினர். மனிதநேயத்தை மீட்கவும் அடிமைத் தனத்தை அழிக்கவும் ஷா வலியுல்லாஹ் உறுதி பூண்டார். 'ஹுஜ்ஜத்துல்லாஹி பலிகா' என்ற தனது நூலில், உழைக்கும் மக்களே சமுதாயத்தின் உண்மைச் சொத்து என்றார். சமூகத்திற்கு உடலாலும் மூளையாலும் உழைப்பவர்கள் யாரோ அவரே சிறந்தவராக இருக்க முடியும் என்றார். விடுதலை உரிமை நம்நாட்டு சொத்துக் களின் மீதான பாதுகாப்பு உணர்வு ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டும் என்றார். இவரது வரலாறு லி பாடப்புத்தகங்களில் மறக்கடிக்கப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது.திப்பு சுல்தானின் தியாக பூமிவீரத் திப்புவின் தியாகம் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஊக்கத்தையும் உத்வேகத் தையும் அளித்தது. 1757 முதல் 1857 வரை அவ்ரங்கஜேப்பின் வாரிசுகள் தனியாக பலம் பொருந்திய ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்டனர். முஸ்லிம்கள் அனை வருக்கும் சுதந்திர நெருப்பூட்டியவர் மாவீரன் திப்பு சுல்தான். மே மாதம் 4ஆம் தேதி 1799ல் திப்பு சுல்தான் ஸ்ரீரங்கப்பட்டினம் போர்க் களத்தில் வீர மரணம் அடைந்தபோது, தரையில் வீழ்ந்து கிடந்த அவரது உடலைப் பார்த்து ஆங்கிலேய ஆட்சியாளர் லார்டு ஹாரிஸ் என்பவன் கொக்கரித்தான். 'இப்போது இந்தியா எங்களுடையதாகி விட்டது' என் றான். அந்த மாவீரனின் மறைவுக்குப் பிறகு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு சவால்விடும் அளவுக்கு எந்த ஆட்சியாளரும் தோன்ற வில்லை என்பதே வரலாற்று உண்மை.பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிரான ஃபத்வாக்கள்1803ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஏகாதி பத்தியம் டெல்லியை கைப்பற்றியது. கொதித்தெழுந்தார் மார்க்க அறிஞர் ஷா வலியுல்லாஹ்வின் மகன் ஷா அப்துல் அஜீஸ் தெஹ்லவி. ஆங்கிலேய ஆதிக்கத் துக்கு எதிரான ஃபத்வாக்களை பிரயோகித் தார். முதல் ஃபத்வா நமது நாடு அடிமைப் படுத்தப்பட்டுள்ளது, நாட்டின் அடிமைத் தனத்தை மீட்க விடுதலைப் போராட்டத்தை துவக்குவது நமது முக்கியக் கடமை என அந்த ஃபத்வா குறிப்பிடுகிறது.ஸையத் அஹ்மத் ஷஹீத் (1786லி1831)ஸையத் அஹ்மத் ஷஹீத், உத்தரப்பிரதேச மாநில ரெய்பரேலியின் விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். ஆங்கில அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தினார் இந்த மார்க்க அறிஞர். 1808ல் இவரது வீர வரலாறு தொடங்குகிறது. மஹாராஜா ஜஸ்வந்த் ராவ் மற்றும் நவாப் அமீர் அலிகான் இருவரும் இணைந்து ஆங்கில அரசுக்கு எதிராகப் போராடினர். மார்க்க அறிஞர் ஷா அப்துல் அஜீஸ் தனது மாணவருக்கு கட்டளையிட்டார். உடனடியாக ஸையத் அஹ்மத் ஷஹீத் தனது படையை நவாப் அமீர் அலி படையினருடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றார். இருவரும் இணைந்து ஆறு ஆண்டுகள் ஆங்கில அரசை எதிர்த்துப் போராடினார்கள். ஸையத் அஹ்மத் ஷஹீத் தலைமையில் எல்லைப்புறத்தில் தற்காலிக சுதந்திர இந்திய அரசை துவக்கினர். அது பல ஆண்டுகள் நீடித்தது. பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தை எதிர்த்து முதன்முறையாக எழுந்த அரசு அது என்பது குறிப்பிடத்தக்கது.நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு முன்பாகவே ஓர் சுதந்திர அரசை நிறுவியவர் ஒரு முஸ்லிம் மார்க்க அறிஞர்தான் என்பது வரலாற்றின் பக்கங்களில் சரியாகப் பதிவு செய்யப்படவில்லை. பஞ்சாபை ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து மீட்பதற்காகப் போராடிய ரஞ்சித்சிங் குறித்து மட்டும்தான் பாடப்புத்தகங்ளில் காணப்படுகிறது. இன்றைய பாகிஸ்தான் பகுதியிலுள்ள பஞ்சாபின் முஜாஹிதீன்களின் உதவியுடன் சுதேசி பட்டான் படை என்ற பெயரில் புரட்சி நடத்திய மக்களின் பலகோட் போர்க்களத்தில் ஆங்கிலேயர்களை வீரத்துடன் எதிர்த்த மக்களைப் பற்றிய குறிப்பும், பலகோட் போர்க்களத்தில் 300 பேர் வீரமரணம் அடைந்தனர் என்ற உண்மை வரலாறும் ஒன்றுபட்ட இந்தியாவை ஆங்கிலேயரிட மிருந்து மீட்க உயிர்த்தியாகம் செய்த தகவல்கள் பதிவு செய்யப்படவே இல்லை.இந்தப் போராட்டத்தை சாதிப்பூர் உலமா முன்னெடுத்தார். 1845 முதல் 1871 வரை ஆங்கிலேயரை எதிர்த்து சாதிப்பூர் உலமா தலைமையிலான போராட்டம் தீவிர மடைந்தது. 1857ல் நிகழ்ந்த முதல் சுதந்திரப் போரில் ஆங்கிலேயருக்கு எதிரான உடனடிப் போரை தொடங்க வேண்டும் என 34 உலமாக்கள் ஃபத்வா வழங்கினர். மவ்லானா காசிம் (தேவ்பந்த் மதரஸாவின் நிறுவனர்) மற்றும் மவ்லானா ரஷீத் அஹ்மத் மற்றும் ஹஃபீஸ் ஜமீன் உள்ளிட்ட உலமாக்களும் ஹாஜி இம்தாதுல்லாஹ் தலைமையில் ஷாம்லி போர்க்களத்தில் போராடி வீர மரணம் அடைந்தனர்.பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வர்த்தக சமூகத்திற்கும் ஆதிக்கசாதிகளுக்கும் ஆதரவு கொடுக்கும் விதமாகவே செயல்பட்டு வந்தனர். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் எந்த ராணுவமும் இத்தனைக் கொடூரமாக நடந்திருக்க முடியாது என நினைக்கும் வண்ணம் படுகொலைகளை இந்தியாவெங்கும் நடத்தி வந்தனர். இது ஒரு பிரிட்டிஷ் வீரரின் உரிமை என்றே அவர்கள் கருதினர்.முஸ்லிம் சிற்றரசான அவ்த்தில் மட்டும் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதில் ஒரு லட்சம் பேர் பொதுமக்கள் என்பது அதிரவைக்கும் உண்மையாகும். சிறந்த உருதுக்கவிஞரான மிர்ஸா காலிஃப் எழுதுகிறார்: ''என் முன்னால் ரத்த ஆறு ஓடியதை நான் பார்க்கிறேன். ஒவ்வொருவரும் கொல்லப் படுவதை நான் பார்த்தேன். ஒருபுறம் மக்களின் பொருட்கள் கொள்ளையடிக் கப்படுவதைப் பார்த்தேன்'' என்று தனது கவிதையில் குறிப்பிடுகிறார்.பஹதூர்ஷா ஜாஃபரின் வீர புதல்வர்கள் மூவரும் ஹூனி தர்வாஜா என்ற பகுதியில் பொதுமக்களின் மத்தியில் படுகொலை செய்யப்பட்டனர். கண்கள் குருடாக்கப் பட்ட நிலையில் பஹதூர்ஷா ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார். 1862ல் உயிர் துறந்தார். சற்றும் கருணை காட்டாத பிரிட்டிஷ் அரசின் கொடூரச் செயல் கண்டு பஹதூர்ஷா ஜாஃபர் மனம் கலங்காது மரணத்தை எதிர்கொண்டார். அவர் உயிர் பிரியும்போது உடல் சற்று ஆடியிருக்கலாம். ஆனால் அவரது தியாக மரணம் பிரிட்டிஷ் ஆட்சியை அசைத்துப் பார்த்தது என தாமஸ் லோவே தெரிவித்தார். பலமிக்க பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்து உலமாக்கள் வீர சமர் புரிந்தார்கள்.1857 முதல் சுதந்திரப் போர் தோல்வியில் முடிந்தது என்று கூறுவார்கள். ஆனால் ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியை அதுதான் விரட்டியடித்தது. 'மவ்லவி' என்ற சொல்லைக் கேட்டாலே ஆங்கிலேயர்கள் அலறினர். தீவிரவாதிகள் என்ற பெயரிட்டு ஆவணங்களிலும் குறித்தார்கள். ஜான்ஸிராணி லக்குமிபாய், மங்கள் பாண்டே போன்றவர்களை மட்டுமே போற்றிப் பாடும் இந்திய வரலாற்று ஆசிரியர்கள், கல்வித்துறை வல்லுனர்கள்(!) உண்மைகளை மறைத்து விட்டனர். இருப்பினும் எம் இந்திய தேசம் முழுக்க முழுக்க அறிவார்ந்த மக்களைக் கொண்ட நாடாக மாறும்போது மவ்லவிகள் உள்ளிட்ட அனைத்து மாவீரர்கள் பற்றிய உண்மைகளும் உலகில் உரத்து ஒலிக்கும்
Thursday, May 31, 2007
ஹைதராபாத் பயங்கரம்இரத்த தானம் கொடுக்கச் சென்ற இளைஞன் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை உண்மை அறியும் குழுவின் 'திடுக்' அறிக்கை!

ஹைதராபாத் பயங்கரம்இரத்த தானம் கொடுக்கச் சென்ற இளைஞன் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை உண்மை அறியும் குழுவின் 'திடுக்' அறிக்கை!லிஅபுசாலிஹ்ஹைதராபாத் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு குறித்தும், அப்பாவி மக்களின் மீது நிகழ்ந்த காவல்துறை யினரின் துப்பாக்கிச்சூடு குறித்தும் உண்மை அறியும் குழு ஆய்வு நடத்தியது.உண்மை அறியும் குழு மே 20ஆம் தேதி ஹைதராபாத்தில், சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டது. அசம்பாவி தத்தை கண்ணால் பார்த்த சாட்சிகளிடம், நடந்தவைகள் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் ஒவைஸி மருத்துவ மனையில் காயமடைந்து சிகிச்சைப் பெற்றுவரும் பாதிக்கப்பட்டோரை சந்தித்தனர்.பள்ளி மீதான குண்டுவெடிப்பு மிகவும் கண்டிக்கத்தக்கது என்றதுடன், அதன் பிறகு நடைபெற்ற காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டையும் வன்மையாகக் கண்டித்தது உண்மை அறியும் குழு. இரண்டுமே சமமான அளவு கண்டிக் கப்பட வேண்டிய குற்றங்கள் என்றும் அது மேலும் தெரிவித்தது.மக்கா பள்ளிவாசல் குண்டுவெடிப்பு முஸ்லிம்களை அச்சுறுத்துவதற்கும், அவர்களது நம்பிக்கை சிதைப்பதற்கும் நிகழ்த்தப்பட்டது என்றும், அதன்பிறகு அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் மீதான தாக்குதலிலும் முஸ்லிம்களுக்கு எதிரான பயங்கரவாதம் வெளிப்பட் டுள்ளது. சிறிய ஆர்ப்பாட்டத் தைக் கூட நசுக்கும் காவல் துறையினரின் முதிர்ச்சியற்ற போக்கும் தெரிய வந்தது எனவும் உண்மை அறியும் குழு கருத்து தெரிவித்துள்ளது.துப்பாக்கிச் சூடு, பள்ளி வாசலிலிருந்து 200 மீட்டர் தூரத்தில் நிகழ்ந்துள்ளது. பள்ளிவாசலிலிருந்து வெளி யேறுபவர்களை நோக்கி காவல்துறை யினரின் துப்பாக்கிச் சூடு நடந்தது. ஒர் இளைஞர் அவரது வீட்டுக்கு அருகி லேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.மற்றொரு 17 வயது முஸ்லிம் இளைஞர், படுகாயம் அடைந்தவர் களுக்கு ரத்த தானம் செய்வதற்காக அஸ்ரா மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தபோது காவல்துறை துப்பாக்கி குண்டு அவரை சாய்த்தது. துப்பாக்கிச் சூட்டினால் காயமடைந்து தரையில் விழுந்து கிடந்த ஒரு மனிதரைக் காப்பாற்ற தரையில் குனிந்து அவரைத் தூக்க முயன்ற இளைஞரின் உயிரையும் காவல்துறையின் குண்டு குடித்தது.காவல்துறையினர் பாரபட்சமான முறையில் நடந்து கொண்டனர். காவல் துறையினர் தங்களது செய்தியாளர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத வாதங்களை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித் துள்ளனர்.ஒரு பெட்ரோல் பங்க்கையும், ஒரு மதுக்கடையையும் ஒரு கும்பல் தாக்க வந்ததாகவும், அதனைத் தவிர்க்கவே துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் கூறினர். உண்மையில் அவ்வாறு நடந்ததற்கான எந்த அடையாளமும் அங்கு இல்லை.பெட்ரோல் பங்க்கின் மூன்று வழிகளும் ஏற்கனவே அடைக்கப் பட்டிருந்தது. ஒரேயொரு வழி மட்டும் தகுந்த கட்டுக்காவலுடன் திறந்திருந்தது. மதுக்கடையைத் தாக்க வந்திருந்தார்கள் என்று கூறி துப்பாக்கிச்சூடு நடத்தி 9 பேரைக் கொன்று விட்டார்கள். 25 பேரை படுகாயப்படுத்தியிருக்கிறார்கள். சொத்துக்களைப் பாதுகாக்கும் அக்கறை இருந்த அளவுக்கு மனித உயிர்களின் மதிப்பு அவர்களுக்குத் தெரியவில்லை.காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு சாலையிலிருந்து பள்ளிவாசல் திசையை நோக்கி நடத்தப்பட்டது கடும் கண்டனத் திற்குரியது. காவல்துறையினரின் நடவடிக்கை மிகவும் பாரபட்சமான முறையில் இருந்ததாக நேரில் பார்த்த சாட்சியான முஹம்மத் கவுஸ் உண்மை அறியும் குழுவிடம் தெரிவித்தார்.குண்டுவெடிப்பு நிகழ்ந்த உடன் அந்த இடத்தைவிட்டு ஓடிய அச்சமடைந்த மக்களை மேலும் பயமுறுத்தும் நோக்கத்துடன் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.குண்டுவெடிப்பு நிகழ்ந்த ஒருமணி நேரத்திற்குள் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. தொழுகைக்குச் சென்றிருந்த தங்களது உறவினர்களின் நிலை என்ன ஆனதோ என்ற பதைபதைப்புடன் வந்திருந்த மக்கள் கூட்டத்தை நோக்கி எவ்வித முன்னறிவிப்பும் இன்றி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். மக்கள் கட்டுப்பாடு இழந்து பதறி சிதறி ஓடிவரும்போது, எவ்வித முன்னெச் சரிக்கையும் விடுக்காமல் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். மக்கள் கூட்டத்தைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர ரப்பர் குண்டுகளை பயன் படுத்தியிருக்க வேண்டும். ஆனால் உண்மையான குண்டுகளே பாதிக்கப்பட்ட வர்களின் உடலைத் துளைத் துள்ளது தெரிய வந்துள்ளது.எந்த உயரதிகாரியின் அனுமதியின் பேரில் இவ்வாறு கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நிகழ்த்தினார்கள் என்ற தகவல் இதுவரை வெளிவரவில்லை. ஹைதராபாத் குண்டுவெடிப்பில் பலியானவர்கள் எத்தனை பேர் என்ற உண்மையையும், துப்பாக்கிச் சூட்டில் எவ்வளவு பேர் பலியானவர்கள் என்ற உண்மை கணக் கையும் இதுவரை அரசு வெளியிட வில்லை. குண்டுவெடிப்பில் பலியானவர்களை விட காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள்தான் அதிகம் என்ற உண்மை விவரங்கள் தற்போது தெரியவந்துள்ளதாக உண்மை அறியும் குழு தெரிவித்துள்ளது.இந்த குண்டுவெடிப்பின் பின்னணி யில் இந்தியாவிற்கு வெளியே இருந்து இயக்கப்படும் இரண்டு இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்கள் இருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. முக்கிய சதிகாரன் என முஸ்லிம் பெயரைக் கொண்ட ஒருவரையும் கூறுகிறது. ஆனால் குண்டுவெடிப்பில் காயடைந்தவர்களின் உடல்களிலிருந்து நகத்துகள், கதவு கைப்பிடி, மற்றும் பிரிஃப்கேஸின் கைப்பிடியின் துண்டு போன்றவை எடுக்கப்பட்டதாக அஸ்ரா மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இக்குண்டு வெடிப்பில் பெட்ரோல் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதிலிருந்து ஆர்.டி.எக்ஸ். டி.என்.டி போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படவில்லை என்பதும் இரண்டு இஸ்லாமிய அமைப்பு கள் சதியில் சம்பந்தப்பட்டிருக் கின்றன என்ற தகவலிலும் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு எந்த ஆதாரமும் கிடைக்க வில்லை. இது பிரச்சினையை திசைதிருப்பும் முயற்சி என்றும் உண்மை அறியும் குழு தெரிவித்திருக்கிறது.குண்டுவெடிப்பும், அதன்பிறகு நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடும் முஸ்லிம் களை அச்சுறுத்துவதற்காகவே நடத்தப் பட்டன என உண்மை அறியும் குழு கருதுகிறது. இரண்டு சம்பவங்களுக்கும் மாநில அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். பல மாநிலங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு எச்சரித்தது. இதை ஆந்திர காவல்துறை பொருட்படுத்தாதது ஏன்? வழிப்பாட்டுத் தலங்கள் மீதான பாதுகாப்பை பலப்படுத்தாது ஏன்? என்றும் உண்மை அறியும் குழு வினா விடுத்தது.வழக்கமாக ஹைதராபாத்தின் மக்கா மஸ்ஜிதில் பாதுகாப்பு பரிசோதனை செய்யப்படும். ஆனால் அன்று பாதுகாப்பு பரிசோதனை நடத்ததப்படவேயில்லை என உண்மை அறியும் குழு சந்தேகம் தெரிவித்துள்ளது. மாநில காவல்துறைத் தலைவர் (டிஜிபி) இடைநீக்கம் செய்யப் படவேண்டும் என்றும் துப்பாக்கிச் சூடு வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உண்மை அறியும் குழு அறிவித்துள்ளது.இந்த உண்மை அறியும் குழுவில்1) ஆந்திர மாநில குடியரசுக் கட்சித் தலைவர் போஜா தாரகம்.2) சிவில் உரிமை கண்காணிப்புக் குழுவின் செயலாளர் லத்திஃப் முஹம்மத் கான்.3) வரவரராவ்4) ஏ.பி.சி.எல்.ஸி.தலைவர் சுரேஷ் குமார்5) பிரபாகர் (பி.கே.எம்) 6) அபினோவா கே.என்.பி.எஸ்7) ராதா ஏ.பி.சி.எம்8) முஜாஹித் ஹாஷ்மி ஏ.எம்.ஏ 9) லியோ ஜஸ்டின்10) கிரியாதுவோ பிராஜபாதி ஆகிய சமூக நல ஆர்வலர்கள் பங்கேற்றன
Friday, May 18, 2007
இந்தியாவில் 600 பள்ளிவாசல்களில் தொழுகைக்குத் தடைஅதிர்ச்சித் தகவல்
அபூசாலிஹ்
இந்தியாவில் வரலாற்றுப் பின்னணியுடைய 600 பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என நாடெங்கும் வாழும் முஸ்லிம்களிடமிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
இந்தியாவில் முகலாயர்கள் ஆண்டபோது கட்டப்பட்ட பள்ளிவாசல்கள் தற்போது மத்திய அரசின் கட்டுப் பாட்டின் கீழ் உள்ளது. இந்தப் பழமையான பள்ளிவாசல் களில் தொழுகையை நடத்தும் உரிமையை உடனடியாக வழங்க வேண்டும் என பலமான கோரிக்கை எழுந்துள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பழமையான 600 பள்ளிவாசல் களில் தலைநகர் டெல்லியில் மட்டும் 53 பள்ளிவாசல்கள் உள்ளன. ஆனால் அங்கெல்லாம் முஸ்லிம்களின் வணக்க வழிபாடு களுக்கு அனுமதி இல்லை. காரணம் இவையெல்லாம் வரலாற்று நினைவுச் சின்னங்கள் என்பதால் இங்கு தொழ அனுமதி இல்லையாம்.
தலைநகர் டெல்லியில் இருக்கும் 53 பள்ளிவாசல்களில் 1) புகழ்பெற்ற செங்கோட் டையில் உள்ளது. 2) ஒரு பள்ளிவாசல் டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் அருகில் உள்ள சாலையில் இருக்கிறது. 3) சஃப்தர்ஜங் அருகே ஒரு பள்ளிவாசல், 4) லோடி பூங்காவின் அருகே உள்ள ஒரு பள்ளிவாசல், 5) குதூப்மினார் வளாகத்தில் ஒரு பள்ளிவாசல், 6) டெல்லி பழைய கோட்டையின் எதிரில் உள்ள கைருல் மன்ஜிலில் ஒரு பள்ளிவாசல், 7) டெல்லி கோல்ஃப் கிளப் மைனத்தின் உட்புறத்தில் உள்ள பள்ளிவாசல் 8) யமுனை நதிக்கரையில் வஜீராபாத் பாலத்தின் அருகில் உள்ள ஒரு பள்ளிவாசல்
லி என பல பள்ளிவாசல்களை முஸ்லிம் கள் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. காரணம் அவை வரலாற்று சிறப்புமிக்க பள்ளிவாசல்களாம். அதனால் மத்திய அரசின் கீழ்வரும் இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தின் பராமரிப்பின் கீழ் வருகிறதாம். அதனால் தொழ அனுமதியில்லையாம்.
பள்ளிவாசல்களின் நோக்கம் தொழுகைக்காகவே. எந்தவித வரலாற்றுக் காரணங் களுக்காகவும் கட்டப்படவில்லை. முஸ்லிம்கள் எங்கும் எப்போதும் எந்த நேரத்திலும் தொழுவதற்காகவே பள்ளிவாசல்கள் நிர்மானிக்கப்பட்டுள்ளன.
புனித மக்காவின் மஸ்ஜிதில் வணக்க வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அவையும் வரலாற்று சிறப்புமிக்க பள்ளிவாசல்தான்.
கொள்ளை அழகு கொண்ட பள்ளி வாசலாக இருக்கட்டும். மிகப்பழமையான பள்ளிவாசலாக இருக்கட்டும். எத்தனை வரலாற்று சிறப்புமிக்க பள்ளிவாசல்களாக இருக்கட்டும். அவைகளைப் பராமரிக்கும் உரிமையும் தகுதியும் முஸ்லிம்களுக்கே உண்டு என்றும் குறிப்பிடும் சமுதாயப் பிரமுகர்கள் முஸ்லிம்களால் நிர்வகிக்கப் படும் எல்லா பள்ளி வாசல்களும் சிறந்த முறையில் பராமரிக்கப்படுகின்றன. ஆனால் இந்தியத் தொல்பொருள் துறையினால் பராமரிக்கப்படும் எண்ணற்ற பள்ளிவாசல்கள் மிகவும் சிதிலமடைந்த நிலையிலேயே உள்ளன.
டெல்லியின் பெரோஷா கோட்லா மைதானத்தின் அருகிலிருக்கும் பள்ளிவாசலில் தொழுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
பாவம் போனால் போகிறது என்று பெருநாள் தொழுகைகளுக்கு மட்டும் இங்கு அனுமதி வழங்கியுள்ளார்கள்.
தங்கள் முன்னோர்கள் கட்டிய இறையில்லங்களில் நுழையவே முடியாமல் தவிக் கும் மக்களின் நிலை வேதனைக்குரியதல்லவா?
அதிகார வர்க்கத்திற்கும் முஸ்லிம் களுக்கும் இடையில் இதுகுறித்து ஒரு முடிவு றாத போர் தொடர்ந்து நடந்து வருகிறது.
டெல்லி வாழ் முஸ்லிம்கள் சஃப்தர்ஜங் மஸ்ஜிதில் தொழ அனுமதிக்க வேண்டும் என்று 80களில் பெரும் போராட்டங்களை நடத்தினார்கள்.
லோடி பூங்காவில் உள்ள பள்ளி வாசலை மக்களுக்கு தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும் என்று பெரும் ஆர்ப்பாட்டங்களை மக்கள் நடத்தி னார்கள் இவர்களின் வேண்டுகோள் நிர்தாட்சண்யமாக மறுக்கப்பட்டன. வழிபாட்டுத் தலங்களை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும், இதற்காக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசுவேன் என்றும் டெல்லி சட்டமன்றத்தின் துணை சபாநாயகர் சுஹைப் இக்பால் தெரிவித்திருக்கிறார்.
இந்தப் பிரச்சினையை தீர்க்காமலே காலம் கழித்துவிட மத்திய அரசு நினைக்காது என்று நம்புகிறோம். காரணம் இது நீறு பூத்த நெருப்பு என்பதை முஸ்லிம் சமுதாயம் சுட்டிக்காட்ட விரும்புகிறது.
பள்ளிவாசல்கள் தொழுகையாளிக்கு உரியது. சுற்றுலா செல்லும் சுகவாசி களுக்கு உரியதல்ல. இதைப் புரிந்து கொள்ளவில்லையெனில் அரசியல் சாசனம் வழங்கி யுள்ள வழிபாட்டுரிமைக்கு என்ன பொருள் என்றும் முஸ்லிம் அறிவு ஜீவிகள் வினா விடுத்துள்ளனர்.
முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. அதேவேளை யில் பிற சமுதாயத்தினர் சுற்றுலாப் பயணிகள் என்ற பெயரில் காலணி களுடன் உள்ளே நுழைவது என்ன நியாயம் என்ற குமுறலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவது எவ்விதத்திலும் நியாயமல்ல என்பதே நடு நிலையாளர்களின் கருத்தாக இருக்கிறது. மக்கள் நலன் நாடும் மத்திய அரசு இந்திய முஸ்லிம்களின் பரம்பரை சொத்துக்களான பழமையும் வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த பள்ளிவாசல் களை ஒப்படைக்க ஆவண செய்ய வேண்டும்
அபூசாலிஹ்
இந்தியாவில் வரலாற்றுப் பின்னணியுடைய 600 பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என நாடெங்கும் வாழும் முஸ்லிம்களிடமிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
இந்தியாவில் முகலாயர்கள் ஆண்டபோது கட்டப்பட்ட பள்ளிவாசல்கள் தற்போது மத்திய அரசின் கட்டுப் பாட்டின் கீழ் உள்ளது. இந்தப் பழமையான பள்ளிவாசல் களில் தொழுகையை நடத்தும் உரிமையை உடனடியாக வழங்க வேண்டும் என பலமான கோரிக்கை எழுந்துள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பழமையான 600 பள்ளிவாசல் களில் தலைநகர் டெல்லியில் மட்டும் 53 பள்ளிவாசல்கள் உள்ளன. ஆனால் அங்கெல்லாம் முஸ்லிம்களின் வணக்க வழிபாடு களுக்கு அனுமதி இல்லை. காரணம் இவையெல்லாம் வரலாற்று நினைவுச் சின்னங்கள் என்பதால் இங்கு தொழ அனுமதி இல்லையாம்.
தலைநகர் டெல்லியில் இருக்கும் 53 பள்ளிவாசல்களில் 1) புகழ்பெற்ற செங்கோட் டையில் உள்ளது. 2) ஒரு பள்ளிவாசல் டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் அருகில் உள்ள சாலையில் இருக்கிறது. 3) சஃப்தர்ஜங் அருகே ஒரு பள்ளிவாசல், 4) லோடி பூங்காவின் அருகே உள்ள ஒரு பள்ளிவாசல், 5) குதூப்மினார் வளாகத்தில் ஒரு பள்ளிவாசல், 6) டெல்லி பழைய கோட்டையின் எதிரில் உள்ள கைருல் மன்ஜிலில் ஒரு பள்ளிவாசல், 7) டெல்லி கோல்ஃப் கிளப் மைனத்தின் உட்புறத்தில் உள்ள பள்ளிவாசல் 8) யமுனை நதிக்கரையில் வஜீராபாத் பாலத்தின் அருகில் உள்ள ஒரு பள்ளிவாசல்
லி என பல பள்ளிவாசல்களை முஸ்லிம் கள் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. காரணம் அவை வரலாற்று சிறப்புமிக்க பள்ளிவாசல்களாம். அதனால் மத்திய அரசின் கீழ்வரும் இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தின் பராமரிப்பின் கீழ் வருகிறதாம். அதனால் தொழ அனுமதியில்லையாம்.
பள்ளிவாசல்களின் நோக்கம் தொழுகைக்காகவே. எந்தவித வரலாற்றுக் காரணங் களுக்காகவும் கட்டப்படவில்லை. முஸ்லிம்கள் எங்கும் எப்போதும் எந்த நேரத்திலும் தொழுவதற்காகவே பள்ளிவாசல்கள் நிர்மானிக்கப்பட்டுள்ளன.
புனித மக்காவின் மஸ்ஜிதில் வணக்க வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அவையும் வரலாற்று சிறப்புமிக்க பள்ளிவாசல்தான்.
கொள்ளை அழகு கொண்ட பள்ளி வாசலாக இருக்கட்டும். மிகப்பழமையான பள்ளிவாசலாக இருக்கட்டும். எத்தனை வரலாற்று சிறப்புமிக்க பள்ளிவாசல்களாக இருக்கட்டும். அவைகளைப் பராமரிக்கும் உரிமையும் தகுதியும் முஸ்லிம்களுக்கே உண்டு என்றும் குறிப்பிடும் சமுதாயப் பிரமுகர்கள் முஸ்லிம்களால் நிர்வகிக்கப் படும் எல்லா பள்ளி வாசல்களும் சிறந்த முறையில் பராமரிக்கப்படுகின்றன. ஆனால் இந்தியத் தொல்பொருள் துறையினால் பராமரிக்கப்படும் எண்ணற்ற பள்ளிவாசல்கள் மிகவும் சிதிலமடைந்த நிலையிலேயே உள்ளன.
டெல்லியின் பெரோஷா கோட்லா மைதானத்தின் அருகிலிருக்கும் பள்ளிவாசலில் தொழுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
பாவம் போனால் போகிறது என்று பெருநாள் தொழுகைகளுக்கு மட்டும் இங்கு அனுமதி வழங்கியுள்ளார்கள்.
தங்கள் முன்னோர்கள் கட்டிய இறையில்லங்களில் நுழையவே முடியாமல் தவிக் கும் மக்களின் நிலை வேதனைக்குரியதல்லவா?
அதிகார வர்க்கத்திற்கும் முஸ்லிம் களுக்கும் இடையில் இதுகுறித்து ஒரு முடிவு றாத போர் தொடர்ந்து நடந்து வருகிறது.
டெல்லி வாழ் முஸ்லிம்கள் சஃப்தர்ஜங் மஸ்ஜிதில் தொழ அனுமதிக்க வேண்டும் என்று 80களில் பெரும் போராட்டங்களை நடத்தினார்கள்.
லோடி பூங்காவில் உள்ள பள்ளி வாசலை மக்களுக்கு தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும் என்று பெரும் ஆர்ப்பாட்டங்களை மக்கள் நடத்தி னார்கள் இவர்களின் வேண்டுகோள் நிர்தாட்சண்யமாக மறுக்கப்பட்டன. வழிபாட்டுத் தலங்களை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும், இதற்காக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசுவேன் என்றும் டெல்லி சட்டமன்றத்தின் துணை சபாநாயகர் சுஹைப் இக்பால் தெரிவித்திருக்கிறார்.
இந்தப் பிரச்சினையை தீர்க்காமலே காலம் கழித்துவிட மத்திய அரசு நினைக்காது என்று நம்புகிறோம். காரணம் இது நீறு பூத்த நெருப்பு என்பதை முஸ்லிம் சமுதாயம் சுட்டிக்காட்ட விரும்புகிறது.
பள்ளிவாசல்கள் தொழுகையாளிக்கு உரியது. சுற்றுலா செல்லும் சுகவாசி களுக்கு உரியதல்ல. இதைப் புரிந்து கொள்ளவில்லையெனில் அரசியல் சாசனம் வழங்கி யுள்ள வழிபாட்டுரிமைக்கு என்ன பொருள் என்றும் முஸ்லிம் அறிவு ஜீவிகள் வினா விடுத்துள்ளனர்.
முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. அதேவேளை யில் பிற சமுதாயத்தினர் சுற்றுலாப் பயணிகள் என்ற பெயரில் காலணி களுடன் உள்ளே நுழைவது என்ன நியாயம் என்ற குமுறலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவது எவ்விதத்திலும் நியாயமல்ல என்பதே நடு நிலையாளர்களின் கருத்தாக இருக்கிறது. மக்கள் நலன் நாடும் மத்திய அரசு இந்திய முஸ்லிம்களின் பரம்பரை சொத்துக்களான பழமையும் வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த பள்ளிவாசல் களை ஒப்படைக்க ஆவண செய்ய வேண்டும்
ஏவுகணை தொழில்நுட்பத்தின் தந்தை திப்புசுல்தான்இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டுக்கழகம் பெருமிதம்
இந்திய விடுதலைப் போராட்டத்தில் வீர வரலாறு படைத்தவர் திப்பு சுல்தான். ஆங்கி லேயரை நடுநடுங்க வைத்த அந்த மாவீரன், போர் வியூகத்திலும், படைக்கலத் தயாரிப் பிலும் சிறந்து விளங்கினார்.
226 ஆண்டுகளுக்கு முன்பாகவே ராணுவத் தொழில்நுட்பத்திலும், வல்ல மையிலும் திப்பு சுல்தான் படை சிறந்து விளங்கி ஆங்கி லேயப் படைகளை திணறடித்தது.
மைசூர் சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தில் திப்பு சுல்தானின் கோட்டையும், படைக்கலத் தயாரிப்பு தொழிற்சாலையும் இருந்த அவல நிலை குறித்து உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.
அந்தக் கடிதத்தை இந்திய பாதுபாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டுத்துறை தலைவர் எஸ்.டி. பிள்ளையன் பார்வைக்கு அனுப்பினார் குடியரசுத் தலைவர்.
பிறகென்ன... ஸ்ரீரங்கப்பட்டினத்தில் ராணுவ தொழில்நுட்ப வரலாறு ஒரு புதிய செய்தியை வெளிப்படுத்த காத்துக் கொண்டிருந்த தகவல் உலகுக்குத் தெரிய வந்தது. திப்பு சுல்தான் ராக்கெட் தொழில்நுட்பத்தின் தந்தை என்பதும், ஏவுகணைகளைப் பயன்படுத்தியதில் முன்னோடி எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.
உள்ளூர் மக்களால் புறக்கணிக்கப் பட்ட ஸ்ரீரங்கப்பட்டினத்தில் பழமை வாய்ந்த பகுதிகளில் ராணுவ வரலாற்று ஆராய்ச்சியாளர்களும், இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் ஆய்வுக்காக சுற்றியபோது பல பகுதிகள் இவர்களால் அடையாளம் காணப்பட்டன.
எதிரி முகாம்களை சீர்குலைத்து சின்னாபின்னமாக்கும் வகையில் ஏவுகணை ஏவும் தளங்களை அவர்கள் கண்ணெதிரே கண்டனர்.
இந்திய அரசு, விஞ்ஞானிகளின் சாதனைகளை ஆவணப்படுத்தி அறிஞர் கள் மற்றும் அவர்களின் விஞ்ஞான பாரம்பரியம், அவர்களின் சேவைகள் குறித்தும் ஆய்ந்து வரும் வேளையில் திப்பு சுல்தான் மற்றும் அவர் தந்தையார் ஹைதர் அலியின் நன்கொடைகள் குறித்து சிலாகித்துப் பேசுகிறார் பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மேம்பாட்டு கழகத்தின் முதன்மைக் கண்காணிப்பாள ரான டாக்டர் ஏ.எஸ். சிவதாணு பிள்ளை.
சக்தி வாய்ந்த ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில் நுட்பத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர் திப்புசுல்தான் என்பதை இந்திய விஞ்ஞானிகள் தற்போது அங்கீகரித்துள்ளனர்.
நவீனகால ராணுவ வரலாற்றில் ராக்கெட் படையினை பயன்படுத்தியவர் மைசூர் புலி திப்புசுல்தான் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தி யுள்ளனர். 6000 படை வீரர்களைக் கொண்ட 27 தளபதிகளைக் கொண்ட திப்பு சுல்தானின் முழுமையான ஏவுகணைப் படைப்பிரிவு 1792ல் நிகழ்த்திய சாகசங்கள் பிரிட்டிஷ் படைகளின் பின்னடைவுக்கு காரண மாகிறது. வீரத் திப்புவின் படைகள் பயன் படுத்திய ராக்கெட்டுகள் லண்டன் மாநகரில் உள்ள 'உல் விச்' அருங்காட்சியகத் தில் தற்போது உள்ளது.
ஸ்ரீரங்கப்பட்டினம் நவீனகால ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில் நுட்பத்தின் தொட்டில் எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி பயன்படுத்திய ய2 ராக்கெட்களுக்கு முன்னோடியாக திப்புவின் ராக்கெட் தொழில்நுட்பம் இருந்தது என்றும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
திப்புவின் ராக்கெட் 2.2 கிலோ கிராம் முதல் 5.5 கிலோ கிராம் வரை இருந்தது. ராக்கெட்களை போர்க்களத்தில் பயன்படுத்திய முதல் மாவீரன் திப்பு சுல்தான் என்பதும் உலகிற்கு தெரிவிக்க விரும்புவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
மாவீரன் திப்பு துரோகத்தால் வீழ்ந்த 1799ஆம் ஆண்டுக்குப் பிறகு 700 ராக்கெட்களும், 900 சிறிய வகை ராக்கெட்களும் லண்டன் ராயல் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இரண்டு கிலோ மீட்டர் பாய்ந்து சென்று எதிரிகளின் இலக்குகளைத் தாக்கும் திப்புவின் ஏவுகணைகள் இந்திய ஏவுகணை தொழில்நுட்பத்தையும், வீரத் திப்புவின் போர் நிபுணத்துவத்தையும் விளக்குவண்ணம் உள்ளது.
டாக்டர் பிள்ளை, குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் தலைமையின் கீழ் ராக்கெட் விஞ்ஞானியாய் பணிபுரிந்தவர். விலை மதிப்புமிக்க இந்த வரலாற்றுத் தகவல்களை ஆராய தூண்டுகோலாய் விளங்கிய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு நன்றி கூறிய சிவதாணு பிள்ளை, குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து தங்கள் குழுவின் ஆய்வின் விவரங்களை தெரிவிக்கப் போவதாகக் கூறினார்.
இன்னும் இரண்டொரு மாதத்தில் தனது முழு ஆய்வறிக்கையை பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம் சமர்ப்பிக்கும் என்றும் அறிவித்துள்ளது.
நாஸாவில் கலாம் கண்ட காட்சி
இந்தியாவின் ஏவுகணை தொழில்நுட்ப வளர்ச்சி அணுஆயுத எழுச்சி, ராணுவத் தில் ஏற்பட்ட மறுமலர்ச்சி அத்தனை ஏற்றங்களுக்கும் முக்கியக் காரணமாக விளங்கிய அறிவியல் அறிஞரும் இந்தியக் குடியரசுத் தலைவருமான டாக்டர் அப்துல் கலாம், தனது ஆராய்ச்சிக் பணிக்காலத்தில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸாவிற்குச் சென்றபோது தான் கண்ட காட்சியை நாட்டு மக்களுக்கு தனது 'அக்கினிச் சிறகுகள்' நூலில் விவரித்துள்ளார்.
''எனது பயணத்தின் இறுதிக் கட்டமாக வாலப்ஸ் ஃப்ளைட் ஃபெசிலிட்டி (ரஹப்ப்ர்ல்ள் எப்ண்ஞ்ட்ற் எஹஸ்ரீண்ப்ண்ற்ஹ்) மையத்திற்குச் சென்றேன். இந்த மையம் வர்ஜீனியா மாகாணத்தில் கிழக்குக் கடற்கரைத் தீவான வாலப் ஸில் அமைந்துள்ளது. நாஸாவின் சவுண்டிங் ராக் கெட் திட்டத்திற்கு இந்த மையம்தான் அடித்தளம். இங்கே, வரவேற்புக் கூடத்தில் ஓர் ஓவியம் பிரதானமாகக் காட்சியளித்தது. ஒரு சில ராக்கெட்டுகள் பறந்து கொண்டிருக்கும் பின்னணியுடன் போர்க்களக் காட்சி ஒன்றை ஓவியமாக அங்கே தீட்டியிருந் தார்கள். இந்தக் காட்சியைக் கருவாகக் கொண்ட ஒரு ஓவியம் இப்படிப்பட்ட இடத்தில் இருப்பது ஒன்றும் வியப்பான விஷயம் அல்ல. ஆனால் என் கவனத்தை ஈர்த்தவர்கள், அதில் சித்தரிக்கப்பட்டிருந்த படை வீரர்கள்! ராக்கெட்டுகளை ஏவும் பகுதியில் காணப்பட்ட அவர்கள் வெள்ளை நிறத்தவர்கள் அல்ல. தெற்காசிய மக்களிடம் காணப்படும் உருவ அமைப்புடன் கருப்பு நிறம் கொண்ட படை வீரர்கள், அவர்கள். ஒரு நாள், எனக்குள் ஊற்றெடுத்த ஆர்வம், அந்த ஓவியத்தின் அருகே என்னை இழுத்துச் சென்றது. திப்பு சுல்தானின் படை வெள்ளையர்களுடன் போரிடும் காட்சியை அதில் கண்டேன். திப்பு சுல்தானின் சொந்த தேசத்தில் மறக்கப்பட்டுவிட்ட ஒரு உண் மையை இந்தக் கிரகத்தின் இன்னொரு பகுதியில் நினைவுகூர்ந்து போற்றப் படுவதை அந்தச் சித்திரம் உணர்த்தியது. ராக்கெட் போர்த் தந்திரத்தின் நாயகனாக ஒரு இந்தியனை நாஸா பெருமைப்படுத்தி இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்டேன்.''
சர்வதேச ஏவுகணை தொழில்நுட்ப தந்தையான திப்பு சுல்தானைப் பற்றி நவீன இந்திய ராணுவ தொழில்நுட்ப மேதை டாக்டர் அப்துல் கலாம் குறிப்பிடுவது பொருத்தமானதுதானே?
இந்திய விடுதலைப் போராட்டத்தில் வீர வரலாறு படைத்தவர் திப்பு சுல்தான். ஆங்கி லேயரை நடுநடுங்க வைத்த அந்த மாவீரன், போர் வியூகத்திலும், படைக்கலத் தயாரிப் பிலும் சிறந்து விளங்கினார்.
226 ஆண்டுகளுக்கு முன்பாகவே ராணுவத் தொழில்நுட்பத்திலும், வல்ல மையிலும் திப்பு சுல்தான் படை சிறந்து விளங்கி ஆங்கி லேயப் படைகளை திணறடித்தது.
மைசூர் சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தில் திப்பு சுல்தானின் கோட்டையும், படைக்கலத் தயாரிப்பு தொழிற்சாலையும் இருந்த அவல நிலை குறித்து உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.
அந்தக் கடிதத்தை இந்திய பாதுபாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டுத்துறை தலைவர் எஸ்.டி. பிள்ளையன் பார்வைக்கு அனுப்பினார் குடியரசுத் தலைவர்.
பிறகென்ன... ஸ்ரீரங்கப்பட்டினத்தில் ராணுவ தொழில்நுட்ப வரலாறு ஒரு புதிய செய்தியை வெளிப்படுத்த காத்துக் கொண்டிருந்த தகவல் உலகுக்குத் தெரிய வந்தது. திப்பு சுல்தான் ராக்கெட் தொழில்நுட்பத்தின் தந்தை என்பதும், ஏவுகணைகளைப் பயன்படுத்தியதில் முன்னோடி எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.
உள்ளூர் மக்களால் புறக்கணிக்கப் பட்ட ஸ்ரீரங்கப்பட்டினத்தில் பழமை வாய்ந்த பகுதிகளில் ராணுவ வரலாற்று ஆராய்ச்சியாளர்களும், இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் ஆய்வுக்காக சுற்றியபோது பல பகுதிகள் இவர்களால் அடையாளம் காணப்பட்டன.
எதிரி முகாம்களை சீர்குலைத்து சின்னாபின்னமாக்கும் வகையில் ஏவுகணை ஏவும் தளங்களை அவர்கள் கண்ணெதிரே கண்டனர்.
இந்திய அரசு, விஞ்ஞானிகளின் சாதனைகளை ஆவணப்படுத்தி அறிஞர் கள் மற்றும் அவர்களின் விஞ்ஞான பாரம்பரியம், அவர்களின் சேவைகள் குறித்தும் ஆய்ந்து வரும் வேளையில் திப்பு சுல்தான் மற்றும் அவர் தந்தையார் ஹைதர் அலியின் நன்கொடைகள் குறித்து சிலாகித்துப் பேசுகிறார் பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மேம்பாட்டு கழகத்தின் முதன்மைக் கண்காணிப்பாள ரான டாக்டர் ஏ.எஸ். சிவதாணு பிள்ளை.
சக்தி வாய்ந்த ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில் நுட்பத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர் திப்புசுல்தான் என்பதை இந்திய விஞ்ஞானிகள் தற்போது அங்கீகரித்துள்ளனர்.
நவீனகால ராணுவ வரலாற்றில் ராக்கெட் படையினை பயன்படுத்தியவர் மைசூர் புலி திப்புசுல்தான் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தி யுள்ளனர். 6000 படை வீரர்களைக் கொண்ட 27 தளபதிகளைக் கொண்ட திப்பு சுல்தானின் முழுமையான ஏவுகணைப் படைப்பிரிவு 1792ல் நிகழ்த்திய சாகசங்கள் பிரிட்டிஷ் படைகளின் பின்னடைவுக்கு காரண மாகிறது. வீரத் திப்புவின் படைகள் பயன் படுத்திய ராக்கெட்டுகள் லண்டன் மாநகரில் உள்ள 'உல் விச்' அருங்காட்சியகத் தில் தற்போது உள்ளது.
ஸ்ரீரங்கப்பட்டினம் நவீனகால ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில் நுட்பத்தின் தொட்டில் எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி பயன்படுத்திய ய2 ராக்கெட்களுக்கு முன்னோடியாக திப்புவின் ராக்கெட் தொழில்நுட்பம் இருந்தது என்றும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
திப்புவின் ராக்கெட் 2.2 கிலோ கிராம் முதல் 5.5 கிலோ கிராம் வரை இருந்தது. ராக்கெட்களை போர்க்களத்தில் பயன்படுத்திய முதல் மாவீரன் திப்பு சுல்தான் என்பதும் உலகிற்கு தெரிவிக்க விரும்புவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
மாவீரன் திப்பு துரோகத்தால் வீழ்ந்த 1799ஆம் ஆண்டுக்குப் பிறகு 700 ராக்கெட்களும், 900 சிறிய வகை ராக்கெட்களும் லண்டன் ராயல் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இரண்டு கிலோ மீட்டர் பாய்ந்து சென்று எதிரிகளின் இலக்குகளைத் தாக்கும் திப்புவின் ஏவுகணைகள் இந்திய ஏவுகணை தொழில்நுட்பத்தையும், வீரத் திப்புவின் போர் நிபுணத்துவத்தையும் விளக்குவண்ணம் உள்ளது.
டாக்டர் பிள்ளை, குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் தலைமையின் கீழ் ராக்கெட் விஞ்ஞானியாய் பணிபுரிந்தவர். விலை மதிப்புமிக்க இந்த வரலாற்றுத் தகவல்களை ஆராய தூண்டுகோலாய் விளங்கிய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு நன்றி கூறிய சிவதாணு பிள்ளை, குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து தங்கள் குழுவின் ஆய்வின் விவரங்களை தெரிவிக்கப் போவதாகக் கூறினார்.
இன்னும் இரண்டொரு மாதத்தில் தனது முழு ஆய்வறிக்கையை பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம் சமர்ப்பிக்கும் என்றும் அறிவித்துள்ளது.
நாஸாவில் கலாம் கண்ட காட்சி
இந்தியாவின் ஏவுகணை தொழில்நுட்ப வளர்ச்சி அணுஆயுத எழுச்சி, ராணுவத் தில் ஏற்பட்ட மறுமலர்ச்சி அத்தனை ஏற்றங்களுக்கும் முக்கியக் காரணமாக விளங்கிய அறிவியல் அறிஞரும் இந்தியக் குடியரசுத் தலைவருமான டாக்டர் அப்துல் கலாம், தனது ஆராய்ச்சிக் பணிக்காலத்தில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸாவிற்குச் சென்றபோது தான் கண்ட காட்சியை நாட்டு மக்களுக்கு தனது 'அக்கினிச் சிறகுகள்' நூலில் விவரித்துள்ளார்.
''எனது பயணத்தின் இறுதிக் கட்டமாக வாலப்ஸ் ஃப்ளைட் ஃபெசிலிட்டி (ரஹப்ப்ர்ல்ள் எப்ண்ஞ்ட்ற் எஹஸ்ரீண்ப்ண்ற்ஹ்) மையத்திற்குச் சென்றேன். இந்த மையம் வர்ஜீனியா மாகாணத்தில் கிழக்குக் கடற்கரைத் தீவான வாலப் ஸில் அமைந்துள்ளது. நாஸாவின் சவுண்டிங் ராக் கெட் திட்டத்திற்கு இந்த மையம்தான் அடித்தளம். இங்கே, வரவேற்புக் கூடத்தில் ஓர் ஓவியம் பிரதானமாகக் காட்சியளித்தது. ஒரு சில ராக்கெட்டுகள் பறந்து கொண்டிருக்கும் பின்னணியுடன் போர்க்களக் காட்சி ஒன்றை ஓவியமாக அங்கே தீட்டியிருந் தார்கள். இந்தக் காட்சியைக் கருவாகக் கொண்ட ஒரு ஓவியம் இப்படிப்பட்ட இடத்தில் இருப்பது ஒன்றும் வியப்பான விஷயம் அல்ல. ஆனால் என் கவனத்தை ஈர்த்தவர்கள், அதில் சித்தரிக்கப்பட்டிருந்த படை வீரர்கள்! ராக்கெட்டுகளை ஏவும் பகுதியில் காணப்பட்ட அவர்கள் வெள்ளை நிறத்தவர்கள் அல்ல. தெற்காசிய மக்களிடம் காணப்படும் உருவ அமைப்புடன் கருப்பு நிறம் கொண்ட படை வீரர்கள், அவர்கள். ஒரு நாள், எனக்குள் ஊற்றெடுத்த ஆர்வம், அந்த ஓவியத்தின் அருகே என்னை இழுத்துச் சென்றது. திப்பு சுல்தானின் படை வெள்ளையர்களுடன் போரிடும் காட்சியை அதில் கண்டேன். திப்பு சுல்தானின் சொந்த தேசத்தில் மறக்கப்பட்டுவிட்ட ஒரு உண் மையை இந்தக் கிரகத்தின் இன்னொரு பகுதியில் நினைவுகூர்ந்து போற்றப் படுவதை அந்தச் சித்திரம் உணர்த்தியது. ராக்கெட் போர்த் தந்திரத்தின் நாயகனாக ஒரு இந்தியனை நாஸா பெருமைப்படுத்தி இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்டேன்.''
சர்வதேச ஏவுகணை தொழில்நுட்ப தந்தையான திப்பு சுல்தானைப் பற்றி நவீன இந்திய ராணுவ தொழில்நுட்ப மேதை டாக்டர் அப்துல் கலாம் குறிப்பிடுவது பொருத்தமானதுதானே?
இலங்கை: மூதூர் முஸ்லிம்களின் வேதனைஇடைவிடாத போரினால் இலங்கை துயரத்தில் தத்தளிக்கிறது. அரசுக்கும் விடு தலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெறும் போரில் அப்பாவிகளின் உயிர்ப்பலிகள் தொடருகின்றன. விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையே நடை பெறும் போரில் எந்தவித பகை பரப்பும் முயற்சிகளில் ஈடுபடாத முஸ்லிம்களும் சிக்கிக் கொண்ட சோக நிகழ்வுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் என்ற துறைமுக நகரில் முஸ்லிம் கள் நிறைந்து வாழ்கின்றனர். திரிகோண மலைப் பகுதியில் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் கடும் சண்டை மூண்டுவரும் நிலையில், அப்பாவி முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக் கும் இடையில் நிகழும் கடும் தாக்குதலில் 18 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். 20 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் முஸ்லிம்கள் மூதூரிலிருந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர் என செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது.
இதற்கு அரசு மீது கடுமையாகக் குற்றம்சாட்டுகிறார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம். ஆனால் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து, புலிகளின் மேல் கைகாட்டுகிறது இலங்கை அரசு.
மூதூர் அரபிக் கல்லூரி மீது புலிகள் நடத்திய தாக்குதலில் 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாகவும் 50 பேர் காயமடைந்ததாகவும் இலங்கை ராணுவம் கூறு கிறது. மூதூரின் புறநகர் பகுதியான தொப்பூரில் உள்ள இரண்டு முஸ்லிம் பள்ளிக் கூடங்கள் மீதும் தாக்குதல் நடைபெற்றதாகவும் அதில் ஐவர் கொல்லப் பட்டதாகவும் அது மேலும் கூறியுள்ளது.
இதனிடையே, முஸ்லிம் இளைஞர் 100 பேரை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்று விட்டதாக இலங்கை ராணுவம் வெளியிட்ட தகவல் உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லெபனானிலும் பாலஸ்தீனத்திலும் தொடரும் முஸ்லிம்கள் மீதான படுகொலைகளைப் போல் தெற்காசியாவில் படுபயங்கரமான நிகழ்வாக இது உருவெடுக்கக் கூடுமோ என சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் அஞ்சிய சூழ்நிலையில், இத்தகைய சம்பவம் ஒன்று நடக்கவே இல்லை என விடுதலைப் புலிகள் தங்களின் பிரத்யேக வலைதளத்தில் மறுத்துள்ளனர்.
இதை மூதூர் பகுதியிலிருந்து வெளியேறிவிடும் முஸ்லிம்கள் கந்தாளையை நோக்கி டிரக்குகளிலும், கால்நடையாகவும் சென்று கொண்டிருக்கும் நிலையில், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட தொற்று வியாதியால் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம் தாய்மார்கள் கண்ணீருடன் கதறியபடி இருக்க, முஸ்லிம் முதியவர்கள் குர்ஆனை அணைத்துப் பிடித்தபடி கந்தாளையில் அகதிகளாக வந்தனர். இலங் கையின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் ஏழரை சதவீதத்தினரே உள்ளனர்.
100 அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைதிகளாக விடுதலைப்புலிகள் பிடித்து வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம் குற்றம்சாட்டியுள்ளார். இதையும் புலிகள் மறுத்துள்ளனர்.
புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் நிகழும் யுத்தத்தில் முஸ்லிம்களும் பாதிக்கப் படுகின்றனர்.
எந்தவித தீங்கெண்ணமும் கொண்டு செயல்படாது தங்களது நாட்டின் முன்னேற்ற மற்றும் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்த மென்மையான உள்ளம் கொண்ட இலங்கை முஸ்லிம்கள் தற்போது நடைபெறும் போரில் அகதிகளாக்கப் படுவது வேதனையல்லவா?
செல்லமாக வாழ்ந்த முஸ்லிம் குழந்தைகள் மூதூரிலிருந்து விரட்டப்பட்டு கந்தாளையில் அகதிகளாக துண்டு ரொட்டிக்காக ஏங்கி நின்ற காட்சி ஊடகங்களில் வந்தபோது காண்போர் கண்கள் குளமாகின.
அச்சத்தின் பிடியில் மூதூர் முஸ்லிம்கள்...
மூதூர், கிழக்கு இலங்கையில் திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய மீன்பிடி ஊராகும். திரிகோணமலையிலிருந்து படகில் சவாரி செய்தால் ஒரு மணி நேரத்தில் மூதூர் சென்று சேரலாம். இங்கு வாழும் 60,000 மக்களில் 33,000 பேர் முஸ்லிம்களாவர். 22,000 பேர் தமிழர்கள் ஆவார்கள். மற்றவர்கள் சிங்களம் பேசு வோராவர். ஊரின் மையப் பகுதியில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அதைச் சுற்றி யுள்ள பகுதிகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
விடுதலைப்புலிகள் மூதூரை தாங்கள் அமைக்க விருக்கும் தமிழீழத்தின் தலை நகரான திரிகோணமலையின் நுழைவாயிலாகக் கருதி வருகிறார்கள். முதூரில் முஸ்லிம்களுக்கும் புலிகளுக்கும் இடையே கடந்த காலங்களில் மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன. புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்ட சில மாதங்களுக்குள் மோதல் வெடித்தது. இந்த மோதல் மட்டக்களப்பு வரை பரவியது. இதேபோல் முதூரைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்களை புலிகள் கடத்தி விட்டார்கள் என்ற பிரச்சினையை முன்வைத்து மோதல்கள் நடைபெற்று வந்துள்ளது.
அக்டோபர் 1990ல் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒரு லட்சம் முஸ்லிம்கள் அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். அதுபோன்ற நிலை தங்களுக்கும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் மூதூர் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள்
இலங்கை: மூதூர் முஸ்லிம்களின் வேதனைஇடைவிடாத போரினால் இலங்கை துயரத்தில் தத்தளிக்கிறது. அரசுக்கும் விடு தலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெறும் போரில் அப்பாவிகளின் உயிர்ப்பலிகள் தொடருகின்றன. விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையே நடை பெறும் போரில் எந்தவித பகை பரப்பும் முயற்சிகளில் ஈடுபடாத முஸ்லிம்களும் சிக்கிக் கொண்ட சோக நிகழ்வுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் என்ற துறைமுக நகரில் முஸ்லிம் கள் நிறைந்து வாழ்கின்றனர். திரிகோண மலைப் பகுதியில் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் கடும் சண்டை மூண்டுவரும் நிலையில், அப்பாவி முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக் கும் இடையில் நிகழும் கடும் தாக்குதலில் 18 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். 20 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் முஸ்லிம்கள் மூதூரிலிருந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர் என செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது.
இதற்கு அரசு மீது கடுமையாகக் குற்றம்சாட்டுகிறார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம். ஆனால் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து, புலிகளின் மேல் கைகாட்டுகிறது இலங்கை அரசு.
மூதூர் அரபிக் கல்லூரி மீது புலிகள் நடத்திய தாக்குதலில் 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாகவும் 50 பேர் காயமடைந்ததாகவும் இலங்கை ராணுவம் கூறு கிறது. மூதூரின் புறநகர் பகுதியான தொப்பூரில் உள்ள இரண்டு முஸ்லிம் பள்ளிக் கூடங்கள் மீதும் தாக்குதல் நடைபெற்றதாகவும் அதில் ஐவர் கொல்லப் பட்டதாகவும் அது மேலும் கூறியுள்ளது.
இதனிடையே, முஸ்லிம் இளைஞர் 100 பேரை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்று விட்டதாக இலங்கை ராணுவம் வெளியிட்ட தகவல் உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லெபனானிலும் பாலஸ்தீனத்திலும் தொடரும் முஸ்லிம்கள் மீதான படுகொலைகளைப் போல் தெற்காசியாவில் படுபயங்கரமான நிகழ்வாக இது உருவெடுக்கக் கூடுமோ என சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் அஞ்சிய சூழ்நிலையில், இத்தகைய சம்பவம் ஒன்று நடக்கவே இல்லை என விடுதலைப் புலிகள் தங்களின் பிரத்யேக வலைதளத்தில் மறுத்துள்ளனர்.
இதை மூதூர் பகுதியிலிருந்து வெளியேறிவிடும் முஸ்லிம்கள் கந்தாளையை நோக்கி டிரக்குகளிலும், கால்நடையாகவும் சென்று கொண்டிருக்கும் நிலையில், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட தொற்று வியாதியால் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம் தாய்மார்கள் கண்ணீருடன் கதறியபடி இருக்க, முஸ்லிம் முதியவர்கள் குர்ஆனை அணைத்துப் பிடித்தபடி கந்தாளையில் அகதிகளாக வந்தனர். இலங் கையின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் ஏழரை சதவீதத்தினரே உள்ளனர்.
100 அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைதிகளாக விடுதலைப்புலிகள் பிடித்து வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம் குற்றம்சாட்டியுள்ளார். இதையும் புலிகள் மறுத்துள்ளனர்.
புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் நிகழும் யுத்தத்தில் முஸ்லிம்களும் பாதிக்கப் படுகின்றனர்.
எந்தவித தீங்கெண்ணமும் கொண்டு செயல்படாது தங்களது நாட்டின் முன்னேற்ற மற்றும் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்த மென்மையான உள்ளம் கொண்ட இலங்கை முஸ்லிம்கள் தற்போது நடைபெறும் போரில் அகதிகளாக்கப் படுவது வேதனையல்லவா?
செல்லமாக வாழ்ந்த முஸ்லிம் குழந்தைகள் மூதூரிலிருந்து விரட்டப்பட்டு கந்தாளையில் அகதிகளாக துண்டு ரொட்டிக்காக ஏங்கி நின்ற காட்சி ஊடகங்களில் வந்தபோது காண்போர் கண்கள் குளமாகின.
அச்சத்தின் பிடியில் மூதூர் முஸ்லிம்கள்...
மூதூர், கிழக்கு இலங்கையில் திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய மீன்பிடி ஊராகும். திரிகோணமலையிலிருந்து படகில் சவாரி செய்தால் ஒரு மணி நேரத்தில் மூதூர் சென்று சேரலாம். இங்கு வாழும் 60,000 மக்களில் 33,000 பேர் முஸ்லிம்களாவர். 22,000 பேர் தமிழர்கள் ஆவார்கள். மற்றவர்கள் சிங்களம் பேசு வோராவர். ஊரின் மையப் பகுதியில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அதைச் சுற்றி யுள்ள பகுதிகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
விடுதலைப்புலிகள் மூதூரை தாங்கள் அமைக்க விருக்கும் தமிழீழத்தின் தலை நகரான திரிகோணமலையின் நுழைவாயிலாகக் கருதி வருகிறார்கள். முதூரில் முஸ்லிம்களுக்கும் புலிகளுக்கும் இடையே கடந்த காலங்களில் மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன. புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்ட சில மாதங்களுக்குள் மோதல் வெடித்தது. இந்த மோதல் மட்டக்களப்பு வரை பரவியது. இதேபோல் முதூரைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்களை புலிகள் கடத்தி விட்டார்கள் என்ற பிரச்சினையை முன்வைத்து மோதல்கள் நடைபெற்று வந்துள்ளது.
அக்டோபர் 1990ல் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒரு லட்சம் முஸ்லிம்கள் அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். அதுபோன்ற நிலை தங்களுக்கும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் மூதூர் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள்
இலங்கை: மூதூர் முஸ்லிம்களின் வேதனைஇடைவிடாத போரினால் இலங்கை துயரத்தில் தத்தளிக்கிறது. அரசுக்கும் விடு தலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெறும் போரில் அப்பாவிகளின் உயிர்ப்பலிகள் தொடருகின்றன. விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையே நடை பெறும் போரில் எந்தவித பகை பரப்பும் முயற்சிகளில் ஈடுபடாத முஸ்லிம்களும் சிக்கிக் கொண்ட சோக நிகழ்வுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் என்ற துறைமுக நகரில் முஸ்லிம் கள் நிறைந்து வாழ்கின்றனர். திரிகோண மலைப் பகுதியில் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் கடும் சண்டை மூண்டுவரும் நிலையில், அப்பாவி முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக் கும் இடையில் நிகழும் கடும் தாக்குதலில் 18 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். 20 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் முஸ்லிம்கள் மூதூரிலிருந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர் என செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது.
இதற்கு அரசு மீது கடுமையாகக் குற்றம்சாட்டுகிறார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம். ஆனால் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து, புலிகளின் மேல் கைகாட்டுகிறது இலங்கை அரசு.
மூதூர் அரபிக் கல்லூரி மீது புலிகள் நடத்திய தாக்குதலில் 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாகவும் 50 பேர் காயமடைந்ததாகவும் இலங்கை ராணுவம் கூறு கிறது. மூதூரின் புறநகர் பகுதியான தொப்பூரில் உள்ள இரண்டு முஸ்லிம் பள்ளிக் கூடங்கள் மீதும் தாக்குதல் நடைபெற்றதாகவும் அதில் ஐவர் கொல்லப் பட்டதாகவும் அது மேலும் கூறியுள்ளது.
இதனிடையே, முஸ்லிம் இளைஞர் 100 பேரை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்று விட்டதாக இலங்கை ராணுவம் வெளியிட்ட தகவல் உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லெபனானிலும் பாலஸ்தீனத்திலும் தொடரும் முஸ்லிம்கள் மீதான படுகொலைகளைப் போல் தெற்காசியாவில் படுபயங்கரமான நிகழ்வாக இது உருவெடுக்கக் கூடுமோ என சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் அஞ்சிய சூழ்நிலையில், இத்தகைய சம்பவம் ஒன்று நடக்கவே இல்லை என விடுதலைப் புலிகள் தங்களின் பிரத்யேக வலைதளத்தில் மறுத்துள்ளனர்.
இதை மூதூர் பகுதியிலிருந்து வெளியேறிவிடும் முஸ்லிம்கள் கந்தாளையை நோக்கி டிரக்குகளிலும், கால்நடையாகவும் சென்று கொண்டிருக்கும் நிலையில், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட தொற்று வியாதியால் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம் தாய்மார்கள் கண்ணீருடன் கதறியபடி இருக்க, முஸ்லிம் முதியவர்கள் குர்ஆனை அணைத்துப் பிடித்தபடி கந்தாளையில் அகதிகளாக வந்தனர். இலங் கையின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் ஏழரை சதவீதத்தினரே உள்ளனர்.
100 அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைதிகளாக விடுதலைப்புலிகள் பிடித்து வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம் குற்றம்சாட்டியுள்ளார். இதையும் புலிகள் மறுத்துள்ளனர்.
புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் நிகழும் யுத்தத்தில் முஸ்லிம்களும் பாதிக்கப் படுகின்றனர்.
எந்தவித தீங்கெண்ணமும் கொண்டு செயல்படாது தங்களது நாட்டின் முன்னேற்ற மற்றும் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்த மென்மையான உள்ளம் கொண்ட இலங்கை முஸ்லிம்கள் தற்போது நடைபெறும் போரில் அகதிகளாக்கப் படுவது வேதனையல்லவா?
செல்லமாக வாழ்ந்த முஸ்லிம் குழந்தைகள் மூதூரிலிருந்து விரட்டப்பட்டு கந்தாளையில் அகதிகளாக துண்டு ரொட்டிக்காக ஏங்கி நின்ற காட்சி ஊடகங்களில் வந்தபோது காண்போர் கண்கள் குளமாகின.
அச்சத்தின் பிடியில் மூதூர் முஸ்லிம்கள்...
மூதூர், கிழக்கு இலங்கையில் திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய மீன்பிடி ஊராகும். திரிகோணமலையிலிருந்து படகில் சவாரி செய்தால் ஒரு மணி நேரத்தில் மூதூர் சென்று சேரலாம். இங்கு வாழும் 60,000 மக்களில் 33,000 பேர் முஸ்லிம்களாவர். 22,000 பேர் தமிழர்கள் ஆவார்கள். மற்றவர்கள் சிங்களம் பேசு வோராவர். ஊரின் மையப் பகுதியில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அதைச் சுற்றி யுள்ள பகுதிகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
விடுதலைப்புலிகள் மூதூரை தாங்கள் அமைக்க விருக்கும் தமிழீழத்தின் தலை நகரான திரிகோணமலையின் நுழைவாயிலாகக் கருதி வருகிறார்கள். முதூரில் முஸ்லிம்களுக்கும் புலிகளுக்கும் இடையே கடந்த காலங்களில் மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன. புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்ட சில மாதங்களுக்குள் மோதல் வெடித்தது. இந்த மோதல் மட்டக்களப்பு வரை பரவியது. இதேபோல் முதூரைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்களை புலிகள் கடத்தி விட்டார்கள் என்ற பிரச்சினையை முன்வைத்து மோதல்கள் நடைபெற்று வந்துள்ளது.
அக்டோபர் 1990ல் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒரு லட்சம் முஸ்லிம்கள் அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். அதுபோன்ற நிலை தங்களுக்கும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் மூதூர் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள்
இலங்கை: மூதூர் முஸ்லிம்களின் வேதனைஇடைவிடாத போரினால் இலங்கை துயரத்தில் தத்தளிக்கிறது. அரசுக்கும் விடு தலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெறும் போரில் அப்பாவிகளின் உயிர்ப்பலிகள் தொடருகின்றன. விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையே நடை பெறும் போரில் எந்தவித பகை பரப்பும் முயற்சிகளில் ஈடுபடாத முஸ்லிம்களும் சிக்கிக் கொண்ட சோக நிகழ்வுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் என்ற துறைமுக நகரில் முஸ்லிம் கள் நிறைந்து வாழ்கின்றனர். திரிகோண மலைப் பகுதியில் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் கடும் சண்டை மூண்டுவரும் நிலையில், அப்பாவி முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக் கும் இடையில் நிகழும் கடும் தாக்குதலில் 18 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். 20 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் முஸ்லிம்கள் மூதூரிலிருந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர் என செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது.
இதற்கு அரசு மீது கடுமையாகக் குற்றம்சாட்டுகிறார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம். ஆனால் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து, புலிகளின் மேல் கைகாட்டுகிறது இலங்கை அரசு.
மூதூர் அரபிக் கல்லூரி மீது புலிகள் நடத்திய தாக்குதலில் 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாகவும் 50 பேர் காயமடைந்ததாகவும் இலங்கை ராணுவம் கூறு கிறது. மூதூரின் புறநகர் பகுதியான தொப்பூரில் உள்ள இரண்டு முஸ்லிம் பள்ளிக் கூடங்கள் மீதும் தாக்குதல் நடைபெற்றதாகவும் அதில் ஐவர் கொல்லப் பட்டதாகவும் அது மேலும் கூறியுள்ளது.
இதனிடையே, முஸ்லிம் இளைஞர் 100 பேரை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்று விட்டதாக இலங்கை ராணுவம் வெளியிட்ட தகவல் உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லெபனானிலும் பாலஸ்தீனத்திலும் தொடரும் முஸ்லிம்கள் மீதான படுகொலைகளைப் போல் தெற்காசியாவில் படுபயங்கரமான நிகழ்வாக இது உருவெடுக்கக் கூடுமோ என சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் அஞ்சிய சூழ்நிலையில், இத்தகைய சம்பவம் ஒன்று நடக்கவே இல்லை என விடுதலைப் புலிகள் தங்களின் பிரத்யேக வலைதளத்தில் மறுத்துள்ளனர்.
இதை மூதூர் பகுதியிலிருந்து வெளியேறிவிடும் முஸ்லிம்கள் கந்தாளையை நோக்கி டிரக்குகளிலும், கால்நடையாகவும் சென்று கொண்டிருக்கும் நிலையில், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட தொற்று வியாதியால் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம் தாய்மார்கள் கண்ணீருடன் கதறியபடி இருக்க, முஸ்லிம் முதியவர்கள் குர்ஆனை அணைத்துப் பிடித்தபடி கந்தாளையில் அகதிகளாக வந்தனர். இலங் கையின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் ஏழரை சதவீதத்தினரே உள்ளனர்.
100 அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைதிகளாக விடுதலைப்புலிகள் பிடித்து வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம் குற்றம்சாட்டியுள்ளார். இதையும் புலிகள் மறுத்துள்ளனர்.
புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் நிகழும் யுத்தத்தில் முஸ்லிம்களும் பாதிக்கப் படுகின்றனர்.
எந்தவித தீங்கெண்ணமும் கொண்டு செயல்படாது தங்களது நாட்டின் முன்னேற்ற மற்றும் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்த மென்மையான உள்ளம் கொண்ட இலங்கை முஸ்லிம்கள் தற்போது நடைபெறும் போரில் அகதிகளாக்கப் படுவது வேதனையல்லவா?
செல்லமாக வாழ்ந்த முஸ்லிம் குழந்தைகள் மூதூரிலிருந்து விரட்டப்பட்டு கந்தாளையில் அகதிகளாக துண்டு ரொட்டிக்காக ஏங்கி நின்ற காட்சி ஊடகங்களில் வந்தபோது காண்போர் கண்கள் குளமாகின.
அச்சத்தின் பிடியில் மூதூர் முஸ்லிம்கள்...
மூதூர், கிழக்கு இலங்கையில் திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய மீன்பிடி ஊராகும். திரிகோணமலையிலிருந்து படகில் சவாரி செய்தால் ஒரு மணி நேரத்தில் மூதூர் சென்று சேரலாம். இங்கு வாழும் 60,000 மக்களில் 33,000 பேர் முஸ்லிம்களாவர். 22,000 பேர் தமிழர்கள் ஆவார்கள். மற்றவர்கள் சிங்களம் பேசு வோராவர். ஊரின் மையப் பகுதியில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அதைச் சுற்றி யுள்ள பகுதிகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
விடுதலைப்புலிகள் மூதூரை தாங்கள் அமைக்க விருக்கும் தமிழீழத்தின் தலை நகரான திரிகோணமலையின் நுழைவாயிலாகக் கருதி வருகிறார்கள். முதூரில் முஸ்லிம்களுக்கும் புலிகளுக்கும் இடையே கடந்த காலங்களில் மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன. புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்ட சில மாதங்களுக்குள் மோதல் வெடித்தது. இந்த மோதல் மட்டக்களப்பு வரை பரவியது. இதேபோல் முதூரைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்களை புலிகள் கடத்தி விட்டார்கள் என்ற பிரச்சினையை முன்வைத்து மோதல்கள் நடைபெற்று வந்துள்ளது.
அக்டோபர் 1990ல் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒரு லட்சம் முஸ்லிம்கள் அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். அதுபோன்ற நிலை தங்களுக்கும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் மூதூர் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள்
இலங்கை: மூதூர் முஸ்லிம்களின் வேதனைஇடைவிடாத போரினால் இலங்கை துயரத்தில் தத்தளிக்கிறது. அரசுக்கும் விடு தலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெறும் போரில் அப்பாவிகளின் உயிர்ப்பலிகள் தொடருகின்றன. விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையே நடை பெறும் போரில் எந்தவித பகை பரப்பும் முயற்சிகளில் ஈடுபடாத முஸ்லிம்களும் சிக்கிக் கொண்ட சோக நிகழ்வுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் என்ற துறைமுக நகரில் முஸ்லிம் கள் நிறைந்து வாழ்கின்றனர். திரிகோண மலைப் பகுதியில் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் கடும் சண்டை மூண்டுவரும் நிலையில், அப்பாவி முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக் கும் இடையில் நிகழும் கடும் தாக்குதலில் 18 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். 20 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் முஸ்லிம்கள் மூதூரிலிருந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர் என செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது.
இதற்கு அரசு மீது கடுமையாகக் குற்றம்சாட்டுகிறார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம். ஆனால் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து, புலிகளின் மேல் கைகாட்டுகிறது இலங்கை அரசு.
மூதூர் அரபிக் கல்லூரி மீது புலிகள் நடத்திய தாக்குதலில் 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாகவும் 50 பேர் காயமடைந்ததாகவும் இலங்கை ராணுவம் கூறு கிறது. மூதூரின் புறநகர் பகுதியான தொப்பூரில் உள்ள இரண்டு முஸ்லிம் பள்ளிக் கூடங்கள் மீதும் தாக்குதல் நடைபெற்றதாகவும் அதில் ஐவர் கொல்லப் பட்டதாகவும் அது மேலும் கூறியுள்ளது.
இதனிடையே, முஸ்லிம் இளைஞர் 100 பேரை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்று விட்டதாக இலங்கை ராணுவம் வெளியிட்ட தகவல் உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லெபனானிலும் பாலஸ்தீனத்திலும் தொடரும் முஸ்லிம்கள் மீதான படுகொலைகளைப் போல் தெற்காசியாவில் படுபயங்கரமான நிகழ்வாக இது உருவெடுக்கக் கூடுமோ என சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் அஞ்சிய சூழ்நிலையில், இத்தகைய சம்பவம் ஒன்று நடக்கவே இல்லை என விடுதலைப் புலிகள் தங்களின் பிரத்யேக வலைதளத்தில் மறுத்துள்ளனர்.
இதை மூதூர் பகுதியிலிருந்து வெளியேறிவிடும் முஸ்லிம்கள் கந்தாளையை நோக்கி டிரக்குகளிலும், கால்நடையாகவும் சென்று கொண்டிருக்கும் நிலையில், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட தொற்று வியாதியால் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம் தாய்மார்கள் கண்ணீருடன் கதறியபடி இருக்க, முஸ்லிம் முதியவர்கள் குர்ஆனை அணைத்துப் பிடித்தபடி கந்தாளையில் அகதிகளாக வந்தனர். இலங் கையின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் ஏழரை சதவீதத்தினரே உள்ளனர்.
100 அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைதிகளாக விடுதலைப்புலிகள் பிடித்து வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம் குற்றம்சாட்டியுள்ளார். இதையும் புலிகள் மறுத்துள்ளனர்.
புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் நிகழும் யுத்தத்தில் முஸ்லிம்களும் பாதிக்கப் படுகின்றனர்.
எந்தவித தீங்கெண்ணமும் கொண்டு செயல்படாது தங்களது நாட்டின் முன்னேற்ற மற்றும் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்த மென்மையான உள்ளம் கொண்ட இலங்கை முஸ்லிம்கள் தற்போது நடைபெறும் போரில் அகதிகளாக்கப் படுவது வேதனையல்லவா?
செல்லமாக வாழ்ந்த முஸ்லிம் குழந்தைகள் மூதூரிலிருந்து விரட்டப்பட்டு கந்தாளையில் அகதிகளாக துண்டு ரொட்டிக்காக ஏங்கி நின்ற காட்சி ஊடகங்களில் வந்தபோது காண்போர் கண்கள் குளமாகின.
அச்சத்தின் பிடியில் மூதூர் முஸ்லிம்கள்...
மூதூர், கிழக்கு இலங்கையில் திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய மீன்பிடி ஊராகும். திரிகோணமலையிலிருந்து படகில் சவாரி செய்தால் ஒரு மணி நேரத்தில் மூதூர் சென்று சேரலாம். இங்கு வாழும் 60,000 மக்களில் 33,000 பேர் முஸ்லிம்களாவர். 22,000 பேர் தமிழர்கள் ஆவார்கள். மற்றவர்கள் சிங்களம் பேசு வோராவர். ஊரின் மையப் பகுதியில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அதைச் சுற்றி யுள்ள பகுதிகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
விடுதலைப்புலிகள் மூதூரை தாங்கள் அமைக்க விருக்கும் தமிழீழத்தின் தலை நகரான திரிகோணமலையின் நுழைவாயிலாகக் கருதி வருகிறார்கள். முதூரில் முஸ்லிம்களுக்கும் புலிகளுக்கும் இடையே கடந்த காலங்களில் மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன. புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்ட சில மாதங்களுக்குள் மோதல் வெடித்தது. இந்த மோதல் மட்டக்களப்பு வரை பரவியது. இதேபோல் முதூரைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்களை புலிகள் கடத்தி விட்டார்கள் என்ற பிரச்சினையை முன்வைத்து மோதல்கள் நடைபெற்று வந்துள்ளது.
அக்டோபர் 1990ல் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒரு லட்சம் முஸ்லிம்கள் அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். அதுபோன்ற நிலை தங்களுக்கும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் மூதூர் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள்
திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் என்ற துறைமுக நகரில் முஸ்லிம் கள் நிறைந்து வாழ்கின்றனர். திரிகோண மலைப் பகுதியில் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் கடும் சண்டை மூண்டுவரும் நிலையில், அப்பாவி முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக் கும் இடையில் நிகழும் கடும் தாக்குதலில் 18 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். 20 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் முஸ்லிம்கள் மூதூரிலிருந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர் என செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது.
இதற்கு அரசு மீது கடுமையாகக் குற்றம்சாட்டுகிறார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம். ஆனால் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து, புலிகளின் மேல் கைகாட்டுகிறது இலங்கை அரசு.
மூதூர் அரபிக் கல்லூரி மீது புலிகள் நடத்திய தாக்குதலில் 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாகவும் 50 பேர் காயமடைந்ததாகவும் இலங்கை ராணுவம் கூறு கிறது. மூதூரின் புறநகர் பகுதியான தொப்பூரில் உள்ள இரண்டு முஸ்லிம் பள்ளிக் கூடங்கள் மீதும் தாக்குதல் நடைபெற்றதாகவும் அதில் ஐவர் கொல்லப் பட்டதாகவும் அது மேலும் கூறியுள்ளது.
இதனிடையே, முஸ்லிம் இளைஞர் 100 பேரை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்று விட்டதாக இலங்கை ராணுவம் வெளியிட்ட தகவல் உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லெபனானிலும் பாலஸ்தீனத்திலும் தொடரும் முஸ்லிம்கள் மீதான படுகொலைகளைப் போல் தெற்காசியாவில் படுபயங்கரமான நிகழ்வாக இது உருவெடுக்கக் கூடுமோ என சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் அஞ்சிய சூழ்நிலையில், இத்தகைய சம்பவம் ஒன்று நடக்கவே இல்லை என விடுதலைப் புலிகள் தங்களின் பிரத்யேக வலைதளத்தில் மறுத்துள்ளனர்.
இதை மூதூர் பகுதியிலிருந்து வெளியேறிவிடும் முஸ்லிம்கள் கந்தாளையை நோக்கி டிரக்குகளிலும், கால்நடையாகவும் சென்று கொண்டிருக்கும் நிலையில், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட தொற்று வியாதியால் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம் தாய்மார்கள் கண்ணீருடன் கதறியபடி இருக்க, முஸ்லிம் முதியவர்கள் குர்ஆனை அணைத்துப் பிடித்தபடி கந்தாளையில் அகதிகளாக வந்தனர். இலங் கையின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் ஏழரை சதவீதத்தினரே உள்ளனர்.
100 அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைதிகளாக விடுதலைப்புலிகள் பிடித்து வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம் குற்றம்சாட்டியுள்ளார். இதையும் புலிகள் மறுத்துள்ளனர்.
புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் நிகழும் யுத்தத்தில் முஸ்லிம்களும் பாதிக்கப் படுகின்றனர்.
எந்தவித தீங்கெண்ணமும் கொண்டு செயல்படாது தங்களது நாட்டின் முன்னேற்ற மற்றும் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்த மென்மையான உள்ளம் கொண்ட இலங்கை முஸ்லிம்கள் தற்போது நடைபெறும் போரில் அகதிகளாக்கப் படுவது வேதனையல்லவா?
செல்லமாக வாழ்ந்த முஸ்லிம் குழந்தைகள் மூதூரிலிருந்து விரட்டப்பட்டு கந்தாளையில் அகதிகளாக துண்டு ரொட்டிக்காக ஏங்கி நின்ற காட்சி ஊடகங்களில் வந்தபோது காண்போர் கண்கள் குளமாகின.
அச்சத்தின் பிடியில் மூதூர் முஸ்லிம்கள்...
மூதூர், கிழக்கு இலங்கையில் திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய மீன்பிடி ஊராகும். திரிகோணமலையிலிருந்து படகில் சவாரி செய்தால் ஒரு மணி நேரத்தில் மூதூர் சென்று சேரலாம். இங்கு வாழும் 60,000 மக்களில் 33,000 பேர் முஸ்லிம்களாவர். 22,000 பேர் தமிழர்கள் ஆவார்கள். மற்றவர்கள் சிங்களம் பேசு வோராவர். ஊரின் மையப் பகுதியில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அதைச் சுற்றி யுள்ள பகுதிகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
விடுதலைப்புலிகள் மூதூரை தாங்கள் அமைக்க விருக்கும் தமிழீழத்தின் தலை நகரான திரிகோணமலையின் நுழைவாயிலாகக் கருதி வருகிறார்கள். முதூரில் முஸ்லிம்களுக்கும் புலிகளுக்கும் இடையே கடந்த காலங்களில் மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன. புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்ட சில மாதங்களுக்குள் மோதல் வெடித்தது. இந்த மோதல் மட்டக்களப்பு வரை பரவியது. இதேபோல் முதூரைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்களை புலிகள் கடத்தி விட்டார்கள் என்ற பிரச்சினையை முன்வைத்து மோதல்கள் நடைபெற்று வந்துள்ளது.
அக்டோபர் 1990ல் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒரு லட்சம் முஸ்லிம்கள் அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். அதுபோன்ற நிலை தங்களுக்கும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் மூதூர் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள்
இலங்கை: மூதூர் முஸ்லிம்களின் வேதனைஇடைவிடாத போரினால் இலங்கை துயரத்தில் தத்தளிக்கிறது. அரசுக்கும் விடு தலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெறும் போரில் அப்பாவிகளின் உயிர்ப்பலிகள் தொடருகின்றன. விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையே நடை பெறும் போரில் எந்தவித பகை பரப்பும் முயற்சிகளில் ஈடுபடாத முஸ்லிம்களும் சிக்கிக் கொண்ட சோக நிகழ்வுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் என்ற துறைமுக நகரில் முஸ்லிம் கள் நிறைந்து வாழ்கின்றனர். திரிகோண மலைப் பகுதியில் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் கடும் சண்டை மூண்டுவரும் நிலையில், அப்பாவி முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக் கும் இடையில் நிகழும் கடும் தாக்குதலில் 18 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். 20 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் முஸ்லிம்கள் மூதூரிலிருந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர் என செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது.
இதற்கு அரசு மீது கடுமையாகக் குற்றம்சாட்டுகிறார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம். ஆனால் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து, புலிகளின் மேல் கைகாட்டுகிறது இலங்கை அரசு.
மூதூர் அரபிக் கல்லூரி மீது புலிகள் நடத்திய தாக்குதலில் 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாகவும் 50 பேர் காயமடைந்ததாகவும் இலங்கை ராணுவம் கூறு கிறது. மூதூரின் புறநகர் பகுதியான தொப்பூரில் உள்ள இரண்டு முஸ்லிம் பள்ளிக் கூடங்கள் மீதும் தாக்குதல் நடைபெற்றதாகவும் அதில் ஐவர் கொல்லப் பட்டதாகவும் அது மேலும் கூறியுள்ளது.
இதனிடையே, முஸ்லிம் இளைஞர் 100 பேரை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்று விட்டதாக இலங்கை ராணுவம் வெளியிட்ட தகவல் உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லெபனானிலும் பாலஸ்தீனத்திலும் தொடரும் முஸ்லிம்கள் மீதான படுகொலைகளைப் போல் தெற்காசியாவில் படுபயங்கரமான நிகழ்வாக இது உருவெடுக்கக் கூடுமோ என சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் அஞ்சிய சூழ்நிலையில், இத்தகைய சம்பவம் ஒன்று நடக்கவே இல்லை என விடுதலைப் புலிகள் தங்களின் பிரத்யேக வலைதளத்தில் மறுத்துள்ளனர்.
இதை மூதூர் பகுதியிலிருந்து வெளியேறிவிடும் முஸ்லிம்கள் கந்தாளையை நோக்கி டிரக்குகளிலும், கால்நடையாகவும் சென்று கொண்டிருக்கும் நிலையில், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட தொற்று வியாதியால் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம் தாய்மார்கள் கண்ணீருடன் கதறியபடி இருக்க, முஸ்லிம் முதியவர்கள் குர்ஆனை அணைத்துப் பிடித்தபடி கந்தாளையில் அகதிகளாக வந்தனர். இலங் கையின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் ஏழரை சதவீதத்தினரே உள்ளனர்.
100 அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைதிகளாக விடுதலைப்புலிகள் பிடித்து வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம் குற்றம்சாட்டியுள்ளார். இதையும் புலிகள் மறுத்துள்ளனர்.
புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் நிகழும் யுத்தத்தில் முஸ்லிம்களும் பாதிக்கப் படுகின்றனர்.
எந்தவித தீங்கெண்ணமும் கொண்டு செயல்படாது தங்களது நாட்டின் முன்னேற்ற மற்றும் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்த மென்மையான உள்ளம் கொண்ட இலங்கை முஸ்லிம்கள் தற்போது நடைபெறும் போரில் அகதிகளாக்கப் படுவது வேதனையல்லவா?
செல்லமாக வாழ்ந்த முஸ்லிம் குழந்தைகள் மூதூரிலிருந்து விரட்டப்பட்டு கந்தாளையில் அகதிகளாக துண்டு ரொட்டிக்காக ஏங்கி நின்ற காட்சி ஊடகங்களில் வந்தபோது காண்போர் கண்கள் குளமாகின.
அச்சத்தின் பிடியில் மூதூர் முஸ்லிம்கள்...
மூதூர், கிழக்கு இலங்கையில் திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய மீன்பிடி ஊராகும். திரிகோணமலையிலிருந்து படகில் சவாரி செய்தால் ஒரு மணி நேரத்தில் மூதூர் சென்று சேரலாம். இங்கு வாழும் 60,000 மக்களில் 33,000 பேர் முஸ்லிம்களாவர். 22,000 பேர் தமிழர்கள் ஆவார்கள். மற்றவர்கள் சிங்களம் பேசு வோராவர். ஊரின் மையப் பகுதியில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அதைச் சுற்றி யுள்ள பகுதிகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
விடுதலைப்புலிகள் மூதூரை தாங்கள் அமைக்க விருக்கும் தமிழீழத்தின் தலை நகரான திரிகோணமலையின் நுழைவாயிலாகக் கருதி வருகிறார்கள். முதூரில் முஸ்லிம்களுக்கும் புலிகளுக்கும் இடையே கடந்த காலங்களில் மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன. புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்ட சில மாதங்களுக்குள் மோதல் வெடித்தது. இந்த மோதல் மட்டக்களப்பு வரை பரவியது. இதேபோல் முதூரைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்களை புலிகள் கடத்தி விட்டார்கள் என்ற பிரச்சினையை முன்வைத்து மோதல்கள் நடைபெற்று வந்துள்ளது.
அக்டோபர் 1990ல் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒரு லட்சம் முஸ்லிம்கள் அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். அதுபோன்ற நிலை தங்களுக்கும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் மூதூர் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள்
இலங்கை: மூதூர் முஸ்லிம்களின் வேதனைஇடைவிடாத போரினால் இலங்கை துயரத்தில் தத்தளிக்கிறது. அரசுக்கும் விடு தலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெறும் போரில் அப்பாவிகளின் உயிர்ப்பலிகள் தொடருகின்றன. விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையே நடை பெறும் போரில் எந்தவித பகை பரப்பும் முயற்சிகளில் ஈடுபடாத முஸ்லிம்களும் சிக்கிக் கொண்ட சோக நிகழ்வுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் என்ற துறைமுக நகரில் முஸ்லிம் கள் நிறைந்து வாழ்கின்றனர். திரிகோண மலைப் பகுதியில் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் கடும் சண்டை மூண்டுவரும் நிலையில், அப்பாவி முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக் கும் இடையில் நிகழும் கடும் தாக்குதலில் 18 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். 20 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் முஸ்லிம்கள் மூதூரிலிருந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர் என செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது.
இதற்கு அரசு மீது கடுமையாகக் குற்றம்சாட்டுகிறார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம். ஆனால் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து, புலிகளின் மேல் கைகாட்டுகிறது இலங்கை அரசு.
மூதூர் அரபிக் கல்லூரி மீது புலிகள் நடத்திய தாக்குதலில் 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாகவும் 50 பேர் காயமடைந்ததாகவும் இலங்கை ராணுவம் கூறு கிறது. மூதூரின் புறநகர் பகுதியான தொப்பூரில் உள்ள இரண்டு முஸ்லிம் பள்ளிக் கூடங்கள் மீதும் தாக்குதல் நடைபெற்றதாகவும் அதில் ஐவர் கொல்லப் பட்டதாகவும் அது மேலும் கூறியுள்ளது.
இதனிடையே, முஸ்லிம் இளைஞர் 100 பேரை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்று விட்டதாக இலங்கை ராணுவம் வெளியிட்ட தகவல் உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லெபனானிலும் பாலஸ்தீனத்திலும் தொடரும் முஸ்லிம்கள் மீதான படுகொலைகளைப் போல் தெற்காசியாவில் படுபயங்கரமான நிகழ்வாக இது உருவெடுக்கக் கூடுமோ என சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் அஞ்சிய சூழ்நிலையில், இத்தகைய சம்பவம் ஒன்று நடக்கவே இல்லை என விடுதலைப் புலிகள் தங்களின் பிரத்யேக வலைதளத்தில் மறுத்துள்ளனர்.
இதை மூதூர் பகுதியிலிருந்து வெளியேறிவிடும் முஸ்லிம்கள் கந்தாளையை நோக்கி டிரக்குகளிலும், கால்நடையாகவும் சென்று கொண்டிருக்கும் நிலையில், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட தொற்று வியாதியால் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம் தாய்மார்கள் கண்ணீருடன் கதறியபடி இருக்க, முஸ்லிம் முதியவர்கள் குர்ஆனை அணைத்துப் பிடித்தபடி கந்தாளையில் அகதிகளாக வந்தனர். இலங் கையின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் ஏழரை சதவீதத்தினரே உள்ளனர்.
100 அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைதிகளாக விடுதலைப்புலிகள் பிடித்து வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம் குற்றம்சாட்டியுள்ளார். இதையும் புலிகள் மறுத்துள்ளனர்.
புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் நிகழும் யுத்தத்தில் முஸ்லிம்களும் பாதிக்கப் படுகின்றனர்.
எந்தவித தீங்கெண்ணமும் கொண்டு செயல்படாது தங்களது நாட்டின் முன்னேற்ற மற்றும் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்த மென்மையான உள்ளம் கொண்ட இலங்கை முஸ்லிம்கள் தற்போது நடைபெறும் போரில் அகதிகளாக்கப் படுவது வேதனையல்லவா?
செல்லமாக வாழ்ந்த முஸ்லிம் குழந்தைகள் மூதூரிலிருந்து விரட்டப்பட்டு கந்தாளையில் அகதிகளாக துண்டு ரொட்டிக்காக ஏங்கி நின்ற காட்சி ஊடகங்களில் வந்தபோது காண்போர் கண்கள் குளமாகின.
அச்சத்தின் பிடியில் மூதூர் முஸ்லிம்கள்...
மூதூர், கிழக்கு இலங்கையில் திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய மீன்பிடி ஊராகும். திரிகோணமலையிலிருந்து படகில் சவாரி செய்தால் ஒரு மணி நேரத்தில் மூதூர் சென்று சேரலாம். இங்கு வாழும் 60,000 மக்களில் 33,000 பேர் முஸ்லிம்களாவர். 22,000 பேர் தமிழர்கள் ஆவார்கள். மற்றவர்கள் சிங்களம் பேசு வோராவர். ஊரின் மையப் பகுதியில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அதைச் சுற்றி யுள்ள பகுதிகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
விடுதலைப்புலிகள் மூதூரை தாங்கள் அமைக்க விருக்கும் தமிழீழத்தின் தலை நகரான திரிகோணமலையின் நுழைவாயிலாகக் கருதி வருகிறார்கள். முதூரில் முஸ்லிம்களுக்கும் புலிகளுக்கும் இடையே கடந்த காலங்களில் மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன. புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்ட சில மாதங்களுக்குள் மோதல் வெடித்தது. இந்த மோதல் மட்டக்களப்பு வரை பரவியது. இதேபோல் முதூரைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்களை புலிகள் கடத்தி விட்டார்கள் என்ற பிரச்சினையை முன்வைத்து மோதல்கள் நடைபெற்று வந்துள்ளது.
அக்டோபர் 1990ல் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒரு லட்சம் முஸ்லிம்கள் அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். அதுபோன்ற நிலை தங்களுக்கும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் மூதூர் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள்
இலங்கை: மூதூர் முஸ்லிம்களின் வேதனைஇடைவிடாத போரினால் இலங்கை துயரத்தில் தத்தளிக்கிறது. அரசுக்கும் விடு தலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெறும் போரில் அப்பாவிகளின் உயிர்ப்பலிகள் தொடருகின்றன. விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையே நடை பெறும் போரில் எந்தவித பகை பரப்பும் முயற்சிகளில் ஈடுபடாத முஸ்லிம்களும் சிக்கிக் கொண்ட சோக நிகழ்வுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் என்ற துறைமுக நகரில் முஸ்லிம் கள் நிறைந்து வாழ்கின்றனர். திரிகோண மலைப் பகுதியில் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் கடும் சண்டை மூண்டுவரும் நிலையில், அப்பாவி முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக் கும் இடையில் நிகழும் கடும் தாக்குதலில் 18 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். 20 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் முஸ்லிம்கள் மூதூரிலிருந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர் என செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது.
இதற்கு அரசு மீது கடுமையாகக் குற்றம்சாட்டுகிறார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம். ஆனால் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து, புலிகளின் மேல் கைகாட்டுகிறது இலங்கை அரசு.
மூதூர் அரபிக் கல்லூரி மீது புலிகள் நடத்திய தாக்குதலில் 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாகவும் 50 பேர் காயமடைந்ததாகவும் இலங்கை ராணுவம் கூறு கிறது. மூதூரின் புறநகர் பகுதியான தொப்பூரில் உள்ள இரண்டு முஸ்லிம் பள்ளிக் கூடங்கள் மீதும் தாக்குதல் நடைபெற்றதாகவும் அதில் ஐவர் கொல்லப் பட்டதாகவும் அது மேலும் கூறியுள்ளது.
இதனிடையே, முஸ்லிம் இளைஞர் 100 பேரை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்று விட்டதாக இலங்கை ராணுவம் வெளியிட்ட தகவல் உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லெபனானிலும் பாலஸ்தீனத்திலும் தொடரும் முஸ்லிம்கள் மீதான படுகொலைகளைப் போல் தெற்காசியாவில் படுபயங்கரமான நிகழ்வாக இது உருவெடுக்கக் கூடுமோ என சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் அஞ்சிய சூழ்நிலையில், இத்தகைய சம்பவம் ஒன்று நடக்கவே இல்லை என விடுதலைப் புலிகள் தங்களின் பிரத்யேக வலைதளத்தில் மறுத்துள்ளனர்.
இதை மூதூர் பகுதியிலிருந்து வெளியேறிவிடும் முஸ்லிம்கள் கந்தாளையை நோக்கி டிரக்குகளிலும், கால்நடையாகவும் சென்று கொண்டிருக்கும் நிலையில், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட தொற்று வியாதியால் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம் தாய்மார்கள் கண்ணீருடன் கதறியபடி இருக்க, முஸ்லிம் முதியவர்கள் குர்ஆனை அணைத்துப் பிடித்தபடி கந்தாளையில் அகதிகளாக வந்தனர். இலங் கையின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் ஏழரை சதவீதத்தினரே உள்ளனர்.
100 அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைதிகளாக விடுதலைப்புலிகள் பிடித்து வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம் குற்றம்சாட்டியுள்ளார். இதையும் புலிகள் மறுத்துள்ளனர்.
புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் நிகழும் யுத்தத்தில் முஸ்லிம்களும் பாதிக்கப் படுகின்றனர்.
எந்தவித தீங்கெண்ணமும் கொண்டு செயல்படாது தங்களது நாட்டின் முன்னேற்ற மற்றும் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்த மென்மையான உள்ளம் கொண்ட இலங்கை முஸ்லிம்கள் தற்போது நடைபெறும் போரில் அகதிகளாக்கப் படுவது வேதனையல்லவா?
செல்லமாக வாழ்ந்த முஸ்லிம் குழந்தைகள் மூதூரிலிருந்து விரட்டப்பட்டு கந்தாளையில் அகதிகளாக துண்டு ரொட்டிக்காக ஏங்கி நின்ற காட்சி ஊடகங்களில் வந்தபோது காண்போர் கண்கள் குளமாகின.
அச்சத்தின் பிடியில் மூதூர் முஸ்லிம்கள்...
மூதூர், கிழக்கு இலங்கையில் திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய மீன்பிடி ஊராகும். திரிகோணமலையிலிருந்து படகில் சவாரி செய்தால் ஒரு மணி நேரத்தில் மூதூர் சென்று சேரலாம். இங்கு வாழும் 60,000 மக்களில் 33,000 பேர் முஸ்லிம்களாவர். 22,000 பேர் தமிழர்கள் ஆவார்கள். மற்றவர்கள் சிங்களம் பேசு வோராவர். ஊரின் மையப் பகுதியில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அதைச் சுற்றி யுள்ள பகுதிகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
விடுதலைப்புலிகள் மூதூரை தாங்கள் அமைக்க விருக்கும் தமிழீழத்தின் தலை நகரான திரிகோணமலையின் நுழைவாயிலாகக் கருதி வருகிறார்கள். முதூரில் முஸ்லிம்களுக்கும் புலிகளுக்கும் இடையே கடந்த காலங்களில் மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன. புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்ட சில மாதங்களுக்குள் மோதல் வெடித்தது. இந்த மோதல் மட்டக்களப்பு வரை பரவியது. இதேபோல் முதூரைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்களை புலிகள் கடத்தி விட்டார்கள் என்ற பிரச்சினையை முன்வைத்து மோதல்கள் நடைபெற்று வந்துள்ளது.
அக்டோபர் 1990ல் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒரு லட்சம் முஸ்லிம்கள் அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். அதுபோன்ற நிலை தங்களுக்கும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் மூதூர் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள்
இலங்கை: மூதூர் முஸ்லிம்களின் வேதனைஇடைவிடாத போரினால் இலங்கை துயரத்தில் தத்தளிக்கிறது. அரசுக்கும் விடு தலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெறும் போரில் அப்பாவிகளின் உயிர்ப்பலிகள் தொடருகின்றன. விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையே நடை பெறும் போரில் எந்தவித பகை பரப்பும் முயற்சிகளில் ஈடுபடாத முஸ்லிம்களும் சிக்கிக் கொண்ட சோக நிகழ்வுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் என்ற துறைமுக நகரில் முஸ்லிம் கள் நிறைந்து வாழ்கின்றனர். திரிகோண மலைப் பகுதியில் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் கடும் சண்டை மூண்டுவரும் நிலையில், அப்பாவி முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக் கும் இடையில் நிகழும் கடும் தாக்குதலில் 18 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். 20 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் முஸ்லிம்கள் மூதூரிலிருந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர் என செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது.
இதற்கு அரசு மீது கடுமையாகக் குற்றம்சாட்டுகிறார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம். ஆனால் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து, புலிகளின் மேல் கைகாட்டுகிறது இலங்கை அரசு.
மூதூர் அரபிக் கல்லூரி மீது புலிகள் நடத்திய தாக்குதலில் 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாகவும் 50 பேர் காயமடைந்ததாகவும் இலங்கை ராணுவம் கூறு கிறது. மூதூரின் புறநகர் பகுதியான தொப்பூரில் உள்ள இரண்டு முஸ்லிம் பள்ளிக் கூடங்கள் மீதும் தாக்குதல் நடைபெற்றதாகவும் அதில் ஐவர் கொல்லப் பட்டதாகவும் அது மேலும் கூறியுள்ளது.
இதனிடையே, முஸ்லிம் இளைஞர் 100 பேரை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்று விட்டதாக இலங்கை ராணுவம் வெளியிட்ட தகவல் உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லெபனானிலும் பாலஸ்தீனத்திலும் தொடரும் முஸ்லிம்கள் மீதான படுகொலைகளைப் போல் தெற்காசியாவில் படுபயங்கரமான நிகழ்வாக இது உருவெடுக்கக் கூடுமோ என சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் அஞ்சிய சூழ்நிலையில், இத்தகைய சம்பவம் ஒன்று நடக்கவே இல்லை என விடுதலைப் புலிகள் தங்களின் பிரத்யேக வலைதளத்தில் மறுத்துள்ளனர்.
இதை மூதூர் பகுதியிலிருந்து வெளியேறிவிடும் முஸ்லிம்கள் கந்தாளையை நோக்கி டிரக்குகளிலும், கால்நடையாகவும் சென்று கொண்டிருக்கும் நிலையில், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட தொற்று வியாதியால் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம் தாய்மார்கள் கண்ணீருடன் கதறியபடி இருக்க, முஸ்லிம் முதியவர்கள் குர்ஆனை அணைத்துப் பிடித்தபடி கந்தாளையில் அகதிகளாக வந்தனர். இலங் கையின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் ஏழரை சதவீதத்தினரே உள்ளனர்.
100 அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைதிகளாக விடுதலைப்புலிகள் பிடித்து வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம் குற்றம்சாட்டியுள்ளார். இதையும் புலிகள் மறுத்துள்ளனர்.
புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் நிகழும் யுத்தத்தில் முஸ்லிம்களும் பாதிக்கப் படுகின்றனர்.
எந்தவித தீங்கெண்ணமும் கொண்டு செயல்படாது தங்களது நாட்டின் முன்னேற்ற மற்றும் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்த மென்மையான உள்ளம் கொண்ட இலங்கை முஸ்லிம்கள் தற்போது நடைபெறும் போரில் அகதிகளாக்கப் படுவது வேதனையல்லவா?
செல்லமாக வாழ்ந்த முஸ்லிம் குழந்தைகள் மூதூரிலிருந்து விரட்டப்பட்டு கந்தாளையில் அகதிகளாக துண்டு ரொட்டிக்காக ஏங்கி நின்ற காட்சி ஊடகங்களில் வந்தபோது காண்போர் கண்கள் குளமாகின.
அச்சத்தின் பிடியில் மூதூர் முஸ்லிம்கள்...
மூதூர், கிழக்கு இலங்கையில் திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய மீன்பிடி ஊராகும். திரிகோணமலையிலிருந்து படகில் சவாரி செய்தால் ஒரு மணி நேரத்தில் மூதூர் சென்று சேரலாம். இங்கு வாழும் 60,000 மக்களில் 33,000 பேர் முஸ்லிம்களாவர். 22,000 பேர் தமிழர்கள் ஆவார்கள். மற்றவர்கள் சிங்களம் பேசு வோராவர். ஊரின் மையப் பகுதியில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அதைச் சுற்றி யுள்ள பகுதிகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
விடுதலைப்புலிகள் மூதூரை தாங்கள் அமைக்க விருக்கும் தமிழீழத்தின் தலை நகரான திரிகோணமலையின் நுழைவாயிலாகக் கருதி வருகிறார்கள். முதூரில் முஸ்லிம்களுக்கும் புலிகளுக்கும் இடையே கடந்த காலங்களில் மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன. புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்ட சில மாதங்களுக்குள் மோதல் வெடித்தது. இந்த மோதல் மட்டக்களப்பு வரை பரவியது. இதேபோல் முதூரைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்களை புலிகள் கடத்தி விட்டார்கள் என்ற பிரச்சினையை முன்வைத்து மோதல்கள் நடைபெற்று வந்துள்ளது.
அக்டோபர் 1990ல் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒரு லட்சம் முஸ்லிம்கள் அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். அதுபோன்ற நிலை தங்களுக்கும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் மூதூர் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள்
இஸ்ரேலை வீழ்த்தியது ஹிஸ்புல்லாஹ்!34 நாள் போரில் பிரமிக்கத்தக்க வெற்றி!!
அபூசாலிஹ்
1948ல் கள்ளங்கபடமற்ற அரபு பூபாகத்தில் வஞ்சக நோக்கம் கொண்ட மேற்குலக சக்திகளால் அடாவடித்தனமாக அமைக்கப்பட்ட இஸ்ரேல் என்ற மனிதகுல விரோத அரசின் படைகள் வரலாற்றிலேயே முதன் முறையாக முறியடிக்கப் பட்டது.
இதன்மூலம் 58 ஆண்டு களாக தனது கோரத் தாக்குதல்கள் மூலம் வளைகுடா பகுதியைக் குதறிய ஜியோனிஸ சக்திகளின் ஆட்டம் முடிவுக்கு வரும் காலம் நெருங்கி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
இஸ்ரேல் என்றால் ஒரு போக்கிரித்தனமான வல்லரசு. அதனோடு மோதும் நாடு கள் சிதறி சின்னாபின்னமாவது உறுதி என்று இஸ்ரேலுக்கு ஆதரவான கருத் தோட்டம் நேற்றுவரை உலகம் முழுவதும் நிலவி வந்தது உண்மை.
இஸ்ரேல் தன்னை தாக்கியவர்களை மிகவும் மோசமாக தண்டிக்கும். ஒரு அடி கொடுத்தால் 10 அடி கொடுக்கும் வல்லமை இஸ்ரேலுக்கு உண்டு என தலைக்கு மேலே மட்டுமல்ல, தலைக்கு உள்ளேயும் ஒன்றுமேயில்லாத நம்நாட்டு பத்திரிகை யாளர் ஒருவரும் அவரைப் போன்று சிலரும் வக்காலத்து வாங்குவதைப் போன்று இஸ்ரேலின் ராணுவ வல்லமை அப்போது விளங்கியது.
1948 தொடங்கி திடீர் திடீரென ஏற்படுத்திய வலுச்சண்டைகளின் மூலம் தனது எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டே வந்தது. அரபுகளை அழிப்பதே தனது முழுமுதற் கடமை எனக் கருதி அழிவு வேலைகளில் முழுமூச்சாக இறங்கியது.
6 நாள் போர் என்று வரலாற்றில் அழைக்கப்பட்ட 1967ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இஸ்ரேலை எதிர்த்துப் போரிட்ட எகிப்து, சிரியா, ஜோர்டான் என்ற அரபகத்தின் பிரசித்திபெற்ற நாடுகளின் படைகளை சர்வ அலட்சியமாக இஸ்ரேல் நசுக்கியது. இதன்விளைவாக சிரியாவுக்குச் சொந்தமான கோலன் குன்றுகளையும், எகிப்தின் சினாய் பகுதியையும், லெபனானின் ஷேபா பண்ணைகளையும், ஜெரு ஸ்ஸலமின் பெரும் பகுதிகளையும் அது கபளீகரம் செய்தது.
1970களில் ராணுவ வல்லமையால் தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்ளத் தொடங்கிய ஈராக்கை, அணுதொடர்பான சோதனைகளில் இறங்கிய ஈராக்கின் அணுக்கரு உலையின் மீது வலுக் கட்டாயமாக வான் தாக்குதல் நிகழ்த்தி அந்த எண்ணெய் வள அரபு தேசத்தின் அணுஆயுதக் கனவைச் சிதைத்தது.
எல்லைக் கடந்த எச்சரிக்கை உணர்வும், கரை காண முடியாத கோழைத்தனமும் நிறைந்த இஸ்ரேல் பேரழிவு ஆயுதங்களைக் கப்பல் கப்பலாகவும், விமானங்களிலும் அமெரிக்காவிடம் இருந்து பெற்றுவந்த இஸ்ரேல், புதிய புதிய சதி ஆய்வுத் திட்டங்களை அமெரிக்கா விடம் இருந்து உடனடி டெலிவரியில் வாங்கிவந்த இஸ்ரேல், 200 அணு குண்டுகளை தன்னகத்தே பதுக்கி வைத்திருப்பதாக நம்பப் பட்ட இஸ்ரேல், கடுமையான பயிற்சி பெற்ற 5 லட்சம் தரைப்படை வீரர்களைக் கொண்ட இஸ்ரேல், ஒரு சின்னஞ்சிறிய நாட்டில் செயல்பட்டுவந்த 5 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் வீரர்களை மட்டுமே உள்ளாக்கியுள்ளதாக நம்பப்படும் ஹிஸ்புல்லாஹ் போராளிகளிடம் படுதோல்வி அடைந்தனர்.
லெபனான் மீதான ஆக்கிரமிப்பு போரில் இஸ்ரேல் தனது வன்தாக்குதல்கள் மூலம் மனித உரிமைகளை மீறியது. ஏழைகளின் தேசமான லெபனானை இரக்கமற்று தாக்கியது. மேற்குலக ஊடகங்கள் அப்பாவிகளைக் கொன்று மீசையை முறுக்கிய இஸ்ரேலை, உலகின் நான்காவது வல்லரசு என அடை மொழியிட்டு அழைத்தன.
லெபனான் போர்க்களத்தில், ஹிஸ்புல்லாஹ் போராளிகளிடம் இஸ்ரேலியப் படை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறிய காட்சியை அமெரிக்க ஆதரவு ஊடகங்களே மறைக்க முடியாமல், மழுப்ப முடியாமல் வெளியிட வேண்டியதாயிற்று.
எவ்வளவு காலம் உண்மையை மறைக்க இயலும். இஸ்ரேலும் அமெரிக்காவும் போட்டி போட்டு செல்லம் கொஞ்சிய சூப்பர் த்ரோவா போர்க்கப்பல் மன்சூரி கடற்கரைப் பகுதியில் தென்பகுதி நகரான டயரின் அருகில் சர்வ அலட்சியமாக ஹிஸ்புல்லாஹ் போராளிகளால் தகர்க்கப்பட்டது.
உயிர்க்கொல்லி ஆயுதங்களுடன் வந்த அந்தக் கப்பலின் 'அகால மரணம்' யூத பயங்கரவாதிகளின் கம்பீரக் கனவை கலைத்துப் போட்டது. நேரடியான தாக்குதலில் கொழுந்துவிட்டு அந்த போர்க்கப்பல் எரிந்த காட்சியை அல்மனார் தொலைக் காட்சி ஒளிபரப்பிய போது லெபனான் மக்கள் கண்டுகளித்தனர்.
நவீன ராணுவக் கட்டமைப்பான இஸ்ரேலியப் படையினரால் ஹிஸ்புல்லாஹ் போராளிகளின் கூர்மையான தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்பதே உண்மை.
50 ஆண்டுகால பழமைவாய்ந்த கட்யூஷா ராக்கெட்டுகளை வைத்துக் கொண்டு ஹைஃபாவிலும் இஸ்ரேலின் பிற எல்லையோரப் பகுதிகளிலும் ஹிஸ்புல்லாஹ் ராக்கெட்டுகள் நிகழ்த்திய வானவேடிக்கை இஸ்ரேலின் ராணுவ வல்லமை ஒரு மாயை என்பதை வெளிச்சம் போட்டு காட்டின.
குறைந்தபட்சம் நான்கு அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் ஹிஸ்புல்லாஹ் போராளிகளால் வீழ்த்தப்பட்டன. ஒரு போர்க்கப்பல் தகர்க்கப்பட்டது. இஸ்ரேலின் பெருமை க்குரிய மெர்க்கவா டாங்குகள் அழிக்கப்பட்டன. ஒவ்வொன்றும் 44 மில்லியன் டாலர் பெறுமதியுடையது இந்த டாங்குகள்.
இஸ்ரேலின் 12 கவச வாகனங்கள் போர்க்களத்தில் அழிக்கப்பட்டன. 130க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் படுகாயம் அடைந்தனர்.
தரைப்படை தாக்குதலை தொடங்கி விட்டால் அவ்வளவுதான் ஹிஸ்புல்லாக் கள் முழுமையாக அழித்தொழிக்கப் படுவார்கள் என ஆணவமாக அறிவித்த இஸ் ரேல் தரைப்படையை அணியணியாய் லெபனானை நோக்கி புறப்பட வைத்தது. ஹிஸ்புல்லாக்களின் விஸ்வரூபத்தைக் கண்டு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு சக்திகள் மூச்சுத் திணறினர். தனது தரைப்படை தளபதியை மாற்றப் போவதாய் அறிவித்தது. எல்லைப்புற நகரைவிட்டு தன் நாட்டு மக்களை இடம்பெயருமாறும், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் கெஞ்ச ஆரம்பித்தது.
ஒரு மாதம் தாண்டி ஒரு நீண்ட தாக்குதலில் எந்த வல்லரசு பின் பலமுமற்ற நாட்டை இரக்கமற்று தாக்கியது. ஆயுதங்கள் ஏந்தாத அப்பாவிக் குழந்தைகளை கொடூரமாகக் கொலை செய்தது. அப்பாவிகளை மட்டுமே கொலை செய்த ஜியோனிஸ நாட்டை, ராணுவ வல்லமை மிகுந்த நாடு என்று மேற்கத்திய ஊடக ங்களும் நம்மூர் ஊடகங்களும் சித்தரித்தன.
பிரிட்டனிலிருந்து வெளிவரும் சில ஊடகங்கள் இஸ்ரேல் உலகின் நான்காவது வல்லமை மிகுந்த நாடு என்று புளுகித் தள்ளின. அவையெல்லாம் பழங்கதை என மாற்றினர் ஹிஸ்புல்லாஹ் போராளிகள்.
குழந்தைகள் பெண்கள் உட்பட 1400க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களைக் கொன்று லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயரக் காரணமாக இருந்த, லெபனா னின் உள்கட்டமைப்பை ஒட்டுமொத்தமாக சீர்குலைத்த, விமான நிலையம், நெடுஞ் சாலைகள், பாலங்கள், மின்நிலையங்களைத் தாக்கி நிர் மூலமாக்கிய இஸ்ரேலின் குற்றச் செயலையும், வெறுமனே கைகட்டி வேடிக்கைப் பார்த்த சர்வதேச சமூகத் தின் பரிதாப நிலை கண்டு சமுதாய ஆர்வலர்கள் வேதனை அடைந்தனர்.
ஜனநாயகக் காவலனாக தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் அமெரிக்க ஏகாதிபத்திய அரசு சமாதான முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டது. போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையை முடக்கி போட்டது. லெபனானில் இஸ்ரேலின் நோக்கம்(!) நிறைவேறும்வரை ஒத்துழைக்கப் போவதாகக் கூறியது.
அமெரிக்காவால் அனுப்பப்பட்ட பேரழிவு ஆயுதங்கள் நிரப்பப்பட்ட கப்பல் கை கொடுக்கும் என்ற ஆவணத்தில் ஹிஸ்புல்லாக்கள் அழிக்கப்படும்வரை இஸ்ரேலிய தாக்குதல் நீடிக்கும் என்று இஸ்ரேலியப் பிரதமர் ஜம்பமாக அறிவித்தார்.
ஹிஸ்புல்லாக்கள் மேற்காசிய பிராந் தியத்தின் மாவீரர்களாக கருதப்படுகி றார்கள். இஸ்ரேலிய வான்வெளியை நோக்கி சீறிப் பாய்ந்த ஹிஸ்புல்லாக்களின் ராக்கெ ட்டுகள் ஷியாக்களின் ஆதரவை மட்டும் நாங்கள் பெறவில்லை. சன்னி முஸ்லிம் கள், கிறிஸ்தவர்கள் மற்றும் ட்ரூஸ் சமூக மக்களின் ஆதரவையும் பெற்றுவிட்டன என்பதை சொல்லாமல் சொல்லின.
வென்றது யார்? இஸ்ரேலா லி ஹிஸ்புல்லாக்களா? என்பதை இஸ்ரேலில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகள் பட்டவர்த்தனமாக வெளியிட்டு வருகின்றன.
லெபனான் மீதான ஆக்கிரமிப்பு போரினைத் துவக்கிய நேரத்தில் இஸ்ரேலிய மக்களிடம் ஏறுமுகத்தில் இருந்த ஆதரவு தற்போது அதல பாதாளத்தில் வீழ்ந்து விட்டதாக டெல்அவிவ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் ராணுவம் அப்பாவிகளையே குறிவைத்து தாக்கியபோதும், ஹிஸ்புல்லாக் கள் இஸ்ரேலிய ராணுவத்தினரை மட்டுமே குறிவைத்து தாக்கியதாக அன்றாடச் செய்திகள் அறிவித்தன.
இந்நிலையில் பிரபல இஸ்ரேலிய ஹாரெட்ஜில் வெளியான கருத்துக் கணிப்பில் 73 சதவீத மக்கள் இஸ்ரேல் இந்தப் போரில் வெற்றி பெற்றதாக பீற்றிக் கொள்ள முடியாது என்று தங்கள் கருத்தினை தெரிவித்தனர்.
இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் ஹிஸ்புல்லாக்களால் கடத்தப்பட்டதால் வெகுண் டெழுந்த இஸ்ரேல் லெபனானில் தெற்குப் பகுதியில் தாக்குதலை நிகழ்த்தியதில் சில மணி நேரங்களில் ஹிஸ்புல்லாக்களின் பதிலடியில் எட்டு இஸ்ரேலியப் போர் வீரர்கள் இறந்தனர். இது போரின் முதல் நாளான ஜூலை 12ஆம் தேதி நடந்தது. சளைக்காத ஹிஸ்புல்லாஹ் போராளிகளின் ராக்கெட்டுகள் மழையென இஸ்ரேலிய வான்வெளியில் சீறின. இதில் இஸ்ரேலிய ராணுவனத்தினர் 130க்கும் மேற் பட்டோர் பலியானார்கள். இதுபற்றிய தகவல்கள் வெளியாகத் தொடங்கியதும் 'குய்யோ முறையோ' என அலறாத குறையாக இஸ்ரேலிய மக்கள் ஆடிப்போய் விட்டனர்.
1982ல் லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலை எதிர்த்தும், பெய்ரூட்டின் சப்ரா, ஷட்டிலா என்ற இரு பாலஸ்தீன அகதி முகாம்கள் மீதும் நிகழ்த்தப்பட்ட மனிதகுல விரோத தாக்குதலை எதிர்த்தும் அன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தி னால் அன்றைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏரியல் ஷரோன் பதவியை விட்டு ஓட வேண்டியதாயிற்று. இஸ்ரேலியர்களின் கருத்துக் கணிப்பினை வெளியிட்ட ஹாரெட்ஜ் செய்தி ஏடு யஹுத் ஓல்மர்ட் கண்டிப்பாக வெளியேற வேண்டும் என்று எச்சரித்துள்ளது.
யஹுத் ஓல்மர்ட் குருட்டுத்தனமாக ராணுவத்தின் சொற்படி ஆடுகிறார், முக்கிய வினாக்கள் கூட அவர் விடுப்பதில்லை.
ஒருநாள் ஹஸன் நஸருல்லாஹ், பதுங்கும் அரணிலிருந்து வெளியே வந்து, தாம் வெற்றி பெற்று விட்டதாக அறிவித்தால் ஓல்மர்ட் தனது பதவியில் உட்கார்ந்து கொண்டிருக்க முடியாது என்று ஹாரெட்ஜ் பத்திரிகை கடுமையாகச் சாடியிருக் கிறது.
நஸருல்லாஹ் வந்தார், தொலைக் காட்சியில் உரையாற்றினார், மக்களுக்கு நன்றி தெரிவித்தார், போராளிகளைப் புகழ்ந்தார். ஹாரெட்ஜ் செய்தி ஏடு குறிப்பிட்டதைப் போலவே ஓல்மர்ட் ஓடவேண்டிய நேரம் வந்துவிட்டது போலும்.
ஓல்மர்ட் மிகக்குறைந்த ராணுவ அறிவே கொண்டவர் என்று தெரிவித்த அந்நாட்டு ஊடகம், இஸ்ரேலின் வரலாற்றில் ராணுவம் சொதப்பியது ஓல்மர்ட்டின் தலைமையின் கீழ்தான் என்றும் விளாசித் தள்ளியிருக்கிறது.
போர் முடிந்த பிறகு இஸ்ரேல் புதிய பிரதமரை பார்க்கப் போகிறது என்றும் கடுமையான கருத்துக்களை இஸ்ரேலிய மக்கள் தெரிவித்தனர்.
இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டால் ஹிஸ்புல்லாக்களின் வெற்றியை அங்கீகரித்தாகிவிடும், போர் நிறுத்தம் அறிவிக்க விடக்கூடாது என இஸ்ரேலிய பழமைவாதிகள் அழுத்தம் கொடுத்தனர்.
லெபனானின் டயர் பகுதியில் ஊடுருவ முயற்சித்த இஸ்ரேலிய கவச வாகனங்கள் மீது நிகழ்த்தப்பட்ட கடும் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் இஸ்ரேலிய ராணுவம் திணறியது. இஸ்ரேலிய எல்லைப்புற நகரான ஹைஃபா நகரத்தில், மழையெனப் பொழிந்த ஹிஸ்புல்லாக்களின் ராக் கெட்டுகளைக் கண்டு அஞ்சி நடுங்கியது இஸ்ரேல்.
தன்னிச்சையாகப் போரை நிறுத்தி னால் தோல்வியை ஒப்புக்கொண்டதாகி விடும். போரை நீடித்தால் பேரழிவு நிச்சயம். என்ன செய்வது என கையைப் பிசைந்த குள்ளநரி இஸ்ரேலும், கன்னத்தில் கைவைத்துக் கொண்டிருந்த அதன் அமெரிக்க எஜமானும் பொழுது போகாமல் உட்கார்ந்திருந்த பெரிசுகளின் கூடாரமான ஐக்கிய நாடுகள் சபைக்கு மறைமுக நெருக்குதல் கொடுத்தன.
குழந்தைகளின் மீதும், பெண்கள் மற்றும் முதியவர்கள் மீதும் அகதிகள் மீதும், ஆம்புலன்ஸ் மீதும் தாக்குதல் தொடுத்த இஸ்ரேலைக் கண்டிக்க மனம்வராத அமெரிக்காவின் கருணை யற்ற போக்கு உலக மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
கானாவில் குழந்தைக் கொழுந்துகளை கொன்று குவித்தபோதும், லெபனானில் உள்கட்டமைப்பை நிர்மூலமாக்கிய போதும், லெபனானில் பிழைப்புக்காகச் சென்றிருந்த ஆயிரக்கணக்கான வெளி நாட்டு மக்களின் வாழ்வு கேள்விக் குறியான போதும் களத்தில் இறங்காத ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவை போர் நிறுத்தத்திற்கு ஆணை பிறப்பித்தது.
உலக ஊடகங்கள் முதல் உள்ளூர் ஊடகங்கள் வரை இஸ்ரேலைக் குறித்து ஆயிரமாயிரம் கற்பனைக் கதைகளை கட்டவிழ்த்து விட்டிருக்கலாம். ஹிஸ்புல் லாக்களை மோசமாக பயங்கரமாக வருணித்திருக்கலாம். ஆனால் அப்பாவி பொதுமக்களை இஸ்ரேலிடமிருந்து காப்பாற்றியது போலவே, ஹிஸ்புல்லாக் களிடமிருநது இஸ்ரேலியப் படையினரை ஐ.நா. காப்பாற்றி இருக்கிறது.
ஐ.நா.வின் பாதுகாப்பு சபையின் தீர்மானம் 1701ஐ கூர்ந்து கவனித்தால் இஸ்ரேலும் அமெரிக்காவும் கூறியது போல் ஹிஸ்புல்லாக்களின் ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது குறித்து காலக்கெடு குறிப்பிடப்படவே யில்லை. அவ்வாறே ஹிஸ்புல்லாக் களினால் கடத்தப்பட்ட இஸ்ரேலிய வீரர்களையும் ஹிஸ்புல்லாக்கள் இவ்வளவு காலத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்படவில்லை.
ஹிஸ்புல்லாக்களின் ஆயுதங்கள் அனைத்தும் அழிக்கப்படும்வரை போர் தொட ரும் என்று யூத பயங்கரவாதிகளும், புஷ்ஷும் போட்ட வெறிக்கூச்சல் முதன் முறையாக புறக்கணிக்கப்பட்டிருக் கிறது. லெபனான் எல்லையை நோக்கி ஆக்ரோஷமாகப் புறப்பட்ட இஸ்ரேலியத் துருப்புகளும் கவச வாகனங்களும் நிம்மதிப் பெருமூச்சுடன் தங்கள் நிலைகளைச் சென்றடைந்துள்ளன.
மேற்காசியாவின் போக்கிரி தாதாவின் படுதோல்வி குறித்த செய்திகளை உலக வரலாறு பதிவு செய்துவிட்டது. ஹிஸ்புல்லாக்களின் பிரமிக்கத்தக்க வெற்றியை சர்வதேச ராணுவ வியூக வல்லுனர்கள் ஆய்வு செய்யத் தொடங்கி விட்டனர்.
சிரியாவும் ஈரானும் லெபனானுடன் சேர்ந்து குதூகலத்தில் திளைக்கின்றன. அரபுகளுக்கு இந்த வெற்றி உண்மையிலேயே பெரியதுதான் எனினும் வளை குடாப் பிராந்தியத்தில் நிரந்தர வெற்றி கிடைக்க எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றனர். நாமும்தான்!
ஹஸன் நஸருல்லாஹ்
ஈராக்கின் நஜஃப் நகரில் மார்க்கக் கல்வி கற்ற ஸயீத் ஹஸன் நஸருல்லாஹ், அமல் இயக்கத்தின் தலைவர் ஷேக் அப்பாஸ் அல் முஸவ்வியிடம் அரசியல் பால பாடம் கற்றவர். மிக இளம் வயதிலேயே லெபனானில் அமல் அமைப்பின் அரசியல் திட்ட அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1982ல் இஸ்ரேலின் ஆக்கிர மிப்புக்குப் பிறகு ஹிஸ்புல்லாஹ்வில் இணைந்தார். பெக்கா பள்ளத்தாக்கில் இஸ்ரேலை எதிர்த்து நிழற்போராளியாக விளங்கினார்.
நஸருல்லாஹ், லெபனானில் கிராமப்புறத்தில் பிறந்த ஃபாத்திமா யாசினை மண முடித்தார். தனது மூத்த மகன் ஹாதியை இஸ்ரேலியப் படைகளுக்கு பறிகொடுத் தார். அப்போது அவரது அன்பு மகனுக்கு வயது 18 தான்.
இந்த 44 வயது தலைவர் ஒரு புத்தகப் பிரியராம். குறிப்பாக அரசியல் தலைவர் களைப் பற்றிய வாழ்க்கை வரலாறு இவருக்கு மிகவும் பிடித்தமானது. இஸ்ரேலிய பிரதமர்களாக இருந்த 'ஷரோனின் நினைவுகள்' மற்றும் பென்ஜமின் நேதன் யாஹுவின் 'சூரியனின் கீழ் உள்ள நிலப்பரப்பு' என்ற இரண்டு நூல்களும் அவருக்கு பிடித்தமானதாம்.
எதிரிகளைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வது அவசியம் அல்லவா! என்று கூறும் நஸ்ருல்லாஹ், ஷேக் முஸாவி லி இஸ்ரேலிய தீய சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட பிறகு 1992ல் ஹிஸ்புல்லாஹ்வின் தலைவராகிறார்.
இவர் தலைமையேற்ற 8 ஆண்டுகளில் இஸ்ரேலின் 22 ஆண்டுகால ஆக்கிர மிப்பு முறியடிக்கப்பட்டது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இஸ்ரேல் லி ஹிஸ்புல் லாஹ் இடையே கைதிகள் பரிமாற்றம் வெற்றிகரமாக நிறைவேறவும் (2004) முக்கியப் பங்கு வகித்தார். தொடர்ந்து மத்தியக் கிழக்கு பிராந்தியத்தில் அதிகம் விரும்பப்படும் மனிதராக அவர் உருவெடுத்துள்ளார்.
களங்களில் சாகசங்கள் நிகழ்த்தினாலும், சமூகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் இஸ்லாம் மட்டுமே தீர்வாக முடியும் என்று நஸருல்லாஹ் நம்புகிறார்.
இஸ்லாம் வணக்கம் செலுத்துவதை மட்டும் கற்றுத்தரவில்லை. மனித சமூகத்தை உன்னதமான முறையில் வடிவமைக்கும் அற்புத செய்தியையும் வழங்குகிறது என்கிறார். இஸ்லாம் மட்டுமே மனிதசமூகம் சந்திக்கும் அனைத்து வினாக் களுக் கும் விடையாக இருக்க முடியும் என்கிறார் வெஞ்சமரில் விளையாடிய வீரர்களின் தலைமைத் தளபதி ஹஸன் நஸ்ருல்லாஹ்.
பீதியில் பிரிட்டன்
தெற்கு லெபனானில் நிலைநிறுத்தப்படும் ஐ.நா. அமைதி காக்கும் படையில் மலேஷியா, இந்தோனேஷியா, பங்களாதேஷ், நேபாளம், டென்மார்க், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தங்களது துருப்புகளை அனுப்ப திட்டமிட்டுள்ளன. டென் மார்க் இரண்டு போர்க்கப்பல்களை அனுப்ப முடிவெடுத்துள்ளது. எகிப்து, இத்தாலி முதலான நாடுகள் துருப்புகளை அனுப்புவது குறித்து தீவிர பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பிரிட்டன் தனது படைகளை அனுப்பத் தயாராக இல்லை என தெரிவித்து விட்டது. ஈராக்கிலும் ஆப்கானிஸ் தானிலும் தாங்கள் முழுமையாக ஈடுபட்டுள்ளதால் (அதாவது தொடர் உதை வாங்குவதால்) தங்கள் துருப்புகளை அனுப்ப முடியவில்லை என ஐ.நா.வுக்கான பிரிட்டன் தூதுவர் எமிர் ஜோன்ஸ் பெர்ரி தெரிவிக்கிறார்.
இதனிடையே, இஸ்ரேலின் இந்த படுதோல்வி குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என இஸ்ரேலில் 65 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஓல்மர்ட் வெளியேற வேண்டும் என இஸ்ரேலில் போராட்டம் வலுத்து வருகிறது.
மூன்றாம் முறையாக அறுபட்ட மேற்குலகம்
லெபனானிலிருந்து 'தப்பித்தோம் பிழைத்தோம்' என்று நடையை கட்டிய இஸ்ரேலியப் படைகளின் வெற்றிகரமான(!) வெளியேற்றம் மேற்குலக சக்திகளுக்கு கிடைத்த மூன்றாது மூக்குடைப்பாக வரலாற்று ஆய்வாளர்களால் வர்ணிக்கப்படு கிறது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக பாலஸ்தீன மக்களின் உரிமைகளை நசுக்கிய இனவெறி இஸ்ரேலை ஹமாஸ் தனது அதிரடி நடவடிக்கையின் மூலம் எதிர் கொண்டது. யூத சாம்ராஜ்யம் குலுங்கியது.
உயிரை துச்சமென நினைத்த ஹமாஸ் போராளிகள் மன உறுதிக்கு முன்பு இஸ்ரேல் வல்லாதிக்க அரசால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஹமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கம் என முத்திரைக் குத்தி அழிக்க முற்பட்டனர். அதன் அற்புதத் தலைவர்களான ஷேக் அஹ்மது யாஸினையும், அப்துல் அஜீஸ் ரண்டஸியையும் கொடூரமாக ஏவுகணைத் தாக்குதலில் படுகொலை புரிந்தது. ஹமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கம், நாங்கள் ஜனநாயகத்தை மட்டுமே அங்கீகரிப் பவர்கள் என்று பசப்பிய யூத பயங்கரவாதிகளின் முகத்தில் கரிபூசுவதைப் போல ஹமாஸ் அரசியலில் குதித்து நாடாளுமன்றத்தைக் கைப்பற்றியது. அதை சகித்துக் கொள்ள முடியாத ஜியோனிஸ பயங்கரவாதிகள், பொருளாதாரத் தடை விதித்தார்கள். இப்பொழுது கடும் தாக்குதலை இஸ்ரேல் தொடுத்தாலும், உள உறுதி யுடன் போராளிகள் நிலைத்து நிற்கிறார்கள்.
அவ்வாறே ஈராக்கில் பெரியண்ணன் அமெரிக்காவுக்கு கிடைத்து வரும் அடிகள் அது வரலாற்றிலேயே எதிர்பாராதது. ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் போரினை எதிர்த்து அமெரிக்காவில் வலுத்துவரும் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களே இதற்கு சாட்சி. 1400க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவத்தினர் ஈராக் போராளிகளால் கொல்லப்பட்டனர். அமெரிக்கர்கள் அதிகமாக அடிவாங்கியது ஈராக் பாலைவன மணல்வெளிகளில்தான் என்ற சாதனை சரித்திரமும் அவர்களுக்கு உண்டு.
வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாத இஸ்ரேலும் அதன் எஜமான் அமெரிக்காவும் தற்போது மீண்டும் அவமானத்தில் சுருண்டு போய் உள்ளனர். மத்தியக் கிழக்கின் சக்தி வாய்ந்த ராணுவத்தினைக் கொண்ட இஸ்ரேல் தாக்குப் பிடிக்க முடியாமல் மூச்சுத்திணறி வருவதை தற்போது உலகம் கண்டது
அபூசாலிஹ்
1948ல் கள்ளங்கபடமற்ற அரபு பூபாகத்தில் வஞ்சக நோக்கம் கொண்ட மேற்குலக சக்திகளால் அடாவடித்தனமாக அமைக்கப்பட்ட இஸ்ரேல் என்ற மனிதகுல விரோத அரசின் படைகள் வரலாற்றிலேயே முதன் முறையாக முறியடிக்கப் பட்டது.
இதன்மூலம் 58 ஆண்டு களாக தனது கோரத் தாக்குதல்கள் மூலம் வளைகுடா பகுதியைக் குதறிய ஜியோனிஸ சக்திகளின் ஆட்டம் முடிவுக்கு வரும் காலம் நெருங்கி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
இஸ்ரேல் என்றால் ஒரு போக்கிரித்தனமான வல்லரசு. அதனோடு மோதும் நாடு கள் சிதறி சின்னாபின்னமாவது உறுதி என்று இஸ்ரேலுக்கு ஆதரவான கருத் தோட்டம் நேற்றுவரை உலகம் முழுவதும் நிலவி வந்தது உண்மை.
இஸ்ரேல் தன்னை தாக்கியவர்களை மிகவும் மோசமாக தண்டிக்கும். ஒரு அடி கொடுத்தால் 10 அடி கொடுக்கும் வல்லமை இஸ்ரேலுக்கு உண்டு என தலைக்கு மேலே மட்டுமல்ல, தலைக்கு உள்ளேயும் ஒன்றுமேயில்லாத நம்நாட்டு பத்திரிகை யாளர் ஒருவரும் அவரைப் போன்று சிலரும் வக்காலத்து வாங்குவதைப் போன்று இஸ்ரேலின் ராணுவ வல்லமை அப்போது விளங்கியது.
1948 தொடங்கி திடீர் திடீரென ஏற்படுத்திய வலுச்சண்டைகளின் மூலம் தனது எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டே வந்தது. அரபுகளை அழிப்பதே தனது முழுமுதற் கடமை எனக் கருதி அழிவு வேலைகளில் முழுமூச்சாக இறங்கியது.
6 நாள் போர் என்று வரலாற்றில் அழைக்கப்பட்ட 1967ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இஸ்ரேலை எதிர்த்துப் போரிட்ட எகிப்து, சிரியா, ஜோர்டான் என்ற அரபகத்தின் பிரசித்திபெற்ற நாடுகளின் படைகளை சர்வ அலட்சியமாக இஸ்ரேல் நசுக்கியது. இதன்விளைவாக சிரியாவுக்குச் சொந்தமான கோலன் குன்றுகளையும், எகிப்தின் சினாய் பகுதியையும், லெபனானின் ஷேபா பண்ணைகளையும், ஜெரு ஸ்ஸலமின் பெரும் பகுதிகளையும் அது கபளீகரம் செய்தது.
1970களில் ராணுவ வல்லமையால் தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்ளத் தொடங்கிய ஈராக்கை, அணுதொடர்பான சோதனைகளில் இறங்கிய ஈராக்கின் அணுக்கரு உலையின் மீது வலுக் கட்டாயமாக வான் தாக்குதல் நிகழ்த்தி அந்த எண்ணெய் வள அரபு தேசத்தின் அணுஆயுதக் கனவைச் சிதைத்தது.
எல்லைக் கடந்த எச்சரிக்கை உணர்வும், கரை காண முடியாத கோழைத்தனமும் நிறைந்த இஸ்ரேல் பேரழிவு ஆயுதங்களைக் கப்பல் கப்பலாகவும், விமானங்களிலும் அமெரிக்காவிடம் இருந்து பெற்றுவந்த இஸ்ரேல், புதிய புதிய சதி ஆய்வுத் திட்டங்களை அமெரிக்கா விடம் இருந்து உடனடி டெலிவரியில் வாங்கிவந்த இஸ்ரேல், 200 அணு குண்டுகளை தன்னகத்தே பதுக்கி வைத்திருப்பதாக நம்பப் பட்ட இஸ்ரேல், கடுமையான பயிற்சி பெற்ற 5 லட்சம் தரைப்படை வீரர்களைக் கொண்ட இஸ்ரேல், ஒரு சின்னஞ்சிறிய நாட்டில் செயல்பட்டுவந்த 5 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் வீரர்களை மட்டுமே உள்ளாக்கியுள்ளதாக நம்பப்படும் ஹிஸ்புல்லாஹ் போராளிகளிடம் படுதோல்வி அடைந்தனர்.
லெபனான் மீதான ஆக்கிரமிப்பு போரில் இஸ்ரேல் தனது வன்தாக்குதல்கள் மூலம் மனித உரிமைகளை மீறியது. ஏழைகளின் தேசமான லெபனானை இரக்கமற்று தாக்கியது. மேற்குலக ஊடகங்கள் அப்பாவிகளைக் கொன்று மீசையை முறுக்கிய இஸ்ரேலை, உலகின் நான்காவது வல்லரசு என அடை மொழியிட்டு அழைத்தன.
லெபனான் போர்க்களத்தில், ஹிஸ்புல்லாஹ் போராளிகளிடம் இஸ்ரேலியப் படை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறிய காட்சியை அமெரிக்க ஆதரவு ஊடகங்களே மறைக்க முடியாமல், மழுப்ப முடியாமல் வெளியிட வேண்டியதாயிற்று.
எவ்வளவு காலம் உண்மையை மறைக்க இயலும். இஸ்ரேலும் அமெரிக்காவும் போட்டி போட்டு செல்லம் கொஞ்சிய சூப்பர் த்ரோவா போர்க்கப்பல் மன்சூரி கடற்கரைப் பகுதியில் தென்பகுதி நகரான டயரின் அருகில் சர்வ அலட்சியமாக ஹிஸ்புல்லாஹ் போராளிகளால் தகர்க்கப்பட்டது.
உயிர்க்கொல்லி ஆயுதங்களுடன் வந்த அந்தக் கப்பலின் 'அகால மரணம்' யூத பயங்கரவாதிகளின் கம்பீரக் கனவை கலைத்துப் போட்டது. நேரடியான தாக்குதலில் கொழுந்துவிட்டு அந்த போர்க்கப்பல் எரிந்த காட்சியை அல்மனார் தொலைக் காட்சி ஒளிபரப்பிய போது லெபனான் மக்கள் கண்டுகளித்தனர்.
நவீன ராணுவக் கட்டமைப்பான இஸ்ரேலியப் படையினரால் ஹிஸ்புல்லாஹ் போராளிகளின் கூர்மையான தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்பதே உண்மை.
50 ஆண்டுகால பழமைவாய்ந்த கட்யூஷா ராக்கெட்டுகளை வைத்துக் கொண்டு ஹைஃபாவிலும் இஸ்ரேலின் பிற எல்லையோரப் பகுதிகளிலும் ஹிஸ்புல்லாஹ் ராக்கெட்டுகள் நிகழ்த்திய வானவேடிக்கை இஸ்ரேலின் ராணுவ வல்லமை ஒரு மாயை என்பதை வெளிச்சம் போட்டு காட்டின.
குறைந்தபட்சம் நான்கு அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் ஹிஸ்புல்லாஹ் போராளிகளால் வீழ்த்தப்பட்டன. ஒரு போர்க்கப்பல் தகர்க்கப்பட்டது. இஸ்ரேலின் பெருமை க்குரிய மெர்க்கவா டாங்குகள் அழிக்கப்பட்டன. ஒவ்வொன்றும் 44 மில்லியன் டாலர் பெறுமதியுடையது இந்த டாங்குகள்.
இஸ்ரேலின் 12 கவச வாகனங்கள் போர்க்களத்தில் அழிக்கப்பட்டன. 130க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் படுகாயம் அடைந்தனர்.
தரைப்படை தாக்குதலை தொடங்கி விட்டால் அவ்வளவுதான் ஹிஸ்புல்லாக் கள் முழுமையாக அழித்தொழிக்கப் படுவார்கள் என ஆணவமாக அறிவித்த இஸ் ரேல் தரைப்படையை அணியணியாய் லெபனானை நோக்கி புறப்பட வைத்தது. ஹிஸ்புல்லாக்களின் விஸ்வரூபத்தைக் கண்டு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு சக்திகள் மூச்சுத் திணறினர். தனது தரைப்படை தளபதியை மாற்றப் போவதாய் அறிவித்தது. எல்லைப்புற நகரைவிட்டு தன் நாட்டு மக்களை இடம்பெயருமாறும், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் கெஞ்ச ஆரம்பித்தது.
ஒரு மாதம் தாண்டி ஒரு நீண்ட தாக்குதலில் எந்த வல்லரசு பின் பலமுமற்ற நாட்டை இரக்கமற்று தாக்கியது. ஆயுதங்கள் ஏந்தாத அப்பாவிக் குழந்தைகளை கொடூரமாகக் கொலை செய்தது. அப்பாவிகளை மட்டுமே கொலை செய்த ஜியோனிஸ நாட்டை, ராணுவ வல்லமை மிகுந்த நாடு என்று மேற்கத்திய ஊடக ங்களும் நம்மூர் ஊடகங்களும் சித்தரித்தன.
பிரிட்டனிலிருந்து வெளிவரும் சில ஊடகங்கள் இஸ்ரேல் உலகின் நான்காவது வல்லமை மிகுந்த நாடு என்று புளுகித் தள்ளின. அவையெல்லாம் பழங்கதை என மாற்றினர் ஹிஸ்புல்லாஹ் போராளிகள்.
குழந்தைகள் பெண்கள் உட்பட 1400க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களைக் கொன்று லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயரக் காரணமாக இருந்த, லெபனா னின் உள்கட்டமைப்பை ஒட்டுமொத்தமாக சீர்குலைத்த, விமான நிலையம், நெடுஞ் சாலைகள், பாலங்கள், மின்நிலையங்களைத் தாக்கி நிர் மூலமாக்கிய இஸ்ரேலின் குற்றச் செயலையும், வெறுமனே கைகட்டி வேடிக்கைப் பார்த்த சர்வதேச சமூகத் தின் பரிதாப நிலை கண்டு சமுதாய ஆர்வலர்கள் வேதனை அடைந்தனர்.
ஜனநாயகக் காவலனாக தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் அமெரிக்க ஏகாதிபத்திய அரசு சமாதான முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டது. போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையை முடக்கி போட்டது. லெபனானில் இஸ்ரேலின் நோக்கம்(!) நிறைவேறும்வரை ஒத்துழைக்கப் போவதாகக் கூறியது.
அமெரிக்காவால் அனுப்பப்பட்ட பேரழிவு ஆயுதங்கள் நிரப்பப்பட்ட கப்பல் கை கொடுக்கும் என்ற ஆவணத்தில் ஹிஸ்புல்லாக்கள் அழிக்கப்படும்வரை இஸ்ரேலிய தாக்குதல் நீடிக்கும் என்று இஸ்ரேலியப் பிரதமர் ஜம்பமாக அறிவித்தார்.
ஹிஸ்புல்லாக்கள் மேற்காசிய பிராந் தியத்தின் மாவீரர்களாக கருதப்படுகி றார்கள். இஸ்ரேலிய வான்வெளியை நோக்கி சீறிப் பாய்ந்த ஹிஸ்புல்லாக்களின் ராக்கெ ட்டுகள் ஷியாக்களின் ஆதரவை மட்டும் நாங்கள் பெறவில்லை. சன்னி முஸ்லிம் கள், கிறிஸ்தவர்கள் மற்றும் ட்ரூஸ் சமூக மக்களின் ஆதரவையும் பெற்றுவிட்டன என்பதை சொல்லாமல் சொல்லின.
வென்றது யார்? இஸ்ரேலா லி ஹிஸ்புல்லாக்களா? என்பதை இஸ்ரேலில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகள் பட்டவர்த்தனமாக வெளியிட்டு வருகின்றன.
லெபனான் மீதான ஆக்கிரமிப்பு போரினைத் துவக்கிய நேரத்தில் இஸ்ரேலிய மக்களிடம் ஏறுமுகத்தில் இருந்த ஆதரவு தற்போது அதல பாதாளத்தில் வீழ்ந்து விட்டதாக டெல்அவிவ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் ராணுவம் அப்பாவிகளையே குறிவைத்து தாக்கியபோதும், ஹிஸ்புல்லாக் கள் இஸ்ரேலிய ராணுவத்தினரை மட்டுமே குறிவைத்து தாக்கியதாக அன்றாடச் செய்திகள் அறிவித்தன.
இந்நிலையில் பிரபல இஸ்ரேலிய ஹாரெட்ஜில் வெளியான கருத்துக் கணிப்பில் 73 சதவீத மக்கள் இஸ்ரேல் இந்தப் போரில் வெற்றி பெற்றதாக பீற்றிக் கொள்ள முடியாது என்று தங்கள் கருத்தினை தெரிவித்தனர்.
இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் ஹிஸ்புல்லாக்களால் கடத்தப்பட்டதால் வெகுண் டெழுந்த இஸ்ரேல் லெபனானில் தெற்குப் பகுதியில் தாக்குதலை நிகழ்த்தியதில் சில மணி நேரங்களில் ஹிஸ்புல்லாக்களின் பதிலடியில் எட்டு இஸ்ரேலியப் போர் வீரர்கள் இறந்தனர். இது போரின் முதல் நாளான ஜூலை 12ஆம் தேதி நடந்தது. சளைக்காத ஹிஸ்புல்லாஹ் போராளிகளின் ராக்கெட்டுகள் மழையென இஸ்ரேலிய வான்வெளியில் சீறின. இதில் இஸ்ரேலிய ராணுவனத்தினர் 130க்கும் மேற் பட்டோர் பலியானார்கள். இதுபற்றிய தகவல்கள் வெளியாகத் தொடங்கியதும் 'குய்யோ முறையோ' என அலறாத குறையாக இஸ்ரேலிய மக்கள் ஆடிப்போய் விட்டனர்.
1982ல் லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலை எதிர்த்தும், பெய்ரூட்டின் சப்ரா, ஷட்டிலா என்ற இரு பாலஸ்தீன அகதி முகாம்கள் மீதும் நிகழ்த்தப்பட்ட மனிதகுல விரோத தாக்குதலை எதிர்த்தும் அன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தி னால் அன்றைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏரியல் ஷரோன் பதவியை விட்டு ஓட வேண்டியதாயிற்று. இஸ்ரேலியர்களின் கருத்துக் கணிப்பினை வெளியிட்ட ஹாரெட்ஜ் செய்தி ஏடு யஹுத் ஓல்மர்ட் கண்டிப்பாக வெளியேற வேண்டும் என்று எச்சரித்துள்ளது.
யஹுத் ஓல்மர்ட் குருட்டுத்தனமாக ராணுவத்தின் சொற்படி ஆடுகிறார், முக்கிய வினாக்கள் கூட அவர் விடுப்பதில்லை.
ஒருநாள் ஹஸன் நஸருல்லாஹ், பதுங்கும் அரணிலிருந்து வெளியே வந்து, தாம் வெற்றி பெற்று விட்டதாக அறிவித்தால் ஓல்மர்ட் தனது பதவியில் உட்கார்ந்து கொண்டிருக்க முடியாது என்று ஹாரெட்ஜ் பத்திரிகை கடுமையாகச் சாடியிருக் கிறது.
நஸருல்லாஹ் வந்தார், தொலைக் காட்சியில் உரையாற்றினார், மக்களுக்கு நன்றி தெரிவித்தார், போராளிகளைப் புகழ்ந்தார். ஹாரெட்ஜ் செய்தி ஏடு குறிப்பிட்டதைப் போலவே ஓல்மர்ட் ஓடவேண்டிய நேரம் வந்துவிட்டது போலும்.
ஓல்மர்ட் மிகக்குறைந்த ராணுவ அறிவே கொண்டவர் என்று தெரிவித்த அந்நாட்டு ஊடகம், இஸ்ரேலின் வரலாற்றில் ராணுவம் சொதப்பியது ஓல்மர்ட்டின் தலைமையின் கீழ்தான் என்றும் விளாசித் தள்ளியிருக்கிறது.
போர் முடிந்த பிறகு இஸ்ரேல் புதிய பிரதமரை பார்க்கப் போகிறது என்றும் கடுமையான கருத்துக்களை இஸ்ரேலிய மக்கள் தெரிவித்தனர்.
இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டால் ஹிஸ்புல்லாக்களின் வெற்றியை அங்கீகரித்தாகிவிடும், போர் நிறுத்தம் அறிவிக்க விடக்கூடாது என இஸ்ரேலிய பழமைவாதிகள் அழுத்தம் கொடுத்தனர்.
லெபனானின் டயர் பகுதியில் ஊடுருவ முயற்சித்த இஸ்ரேலிய கவச வாகனங்கள் மீது நிகழ்த்தப்பட்ட கடும் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் இஸ்ரேலிய ராணுவம் திணறியது. இஸ்ரேலிய எல்லைப்புற நகரான ஹைஃபா நகரத்தில், மழையெனப் பொழிந்த ஹிஸ்புல்லாக்களின் ராக் கெட்டுகளைக் கண்டு அஞ்சி நடுங்கியது இஸ்ரேல்.
தன்னிச்சையாகப் போரை நிறுத்தி னால் தோல்வியை ஒப்புக்கொண்டதாகி விடும். போரை நீடித்தால் பேரழிவு நிச்சயம். என்ன செய்வது என கையைப் பிசைந்த குள்ளநரி இஸ்ரேலும், கன்னத்தில் கைவைத்துக் கொண்டிருந்த அதன் அமெரிக்க எஜமானும் பொழுது போகாமல் உட்கார்ந்திருந்த பெரிசுகளின் கூடாரமான ஐக்கிய நாடுகள் சபைக்கு மறைமுக நெருக்குதல் கொடுத்தன.
குழந்தைகளின் மீதும், பெண்கள் மற்றும் முதியவர்கள் மீதும் அகதிகள் மீதும், ஆம்புலன்ஸ் மீதும் தாக்குதல் தொடுத்த இஸ்ரேலைக் கண்டிக்க மனம்வராத அமெரிக்காவின் கருணை யற்ற போக்கு உலக மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
கானாவில் குழந்தைக் கொழுந்துகளை கொன்று குவித்தபோதும், லெபனானில் உள்கட்டமைப்பை நிர்மூலமாக்கிய போதும், லெபனானில் பிழைப்புக்காகச் சென்றிருந்த ஆயிரக்கணக்கான வெளி நாட்டு மக்களின் வாழ்வு கேள்விக் குறியான போதும் களத்தில் இறங்காத ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவை போர் நிறுத்தத்திற்கு ஆணை பிறப்பித்தது.
உலக ஊடகங்கள் முதல் உள்ளூர் ஊடகங்கள் வரை இஸ்ரேலைக் குறித்து ஆயிரமாயிரம் கற்பனைக் கதைகளை கட்டவிழ்த்து விட்டிருக்கலாம். ஹிஸ்புல் லாக்களை மோசமாக பயங்கரமாக வருணித்திருக்கலாம். ஆனால் அப்பாவி பொதுமக்களை இஸ்ரேலிடமிருந்து காப்பாற்றியது போலவே, ஹிஸ்புல்லாக் களிடமிருநது இஸ்ரேலியப் படையினரை ஐ.நா. காப்பாற்றி இருக்கிறது.
ஐ.நா.வின் பாதுகாப்பு சபையின் தீர்மானம் 1701ஐ கூர்ந்து கவனித்தால் இஸ்ரேலும் அமெரிக்காவும் கூறியது போல் ஹிஸ்புல்லாக்களின் ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது குறித்து காலக்கெடு குறிப்பிடப்படவே யில்லை. அவ்வாறே ஹிஸ்புல்லாக் களினால் கடத்தப்பட்ட இஸ்ரேலிய வீரர்களையும் ஹிஸ்புல்லாக்கள் இவ்வளவு காலத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்படவில்லை.
ஹிஸ்புல்லாக்களின் ஆயுதங்கள் அனைத்தும் அழிக்கப்படும்வரை போர் தொட ரும் என்று யூத பயங்கரவாதிகளும், புஷ்ஷும் போட்ட வெறிக்கூச்சல் முதன் முறையாக புறக்கணிக்கப்பட்டிருக் கிறது. லெபனான் எல்லையை நோக்கி ஆக்ரோஷமாகப் புறப்பட்ட இஸ்ரேலியத் துருப்புகளும் கவச வாகனங்களும் நிம்மதிப் பெருமூச்சுடன் தங்கள் நிலைகளைச் சென்றடைந்துள்ளன.
மேற்காசியாவின் போக்கிரி தாதாவின் படுதோல்வி குறித்த செய்திகளை உலக வரலாறு பதிவு செய்துவிட்டது. ஹிஸ்புல்லாக்களின் பிரமிக்கத்தக்க வெற்றியை சர்வதேச ராணுவ வியூக வல்லுனர்கள் ஆய்வு செய்யத் தொடங்கி விட்டனர்.
சிரியாவும் ஈரானும் லெபனானுடன் சேர்ந்து குதூகலத்தில் திளைக்கின்றன. அரபுகளுக்கு இந்த வெற்றி உண்மையிலேயே பெரியதுதான் எனினும் வளை குடாப் பிராந்தியத்தில் நிரந்தர வெற்றி கிடைக்க எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றனர். நாமும்தான்!
ஹஸன் நஸருல்லாஹ்
ஈராக்கின் நஜஃப் நகரில் மார்க்கக் கல்வி கற்ற ஸயீத் ஹஸன் நஸருல்லாஹ், அமல் இயக்கத்தின் தலைவர் ஷேக் அப்பாஸ் அல் முஸவ்வியிடம் அரசியல் பால பாடம் கற்றவர். மிக இளம் வயதிலேயே லெபனானில் அமல் அமைப்பின் அரசியல் திட்ட அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1982ல் இஸ்ரேலின் ஆக்கிர மிப்புக்குப் பிறகு ஹிஸ்புல்லாஹ்வில் இணைந்தார். பெக்கா பள்ளத்தாக்கில் இஸ்ரேலை எதிர்த்து நிழற்போராளியாக விளங்கினார்.
நஸருல்லாஹ், லெபனானில் கிராமப்புறத்தில் பிறந்த ஃபாத்திமா யாசினை மண முடித்தார். தனது மூத்த மகன் ஹாதியை இஸ்ரேலியப் படைகளுக்கு பறிகொடுத் தார். அப்போது அவரது அன்பு மகனுக்கு வயது 18 தான்.
இந்த 44 வயது தலைவர் ஒரு புத்தகப் பிரியராம். குறிப்பாக அரசியல் தலைவர் களைப் பற்றிய வாழ்க்கை வரலாறு இவருக்கு மிகவும் பிடித்தமானது. இஸ்ரேலிய பிரதமர்களாக இருந்த 'ஷரோனின் நினைவுகள்' மற்றும் பென்ஜமின் நேதன் யாஹுவின் 'சூரியனின் கீழ் உள்ள நிலப்பரப்பு' என்ற இரண்டு நூல்களும் அவருக்கு பிடித்தமானதாம்.
எதிரிகளைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வது அவசியம் அல்லவா! என்று கூறும் நஸ்ருல்லாஹ், ஷேக் முஸாவி லி இஸ்ரேலிய தீய சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட பிறகு 1992ல் ஹிஸ்புல்லாஹ்வின் தலைவராகிறார்.
இவர் தலைமையேற்ற 8 ஆண்டுகளில் இஸ்ரேலின் 22 ஆண்டுகால ஆக்கிர மிப்பு முறியடிக்கப்பட்டது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இஸ்ரேல் லி ஹிஸ்புல் லாஹ் இடையே கைதிகள் பரிமாற்றம் வெற்றிகரமாக நிறைவேறவும் (2004) முக்கியப் பங்கு வகித்தார். தொடர்ந்து மத்தியக் கிழக்கு பிராந்தியத்தில் அதிகம் விரும்பப்படும் மனிதராக அவர் உருவெடுத்துள்ளார்.
களங்களில் சாகசங்கள் நிகழ்த்தினாலும், சமூகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் இஸ்லாம் மட்டுமே தீர்வாக முடியும் என்று நஸருல்லாஹ் நம்புகிறார்.
இஸ்லாம் வணக்கம் செலுத்துவதை மட்டும் கற்றுத்தரவில்லை. மனித சமூகத்தை உன்னதமான முறையில் வடிவமைக்கும் அற்புத செய்தியையும் வழங்குகிறது என்கிறார். இஸ்லாம் மட்டுமே மனிதசமூகம் சந்திக்கும் அனைத்து வினாக் களுக் கும் விடையாக இருக்க முடியும் என்கிறார் வெஞ்சமரில் விளையாடிய வீரர்களின் தலைமைத் தளபதி ஹஸன் நஸ்ருல்லாஹ்.
பீதியில் பிரிட்டன்
தெற்கு லெபனானில் நிலைநிறுத்தப்படும் ஐ.நா. அமைதி காக்கும் படையில் மலேஷியா, இந்தோனேஷியா, பங்களாதேஷ், நேபாளம், டென்மார்க், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தங்களது துருப்புகளை அனுப்ப திட்டமிட்டுள்ளன. டென் மார்க் இரண்டு போர்க்கப்பல்களை அனுப்ப முடிவெடுத்துள்ளது. எகிப்து, இத்தாலி முதலான நாடுகள் துருப்புகளை அனுப்புவது குறித்து தீவிர பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பிரிட்டன் தனது படைகளை அனுப்பத் தயாராக இல்லை என தெரிவித்து விட்டது. ஈராக்கிலும் ஆப்கானிஸ் தானிலும் தாங்கள் முழுமையாக ஈடுபட்டுள்ளதால் (அதாவது தொடர் உதை வாங்குவதால்) தங்கள் துருப்புகளை அனுப்ப முடியவில்லை என ஐ.நா.வுக்கான பிரிட்டன் தூதுவர் எமிர் ஜோன்ஸ் பெர்ரி தெரிவிக்கிறார்.
இதனிடையே, இஸ்ரேலின் இந்த படுதோல்வி குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என இஸ்ரேலில் 65 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஓல்மர்ட் வெளியேற வேண்டும் என இஸ்ரேலில் போராட்டம் வலுத்து வருகிறது.
மூன்றாம் முறையாக அறுபட்ட மேற்குலகம்
லெபனானிலிருந்து 'தப்பித்தோம் பிழைத்தோம்' என்று நடையை கட்டிய இஸ்ரேலியப் படைகளின் வெற்றிகரமான(!) வெளியேற்றம் மேற்குலக சக்திகளுக்கு கிடைத்த மூன்றாது மூக்குடைப்பாக வரலாற்று ஆய்வாளர்களால் வர்ணிக்கப்படு கிறது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக பாலஸ்தீன மக்களின் உரிமைகளை நசுக்கிய இனவெறி இஸ்ரேலை ஹமாஸ் தனது அதிரடி நடவடிக்கையின் மூலம் எதிர் கொண்டது. யூத சாம்ராஜ்யம் குலுங்கியது.
உயிரை துச்சமென நினைத்த ஹமாஸ் போராளிகள் மன உறுதிக்கு முன்பு இஸ்ரேல் வல்லாதிக்க அரசால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஹமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கம் என முத்திரைக் குத்தி அழிக்க முற்பட்டனர். அதன் அற்புதத் தலைவர்களான ஷேக் அஹ்மது யாஸினையும், அப்துல் அஜீஸ் ரண்டஸியையும் கொடூரமாக ஏவுகணைத் தாக்குதலில் படுகொலை புரிந்தது. ஹமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கம், நாங்கள் ஜனநாயகத்தை மட்டுமே அங்கீகரிப் பவர்கள் என்று பசப்பிய யூத பயங்கரவாதிகளின் முகத்தில் கரிபூசுவதைப் போல ஹமாஸ் அரசியலில் குதித்து நாடாளுமன்றத்தைக் கைப்பற்றியது. அதை சகித்துக் கொள்ள முடியாத ஜியோனிஸ பயங்கரவாதிகள், பொருளாதாரத் தடை விதித்தார்கள். இப்பொழுது கடும் தாக்குதலை இஸ்ரேல் தொடுத்தாலும், உள உறுதி யுடன் போராளிகள் நிலைத்து நிற்கிறார்கள்.
அவ்வாறே ஈராக்கில் பெரியண்ணன் அமெரிக்காவுக்கு கிடைத்து வரும் அடிகள் அது வரலாற்றிலேயே எதிர்பாராதது. ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் போரினை எதிர்த்து அமெரிக்காவில் வலுத்துவரும் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களே இதற்கு சாட்சி. 1400க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவத்தினர் ஈராக் போராளிகளால் கொல்லப்பட்டனர். அமெரிக்கர்கள் அதிகமாக அடிவாங்கியது ஈராக் பாலைவன மணல்வெளிகளில்தான் என்ற சாதனை சரித்திரமும் அவர்களுக்கு உண்டு.
வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாத இஸ்ரேலும் அதன் எஜமான் அமெரிக்காவும் தற்போது மீண்டும் அவமானத்தில் சுருண்டு போய் உள்ளனர். மத்தியக் கிழக்கின் சக்தி வாய்ந்த ராணுவத்தினைக் கொண்ட இஸ்ரேல் தாக்குப் பிடிக்க முடியாமல் மூச்சுத்திணறி வருவதை தற்போது உலகம் கண்டது
Subscribe to:
Posts (Atom)
