Thursday, May 31, 2007

ஹைதராபாத் பயங்கரம்இரத்த தானம் கொடுக்கச் சென்ற இளைஞன் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை உண்மை அறியும் குழுவின் 'திடுக்' அறிக்கை!


ஹைதராபாத் பயங்கரம்இரத்த தானம் கொடுக்கச் சென்ற இளைஞன் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை உண்மை அறியும் குழுவின் 'திடுக்' அறிக்கை!லிஅபுசாலிஹ்ஹைதராபாத் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு குறித்தும், அப்பாவி மக்களின் மீது நிகழ்ந்த காவல்துறை யினரின் துப்பாக்கிச்சூடு குறித்தும் உண்மை அறியும் குழு ஆய்வு நடத்தியது.உண்மை அறியும் குழு மே 20ஆம் தேதி ஹைதராபாத்தில், சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டது. அசம்பாவி தத்தை கண்ணால் பார்த்த சாட்சிகளிடம், நடந்தவைகள் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் ஒவைஸி மருத்துவ மனையில் காயமடைந்து சிகிச்சைப் பெற்றுவரும் பாதிக்கப்பட்டோரை சந்தித்தனர்.பள்ளி மீதான குண்டுவெடிப்பு மிகவும் கண்டிக்கத்தக்கது என்றதுடன், அதன் பிறகு நடைபெற்ற காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டையும் வன்மையாகக் கண்டித்தது உண்மை அறியும் குழு. இரண்டுமே சமமான அளவு கண்டிக் கப்பட வேண்டிய குற்றங்கள் என்றும் அது மேலும் தெரிவித்தது.மக்கா பள்ளிவாசல் குண்டுவெடிப்பு முஸ்லிம்களை அச்சுறுத்துவதற்கும், அவர்களது நம்பிக்கை சிதைப்பதற்கும் நிகழ்த்தப்பட்டது என்றும், அதன்பிறகு அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் மீதான தாக்குதலிலும் முஸ்லிம்களுக்கு எதிரான பயங்கரவாதம் வெளிப்பட் டுள்ளது. சிறிய ஆர்ப்பாட்டத் தைக் கூட நசுக்கும் காவல் துறையினரின் முதிர்ச்சியற்ற போக்கும் தெரிய வந்தது எனவும் உண்மை அறியும் குழு கருத்து தெரிவித்துள்ளது.துப்பாக்கிச் சூடு, பள்ளி வாசலிலிருந்து 200 மீட்டர் தூரத்தில் நிகழ்ந்துள்ளது. பள்ளிவாசலிலிருந்து வெளி யேறுபவர்களை நோக்கி காவல்துறை யினரின் துப்பாக்கிச் சூடு நடந்தது. ஒர் இளைஞர் அவரது வீட்டுக்கு அருகி லேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.மற்றொரு 17 வயது முஸ்லிம் இளைஞர், படுகாயம் அடைந்தவர் களுக்கு ரத்த தானம் செய்வதற்காக அஸ்ரா மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தபோது காவல்துறை துப்பாக்கி குண்டு அவரை சாய்த்தது. துப்பாக்கிச் சூட்டினால் காயமடைந்து தரையில் விழுந்து கிடந்த ஒரு மனிதரைக் காப்பாற்ற தரையில் குனிந்து அவரைத் தூக்க முயன்ற இளைஞரின் உயிரையும் காவல்துறையின் குண்டு குடித்தது.காவல்துறையினர் பாரபட்சமான முறையில் நடந்து கொண்டனர். காவல் துறையினர் தங்களது செய்தியாளர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத வாதங்களை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித் துள்ளனர்.ஒரு பெட்ரோல் பங்க்கையும், ஒரு மதுக்கடையையும் ஒரு கும்பல் தாக்க வந்ததாகவும், அதனைத் தவிர்க்கவே துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் கூறினர். உண்மையில் அவ்வாறு நடந்ததற்கான எந்த அடையாளமும் அங்கு இல்லை.பெட்ரோல் பங்க்கின் மூன்று வழிகளும் ஏற்கனவே அடைக்கப் பட்டிருந்தது. ஒரேயொரு வழி மட்டும் தகுந்த கட்டுக்காவலுடன் திறந்திருந்தது. மதுக்கடையைத் தாக்க வந்திருந்தார்கள் என்று கூறி துப்பாக்கிச்சூடு நடத்தி 9 பேரைக் கொன்று விட்டார்கள். 25 பேரை படுகாயப்படுத்தியிருக்கிறார்கள். சொத்துக்களைப் பாதுகாக்கும் அக்கறை இருந்த அளவுக்கு மனித உயிர்களின் மதிப்பு அவர்களுக்குத் தெரியவில்லை.காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு சாலையிலிருந்து பள்ளிவாசல் திசையை நோக்கி நடத்தப்பட்டது கடும் கண்டனத் திற்குரியது. காவல்துறையினரின் நடவடிக்கை மிகவும் பாரபட்சமான முறையில் இருந்ததாக நேரில் பார்த்த சாட்சியான முஹம்மத் கவுஸ் உண்மை அறியும் குழுவிடம் தெரிவித்தார்.குண்டுவெடிப்பு நிகழ்ந்த உடன் அந்த இடத்தைவிட்டு ஓடிய அச்சமடைந்த மக்களை மேலும் பயமுறுத்தும் நோக்கத்துடன் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.குண்டுவெடிப்பு நிகழ்ந்த ஒருமணி நேரத்திற்குள் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. தொழுகைக்குச் சென்றிருந்த தங்களது உறவினர்களின் நிலை என்ன ஆனதோ என்ற பதைபதைப்புடன் வந்திருந்த மக்கள் கூட்டத்தை நோக்கி எவ்வித முன்னறிவிப்பும் இன்றி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். மக்கள் கட்டுப்பாடு இழந்து பதறி சிதறி ஓடிவரும்போது, எவ்வித முன்னெச் சரிக்கையும் விடுக்காமல் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். மக்கள் கூட்டத்தைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர ரப்பர் குண்டுகளை பயன் படுத்தியிருக்க வேண்டும். ஆனால் உண்மையான குண்டுகளே பாதிக்கப்பட்ட வர்களின் உடலைத் துளைத் துள்ளது தெரிய வந்துள்ளது.எந்த உயரதிகாரியின் அனுமதியின் பேரில் இவ்வாறு கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நிகழ்த்தினார்கள் என்ற தகவல் இதுவரை வெளிவரவில்லை. ஹைதராபாத் குண்டுவெடிப்பில் பலியானவர்கள் எத்தனை பேர் என்ற உண்மையையும், துப்பாக்கிச் சூட்டில் எவ்வளவு பேர் பலியானவர்கள் என்ற உண்மை கணக் கையும் இதுவரை அரசு வெளியிட வில்லை. குண்டுவெடிப்பில் பலியானவர்களை விட காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள்தான் அதிகம் என்ற உண்மை விவரங்கள் தற்போது தெரியவந்துள்ளதாக உண்மை அறியும் குழு தெரிவித்துள்ளது.இந்த குண்டுவெடிப்பின் பின்னணி யில் இந்தியாவிற்கு வெளியே இருந்து இயக்கப்படும் இரண்டு இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்கள் இருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. முக்கிய சதிகாரன் என முஸ்லிம் பெயரைக் கொண்ட ஒருவரையும் கூறுகிறது. ஆனால் குண்டுவெடிப்பில் காயடைந்தவர்களின் உடல்களிலிருந்து நகத்துகள், கதவு கைப்பிடி, மற்றும் பிரிஃப்கேஸின் கைப்பிடியின் துண்டு போன்றவை எடுக்கப்பட்டதாக அஸ்ரா மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இக்குண்டு வெடிப்பில் பெட்ரோல் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதிலிருந்து ஆர்.டி.எக்ஸ். டி.என்.டி போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படவில்லை என்பதும் இரண்டு இஸ்லாமிய அமைப்பு கள் சதியில் சம்பந்தப்பட்டிருக் கின்றன என்ற தகவலிலும் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு எந்த ஆதாரமும் கிடைக்க வில்லை. இது பிரச்சினையை திசைதிருப்பும் முயற்சி என்றும் உண்மை அறியும் குழு தெரிவித்திருக்கிறது.குண்டுவெடிப்பும், அதன்பிறகு நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடும் முஸ்லிம் களை அச்சுறுத்துவதற்காகவே நடத்தப் பட்டன என உண்மை அறியும் குழு கருதுகிறது. இரண்டு சம்பவங்களுக்கும் மாநில அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். பல மாநிலங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு எச்சரித்தது. இதை ஆந்திர காவல்துறை பொருட்படுத்தாதது ஏன்? வழிப்பாட்டுத் தலங்கள் மீதான பாதுகாப்பை பலப்படுத்தாது ஏன்? என்றும் உண்மை அறியும் குழு வினா விடுத்தது.வழக்கமாக ஹைதராபாத்தின் மக்கா மஸ்ஜிதில் பாதுகாப்பு பரிசோதனை செய்யப்படும். ஆனால் அன்று பாதுகாப்பு பரிசோதனை நடத்ததப்படவேயில்லை என உண்மை அறியும் குழு சந்தேகம் தெரிவித்துள்ளது. மாநில காவல்துறைத் தலைவர் (டிஜிபி) இடைநீக்கம் செய்யப் படவேண்டும் என்றும் துப்பாக்கிச் சூடு வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உண்மை அறியும் குழு அறிவித்துள்ளது.இந்த உண்மை அறியும் குழுவில்1) ஆந்திர மாநில குடியரசுக் கட்சித் தலைவர் போஜா தாரகம்.2) சிவில் உரிமை கண்காணிப்புக் குழுவின் செயலாளர் லத்திஃப் முஹம்மத் கான்.3) வரவரராவ்4) ஏ.பி.சி.எல்.ஸி.தலைவர் சுரேஷ் குமார்5) பிரபாகர் (பி.கே.எம்) 6) அபினோவா கே.என்.பி.எஸ்7) ராதா ஏ.பி.சி.எம்8) முஜாஹித் ஹாஷ்மி ஏ.எம்.ஏ 9) லியோ ஜஸ்டின்10) கிரியாதுவோ பிராஜபாதி ஆகிய சமூக நல ஆர்வலர்கள் பங்கேற்றன

Friday, May 18, 2007

இந்தியாவில் 600 பள்ளிவாசல்களில் தொழுகைக்குத் தடைஅதிர்ச்சித் தகவல்
அபூசாலிஹ்
இந்தியாவில் வரலாற்றுப் பின்னணியுடைய 600 பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என நாடெங்கும் வாழும் முஸ்லிம்களிடமிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
இந்தியாவில் முகலாயர்கள் ஆண்டபோது கட்டப்பட்ட பள்ளிவாசல்கள் தற்போது மத்திய அரசின் கட்டுப் பாட்டின் கீழ் உள்ளது. இந்தப் பழமையான பள்ளிவாசல் களில் தொழுகையை நடத்தும் உரிமையை உடனடியாக வழங்க வேண்டும் என பலமான கோரிக்கை எழுந்துள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பழமையான 600 பள்ளிவாசல் களில் தலைநகர் டெல்லியில் மட்டும் 53 பள்ளிவாசல்கள் உள்ளன. ஆனால் அங்கெல்லாம் முஸ்லிம்களின் வணக்க வழிபாடு களுக்கு அனுமதி இல்லை. காரணம் இவையெல்லாம் வரலாற்று நினைவுச் சின்னங்கள் என்பதால் இங்கு தொழ அனுமதி இல்லையாம்.
தலைநகர் டெல்லியில் இருக்கும் 53 பள்ளிவாசல்களில் 1) புகழ்பெற்ற செங்கோட் டையில் உள்ளது. 2) ஒரு பள்ளிவாசல் டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் அருகில் உள்ள சாலையில் இருக்கிறது. 3) சஃப்தர்ஜங் அருகே ஒரு பள்ளிவாசல், 4) லோடி பூங்காவின் அருகே உள்ள ஒரு பள்ளிவாசல், 5) குதூப்மினார் வளாகத்தில் ஒரு பள்ளிவாசல், 6) டெல்லி பழைய கோட்டையின் எதிரில் உள்ள கைருல் மன்ஜிலில் ஒரு பள்ளிவாசல், 7) டெல்லி கோல்ஃப் கிளப் மைனத்தின் உட்புறத்தில் உள்ள பள்ளிவாசல் 8) யமுனை நதிக்கரையில் வஜீராபாத் பாலத்தின் அருகில் உள்ள ஒரு பள்ளிவாசல்
லி என பல பள்ளிவாசல்களை முஸ்லிம் கள் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. காரணம் அவை வரலாற்று சிறப்புமிக்க பள்ளிவாசல்களாம். அதனால் மத்திய அரசின் கீழ்வரும் இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தின் பராமரிப்பின் கீழ் வருகிறதாம். அதனால் தொழ அனுமதியில்லையாம்.
பள்ளிவாசல்களின் நோக்கம் தொழுகைக்காகவே. எந்தவித வரலாற்றுக் காரணங் களுக்காகவும் கட்டப்படவில்லை. முஸ்லிம்கள் எங்கும் எப்போதும் எந்த நேரத்திலும் தொழுவதற்காகவே பள்ளிவாசல்கள் நிர்மானிக்கப்பட்டுள்ளன.
புனித மக்காவின் மஸ்ஜிதில் வணக்க வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அவையும் வரலாற்று சிறப்புமிக்க பள்ளிவாசல்தான்.
கொள்ளை அழகு கொண்ட பள்ளி வாசலாக இருக்கட்டும். மிகப்பழமையான பள்ளிவாசலாக இருக்கட்டும். எத்தனை வரலாற்று சிறப்புமிக்க பள்ளிவாசல்களாக இருக்கட்டும். அவைகளைப் பராமரிக்கும் உரிமையும் தகுதியும் முஸ்லிம்களுக்கே உண்டு என்றும் குறிப்பிடும் சமுதாயப் பிரமுகர்கள் முஸ்லிம்களால் நிர்வகிக்கப் படும் எல்லா பள்ளி வாசல்களும் சிறந்த முறையில் பராமரிக்கப்படுகின்றன. ஆனால் இந்தியத் தொல்பொருள் துறையினால் பராமரிக்கப்படும் எண்ணற்ற பள்ளிவாசல்கள் மிகவும் சிதிலமடைந்த நிலையிலேயே உள்ளன.
டெல்லியின் பெரோஷா கோட்லா மைதானத்தின் அருகிலிருக்கும் பள்ளிவாசலில் தொழுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
பாவம் போனால் போகிறது என்று பெருநாள் தொழுகைகளுக்கு மட்டும் இங்கு அனுமதி வழங்கியுள்ளார்கள்.
தங்கள் முன்னோர்கள் கட்டிய இறையில்லங்களில் நுழையவே முடியாமல் தவிக் கும் மக்களின் நிலை வேதனைக்குரியதல்லவா?
அதிகார வர்க்கத்திற்கும் முஸ்லிம் களுக்கும் இடையில் இதுகுறித்து ஒரு முடிவு றாத போர் தொடர்ந்து நடந்து வருகிறது.
டெல்லி வாழ் முஸ்லிம்கள் சஃப்தர்ஜங் மஸ்ஜிதில் தொழ அனுமதிக்க வேண்டும் என்று 80களில் பெரும் போராட்டங்களை நடத்தினார்கள்.
லோடி பூங்காவில் உள்ள பள்ளி வாசலை மக்களுக்கு தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும் என்று பெரும் ஆர்ப்பாட்டங்களை மக்கள் நடத்தி னார்கள் இவர்களின் வேண்டுகோள் நிர்தாட்சண்யமாக மறுக்கப்பட்டன. வழிபாட்டுத் தலங்களை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும், இதற்காக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசுவேன் என்றும் டெல்லி சட்டமன்றத்தின் துணை சபாநாயகர் சுஹைப் இக்பால் தெரிவித்திருக்கிறார்.
இந்தப் பிரச்சினையை தீர்க்காமலே காலம் கழித்துவிட மத்திய அரசு நினைக்காது என்று நம்புகிறோம். காரணம் இது நீறு பூத்த நெருப்பு என்பதை முஸ்லிம் சமுதாயம் சுட்டிக்காட்ட விரும்புகிறது.
பள்ளிவாசல்கள் தொழுகையாளிக்கு உரியது. சுற்றுலா செல்லும் சுகவாசி களுக்கு உரியதல்ல. இதைப் புரிந்து கொள்ளவில்லையெனில் அரசியல் சாசனம் வழங்கி யுள்ள வழிபாட்டுரிமைக்கு என்ன பொருள் என்றும் முஸ்லிம் அறிவு ஜீவிகள் வினா விடுத்துள்ளனர்.
முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. அதேவேளை யில் பிற சமுதாயத்தினர் சுற்றுலாப் பயணிகள் என்ற பெயரில் காலணி களுடன் உள்ளே நுழைவது என்ன நியாயம் என்ற குமுறலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவது எவ்விதத்திலும் நியாயமல்ல என்பதே நடு நிலையாளர்களின் கருத்தாக இருக்கிறது. மக்கள் நலன் நாடும் மத்திய அரசு இந்திய முஸ்லிம்களின் பரம்பரை சொத்துக்களான பழமையும் வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த பள்ளிவாசல் களை ஒப்படைக்க ஆவண செய்ய வேண்டும்
ஏவுகணை தொழில்நுட்பத்தின் தந்தை திப்புசுல்தான்இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டுக்கழகம் பெருமிதம்
இந்திய விடுதலைப் போராட்டத்தில் வீர வரலாறு படைத்தவர் திப்பு சுல்தான். ஆங்கி லேயரை நடுநடுங்க வைத்த அந்த மாவீரன், போர் வியூகத்திலும், படைக்கலத் தயாரிப் பிலும் சிறந்து விளங்கினார்.
226 ஆண்டுகளுக்கு முன்பாகவே ராணுவத் தொழில்நுட்பத்திலும், வல்ல மையிலும் திப்பு சுல்தான் படை சிறந்து விளங்கி ஆங்கி லேயப் படைகளை திணறடித்தது.
மைசூர் சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தில் திப்பு சுல்தானின் கோட்டையும், படைக்கலத் தயாரிப்பு தொழிற்சாலையும் இருந்த அவல நிலை குறித்து உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.
அந்தக் கடிதத்தை இந்திய பாதுபாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டுத்துறை தலைவர் எஸ்.டி. பிள்ளையன் பார்வைக்கு அனுப்பினார் குடியரசுத் தலைவர்.
பிறகென்ன... ஸ்ரீரங்கப்பட்டினத்தில் ராணுவ தொழில்நுட்ப வரலாறு ஒரு புதிய செய்தியை வெளிப்படுத்த காத்துக் கொண்டிருந்த தகவல் உலகுக்குத் தெரிய வந்தது. திப்பு சுல்தான் ராக்கெட் தொழில்நுட்பத்தின் தந்தை என்பதும், ஏவுகணைகளைப் பயன்படுத்தியதில் முன்னோடி எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.
உள்ளூர் மக்களால் புறக்கணிக்கப் பட்ட ஸ்ரீரங்கப்பட்டினத்தில் பழமை வாய்ந்த பகுதிகளில் ராணுவ வரலாற்று ஆராய்ச்சியாளர்களும், இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் ஆய்வுக்காக சுற்றியபோது பல பகுதிகள் இவர்களால் அடையாளம் காணப்பட்டன.
எதிரி முகாம்களை சீர்குலைத்து சின்னாபின்னமாக்கும் வகையில் ஏவுகணை ஏவும் தளங்களை அவர்கள் கண்ணெதிரே கண்டனர்.
இந்திய அரசு, விஞ்ஞானிகளின் சாதனைகளை ஆவணப்படுத்தி அறிஞர் கள் மற்றும் அவர்களின் விஞ்ஞான பாரம்பரியம், அவர்களின் சேவைகள் குறித்தும் ஆய்ந்து வரும் வேளையில் திப்பு சுல்தான் மற்றும் அவர் தந்தையார் ஹைதர் அலியின் நன்கொடைகள் குறித்து சிலாகித்துப் பேசுகிறார் பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மேம்பாட்டு கழகத்தின் முதன்மைக் கண்காணிப்பாள ரான டாக்டர் ஏ.எஸ். சிவதாணு பிள்ளை.
சக்தி வாய்ந்த ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில் நுட்பத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர் திப்புசுல்தான் என்பதை இந்திய விஞ்ஞானிகள் தற்போது அங்கீகரித்துள்ளனர்.
நவீனகால ராணுவ வரலாற்றில் ராக்கெட் படையினை பயன்படுத்தியவர் மைசூர் புலி திப்புசுல்தான் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தி யுள்ளனர். 6000 படை வீரர்களைக் கொண்ட 27 தளபதிகளைக் கொண்ட திப்பு சுல்தானின் முழுமையான ஏவுகணைப் படைப்பிரிவு 1792ல் நிகழ்த்திய சாகசங்கள் பிரிட்டிஷ் படைகளின் பின்னடைவுக்கு காரண மாகிறது. வீரத் திப்புவின் படைகள் பயன் படுத்திய ராக்கெட்டுகள் லண்டன் மாநகரில் உள்ள 'உல் விச்' அருங்காட்சியகத் தில் தற்போது உள்ளது.
ஸ்ரீரங்கப்பட்டினம் நவீனகால ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில் நுட்பத்தின் தொட்டில் எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி பயன்படுத்திய ய2 ராக்கெட்களுக்கு முன்னோடியாக திப்புவின் ராக்கெட் தொழில்நுட்பம் இருந்தது என்றும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
திப்புவின் ராக்கெட் 2.2 கிலோ கிராம் முதல் 5.5 கிலோ கிராம் வரை இருந்தது. ராக்கெட்களை போர்க்களத்தில் பயன்படுத்திய முதல் மாவீரன் திப்பு சுல்தான் என்பதும் உலகிற்கு தெரிவிக்க விரும்புவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
மாவீரன் திப்பு துரோகத்தால் வீழ்ந்த 1799ஆம் ஆண்டுக்குப் பிறகு 700 ராக்கெட்களும், 900 சிறிய வகை ராக்கெட்களும் லண்டன் ராயல் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இரண்டு கிலோ மீட்டர் பாய்ந்து சென்று எதிரிகளின் இலக்குகளைத் தாக்கும் திப்புவின் ஏவுகணைகள் இந்திய ஏவுகணை தொழில்நுட்பத்தையும், வீரத் திப்புவின் போர் நிபுணத்துவத்தையும் விளக்குவண்ணம் உள்ளது.
டாக்டர் பிள்ளை, குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் தலைமையின் கீழ் ராக்கெட் விஞ்ஞானியாய் பணிபுரிந்தவர். விலை மதிப்புமிக்க இந்த வரலாற்றுத் தகவல்களை ஆராய தூண்டுகோலாய் விளங்கிய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு நன்றி கூறிய சிவதாணு பிள்ளை, குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து தங்கள் குழுவின் ஆய்வின் விவரங்களை தெரிவிக்கப் போவதாகக் கூறினார்.
இன்னும் இரண்டொரு மாதத்தில் தனது முழு ஆய்வறிக்கையை பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம் சமர்ப்பிக்கும் என்றும் அறிவித்துள்ளது.
நாஸாவில் கலாம் கண்ட காட்சி
இந்தியாவின் ஏவுகணை தொழில்நுட்ப வளர்ச்சி அணுஆயுத எழுச்சி, ராணுவத் தில் ஏற்பட்ட மறுமலர்ச்சி அத்தனை ஏற்றங்களுக்கும் முக்கியக் காரணமாக விளங்கிய அறிவியல் அறிஞரும் இந்தியக் குடியரசுத் தலைவருமான டாக்டர் அப்துல் கலாம், தனது ஆராய்ச்சிக் பணிக்காலத்தில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸாவிற்குச் சென்றபோது தான் கண்ட காட்சியை நாட்டு மக்களுக்கு தனது 'அக்கினிச் சிறகுகள்' நூலில் விவரித்துள்ளார்.
''எனது பயணத்தின் இறுதிக் கட்டமாக வாலப்ஸ் ஃப்ளைட் ஃபெசிலிட்டி (ரஹப்ப்ர்ல்ள் எப்ண்ஞ்ட்ற் எஹஸ்ரீண்ப்ண்ற்ஹ்) மையத்திற்குச் சென்றேன். இந்த மையம் வர்ஜீனியா மாகாணத்தில் கிழக்குக் கடற்கரைத் தீவான வாலப் ஸில் அமைந்துள்ளது. நாஸாவின் சவுண்டிங் ராக் கெட் திட்டத்திற்கு இந்த மையம்தான் அடித்தளம். இங்கே, வரவேற்புக் கூடத்தில் ஓர் ஓவியம் பிரதானமாகக் காட்சியளித்தது. ஒரு சில ராக்கெட்டுகள் பறந்து கொண்டிருக்கும் பின்னணியுடன் போர்க்களக் காட்சி ஒன்றை ஓவியமாக அங்கே தீட்டியிருந் தார்கள். இந்தக் காட்சியைக் கருவாகக் கொண்ட ஒரு ஓவியம் இப்படிப்பட்ட இடத்தில் இருப்பது ஒன்றும் வியப்பான விஷயம் அல்ல. ஆனால் என் கவனத்தை ஈர்த்தவர்கள், அதில் சித்தரிக்கப்பட்டிருந்த படை வீரர்கள்! ராக்கெட்டுகளை ஏவும் பகுதியில் காணப்பட்ட அவர்கள் வெள்ளை நிறத்தவர்கள் அல்ல. தெற்காசிய மக்களிடம் காணப்படும் உருவ அமைப்புடன் கருப்பு நிறம் கொண்ட படை வீரர்கள், அவர்கள். ஒரு நாள், எனக்குள் ஊற்றெடுத்த ஆர்வம், அந்த ஓவியத்தின் அருகே என்னை இழுத்துச் சென்றது. திப்பு சுல்தானின் படை வெள்ளையர்களுடன் போரிடும் காட்சியை அதில் கண்டேன். திப்பு சுல்தானின் சொந்த தேசத்தில் மறக்கப்பட்டுவிட்ட ஒரு உண் மையை இந்தக் கிரகத்தின் இன்னொரு பகுதியில் நினைவுகூர்ந்து போற்றப் படுவதை அந்தச் சித்திரம் உணர்த்தியது. ராக்கெட் போர்த் தந்திரத்தின் நாயகனாக ஒரு இந்தியனை நாஸா பெருமைப்படுத்தி இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்டேன்.''
சர்வதேச ஏவுகணை தொழில்நுட்ப தந்தையான திப்பு சுல்தானைப் பற்றி நவீன இந்திய ராணுவ தொழில்நுட்ப மேதை டாக்டர் அப்துல் கலாம் குறிப்பிடுவது பொருத்தமானதுதானே?

இலங்கை: மூதூர் முஸ்லிம்களின் வேதனைஇடைவிடாத போரினால் இலங்கை துயரத்தில் தத்தளிக்கிறது. அரசுக்கும் விடு தலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெறும் போரில் அப்பாவிகளின் உயிர்ப்பலிகள் தொடருகின்றன. விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையே நடை பெறும் போரில் எந்தவித பகை பரப்பும் முயற்சிகளில் ஈடுபடாத முஸ்லிம்களும் சிக்கிக் கொண்ட சோக நிகழ்வுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் என்ற துறைமுக நகரில் முஸ்லிம் கள் நிறைந்து வாழ்கின்றனர். திரிகோண மலைப் பகுதியில் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் கடும் சண்டை மூண்டுவரும் நிலையில், அப்பாவி முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக் கும் இடையில் நிகழும் கடும் தாக்குதலில் 18 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். 20 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் முஸ்லிம்கள் மூதூரிலிருந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர் என செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது.
இதற்கு அரசு மீது கடுமையாகக் குற்றம்சாட்டுகிறார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம். ஆனால் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து, புலிகளின் மேல் கைகாட்டுகிறது இலங்கை அரசு.
மூதூர் அரபிக் கல்லூரி மீது புலிகள் நடத்திய தாக்குதலில் 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாகவும் 50 பேர் காயமடைந்ததாகவும் இலங்கை ராணுவம் கூறு கிறது. மூதூரின் புறநகர் பகுதியான தொப்பூரில் உள்ள இரண்டு முஸ்லிம் பள்ளிக் கூடங்கள் மீதும் தாக்குதல் நடைபெற்றதாகவும் அதில் ஐவர் கொல்லப் பட்டதாகவும் அது மேலும் கூறியுள்ளது.
இதனிடையே, முஸ்லிம் இளைஞர் 100 பேரை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்று விட்டதாக இலங்கை ராணுவம் வெளியிட்ட தகவல் உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லெபனானிலும் பாலஸ்தீனத்திலும் தொடரும் முஸ்லிம்கள் மீதான படுகொலைகளைப் போல் தெற்காசியாவில் படுபயங்கரமான நிகழ்வாக இது உருவெடுக்கக் கூடுமோ என சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் அஞ்சிய சூழ்நிலையில், இத்தகைய சம்பவம் ஒன்று நடக்கவே இல்லை என விடுதலைப் புலிகள் தங்களின் பிரத்யேக வலைதளத்தில் மறுத்துள்ளனர்.
இதை மூதூர் பகுதியிலிருந்து வெளியேறிவிடும் முஸ்லிம்கள் கந்தாளையை நோக்கி டிரக்குகளிலும், கால்நடையாகவும் சென்று கொண்டிருக்கும் நிலையில், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட தொற்று வியாதியால் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம் தாய்மார்கள் கண்ணீருடன் கதறியபடி இருக்க, முஸ்லிம் முதியவர்கள் குர்ஆனை அணைத்துப் பிடித்தபடி கந்தாளையில் அகதிகளாக வந்தனர். இலங் கையின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் ஏழரை சதவீதத்தினரே உள்ளனர்.
100 அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைதிகளாக விடுதலைப்புலிகள் பிடித்து வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம் குற்றம்சாட்டியுள்ளார். இதையும் புலிகள் மறுத்துள்ளனர்.
புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் நிகழும் யுத்தத்தில் முஸ்லிம்களும் பாதிக்கப் படுகின்றனர்.
எந்தவித தீங்கெண்ணமும் கொண்டு செயல்படாது தங்களது நாட்டின் முன்னேற்ற மற்றும் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்த மென்மையான உள்ளம் கொண்ட இலங்கை முஸ்லிம்கள் தற்போது நடைபெறும் போரில் அகதிகளாக்கப் படுவது வேதனையல்லவா?
செல்லமாக வாழ்ந்த முஸ்லிம் குழந்தைகள் மூதூரிலிருந்து விரட்டப்பட்டு கந்தாளையில் அகதிகளாக துண்டு ரொட்டிக்காக ஏங்கி நின்ற காட்சி ஊடகங்களில் வந்தபோது காண்போர் கண்கள் குளமாகின.
அச்சத்தின் பிடியில் மூதூர் முஸ்லிம்கள்...
மூதூர், கிழக்கு இலங்கையில் திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய மீன்பிடி ஊராகும். திரிகோணமலையிலிருந்து படகில் சவாரி செய்தால் ஒரு மணி நேரத்தில் மூதூர் சென்று சேரலாம். இங்கு வாழும் 60,000 மக்களில் 33,000 பேர் முஸ்லிம்களாவர். 22,000 பேர் தமிழர்கள் ஆவார்கள். மற்றவர்கள் சிங்களம் பேசு வோராவர். ஊரின் மையப் பகுதியில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அதைச் சுற்றி யுள்ள பகுதிகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
விடுதலைப்புலிகள் மூதூரை தாங்கள் அமைக்க விருக்கும் தமிழீழத்தின் தலை நகரான திரிகோணமலையின் நுழைவாயிலாகக் கருதி வருகிறார்கள். முதூரில் முஸ்லிம்களுக்கும் புலிகளுக்கும் இடையே கடந்த காலங்களில் மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன. புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்ட சில மாதங்களுக்குள் மோதல் வெடித்தது. இந்த மோதல் மட்டக்களப்பு வரை பரவியது. இதேபோல் முதூரைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்களை புலிகள் கடத்தி விட்டார்கள் என்ற பிரச்சினையை முன்வைத்து மோதல்கள் நடைபெற்று வந்துள்ளது.
அக்டோபர் 1990ல் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒரு லட்சம் முஸ்லிம்கள் அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். அதுபோன்ற நிலை தங்களுக்கும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் மூதூர் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள்
இலங்கை: மூதூர் முஸ்லிம்களின் வேதனைஇடைவிடாத போரினால் இலங்கை துயரத்தில் தத்தளிக்கிறது. அரசுக்கும் விடு தலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெறும் போரில் அப்பாவிகளின் உயிர்ப்பலிகள் தொடருகின்றன. விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையே நடை பெறும் போரில் எந்தவித பகை பரப்பும் முயற்சிகளில் ஈடுபடாத முஸ்லிம்களும் சிக்கிக் கொண்ட சோக நிகழ்வுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் என்ற துறைமுக நகரில் முஸ்லிம் கள் நிறைந்து வாழ்கின்றனர். திரிகோண மலைப் பகுதியில் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் கடும் சண்டை மூண்டுவரும் நிலையில், அப்பாவி முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக் கும் இடையில் நிகழும் கடும் தாக்குதலில் 18 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். 20 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் முஸ்லிம்கள் மூதூரிலிருந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர் என செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது.
இதற்கு அரசு மீது கடுமையாகக் குற்றம்சாட்டுகிறார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம். ஆனால் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து, புலிகளின் மேல் கைகாட்டுகிறது இலங்கை அரசு.
மூதூர் அரபிக் கல்லூரி மீது புலிகள் நடத்திய தாக்குதலில் 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாகவும் 50 பேர் காயமடைந்ததாகவும் இலங்கை ராணுவம் கூறு கிறது. மூதூரின் புறநகர் பகுதியான தொப்பூரில் உள்ள இரண்டு முஸ்லிம் பள்ளிக் கூடங்கள் மீதும் தாக்குதல் நடைபெற்றதாகவும் அதில் ஐவர் கொல்லப் பட்டதாகவும் அது மேலும் கூறியுள்ளது.
இதனிடையே, முஸ்லிம் இளைஞர் 100 பேரை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்று விட்டதாக இலங்கை ராணுவம் வெளியிட்ட தகவல் உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லெபனானிலும் பாலஸ்தீனத்திலும் தொடரும் முஸ்லிம்கள் மீதான படுகொலைகளைப் போல் தெற்காசியாவில் படுபயங்கரமான நிகழ்வாக இது உருவெடுக்கக் கூடுமோ என சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் அஞ்சிய சூழ்நிலையில், இத்தகைய சம்பவம் ஒன்று நடக்கவே இல்லை என விடுதலைப் புலிகள் தங்களின் பிரத்யேக வலைதளத்தில் மறுத்துள்ளனர்.
இதை மூதூர் பகுதியிலிருந்து வெளியேறிவிடும் முஸ்லிம்கள் கந்தாளையை நோக்கி டிரக்குகளிலும், கால்நடையாகவும் சென்று கொண்டிருக்கும் நிலையில், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட தொற்று வியாதியால் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம் தாய்மார்கள் கண்ணீருடன் கதறியபடி இருக்க, முஸ்லிம் முதியவர்கள் குர்ஆனை அணைத்துப் பிடித்தபடி கந்தாளையில் அகதிகளாக வந்தனர். இலங் கையின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் ஏழரை சதவீதத்தினரே உள்ளனர்.
100 அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைதிகளாக விடுதலைப்புலிகள் பிடித்து வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம் குற்றம்சாட்டியுள்ளார். இதையும் புலிகள் மறுத்துள்ளனர்.
புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் நிகழும் யுத்தத்தில் முஸ்லிம்களும் பாதிக்கப் படுகின்றனர்.
எந்தவித தீங்கெண்ணமும் கொண்டு செயல்படாது தங்களது நாட்டின் முன்னேற்ற மற்றும் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்த மென்மையான உள்ளம் கொண்ட இலங்கை முஸ்லிம்கள் தற்போது நடைபெறும் போரில் அகதிகளாக்கப் படுவது வேதனையல்லவா?
செல்லமாக வாழ்ந்த முஸ்லிம் குழந்தைகள் மூதூரிலிருந்து விரட்டப்பட்டு கந்தாளையில் அகதிகளாக துண்டு ரொட்டிக்காக ஏங்கி நின்ற காட்சி ஊடகங்களில் வந்தபோது காண்போர் கண்கள் குளமாகின.
அச்சத்தின் பிடியில் மூதூர் முஸ்லிம்கள்...
மூதூர், கிழக்கு இலங்கையில் திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய மீன்பிடி ஊராகும். திரிகோணமலையிலிருந்து படகில் சவாரி செய்தால் ஒரு மணி நேரத்தில் மூதூர் சென்று சேரலாம். இங்கு வாழும் 60,000 மக்களில் 33,000 பேர் முஸ்லிம்களாவர். 22,000 பேர் தமிழர்கள் ஆவார்கள். மற்றவர்கள் சிங்களம் பேசு வோராவர். ஊரின் மையப் பகுதியில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அதைச் சுற்றி யுள்ள பகுதிகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
விடுதலைப்புலிகள் மூதூரை தாங்கள் அமைக்க விருக்கும் தமிழீழத்தின் தலை நகரான திரிகோணமலையின் நுழைவாயிலாகக் கருதி வருகிறார்கள். முதூரில் முஸ்லிம்களுக்கும் புலிகளுக்கும் இடையே கடந்த காலங்களில் மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன. புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்ட சில மாதங்களுக்குள் மோதல் வெடித்தது. இந்த மோதல் மட்டக்களப்பு வரை பரவியது. இதேபோல் முதூரைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்களை புலிகள் கடத்தி விட்டார்கள் என்ற பிரச்சினையை முன்வைத்து மோதல்கள் நடைபெற்று வந்துள்ளது.
அக்டோபர் 1990ல் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒரு லட்சம் முஸ்லிம்கள் அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். அதுபோன்ற நிலை தங்களுக்கும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் மூதூர் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள்
இலங்கை: மூதூர் முஸ்லிம்களின் வேதனைஇடைவிடாத போரினால் இலங்கை துயரத்தில் தத்தளிக்கிறது. அரசுக்கும் விடு தலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெறும் போரில் அப்பாவிகளின் உயிர்ப்பலிகள் தொடருகின்றன. விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையே நடை பெறும் போரில் எந்தவித பகை பரப்பும் முயற்சிகளில் ஈடுபடாத முஸ்லிம்களும் சிக்கிக் கொண்ட சோக நிகழ்வுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் என்ற துறைமுக நகரில் முஸ்லிம் கள் நிறைந்து வாழ்கின்றனர். திரிகோண மலைப் பகுதியில் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் கடும் சண்டை மூண்டுவரும் நிலையில், அப்பாவி முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக் கும் இடையில் நிகழும் கடும் தாக்குதலில் 18 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். 20 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் முஸ்லிம்கள் மூதூரிலிருந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர் என செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது.
இதற்கு அரசு மீது கடுமையாகக் குற்றம்சாட்டுகிறார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம். ஆனால் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து, புலிகளின் மேல் கைகாட்டுகிறது இலங்கை அரசு.
மூதூர் அரபிக் கல்லூரி மீது புலிகள் நடத்திய தாக்குதலில் 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாகவும் 50 பேர் காயமடைந்ததாகவும் இலங்கை ராணுவம் கூறு கிறது. மூதூரின் புறநகர் பகுதியான தொப்பூரில் உள்ள இரண்டு முஸ்லிம் பள்ளிக் கூடங்கள் மீதும் தாக்குதல் நடைபெற்றதாகவும் அதில் ஐவர் கொல்லப் பட்டதாகவும் அது மேலும் கூறியுள்ளது.
இதனிடையே, முஸ்லிம் இளைஞர் 100 பேரை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்று விட்டதாக இலங்கை ராணுவம் வெளியிட்ட தகவல் உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லெபனானிலும் பாலஸ்தீனத்திலும் தொடரும் முஸ்லிம்கள் மீதான படுகொலைகளைப் போல் தெற்காசியாவில் படுபயங்கரமான நிகழ்வாக இது உருவெடுக்கக் கூடுமோ என சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் அஞ்சிய சூழ்நிலையில், இத்தகைய சம்பவம் ஒன்று நடக்கவே இல்லை என விடுதலைப் புலிகள் தங்களின் பிரத்யேக வலைதளத்தில் மறுத்துள்ளனர்.
இதை மூதூர் பகுதியிலிருந்து வெளியேறிவிடும் முஸ்லிம்கள் கந்தாளையை நோக்கி டிரக்குகளிலும், கால்நடையாகவும் சென்று கொண்டிருக்கும் நிலையில், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட தொற்று வியாதியால் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம் தாய்மார்கள் கண்ணீருடன் கதறியபடி இருக்க, முஸ்லிம் முதியவர்கள் குர்ஆனை அணைத்துப் பிடித்தபடி கந்தாளையில் அகதிகளாக வந்தனர். இலங் கையின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் ஏழரை சதவீதத்தினரே உள்ளனர்.
100 அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைதிகளாக விடுதலைப்புலிகள் பிடித்து வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம் குற்றம்சாட்டியுள்ளார். இதையும் புலிகள் மறுத்துள்ளனர்.
புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் நிகழும் யுத்தத்தில் முஸ்லிம்களும் பாதிக்கப் படுகின்றனர்.
எந்தவித தீங்கெண்ணமும் கொண்டு செயல்படாது தங்களது நாட்டின் முன்னேற்ற மற்றும் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்த மென்மையான உள்ளம் கொண்ட இலங்கை முஸ்லிம்கள் தற்போது நடைபெறும் போரில் அகதிகளாக்கப் படுவது வேதனையல்லவா?
செல்லமாக வாழ்ந்த முஸ்லிம் குழந்தைகள் மூதூரிலிருந்து விரட்டப்பட்டு கந்தாளையில் அகதிகளாக துண்டு ரொட்டிக்காக ஏங்கி நின்ற காட்சி ஊடகங்களில் வந்தபோது காண்போர் கண்கள் குளமாகின.
அச்சத்தின் பிடியில் மூதூர் முஸ்லிம்கள்...
மூதூர், கிழக்கு இலங்கையில் திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய மீன்பிடி ஊராகும். திரிகோணமலையிலிருந்து படகில் சவாரி செய்தால் ஒரு மணி நேரத்தில் மூதூர் சென்று சேரலாம். இங்கு வாழும் 60,000 மக்களில் 33,000 பேர் முஸ்லிம்களாவர். 22,000 பேர் தமிழர்கள் ஆவார்கள். மற்றவர்கள் சிங்களம் பேசு வோராவர். ஊரின் மையப் பகுதியில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அதைச் சுற்றி யுள்ள பகுதிகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
விடுதலைப்புலிகள் மூதூரை தாங்கள் அமைக்க விருக்கும் தமிழீழத்தின் தலை நகரான திரிகோணமலையின் நுழைவாயிலாகக் கருதி வருகிறார்கள். முதூரில் முஸ்லிம்களுக்கும் புலிகளுக்கும் இடையே கடந்த காலங்களில் மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன. புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்ட சில மாதங்களுக்குள் மோதல் வெடித்தது. இந்த மோதல் மட்டக்களப்பு வரை பரவியது. இதேபோல் முதூரைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்களை புலிகள் கடத்தி விட்டார்கள் என்ற பிரச்சினையை முன்வைத்து மோதல்கள் நடைபெற்று வந்துள்ளது.
அக்டோபர் 1990ல் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒரு லட்சம் முஸ்லிம்கள் அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். அதுபோன்ற நிலை தங்களுக்கும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் மூதூர் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள்
இலங்கை: மூதூர் முஸ்லிம்களின் வேதனைஇடைவிடாத போரினால் இலங்கை துயரத்தில் தத்தளிக்கிறது. அரசுக்கும் விடு தலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெறும் போரில் அப்பாவிகளின் உயிர்ப்பலிகள் தொடருகின்றன. விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையே நடை பெறும் போரில் எந்தவித பகை பரப்பும் முயற்சிகளில் ஈடுபடாத முஸ்லிம்களும் சிக்கிக் கொண்ட சோக நிகழ்வுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் என்ற துறைமுக நகரில் முஸ்லிம் கள் நிறைந்து வாழ்கின்றனர். திரிகோண மலைப் பகுதியில் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் கடும் சண்டை மூண்டுவரும் நிலையில், அப்பாவி முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக் கும் இடையில் நிகழும் கடும் தாக்குதலில் 18 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். 20 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் முஸ்லிம்கள் மூதூரிலிருந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர் என செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது.
இதற்கு அரசு மீது கடுமையாகக் குற்றம்சாட்டுகிறார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம். ஆனால் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து, புலிகளின் மேல் கைகாட்டுகிறது இலங்கை அரசு.
மூதூர் அரபிக் கல்லூரி மீது புலிகள் நடத்திய தாக்குதலில் 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாகவும் 50 பேர் காயமடைந்ததாகவும் இலங்கை ராணுவம் கூறு கிறது. மூதூரின் புறநகர் பகுதியான தொப்பூரில் உள்ள இரண்டு முஸ்லிம் பள்ளிக் கூடங்கள் மீதும் தாக்குதல் நடைபெற்றதாகவும் அதில் ஐவர் கொல்லப் பட்டதாகவும் அது மேலும் கூறியுள்ளது.
இதனிடையே, முஸ்லிம் இளைஞர் 100 பேரை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்று விட்டதாக இலங்கை ராணுவம் வெளியிட்ட தகவல் உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லெபனானிலும் பாலஸ்தீனத்திலும் தொடரும் முஸ்லிம்கள் மீதான படுகொலைகளைப் போல் தெற்காசியாவில் படுபயங்கரமான நிகழ்வாக இது உருவெடுக்கக் கூடுமோ என சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் அஞ்சிய சூழ்நிலையில், இத்தகைய சம்பவம் ஒன்று நடக்கவே இல்லை என விடுதலைப் புலிகள் தங்களின் பிரத்யேக வலைதளத்தில் மறுத்துள்ளனர்.
இதை மூதூர் பகுதியிலிருந்து வெளியேறிவிடும் முஸ்லிம்கள் கந்தாளையை நோக்கி டிரக்குகளிலும், கால்நடையாகவும் சென்று கொண்டிருக்கும் நிலையில், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட தொற்று வியாதியால் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம் தாய்மார்கள் கண்ணீருடன் கதறியபடி இருக்க, முஸ்லிம் முதியவர்கள் குர்ஆனை அணைத்துப் பிடித்தபடி கந்தாளையில் அகதிகளாக வந்தனர். இலங் கையின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் ஏழரை சதவீதத்தினரே உள்ளனர்.
100 அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைதிகளாக விடுதலைப்புலிகள் பிடித்து வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம் குற்றம்சாட்டியுள்ளார். இதையும் புலிகள் மறுத்துள்ளனர்.
புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் நிகழும் யுத்தத்தில் முஸ்லிம்களும் பாதிக்கப் படுகின்றனர்.
எந்தவித தீங்கெண்ணமும் கொண்டு செயல்படாது தங்களது நாட்டின் முன்னேற்ற மற்றும் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்த மென்மையான உள்ளம் கொண்ட இலங்கை முஸ்லிம்கள் தற்போது நடைபெறும் போரில் அகதிகளாக்கப் படுவது வேதனையல்லவா?
செல்லமாக வாழ்ந்த முஸ்லிம் குழந்தைகள் மூதூரிலிருந்து விரட்டப்பட்டு கந்தாளையில் அகதிகளாக துண்டு ரொட்டிக்காக ஏங்கி நின்ற காட்சி ஊடகங்களில் வந்தபோது காண்போர் கண்கள் குளமாகின.
அச்சத்தின் பிடியில் மூதூர் முஸ்லிம்கள்...
மூதூர், கிழக்கு இலங்கையில் திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய மீன்பிடி ஊராகும். திரிகோணமலையிலிருந்து படகில் சவாரி செய்தால் ஒரு மணி நேரத்தில் மூதூர் சென்று சேரலாம். இங்கு வாழும் 60,000 மக்களில் 33,000 பேர் முஸ்லிம்களாவர். 22,000 பேர் தமிழர்கள் ஆவார்கள். மற்றவர்கள் சிங்களம் பேசு வோராவர். ஊரின் மையப் பகுதியில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அதைச் சுற்றி யுள்ள பகுதிகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
விடுதலைப்புலிகள் மூதூரை தாங்கள் அமைக்க விருக்கும் தமிழீழத்தின் தலை நகரான திரிகோணமலையின் நுழைவாயிலாகக் கருதி வருகிறார்கள். முதூரில் முஸ்லிம்களுக்கும் புலிகளுக்கும் இடையே கடந்த காலங்களில் மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன. புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்ட சில மாதங்களுக்குள் மோதல் வெடித்தது. இந்த மோதல் மட்டக்களப்பு வரை பரவியது. இதேபோல் முதூரைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்களை புலிகள் கடத்தி விட்டார்கள் என்ற பிரச்சினையை முன்வைத்து மோதல்கள் நடைபெற்று வந்துள்ளது.
அக்டோபர் 1990ல் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒரு லட்சம் முஸ்லிம்கள் அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். அதுபோன்ற நிலை தங்களுக்கும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் மூதூர் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள்
இலங்கை: மூதூர் முஸ்லிம்களின் வேதனைஇடைவிடாத போரினால் இலங்கை துயரத்தில் தத்தளிக்கிறது. அரசுக்கும் விடு தலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெறும் போரில் அப்பாவிகளின் உயிர்ப்பலிகள் தொடருகின்றன. விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையே நடை பெறும் போரில் எந்தவித பகை பரப்பும் முயற்சிகளில் ஈடுபடாத முஸ்லிம்களும் சிக்கிக் கொண்ட சோக நிகழ்வுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் என்ற துறைமுக நகரில் முஸ்லிம் கள் நிறைந்து வாழ்கின்றனர். திரிகோண மலைப் பகுதியில் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் கடும் சண்டை மூண்டுவரும் நிலையில், அப்பாவி முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக் கும் இடையில் நிகழும் கடும் தாக்குதலில் 18 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். 20 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் முஸ்லிம்கள் மூதூரிலிருந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர் என செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது.
இதற்கு அரசு மீது கடுமையாகக் குற்றம்சாட்டுகிறார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம். ஆனால் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து, புலிகளின் மேல் கைகாட்டுகிறது இலங்கை அரசு.
மூதூர் அரபிக் கல்லூரி மீது புலிகள் நடத்திய தாக்குதலில் 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாகவும் 50 பேர் காயமடைந்ததாகவும் இலங்கை ராணுவம் கூறு கிறது. மூதூரின் புறநகர் பகுதியான தொப்பூரில் உள்ள இரண்டு முஸ்லிம் பள்ளிக் கூடங்கள் மீதும் தாக்குதல் நடைபெற்றதாகவும் அதில் ஐவர் கொல்லப் பட்டதாகவும் அது மேலும் கூறியுள்ளது.
இதனிடையே, முஸ்லிம் இளைஞர் 100 பேரை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்று விட்டதாக இலங்கை ராணுவம் வெளியிட்ட தகவல் உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லெபனானிலும் பாலஸ்தீனத்திலும் தொடரும் முஸ்லிம்கள் மீதான படுகொலைகளைப் போல் தெற்காசியாவில் படுபயங்கரமான நிகழ்வாக இது உருவெடுக்கக் கூடுமோ என சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் அஞ்சிய சூழ்நிலையில், இத்தகைய சம்பவம் ஒன்று நடக்கவே இல்லை என விடுதலைப் புலிகள் தங்களின் பிரத்யேக வலைதளத்தில் மறுத்துள்ளனர்.
இதை மூதூர் பகுதியிலிருந்து வெளியேறிவிடும் முஸ்லிம்கள் கந்தாளையை நோக்கி டிரக்குகளிலும், கால்நடையாகவும் சென்று கொண்டிருக்கும் நிலையில், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட தொற்று வியாதியால் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம் தாய்மார்கள் கண்ணீருடன் கதறியபடி இருக்க, முஸ்லிம் முதியவர்கள் குர்ஆனை அணைத்துப் பிடித்தபடி கந்தாளையில் அகதிகளாக வந்தனர். இலங் கையின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் ஏழரை சதவீதத்தினரே உள்ளனர்.
100 அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைதிகளாக விடுதலைப்புலிகள் பிடித்து வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம் குற்றம்சாட்டியுள்ளார். இதையும் புலிகள் மறுத்துள்ளனர்.
புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் நிகழும் யுத்தத்தில் முஸ்லிம்களும் பாதிக்கப் படுகின்றனர்.
எந்தவித தீங்கெண்ணமும் கொண்டு செயல்படாது தங்களது நாட்டின் முன்னேற்ற மற்றும் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்த மென்மையான உள்ளம் கொண்ட இலங்கை முஸ்லிம்கள் தற்போது நடைபெறும் போரில் அகதிகளாக்கப் படுவது வேதனையல்லவா?
செல்லமாக வாழ்ந்த முஸ்லிம் குழந்தைகள் மூதூரிலிருந்து விரட்டப்பட்டு கந்தாளையில் அகதிகளாக துண்டு ரொட்டிக்காக ஏங்கி நின்ற காட்சி ஊடகங்களில் வந்தபோது காண்போர் கண்கள் குளமாகின.
அச்சத்தின் பிடியில் மூதூர் முஸ்லிம்கள்...
மூதூர், கிழக்கு இலங்கையில் திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய மீன்பிடி ஊராகும். திரிகோணமலையிலிருந்து படகில் சவாரி செய்தால் ஒரு மணி நேரத்தில் மூதூர் சென்று சேரலாம். இங்கு வாழும் 60,000 மக்களில் 33,000 பேர் முஸ்லிம்களாவர். 22,000 பேர் தமிழர்கள் ஆவார்கள். மற்றவர்கள் சிங்களம் பேசு வோராவர். ஊரின் மையப் பகுதியில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அதைச் சுற்றி யுள்ள பகுதிகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
விடுதலைப்புலிகள் மூதூரை தாங்கள் அமைக்க விருக்கும் தமிழீழத்தின் தலை நகரான திரிகோணமலையின் நுழைவாயிலாகக் கருதி வருகிறார்கள். முதூரில் முஸ்லிம்களுக்கும் புலிகளுக்கும் இடையே கடந்த காலங்களில் மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன. புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்ட சில மாதங்களுக்குள் மோதல் வெடித்தது. இந்த மோதல் மட்டக்களப்பு வரை பரவியது. இதேபோல் முதூரைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்களை புலிகள் கடத்தி விட்டார்கள் என்ற பிரச்சினையை முன்வைத்து மோதல்கள் நடைபெற்று வந்துள்ளது.
அக்டோபர் 1990ல் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒரு லட்சம் முஸ்லிம்கள் அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். அதுபோன்ற நிலை தங்களுக்கும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் மூதூர் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள்
இஸ்ரேலை வீழ்த்தியது ஹிஸ்புல்லாஹ்!34 நாள் போரில் பிரமிக்கத்தக்க வெற்றி!!
அபூசாலிஹ்
1948ல் கள்ளங்கபடமற்ற அரபு பூபாகத்தில் வஞ்சக நோக்கம் கொண்ட மேற்குலக சக்திகளால் அடாவடித்தனமாக அமைக்கப்பட்ட இஸ்ரேல் என்ற மனிதகுல விரோத அரசின் படைகள் வரலாற்றிலேயே முதன் முறையாக முறியடிக்கப் பட்டது.
இதன்மூலம் 58 ஆண்டு களாக தனது கோரத் தாக்குதல்கள் மூலம் வளைகுடா பகுதியைக் குதறிய ஜியோனிஸ சக்திகளின் ஆட்டம் முடிவுக்கு வரும் காலம் நெருங்கி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
இஸ்ரேல் என்றால் ஒரு போக்கிரித்தனமான வல்லரசு. அதனோடு மோதும் நாடு கள் சிதறி சின்னாபின்னமாவது உறுதி என்று இஸ்ரேலுக்கு ஆதரவான கருத் தோட்டம் நேற்றுவரை உலகம் முழுவதும் நிலவி வந்தது உண்மை.
இஸ்ரேல் தன்னை தாக்கியவர்களை மிகவும் மோசமாக தண்டிக்கும். ஒரு அடி கொடுத்தால் 10 அடி கொடுக்கும் வல்லமை இஸ்ரேலுக்கு உண்டு என தலைக்கு மேலே மட்டுமல்ல, தலைக்கு உள்ளேயும் ஒன்றுமேயில்லாத நம்நாட்டு பத்திரிகை யாளர் ஒருவரும் அவரைப் போன்று சிலரும் வக்காலத்து வாங்குவதைப் போன்று இஸ்ரேலின் ராணுவ வல்லமை அப்போது விளங்கியது.
1948 தொடங்கி திடீர் திடீரென ஏற்படுத்திய வலுச்சண்டைகளின் மூலம் தனது எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டே வந்தது. அரபுகளை அழிப்பதே தனது முழுமுதற் கடமை எனக் கருதி அழிவு வேலைகளில் முழுமூச்சாக இறங்கியது.
6 நாள் போர் என்று வரலாற்றில் அழைக்கப்பட்ட 1967ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இஸ்ரேலை எதிர்த்துப் போரிட்ட எகிப்து, சிரியா, ஜோர்டான் என்ற அரபகத்தின் பிரசித்திபெற்ற நாடுகளின் படைகளை சர்வ அலட்சியமாக இஸ்ரேல் நசுக்கியது. இதன்விளைவாக சிரியாவுக்குச் சொந்தமான கோலன் குன்றுகளையும், எகிப்தின் சினாய் பகுதியையும், லெபனானின் ஷேபா பண்ணைகளையும், ஜெரு ஸ்ஸலமின் பெரும் பகுதிகளையும் அது கபளீகரம் செய்தது.
1970களில் ராணுவ வல்லமையால் தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்ளத் தொடங்கிய ஈராக்கை, அணுதொடர்பான சோதனைகளில் இறங்கிய ஈராக்கின் அணுக்கரு உலையின் மீது வலுக் கட்டாயமாக வான் தாக்குதல் நிகழ்த்தி அந்த எண்ணெய் வள அரபு தேசத்தின் அணுஆயுதக் கனவைச் சிதைத்தது.
எல்லைக் கடந்த எச்சரிக்கை உணர்வும், கரை காண முடியாத கோழைத்தனமும் நிறைந்த இஸ்ரேல் பேரழிவு ஆயுதங்களைக் கப்பல் கப்பலாகவும், விமானங்களிலும் அமெரிக்காவிடம் இருந்து பெற்றுவந்த இஸ்ரேல், புதிய புதிய சதி ஆய்வுத் திட்டங்களை அமெரிக்கா விடம் இருந்து உடனடி டெலிவரியில் வாங்கிவந்த இஸ்ரேல், 200 அணு குண்டுகளை தன்னகத்தே பதுக்கி வைத்திருப்பதாக நம்பப் பட்ட இஸ்ரேல், கடுமையான பயிற்சி பெற்ற 5 லட்சம் தரைப்படை வீரர்களைக் கொண்ட இஸ்ரேல், ஒரு சின்னஞ்சிறிய நாட்டில் செயல்பட்டுவந்த 5 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் வீரர்களை மட்டுமே உள்ளாக்கியுள்ளதாக நம்பப்படும் ஹிஸ்புல்லாஹ் போராளிகளிடம் படுதோல்வி அடைந்தனர்.
லெபனான் மீதான ஆக்கிரமிப்பு போரில் இஸ்ரேல் தனது வன்தாக்குதல்கள் மூலம் மனித உரிமைகளை மீறியது. ஏழைகளின் தேசமான லெபனானை இரக்கமற்று தாக்கியது. மேற்குலக ஊடகங்கள் அப்பாவிகளைக் கொன்று மீசையை முறுக்கிய இஸ்ரேலை, உலகின் நான்காவது வல்லரசு என அடை மொழியிட்டு அழைத்தன.
லெபனான் போர்க்களத்தில், ஹிஸ்புல்லாஹ் போராளிகளிடம் இஸ்ரேலியப் படை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறிய காட்சியை அமெரிக்க ஆதரவு ஊடகங்களே மறைக்க முடியாமல், மழுப்ப முடியாமல் வெளியிட வேண்டியதாயிற்று.
எவ்வளவு காலம் உண்மையை மறைக்க இயலும். இஸ்ரேலும் அமெரிக்காவும் போட்டி போட்டு செல்லம் கொஞ்சிய சூப்பர் த்ரோவா போர்க்கப்பல் மன்சூரி கடற்கரைப் பகுதியில் தென்பகுதி நகரான டயரின் அருகில் சர்வ அலட்சியமாக ஹிஸ்புல்லாஹ் போராளிகளால் தகர்க்கப்பட்டது.
உயிர்க்கொல்லி ஆயுதங்களுடன் வந்த அந்தக் கப்பலின் 'அகால மரணம்' யூத பயங்கரவாதிகளின் கம்பீரக் கனவை கலைத்துப் போட்டது. நேரடியான தாக்குதலில் கொழுந்துவிட்டு அந்த போர்க்கப்பல் எரிந்த காட்சியை அல்மனார் தொலைக் காட்சி ஒளிபரப்பிய போது லெபனான் மக்கள் கண்டுகளித்தனர்.
நவீன ராணுவக் கட்டமைப்பான இஸ்ரேலியப் படையினரால் ஹிஸ்புல்லாஹ் போராளிகளின் கூர்மையான தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்பதே உண்மை.
50 ஆண்டுகால பழமைவாய்ந்த கட்யூஷா ராக்கெட்டுகளை வைத்துக் கொண்டு ஹைஃபாவிலும் இஸ்ரேலின் பிற எல்லையோரப் பகுதிகளிலும் ஹிஸ்புல்லாஹ் ராக்கெட்டுகள் நிகழ்த்திய வானவேடிக்கை இஸ்ரேலின் ராணுவ வல்லமை ஒரு மாயை என்பதை வெளிச்சம் போட்டு காட்டின.
குறைந்தபட்சம் நான்கு அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் ஹிஸ்புல்லாஹ் போராளிகளால் வீழ்த்தப்பட்டன. ஒரு போர்க்கப்பல் தகர்க்கப்பட்டது. இஸ்ரேலின் பெருமை க்குரிய மெர்க்கவா டாங்குகள் அழிக்கப்பட்டன. ஒவ்வொன்றும் 44 மில்லியன் டாலர் பெறுமதியுடையது இந்த டாங்குகள்.
இஸ்ரேலின் 12 கவச வாகனங்கள் போர்க்களத்தில் அழிக்கப்பட்டன. 130க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் படுகாயம் அடைந்தனர்.
தரைப்படை தாக்குதலை தொடங்கி விட்டால் அவ்வளவுதான் ஹிஸ்புல்லாக் கள் முழுமையாக அழித்தொழிக்கப் படுவார்கள் என ஆணவமாக அறிவித்த இஸ் ரேல் தரைப்படையை அணியணியாய் லெபனானை நோக்கி புறப்பட வைத்தது. ஹிஸ்புல்லாக்களின் விஸ்வரூபத்தைக் கண்டு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு சக்திகள் மூச்சுத் திணறினர். தனது தரைப்படை தளபதியை மாற்றப் போவதாய் அறிவித்தது. எல்லைப்புற நகரைவிட்டு தன் நாட்டு மக்களை இடம்பெயருமாறும், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் கெஞ்ச ஆரம்பித்தது.
ஒரு மாதம் தாண்டி ஒரு நீண்ட தாக்குதலில் எந்த வல்லரசு பின் பலமுமற்ற நாட்டை இரக்கமற்று தாக்கியது. ஆயுதங்கள் ஏந்தாத அப்பாவிக் குழந்தைகளை கொடூரமாகக் கொலை செய்தது. அப்பாவிகளை மட்டுமே கொலை செய்த ஜியோனிஸ நாட்டை, ராணுவ வல்லமை மிகுந்த நாடு என்று மேற்கத்திய ஊடக ங்களும் நம்மூர் ஊடகங்களும் சித்தரித்தன.
பிரிட்டனிலிருந்து வெளிவரும் சில ஊடகங்கள் இஸ்ரேல் உலகின் நான்காவது வல்லமை மிகுந்த நாடு என்று புளுகித் தள்ளின. அவையெல்லாம் பழங்கதை என மாற்றினர் ஹிஸ்புல்லாஹ் போராளிகள்.
குழந்தைகள் பெண்கள் உட்பட 1400க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களைக் கொன்று லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயரக் காரணமாக இருந்த, லெபனா னின் உள்கட்டமைப்பை ஒட்டுமொத்தமாக சீர்குலைத்த, விமான நிலையம், நெடுஞ் சாலைகள், பாலங்கள், மின்நிலையங்களைத் தாக்கி நிர் மூலமாக்கிய இஸ்ரேலின் குற்றச் செயலையும், வெறுமனே கைகட்டி வேடிக்கைப் பார்த்த சர்வதேச சமூகத் தின் பரிதாப நிலை கண்டு சமுதாய ஆர்வலர்கள் வேதனை அடைந்தனர்.
ஜனநாயகக் காவலனாக தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் அமெரிக்க ஏகாதிபத்திய அரசு சமாதான முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டது. போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையை முடக்கி போட்டது. லெபனானில் இஸ்ரேலின் நோக்கம்(!) நிறைவேறும்வரை ஒத்துழைக்கப் போவதாகக் கூறியது.
அமெரிக்காவால் அனுப்பப்பட்ட பேரழிவு ஆயுதங்கள் நிரப்பப்பட்ட கப்பல் கை கொடுக்கும் என்ற ஆவணத்தில் ஹிஸ்புல்லாக்கள் அழிக்கப்படும்வரை இஸ்ரேலிய தாக்குதல் நீடிக்கும் என்று இஸ்ரேலியப் பிரதமர் ஜம்பமாக அறிவித்தார்.
ஹிஸ்புல்லாக்கள் மேற்காசிய பிராந் தியத்தின் மாவீரர்களாக கருதப்படுகி றார்கள். இஸ்ரேலிய வான்வெளியை நோக்கி சீறிப் பாய்ந்த ஹிஸ்புல்லாக்களின் ராக்கெ ட்டுகள் ஷியாக்களின் ஆதரவை மட்டும் நாங்கள் பெறவில்லை. சன்னி முஸ்லிம் கள், கிறிஸ்தவர்கள் மற்றும் ட்ரூஸ் சமூக மக்களின் ஆதரவையும் பெற்றுவிட்டன என்பதை சொல்லாமல் சொல்லின.
வென்றது யார்? இஸ்ரேலா லி ஹிஸ்புல்லாக்களா? என்பதை இஸ்ரேலில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகள் பட்டவர்த்தனமாக வெளியிட்டு வருகின்றன.
லெபனான் மீதான ஆக்கிரமிப்பு போரினைத் துவக்கிய நேரத்தில் இஸ்ரேலிய மக்களிடம் ஏறுமுகத்தில் இருந்த ஆதரவு தற்போது அதல பாதாளத்தில் வீழ்ந்து விட்டதாக டெல்அவிவ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் ராணுவம் அப்பாவிகளையே குறிவைத்து தாக்கியபோதும், ஹிஸ்புல்லாக் கள் இஸ்ரேலிய ராணுவத்தினரை மட்டுமே குறிவைத்து தாக்கியதாக அன்றாடச் செய்திகள் அறிவித்தன.
இந்நிலையில் பிரபல இஸ்ரேலிய ஹாரெட்ஜில் வெளியான கருத்துக் கணிப்பில் 73 சதவீத மக்கள் இஸ்ரேல் இந்தப் போரில் வெற்றி பெற்றதாக பீற்றிக் கொள்ள முடியாது என்று தங்கள் கருத்தினை தெரிவித்தனர்.
இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் ஹிஸ்புல்லாக்களால் கடத்தப்பட்டதால் வெகுண் டெழுந்த இஸ்ரேல் லெபனானில் தெற்குப் பகுதியில் தாக்குதலை நிகழ்த்தியதில் சில மணி நேரங்களில் ஹிஸ்புல்லாக்களின் பதிலடியில் எட்டு இஸ்ரேலியப் போர் வீரர்கள் இறந்தனர். இது போரின் முதல் நாளான ஜூலை 12ஆம் தேதி நடந்தது. சளைக்காத ஹிஸ்புல்லாஹ் போராளிகளின் ராக்கெட்டுகள் மழையென இஸ்ரேலிய வான்வெளியில் சீறின. இதில் இஸ்ரேலிய ராணுவனத்தினர் 130க்கும் மேற் பட்டோர் பலியானார்கள். இதுபற்றிய தகவல்கள் வெளியாகத் தொடங்கியதும் 'குய்யோ முறையோ' என அலறாத குறையாக இஸ்ரேலிய மக்கள் ஆடிப்போய் விட்டனர்.
1982ல் லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலை எதிர்த்தும், பெய்ரூட்டின் சப்ரா, ஷட்டிலா என்ற இரு பாலஸ்தீன அகதி முகாம்கள் மீதும் நிகழ்த்தப்பட்ட மனிதகுல விரோத தாக்குதலை எதிர்த்தும் அன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தி னால் அன்றைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏரியல் ஷரோன் பதவியை விட்டு ஓட வேண்டியதாயிற்று. இஸ்ரேலியர்களின் கருத்துக் கணிப்பினை வெளியிட்ட ஹாரெட்ஜ் செய்தி ஏடு யஹுத் ஓல்மர்ட் கண்டிப்பாக வெளியேற வேண்டும் என்று எச்சரித்துள்ளது.
யஹுத் ஓல்மர்ட் குருட்டுத்தனமாக ராணுவத்தின் சொற்படி ஆடுகிறார், முக்கிய வினாக்கள் கூட அவர் விடுப்பதில்லை.
ஒருநாள் ஹஸன் நஸருல்லாஹ், பதுங்கும் அரணிலிருந்து வெளியே வந்து, தாம் வெற்றி பெற்று விட்டதாக அறிவித்தால் ஓல்மர்ட் தனது பதவியில் உட்கார்ந்து கொண்டிருக்க முடியாது என்று ஹாரெட்ஜ் பத்திரிகை கடுமையாகச் சாடியிருக் கிறது.
நஸருல்லாஹ் வந்தார், தொலைக் காட்சியில் உரையாற்றினார், மக்களுக்கு நன்றி தெரிவித்தார், போராளிகளைப் புகழ்ந்தார். ஹாரெட்ஜ் செய்தி ஏடு குறிப்பிட்டதைப் போலவே ஓல்மர்ட் ஓடவேண்டிய நேரம் வந்துவிட்டது போலும்.
ஓல்மர்ட் மிகக்குறைந்த ராணுவ அறிவே கொண்டவர் என்று தெரிவித்த அந்நாட்டு ஊடகம், இஸ்ரேலின் வரலாற்றில் ராணுவம் சொதப்பியது ஓல்மர்ட்டின் தலைமையின் கீழ்தான் என்றும் விளாசித் தள்ளியிருக்கிறது.
போர் முடிந்த பிறகு இஸ்ரேல் புதிய பிரதமரை பார்க்கப் போகிறது என்றும் கடுமையான கருத்துக்களை இஸ்ரேலிய மக்கள் தெரிவித்தனர்.
இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டால் ஹிஸ்புல்லாக்களின் வெற்றியை அங்கீகரித்தாகிவிடும், போர் நிறுத்தம் அறிவிக்க விடக்கூடாது என இஸ்ரேலிய பழமைவாதிகள் அழுத்தம் கொடுத்தனர்.
லெபனானின் டயர் பகுதியில் ஊடுருவ முயற்சித்த இஸ்ரேலிய கவச வாகனங்கள் மீது நிகழ்த்தப்பட்ட கடும் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் இஸ்ரேலிய ராணுவம் திணறியது. இஸ்ரேலிய எல்லைப்புற நகரான ஹைஃபா நகரத்தில், மழையெனப் பொழிந்த ஹிஸ்புல்லாக்களின் ராக் கெட்டுகளைக் கண்டு அஞ்சி நடுங்கியது இஸ்ரேல்.
தன்னிச்சையாகப் போரை நிறுத்தி னால் தோல்வியை ஒப்புக்கொண்டதாகி விடும். போரை நீடித்தால் பேரழிவு நிச்சயம். என்ன செய்வது என கையைப் பிசைந்த குள்ளநரி இஸ்ரேலும், கன்னத்தில் கைவைத்துக் கொண்டிருந்த அதன் அமெரிக்க எஜமானும் பொழுது போகாமல் உட்கார்ந்திருந்த பெரிசுகளின் கூடாரமான ஐக்கிய நாடுகள் சபைக்கு மறைமுக நெருக்குதல் கொடுத்தன.
குழந்தைகளின் மீதும், பெண்கள் மற்றும் முதியவர்கள் மீதும் அகதிகள் மீதும், ஆம்புலன்ஸ் மீதும் தாக்குதல் தொடுத்த இஸ்ரேலைக் கண்டிக்க மனம்வராத அமெரிக்காவின் கருணை யற்ற போக்கு உலக மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
கானாவில் குழந்தைக் கொழுந்துகளை கொன்று குவித்தபோதும், லெபனானில் உள்கட்டமைப்பை நிர்மூலமாக்கிய போதும், லெபனானில் பிழைப்புக்காகச் சென்றிருந்த ஆயிரக்கணக்கான வெளி நாட்டு மக்களின் வாழ்வு கேள்விக் குறியான போதும் களத்தில் இறங்காத ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவை போர் நிறுத்தத்திற்கு ஆணை பிறப்பித்தது.
உலக ஊடகங்கள் முதல் உள்ளூர் ஊடகங்கள் வரை இஸ்ரேலைக் குறித்து ஆயிரமாயிரம் கற்பனைக் கதைகளை கட்டவிழ்த்து விட்டிருக்கலாம். ஹிஸ்புல் லாக்களை மோசமாக பயங்கரமாக வருணித்திருக்கலாம். ஆனால் அப்பாவி பொதுமக்களை இஸ்ரேலிடமிருந்து காப்பாற்றியது போலவே, ஹிஸ்புல்லாக் களிடமிருநது இஸ்ரேலியப் படையினரை ஐ.நா. காப்பாற்றி இருக்கிறது.
ஐ.நா.வின் பாதுகாப்பு சபையின் தீர்மானம் 1701ஐ கூர்ந்து கவனித்தால் இஸ்ரேலும் அமெரிக்காவும் கூறியது போல் ஹிஸ்புல்லாக்களின் ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது குறித்து காலக்கெடு குறிப்பிடப்படவே யில்லை. அவ்வாறே ஹிஸ்புல்லாக் களினால் கடத்தப்பட்ட இஸ்ரேலிய வீரர்களையும் ஹிஸ்புல்லாக்கள் இவ்வளவு காலத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்படவில்லை.
ஹிஸ்புல்லாக்களின் ஆயுதங்கள் அனைத்தும் அழிக்கப்படும்வரை போர் தொட ரும் என்று யூத பயங்கரவாதிகளும், புஷ்ஷும் போட்ட வெறிக்கூச்சல் முதன் முறையாக புறக்கணிக்கப்பட்டிருக் கிறது. லெபனான் எல்லையை நோக்கி ஆக்ரோஷமாகப் புறப்பட்ட இஸ்ரேலியத் துருப்புகளும் கவச வாகனங்களும் நிம்மதிப் பெருமூச்சுடன் தங்கள் நிலைகளைச் சென்றடைந்துள்ளன.
மேற்காசியாவின் போக்கிரி தாதாவின் படுதோல்வி குறித்த செய்திகளை உலக வரலாறு பதிவு செய்துவிட்டது. ஹிஸ்புல்லாக்களின் பிரமிக்கத்தக்க வெற்றியை சர்வதேச ராணுவ வியூக வல்லுனர்கள் ஆய்வு செய்யத் தொடங்கி விட்டனர்.
சிரியாவும் ஈரானும் லெபனானுடன் சேர்ந்து குதூகலத்தில் திளைக்கின்றன. அரபுகளுக்கு இந்த வெற்றி உண்மையிலேயே பெரியதுதான் எனினும் வளை குடாப் பிராந்தியத்தில் நிரந்தர வெற்றி கிடைக்க எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றனர். நாமும்தான்!
ஹஸன் நஸருல்லாஹ்
ஈராக்கின் நஜஃப் நகரில் மார்க்கக் கல்வி கற்ற ஸயீத் ஹஸன் நஸருல்லாஹ், அமல் இயக்கத்தின் தலைவர் ஷேக் அப்பாஸ் அல் முஸவ்வியிடம் அரசியல் பால பாடம் கற்றவர். மிக இளம் வயதிலேயே லெபனானில் அமல் அமைப்பின் அரசியல் திட்ட அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1982ல் இஸ்ரேலின் ஆக்கிர மிப்புக்குப் பிறகு ஹிஸ்புல்லாஹ்வில் இணைந்தார். பெக்கா பள்ளத்தாக்கில் இஸ்ரேலை எதிர்த்து நிழற்போராளியாக விளங்கினார்.
நஸருல்லாஹ், லெபனானில் கிராமப்புறத்தில் பிறந்த ஃபாத்திமா யாசினை மண முடித்தார். தனது மூத்த மகன் ஹாதியை இஸ்ரேலியப் படைகளுக்கு பறிகொடுத் தார். அப்போது அவரது அன்பு மகனுக்கு வயது 18 தான்.
இந்த 44 வயது தலைவர் ஒரு புத்தகப் பிரியராம். குறிப்பாக அரசியல் தலைவர் களைப் பற்றிய வாழ்க்கை வரலாறு இவருக்கு மிகவும் பிடித்தமானது. இஸ்ரேலிய பிரதமர்களாக இருந்த 'ஷரோனின் நினைவுகள்' மற்றும் பென்ஜமின் நேதன் யாஹுவின் 'சூரியனின் கீழ் உள்ள நிலப்பரப்பு' என்ற இரண்டு நூல்களும் அவருக்கு பிடித்தமானதாம்.
எதிரிகளைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வது அவசியம் அல்லவா! என்று கூறும் நஸ்ருல்லாஹ், ஷேக் முஸாவி லி இஸ்ரேலிய தீய சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட பிறகு 1992ல் ஹிஸ்புல்லாஹ்வின் தலைவராகிறார்.
இவர் தலைமையேற்ற 8 ஆண்டுகளில் இஸ்ரேலின் 22 ஆண்டுகால ஆக்கிர மிப்பு முறியடிக்கப்பட்டது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இஸ்ரேல் லி ஹிஸ்புல் லாஹ் இடையே கைதிகள் பரிமாற்றம் வெற்றிகரமாக நிறைவேறவும் (2004) முக்கியப் பங்கு வகித்தார். தொடர்ந்து மத்தியக் கிழக்கு பிராந்தியத்தில் அதிகம் விரும்பப்படும் மனிதராக அவர் உருவெடுத்துள்ளார்.
களங்களில் சாகசங்கள் நிகழ்த்தினாலும், சமூகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் இஸ்லாம் மட்டுமே தீர்வாக முடியும் என்று நஸருல்லாஹ் நம்புகிறார்.
இஸ்லாம் வணக்கம் செலுத்துவதை மட்டும் கற்றுத்தரவில்லை. மனித சமூகத்தை உன்னதமான முறையில் வடிவமைக்கும் அற்புத செய்தியையும் வழங்குகிறது என்கிறார். இஸ்லாம் மட்டுமே மனிதசமூகம் சந்திக்கும் அனைத்து வினாக் களுக் கும் விடையாக இருக்க முடியும் என்கிறார் வெஞ்சமரில் விளையாடிய வீரர்களின் தலைமைத் தளபதி ஹஸன் நஸ்ருல்லாஹ்.
பீதியில் பிரிட்டன்
தெற்கு லெபனானில் நிலைநிறுத்தப்படும் ஐ.நா. அமைதி காக்கும் படையில் மலேஷியா, இந்தோனேஷியா, பங்களாதேஷ், நேபாளம், டென்மார்க், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தங்களது துருப்புகளை அனுப்ப திட்டமிட்டுள்ளன. டென் மார்க் இரண்டு போர்க்கப்பல்களை அனுப்ப முடிவெடுத்துள்ளது. எகிப்து, இத்தாலி முதலான நாடுகள் துருப்புகளை அனுப்புவது குறித்து தீவிர பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பிரிட்டன் தனது படைகளை அனுப்பத் தயாராக இல்லை என தெரிவித்து விட்டது. ஈராக்கிலும் ஆப்கானிஸ் தானிலும் தாங்கள் முழுமையாக ஈடுபட்டுள்ளதால் (அதாவது தொடர் உதை வாங்குவதால்) தங்கள் துருப்புகளை அனுப்ப முடியவில்லை என ஐ.நா.வுக்கான பிரிட்டன் தூதுவர் எமிர் ஜோன்ஸ் பெர்ரி தெரிவிக்கிறார்.
இதனிடையே, இஸ்ரேலின் இந்த படுதோல்வி குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என இஸ்ரேலில் 65 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஓல்மர்ட் வெளியேற வேண்டும் என இஸ்ரேலில் போராட்டம் வலுத்து வருகிறது.
மூன்றாம் முறையாக அறுபட்ட மேற்குலகம்
லெபனானிலிருந்து 'தப்பித்தோம் பிழைத்தோம்' என்று நடையை கட்டிய இஸ்ரேலியப் படைகளின் வெற்றிகரமான(!) வெளியேற்றம் மேற்குலக சக்திகளுக்கு கிடைத்த மூன்றாது மூக்குடைப்பாக வரலாற்று ஆய்வாளர்களால் வர்ணிக்கப்படு கிறது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக பாலஸ்தீன மக்களின் உரிமைகளை நசுக்கிய இனவெறி இஸ்ரேலை ஹமாஸ் தனது அதிரடி நடவடிக்கையின் மூலம் எதிர் கொண்டது. யூத சாம்ராஜ்யம் குலுங்கியது.
உயிரை துச்சமென நினைத்த ஹமாஸ் போராளிகள் மன உறுதிக்கு முன்பு இஸ்ரேல் வல்லாதிக்க அரசால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஹமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கம் என முத்திரைக் குத்தி அழிக்க முற்பட்டனர். அதன் அற்புதத் தலைவர்களான ஷேக் அஹ்மது யாஸினையும், அப்துல் அஜீஸ் ரண்டஸியையும் கொடூரமாக ஏவுகணைத் தாக்குதலில் படுகொலை புரிந்தது. ஹமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கம், நாங்கள் ஜனநாயகத்தை மட்டுமே அங்கீகரிப் பவர்கள் என்று பசப்பிய யூத பயங்கரவாதிகளின் முகத்தில் கரிபூசுவதைப் போல ஹமாஸ் அரசியலில் குதித்து நாடாளுமன்றத்தைக் கைப்பற்றியது. அதை சகித்துக் கொள்ள முடியாத ஜியோனிஸ பயங்கரவாதிகள், பொருளாதாரத் தடை விதித்தார்கள். இப்பொழுது கடும் தாக்குதலை இஸ்ரேல் தொடுத்தாலும், உள உறுதி யுடன் போராளிகள் நிலைத்து நிற்கிறார்கள்.
அவ்வாறே ஈராக்கில் பெரியண்ணன் அமெரிக்காவுக்கு கிடைத்து வரும் அடிகள் அது வரலாற்றிலேயே எதிர்பாராதது. ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் போரினை எதிர்த்து அமெரிக்காவில் வலுத்துவரும் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களே இதற்கு சாட்சி. 1400க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவத்தினர் ஈராக் போராளிகளால் கொல்லப்பட்டனர். அமெரிக்கர்கள் அதிகமாக அடிவாங்கியது ஈராக் பாலைவன மணல்வெளிகளில்தான் என்ற சாதனை சரித்திரமும் அவர்களுக்கு உண்டு.
வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாத இஸ்ரேலும் அதன் எஜமான் அமெரிக்காவும் தற்போது மீண்டும் அவமானத்தில் சுருண்டு போய் உள்ளனர். மத்தியக் கிழக்கின் சக்தி வாய்ந்த ராணுவத்தினைக் கொண்ட இஸ்ரேல் தாக்குப் பிடிக்க முடியாமல் மூச்சுத்திணறி வருவதை தற்போது உலகம் கண்டது

வாய்க்கொழுப்பை அடக்க வீட்டுக்கு அனுப்பு...ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரராக இருந்து வர்ணனையாளராக மாறிய டீன் ஜோன்ஸ் சமீபத்தில் பெரும் பெருமையைப் பெற்றுள்ளார்.
சமீபத்தில் இலங்கைலிதென் ஆப்பிரிக்கா இடையிலான கிரிக்கெட் பந்தயம் நடை பெற்றுக் கொண்டிருந்த போது, இலங்கை பேட்ஸ்மேன் சங்ககரா பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த முஸ்லிம் விளை யாட்டு வீரர் ஹாஷீம் அம்லா, குமார் சங்ககராவை ஆட்டமிழக்கச் செய்தார்.
இலங்கை லி தென்ஆப்பிரிக்காவின் இரண்டாவது டெஸ்ட் பந்தயத்தில் நான்காவது தினத்தில் இது நடந்தது.
இது விளையாட்டுப் போட்டிகளில் ஒருவர் விளையாடுவதும், எதிரணியைச் சேர்ந் தவரை அவுட் ஆக்குவதும் நடக்கக் கூடியதுதான். இங்கே பிறகு தான் நடக்கக் கூடாதது நடந்தது.
'அந்தத் தீவிரவாதி மற்றொரு விக்கெட்டை எடுத்து விட்டார்' லி என வர்ணணை யாளர் டீன் ஜோன்ஸ் கூறினார். வக்கிரமான இந்தக் கருத்து உலகெங்கும் கடும் பிரளயத்தை ஏற்படுத்தியது.
பதட்டமான இந்த உலகச்சூழலில் தற்போது ஓரளவாவது ஒற்றுமை காக்கப்பட்டு வருவதற்கு விளையாட்டுக் களங்கள் பெரிதும் துணை புரிகின்றன. தாடி வைத் தவர் என்பதால் ஹஷீம் அம்லாவை தீவிரவாதி என சற்றும் பொறுப்பின்றி உளறிக் கொட்டிய ஜோன்ஸுக்கு கைமேல் பலன் கிடைத்தது.
தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் கவுன்சிலின் தலைமை நிர்வாகி ஜெரால்ட் மஜோலா, இந்த கிறுக்குத்தனமான கமெண்ட் அடித்ததற்காக ஜோன்ஸ் மீது அவரை வேலைக்கு அமர்த்திய டென்ஸ்போர்ட்ஸ் நிர்வாகத்திடம் புகார் ஒன்றை அளித் தார்.
அதனைத் தொடர்ந்து டென்ஸ் போர்ட்ஸ் நிர்வாகம், ஜோன்ஸை வேலையை விட்டு நீக்கியது. (டென் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு ஒளிபரப்பு சேனல் துபையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சேனல் என்பது தெரிந்ததே)
தவறான வர்ணனையால் வேலையை இழந்து, சொந்த நாடான ஆஸ்திரேலியாவிற்கு திருப்ப அனுப்பட்ட டீன் ஜோன்ஸ், மெல்போர்ன் வானொலிக்கு பேட்டியளிக்கும்போது,
''நான் நான்கு ஐந்து வினாடிகள் பொறுத்திருந்தேன். கொஞ்சம் மனம் புரண்டு அந்த முட்டாள்தனமான காரியத்தைச் செய்து விட்டேன். இச்சம்பவம் துரதிர்ஷ்ட வசமானது என்று கூறியிருக்கும் ஜோன்ஸ் முழுநீள மன்னிப்புக் கடிதம் ஒன்றை தென் ஆப்பிரிக்க ஆட்டக்காரர் அம்லாவுக்கும் தென்ஆப்ரிக்க அணிக்கும் கொடுத்துள்ளார்.
நான் அம்லாவிடம் எனது மனப்பூர்வமான மன்னிப்பை நேரடியாகத் தெரிவித் தேன். அவர் அதனை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டார் என்றார் ஜோன்ஸ்.
முன்னதாக கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோன்ஸ், தான் இஸ்லா மியக் கொள்கைகளின் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், நெருங்கிய நண்பர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்களே என்றும் ஜோன்ஸ் குறிப்பிட்டிருக் கிறார். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களில் எனக்கு நெருங்கிய நண்பர்கள் உண்டு என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்கிடையில் சுயேச்சையான வர்ணனையாளர் ஜோன்ஸின் ஒப்பந்தத்தினை டென் ஸ்போர்ட்ஸ் சேனல் முடித்துக் கொண்டது.
ஒருகண நேர ஊசலாட்டத்தில் ஜோன்ஸ் இத்தகைய வார்த்தைகளை உதிர்த்திரு க்கிறார் என மெல்போர்ன் வர்த்தக வானொலி தெரிவித்திருக்கிறது.
கிரிக்கெட் போட்டி நடைபெறும்போது ஒரு நாளுக்கு 400 முதல் 1000 டாலர் வரை ஊதியமாகப் பெறும் வாய்ப்பை ஜோன்ஸ் இழந்துவிட்டார்.
இனவெறி தொனிக்க பேசுவது, தனி நபரை வேதனைப்படுத்துவது போன்றவற்றை அனுமதிக்கக் கூடாது என முன்னாள் டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் தெரி வித்திருக்கிறார். இது நேரடியாக ஒளிபரப்பாகும்போது மேலும் பொறுப்புணர்வு அதிகம் தேவைப்படுகிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
மனதில் மாசு இருந்ததால்தான் இத்தகைய வெறிக்கருத்துக்களை உதிர்க்க முடியும் என்பது வெளிப்படை.
சில ஆண்டுகளாக முஸ்லிம் சமூகத்தை முறைதவறி விமர்சிப்பது வழக்கமாகி வருகிறது. சில உள்நாட்டு வெளிநாட்டு அரசியல் அமைப்புகளும் உள்நோக்கம் கொண்ட ஊடகங்கள் சிலவும் இத்தகைய துவேஷப் பிரச்சாரத்தை தொடர்ந்து வருகின்றன.
மிகக்குறுகிய நோக்கம் சிறிய கட்டமைப்புகளின் சுயலாபத்திற்கு உலகில் பெரும் பான்மையாக வாழும் நடுநிலையாளர்கள் பலியாகி விடக்கூடாது.
சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு அமெரிக்கா சர்வதேச அரசியலில் தனிக் காட்டு ராஜாவாக உலாவருவது மட்டுமே உலகின் கண்களுக்குத் தெரிகிறது. ஆனால் உலகை சுரண்டும் தங்கள் சுயநலன் சார்ந்த வெளியுறவு அரசியல் மூன்றாம் உலக நாடுகள் கண்களை உறுத்திவிடக் கூடாது. அந்த நாடுகள் அனைத்தும் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவிடக் கூடாது என்ற பதட்ட த்தின் காரணமாக 'இஸ்லாமிய பயங்கரவாதம்' என்ற 'கற்பனை எதிரியை' உருவா க்கி உலவ விட்டிருக்கிறார்கள்.
குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக இத்தகைய மிகைப்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்தக் கதையை பிரபலப்படுத்தும்போது தங்கள் சக்தியை அவர்களால் தக்கவைத்துக் கொள்ள முடிகிறது.
ஆனால் இவர்களைப் பார்த்து போலியான கருத்தோட்டத்தைப் பிடித்து தொங்கிக் கொண்டிருந்த டீன் ஜோன்ஸ் போன்றவர்கள் பாவம் பரிதாபகரமான நிலையை பரிசாகப் பெறுகிறார்கள்.
இத்தாலிய கால்பந்தாட்ட வீரர் மேட்டரோஸியும் இதைப் போன்ற ஒரு பைத்தியக் காரத்தனமான செயலை செய்து நாகரீகம் பேணும் மக்களால் வெறுக்கப்பட்டார். இதனால் அவரது நாடான இத்தாலி உலக கால்பந்தாட்டப் போட்டியில் பெற்ற வெற்றி கூட சாக்கடையில் விழுந்த பந்தாக மாறிப் போனது. பிரான்ஸ் கால்பந்து அணியின் தலைவர் ஜெயினுதீன் ஜிடேனின் ஆவேசம் கலந்து ரோஷம் உலகம் முழுவதும் அனுதாபத்தைப் பெற்றுத் தந்தது.
இத்தகைய போக்கு அபாயகரமானது என்பதை அரசுகள் உணர வேண்டும். பெருகி வரும் தீவிரவாதத்தினால் உலகம் முழுவதும் பாதிக்கப்படுவதில் முஸ்லிம் களே அதிகம் எனலாம். தீவிரவாதச் செயல் ஒரு இடத்தில் நடந்தது எனில், அதில் பலியாகின்றவர்களைப் போல் 100 மடங்கு முஸ்லிம் இளைஞர்கள் பாதிக்க ப்படுகின்றனர். இலக்கில்லாமல் புறப்படும் விசாரணையினால் வகை தொகை யில்லாமல் மனித உரிமை மீறிய கைதுச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. கைது செய்யப்படும்பொழுது பெரிதாக்கி காட்டப்படும் அந்த அப்பாவிகள், எந்தக் குற்ற மும் செய்யாதவர்கள் என்று அறிவிக்கப்பட்டு விடுவிக்கப்படும் பொழுது எந்த ஊடகமும் அவர்களைக் குறித்து சில வரிச் செய்தி கூட வெளியிடுவதில்லை என்பது பரிதாபகரமானது.
அரசாங்கத்தின் சில ஊடகங்களும், சில அதிகாரிகளின் நடவடிக்கைகளும், வக்கிர சிந்தனையாளர்களும் வெளிப்படுத்தும் தீவிரவாத சொற்பிரயோகங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமெனில் அரசு சில சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
உதாரணமாக இளம் பெண்களைக் கேலி செய்யும் காலித்தன இளைஞர்களை தண்டிக்க ஈவ் டீசிங்குக்கு எதிரான சட்டங்கள் கொண்டு வரப்பட்டது போல் தலித் சகோதரர்களை அவர்களது சமூகம் குறித்து இழிவாகப் பேசினால் தீண்டாமை தடுப்புச் சட்டம் நடைமுறையில் இருப்பது போல் தீவிரவாதப் பட்டங்களை சகட்டு மேனிக்கு உதிர்ப்பவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் முகமாக கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும். இதில் பல சாதக அம்சங் கள் உள்ளன.
1. வாய்க்கொழுப்பு வக்கிர சிந்தனையாளர்கள் அடக்கப்படுவார்கள்.
2. நீ தீவிரவாதி, அவன் தீவிரவாதி என்று உளறி நாட்டையே ஒரு தீவிரவாத மண்டலம் போல சித்தரித்துக் காட்டும் உருப்படாத பேர்வழிகளிடமிருந்து நாட்டின் அப்பாவி இளைஞர்களை வேதனையிலிருந்து மீட்கலாம்.
3. தீவிரவாதிகளை தனிமைப்படுத்த முடியும்.
எனவே, அரசுகள் இவ்விஷத்தில் கடுமை காட்டி கவனத்துடன் செயல்பட வேண் டிய தருணமி
பள்ளிவாசல்களின் மீது வெடிகுண்டு தாக்குதல் முதல்முறையல்லமலேகான் பள்ளிவாசல்களில் நடந்த வெடிகுண்டு தாக்குதல்கள் இது முதல் முறை யல்ல. முஸ்லிம் வழிபாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல்களின் தொடர்ச்சியாகவே இது பார்க்கப்பட்டது.
இந்த ஆண்டு துவக்கத்தில்
1) பார்பானியில் உள்ள முஹம்மதி மஸ்ஜித்,
2) பூனாவில் உள்ள ஒரு பள்ளிவாசல்,
3) ஜால்னாவில் உள்ள பள்ளிவாசல் ஆகிய வற்றிலும் குண்டுகள் வெடித்ததாக தகவல்கள் வெளிவந்தன.
இதில் பார்பானியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிலர் காயமடைந்தனர். நான்டெட் பகுதியில் குண்டுகள் தயாரித்துக் கொண்டிருந்த பஜ்ரங்தள் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
பர்பானி பள்ளிவாசல் குண்டுவெடிப்பு மற்றும் நான்டெட் குண்டுவெடிப்பு குறித்தும் தீவிரவமாக விசாரித்து வருவதோடு மலேகான் குண்டுவெடிப்பிலும் அந்த சக்தி களுக்கு தொடர்பு ஏதும் உள்ளதா? என ஆய்வு செய்து வருவதாகவும் தீவிரவாத தடுப்புக் காவல்படைத் தலைவர் தெரிவித்திருக்கிறார்.
பர்பானி, பூனா, ஜலான், பள்ளிவாசல்களில் பஜ்ரங்தள் பயங்கரவாதிகள் குண்டு வெடிப்பை நிகழ்த்திய பாணியே இங்கும் பின்பற்றப்பட்டிருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் கூறுகின்றன.
தீவிரவாத தடுப்புத்துறை இன்னொரு அதிர்ச்சித் தகவலையும் தெரிவித்து உள்ளது. நான்டெட் பர்பானி குண்டுவெடிப்புகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 16 பேரில் நால்வர் வெறிக்கருத்துக்களை உதிர்த்துள்ளனர். இதுவரை நடைபெற்ற குண்டு வெடிப்புகளுக்கு பதிலடியாக நாங்கள் இந்த நான்டெட் பகுதியில் குண்டுகள் தயாரித் தோம் என அவர்கள் விசாரணையின்போது தெரிவித்ததாக தீவிரவாத தடுப்புக் காவல்படை தெரிவித்துள்ளது. (அடப்பாவிகளா? அப்பாவிகளின் உயிர்க ளையா பறிப்பது?)
அழிவின் சக்திகளை அடையாளம் காண அரசுகளுக்கு இன்னும் தயக்கம் ஏன்
உங்கள் பணம் எங்கள் குழந்தைகளைத் திருப்பித் தருமா?மலேகான் குண்டுவெடிப்பில் கதறிய பெற்றோர்
08லி09லி2006 வெள்ளிக்கிழமை. மஹாராஷ்ட்ரா மாநிலம் மலேகான் நகரில் உள்ள நூரானி பள்ளிவாசலில் ஜும்மா தொழுகைக்காக ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் குழுமியிருந்தனர். சுமார் 1.55 மணியளவில் சைக்கிள் நிறுத்துமிடத்திலிருந்து பெரும் சத்தத்துடன் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்துள்ளனர். அங்கே நின்று கொண்டிருந்த முஸ்லிம்களின் உடல்கள் சிதற, மற்றவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். இதனிடையே மஸ்ஜிதின் வாசலில் இருந்த பூந்தொட்டி யில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடிக்க அங்கும் உடல்கள் சிதறியுள்ளன. இதையடுத்து பள்ளிவாசலுக்குள் குழுமியிருந்த முஸ்லிம்கள் தலைதெறிக்க வெளியேற, அப்போது சில குழந்தைகள் நெரிசலில் சிக்கியுள்ளனர்.
இந்த குண்டுவெடிப்புகளில் 37 பேர் உயிரிழந்ததாக பத்திரிகை யாளர்கள் ஏகோபி த்து கூற, இல்லை இல்லை 31 பேரே இறந்தனர் என்று போலீஸார் மறுப்பு வாசித்துள்ளனர்.
வெடிக்காத இரண்டு குண்டுகளும், ஒரு மோட்டார் பைக்கும் கேட்பாரற்று கிடந்த தாகவும், அதில் ராஜ் என்று பெயின்டால் எழுதப்பட்டிருந்ததாகவும் மும்பை மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
சைக்கிள்களிலும், பூந்தொட்டியிலும் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்தன என முதலில் வந்த தகவல்கள் தெரிவித்தன. குண்டுவெடிப்பு இரண்டு இடங்களில் நிகழ்ந்ததாக காவல்துறை தெரிவிக்கிறது. ஆனால் மூன்று குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாக நேரில் பார்த்த சாட்சிகள் தெரிவித்துள்ளனர். கடைசியாக வந்த தகவ லின்படி, நான்கு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன என உள்துறை தெரிவித்துள்ளது.
குண்டுவெடிப்பினால் ஏற்பட்ட பீதியில், மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி யதில் நெரிசலில் சிக்கி ஏராளமான குழந்தைகளும் பலியானதாகவும் கூறப்படு கிறது.
பள்ளிவாசலின் வெளிப்புறம் முழுவதும் உடல்களும், கை கால்களும், ரத்தத் துளிகளும் எங்கும் காட்சியளித் துள்ளன. படுகாயம் அடைந்தவர்கள் அருகிலுள்ள வாடியா மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, மலேகான் நகர மருத்துவமனைகள் நிரம்பி வழிந்துள்ளன. இதையடுத்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாசிக் நகருக்கு காயம் அடைந்தோர் கொண்டு செல்லப்பட்டனர்.
குண்டுவெடிப்புக்கு சில நாட்களுக்கு முன்பு விநாயகர் ஊர்வலங்கள் நடத்தப் பட்டன. சர்ச்சைக்குரிய வந்தே மாதரம் பாடலை பாடுவதற்கென சங்பரிவார் அமைப்புகள் முக்கிய சாலைகளை அடைத்து 'வந்தே மாதரம்' பாடல்களைப் பாடும் நிகழ்ச்சிகளை நடத்தினர். ஆத்திரமூட்டும் நிகழ்வுகள் பல நிகழ்ந்த அந்த நாட்களில் முஸ்லிம்கள் அமைதி காத்தனர். பெருந்தன்மைப் பேணிய சிறுபான்மை மக்களுக்கு நிகழ்ந்த இந்த வேதனை நிகழ்வுகள் நடுநிலையாளர்களுக்கு மத்தி யில் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படு த்தியது.
மலேகான் நகரில் இதுவரை நடந்த கலவ ரங்களைப் பட்டியலிட்ட நாட்டின் பெரு ம்பாலான பத்திரிகைகளுக்கு சமீபத்தில் சமூக அமைதி பேணிய மலேகான் முஸ்லிம்கள் கண்ணியம் காத்த இரு சம்பவங்கள் கண்ணில் படாதது பரிதாபத்திற்குரியது.
எட்டு லட்சம் முஸ்லிம்கள் அமைதிக் காத்த நிலையிலும் 500 பேர் அடங்கிய ஒரு கும்பல் ஆசாத் நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டது. கூடிய கூட்டத்தின் ஆத்திரத்தைத் தணிக்க முடியாமல் காவல்துறை திணறியது. காவல்துறையினர் தடியடி நடத்தியும், வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியும் கூட்டத்தைக் கலைத்தனர். இந்தச் செய்தி மட்டும் தவறாமல் எல்லா பத்திரிகைகளிலும் இடம் பெற்றிருக்கிறது.
வெடித்த பொருள் சாதாரண வெடிபொருளாக இருக்கும் என்று முதலில் வந்த தகவல்கள் தெரிவித்தன. ஆனால் தற்போது அவை ஆர்.டி.எக்ஸ் வகையைச் சேர்ந்தவையாக இருக்கும் என்று காவல்துறை அறிவித்துள்ளது. அப்பாவிகள் மீதான கொடுந்தாக்குதல்கள் நாட்டில் தொடர்கிறதே என அனைவரும் வேதனை அடைந்துவரும் நிலையில், நாட்டிலுள்ள மக்கள் அனைவரின் குறிப்பாக முஸ்லிம் களின் ரத்தத்தை கொதிக்கச் செய்யும் செய்தி தினமலர் பத்திரிகையில் இடம்பெற் றிருந்தது. பல ஆண்டுகளாக சங்பரிவாரின் ஊதுகுழ லாகவும், ஊடக பயங்கர வாதத்தைப் பரப்புவதில் முன்னணியிலும் இருக்கும் தினமலர் நாளேடு, ''மசூதியில் இருந்த குண்டுவெடித்தது'' என்று செய்தி வெளியிட்டிருந்தது. தினமலரின் இந்த ஈனச்செயல் மனிதநேயம் படைத்தோரின் வெறுப்பை அதிகரிக்கச் செய்தது. (பார்க்க பெட்டிச் செய்தி)
மலேகான் குண்டுவெடிப்பு மிகவும் வெட்கக்கேடானது என பிரதமர் மன்மோகன் சிங்கும், கோழைத்தனமானது என்று காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் கண்டனம் தெரிவித்திருந்தனர். குண்டுவெடிப்பில் காயம் அடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை எடுத்துக் கொண்ட முஸ்லிம்களை சோனியா காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்தத் துயரமான சூழலில் அமைதி காத்து சகோதரத்துவம் பேண வேண்டும் என இந்தியக் குடியரசுத் தலைவர் மலேகான் மக்களுக்கு வேண்டுகோள் விடுத் திருந்தார்.
குண்டுவெடிப்பு நிகழ்வுக்குப் பிறகு அப்பகுதி முஸ்லிம்கள் தங்கள் சொந்தங்களை பிணக்குவியல்களுக்கிடையில் தேடிக் கொண்டிருந்தபோதும் மருத்துவமனைகளு க்கு ரத்தம் சொட்ட சொட்ட தங்கள் குழந்தைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு சென்றபோதும் சொந்தங்கள் அமைதி காக்க வேண்டும் என மலேகான் முஸ்லிம் பெரியவர்கள் காவல்துறையினரின் வாகனங்களில் சென்று நகரின் முக்கிய சாலை களிலும், மூலை முடுக்குகளிலும் பயணம் செய்து மக்களை ஆறுதல்படுத்தினர். இதுவும் பெரும்பாலான ஊடகங்களில் பார்த்திருக்க முடியாது. (டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற ஒருசில பத்திரிகைகளில் பிரசுரமாகியிருந்தது)
உயிரிழந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என மகாராஷ்ட்ரா முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் அறிவித்தார்.
குண்டுவெடிப்பு நிகழ்த்தி அப்பாவி மக்களை கொலை செய்யும் பாதகச் செயலை நாடெங்கும் உள்ள நடுநிலை யாளர்கள் கண்டித்தனர். வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கென நறுமணம் பூசி பூரிப்புடன் சென்ற முஸ்லிம்கள் தங்கள் அன்புக் குரியவர்களை ரத்தம் பீறிட வாகனங்களிலும், மாட்டு வண்டிகளிலும் கொண்டு செல்லும் அவல நிலை அங்கு நெஞ்சத்தை நொறுக்கும் காட்சியாக இருந்தது.
ஆயிரக்கணக்கானோர் தங்களுடன் சின்னஞ்சிறார்களை பள்ளிவாசலுக்கு அழைத் துச் சென்றனர். துள்ளி ஓடும் சிங்கக் குட்டிகளாக வந்த சிறார்களை பலர் குண்டு வெடிப்புகளிலும், நெரிசலிலும் சிக்கி நசுங்கிய மலர்களாக அள்ளிச் சென்ற காட்சி காண்போர் கண்களைக் குளமாக்கியது.
ஒருமணி நேரத்திற்கு முன்பு என்னோடு நடந்து வந்தவனை இப்போது அள்ளிச் செல்லும் நிலைக்கு ஆளாகி விட்டேனே எனக் கதறுகிறார் குண்டு வெடிப்பில் தனது 8 வயது மகனை இழந்த முஹம்மது ஆரிஃப்.
ஷஃபீக் அஹ்மத், ஷக்கீல் அஹ்மத் என்ற இரு சகோதரர்களும் தங்களுடன் வந்திருந்த குழந்தைகளை இந்த குண்டுவெடிப்பில் பறிகொடுத்தனர். மாநில அரசு அறிவித்த நஷ்ஈட்டுத் தொகையை மகாராஷ்ட்ர மாநில முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் வழங்கியபோது இருவரும் வாங்க மறுத்தனர்.
எந்தப் பணத்தினாலும் எங்கள் குழந்தைகளை திரும்பத்தர முடியாது. மகாராஷ்ட்ர அரசு எங்களுக்கு வாக்களித்தபடி நல்ல மருத்துவமனையை அமைத்துத் தரவில் லை என ஆவேசமாகக் கூறினார். ஷஃபீக் அஹ்மத், ஷக்கீல் அஹ்மத் என்ற அந்த இருவரின் குழந்தைகளும் சரியான மருத்துவ சிகிச்சை இல்லாமலே உயிரிழ ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னால் 10 லட்சம் ரூபாய் கூட கொடுக்க முடியும் என்று ஆத்திரப்பட்ட ஷஃபீக், உங்கள் அரசு எங்களுக்காக ஒன்றுமே செய்யவில்லை என கதறித் தீர்த்தார். நாங்கள் முஸ்லிம்கள் என்பதால்தான் இப்படிச் செய்கிறீர்கள் என்றும் ஆவேசமாக கேள்வி விடுத்தார்.
நடந்தவை அனைத்தையும் சலன மின்றி பார்த்துக் கொண்டிருந்தார் மகாராஷ்ட்ரா முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக். அவர் செல்லுமிடங்களி லெல்லாம் குழந்தைகளை இழந்த தந்தையர்களின் ஆத்திரத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தனது கட்சியைச் சேர்ந்த மாநில முதல்வர் மக்களின் முன்பாக திணறிக் கொண்டிருந்த அரிய(!) காட்சியை காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி பார்த்துக் கொண்டிருந் தார்.
மனித உயிர்கள் உண்மையிலேயே விலை மதிப்பில்லாதது. பணத்தினால் ஈடுசெ ய்ய முடியாது. எனினும் இது அரசு பணமல்ல. உங்கள் பணம் தயவு செய்து பெற்றுக் கொள்ளுங்கள். மத்திய அரசும் இதற்கு சமமான இழப்பீட்டுத் தொகை வழங்கும் என மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் குரலை தாழ்த்தி பாதிக்கப்பட்டவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். விரைவில் அனைத்து வசதி களுடன் கூடிய மருத்துவமனைகள் அமைக்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட் டது.
35 வயது ஹாரூனின் சகோதரர், மகன் அஜார் (10 வயது) மற்றும் 5 வயதேயான ஆன மருமகன் அன்சார் ஆகிய மூவரும் இந்த குண்டுவெடிப்பில் பலியானார்கள். ஹாரூனின் 6 வயது மகன் அஃபீர் மயிரிழையில் உயிர் பிழைத்தான்.
இழப்பீட்டுத் தொகையை வாங்க மறுத்த ஹாரூன், நாங்கள் எங்கள் அன்புக்குரி யவர்களை இழந்துள்ளோம். எங்களுக்கு பணம் தேவையல்ல. பணத்தினால் இறந் தவர்களைத் திரும்ப அழைத்து வரமுடியாது. சதிகாரர்கள் தண்டிக்கப்பட வேண் டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் கோரிக்கை வைத்தார். மலேகான் பகுதியில் உள்ள மழலையர் பள்ளிகளுக்கு தினமும் வேலை நாட்களின் நேரம் 1.35 முதல் 5.30 வரை. வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழு கையை முன்னிட்டு 10.30 முதல் 1.30 வரைதான் கல்விக்கூடங்கள் செயல் படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இரக்கமற்ற மலேகான் குண்டுவெடிப்புக் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப் பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இனி ஒருமுறை இது நிகழாது.
குற்றவாளிகளின் வரைபடங்கள்
மலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக ஒருவரை காவல்துறையினர் கைது செய்து ள்ளனர். சைக்கிள்களில் வெடிகுண்டை வைத்து வெடிக்கச் செய்ததை கண்டு பிடித்த காவல்துறையினர் சைக்கிள்கள் வாங்கப்பட்ட இரண்டு கடைக்காரர்கள் கூறிய தகவலின் பழ சதிகாரனின் வரைபடங்களை நாசிக் பகுதி காவல்துறை ஐ.ஜி. பி.கே.ஜெயின் வெளியிட்டார். மேலும் தடயவியல் வல்லுனர்களின் அறிக் கைக்காக காத்திருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.
சதிகாரர்கள் குறித்து மூன்று முக்கியத் தடயங்கள் கிடைத்துள்ளதாகவும் குறிப் பிட்ட அவர், பெரிய கபர்ஸ்தானில் வெடிக்காத குண்டுகள் கைப்பற்றப்பட்டதை மறுத்தார். தேசிய பாதுகாப்புப் படை நிபுணர்கள் உட்பட 20 அதிகாரிகள் கொண்ட சிறப்புக்குழு இந்த வழக்கின் புலன் விசாரணையில் இறங்கியுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
வந்தாரை வாழ வைத்த மலேகான்
மலேகான் நகர மக்கள் இரக்கமும் கருணையும் பரோபகார சிந்தனையும் உடைய வர்களாகத் திகழ்கின்றனர். இஸ்லாமியச் சிந்தனைகளில் அவ்வளவு தெளிவு இல்லாத நிலையிலும் மார்க்க உணர்வு நிரம்பியவர்கள். வடஇந்திய மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எந்தத் துயரம் ஏற்பட்டாலும் அவர்களையெல்லாம் இருகரம் நீட்டி வரவேற்கும் மலேகான் நகரம். ஆங்கிலேயர் அடக்குமுறையை எதிர்த்துப் போர் புரிந்த டெல்லி முஸ்லிம்களை ஆங்கிலேயர்கள் அச்சுறுத்தி துன்புறுத்திய போது அவர்களையும் மலேகான்தான் வரவேற்றது.
2002ஆம் ஆண்டு குஜராத்தில் முஸ்லிம்கள் மோடிக் கூட்டத்தால் குதறப்பட்ட போது வேதனை வழிய வந்த குஜராத் முஸ்லிம்களை தாய்ப்பாசத்துடன் வரவேற் றது மலேகான் நகரம். குஜராத்தில் டெய்லராக இருந்த குத்புதீன் அன்சாரியும் அவ்வாறு மலேகான் வந்தவர்தான். சங்பரிவார் காலிகள் குஜராத்தில் வெறியாட் டம் ஆடியபோது துயரம் தாங்காது அன்சாரி கண்ணீர் தாரையாய் ஓட கையெ டுத்துக் கும்பிட்ட காட்சி ஊடகங்களில் வெளியானது உலகெங்கும் வாழும் மனித நேயமுடையோரின் இதயங்களில் ரத்தத்தை கசியச் செய்தது. இந்த புகைப்படம் வெளிவந்த பின்பு அவர் கொல்கத்தா சென்றுவிட்டதாக பின்னர் வந்த தகவல் கள் தெரிவித்தன.

நோபல் பரிசு பெற்றார் வறுமை ஒழிப்பு போராளி முஹம்மது னுஸ்அபூசாலிஹ்
இன்றைய உலகின் மிகப்பெரிய கொடுமை, 'வறுமையாகும்'. மாறி வரும் பொருளா தாரச் சூழலில் தாக்குப்பிடிக்க முடியாத நிலையில் ஏழை மக்கள் வாழ்கின்றனர். ஏழைகளைச் சுரண்டும் கூட்டம் ஒன்று சுரண்டி சுரண்டி கொழுத்து வருகிறது. மற்றொன்று ஏழை பாமரர்கள் படும் சொல்லொணா வேதனைக் கண்டு வெம்பி, நெக்குருகி அவர்களுக்காக கண்ணீர் வடிக்கும் ஒரு சிறு கூட்டம், கொஞ்சம் பரோபகாரச் சிந்தனை உடையவர்களாக, இயன்ற அளவு இல்லாதவர்களுக்கு தம்மிடம் உள்ளதை கொடுத்து மகிழும் இயல்பினராக வாழ்ந்து வருகின்றனர்.
சொல்லிக் கொடுத்த பாடமும், கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளைக்குத் தாக்கு பிடிக்க முடியும். மீன் பிடித்துக் கொடுப்பதை விட மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்தலே சாலச்சிறந்தது என்பதைப் போல நிரந்தரத் தீர்வு நோக்கி நகர்ந்தவர் கள் யார்? யார்? என்றுத் தேடித் தேடிப் பார்க்கிறோம். தீர்வும் தென்படவில்லை. தீர்வாளர்களும் தென்படவில்லை.
நேற்றைய இந்தியாவின் ஒரு துண்டான வங்கக் கடலோரம், கங்கை நதி தீரத்தில் வறுமையை ஒழிக்கும் சூத்திரத்தை கையிலெடுத்துக் கொண்டு ஒரு தனி மனிதன் எழுந்தான். அவனது ஒவ்வொரு சம்பவங்களையும் சரித்திர சான்றுகளாக அவன் பிறந்த நாடும் பிறநாடுகளும் கொண்டாடி வருகின்றன. தொழில் தொடங்க கடன் வழங்குமாறு வங்கிகளை ஏழைகள் அணுக முடியுமா? ஏழைகளின் சொத்து எது? வறுமை மட்டும் தான். வறுமையை வைத்துக் கொண்டு கடன் கொடுக்க முடியுமா என்ன? ஏழைகள் மேலும் ஏழையாகவே மரித்துபோவதுதான் இன்றைய ஏழை பாமரர்களின் தலையெழுத்தா? என் றெல்லாம் எண்ணியபோதுதான் பொருளாதார ஊன்றுகோல் இன்றி தவித்துக் கொண்டிருந்த ஏழைத் தொழிலாளர்களுக்கு தாய்மார்களுக்கு தம்மால் ஏதும் செய்ய முடியுமா? என அந்த மனிதர் சிந்தித்தார். கந்து வட்டிக் கொடுமைக்காரர்களால் கசக்கி பிழியப்பட்ட ஏழைகளையும் ஏதுமற் றோரையும் அழைத்துக் கொண்டு பணக்காரர்களின் பகட்டுப் புகலிடங்களான வங்கிகளின் சொகுசு படிக்கட்டுகளில் ஏறி இறங்கினார். வங்கிகள் சொத்துக்கள் கேட்டது உத்தரவாதம் கேட்டு உசவியது. பத்திரங்களை காட்டுங்கள் என்று பாடாய்ப்படுத்தி எடுத்தது.
ஏழை பாமர மக்களின் வாழ்வில் வசந்தம் மலர என்ன வழி? என ஒருவர் சிந்தித்தார். அவர் அன்று சிந்தித்தது இன்று சரித்திரமாகி இருக்கிறது.
ஆம்! பங்களாதேஷின் வறுமை ஒழிப்பு போராளி முஹம்மது யூனுஸின் சிந்தனையும் செயல்பாடும் அதன் விளைவால் விளைந்த வெற்றியும் இன்று நோபல் சமாதான விருதுக்கும் உலகின் பாராட்டுக்கும் உரிய தாக மாறிவிட்டது. சுய உதவி குழுக்கள், கிராம வங்கிகள் என்ற மந்திரச் சொற்கள் உலகில் முதன் முதலில் அறிமுகமாகிறது.
மூங்கில் மூலம் பொருட்களை தயாரித்தல், கறவை மாடுகளை வாங்கி பால் பண்ணை கள் நடத்துவது, கோழிப்பண்ணைகளை நடத்துதல், மீன் பிடித்தொழில் போன்றவை களை ஏழைப்பெண்கள் நடத்த அவர்கள் வாழ்வில் வறுமை மெல்ல மெல்ல அகலும் அற்புத நிகழ்வு உலகின் கவனத்தை ஈர்த்து விட்டது. அமெரிக்கா, இந்தியா உள்பட ஏராளமான நாடுகள் இந்த சுய வங்கி திட்டத்தினை ஏற்று செயல்படுத்தத் தொடங்கி விட்டன.
பங்களாதேஷ் வறுமை பிடித்த பூமி. ஏழைகளையும், பாமரர்களையும் வறுமைப் பிடியிலிருந்து மீட்க முடியாது அந்த அரசு திணறியது.
பங்களாதேஷில் பிரதான துறைமுகம் சிட்டகாங். அது அழகிய, ஆனால் ஆபத் தான துறைமுகம். வருடம்தோறும் பலதடவை, வங்கக் கடல் குமுறும் போதெல் லாம் சிட்டகாங்க் துறைமுகம் சின்னா பின்னமாகி விடுவதுண்டு. அதனால் கடற்புர மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது.
கிராமங்களில் வாழும் கோடிக் கணக்கான ஏழைப் பெண்களுக்கு சிறு கடன் வழங்கும் கிராமிய வங்கியை அமைத்தவர். கிராமப்புற ஏழை மக்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்டெடுத் தவர். 'மகளிர் சுய உதவிக் குழுக்களின் தந்தை' என்றே அழைக்கப்படுகிறார் முஹம்மது யூனுஸ்.
அடிமட்டத்திலிருந்து பொருளாதார, சமுதாய, வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பில் சுயமுன்னேற்றத்தில் ஈடுபட்ட ஏழை பாமர மக்களை கைதூக்கி விடும் முயற்சி யாகவே கிராமியன் வங்கியை வறுமை ஒழிப்பு போராளி முஹம்மது யூனுஸ் அமைத்தார்.
தற்போது அவரது சாதனைக் கும், அவரது சாதனையின் சாதனமான கிராமியன் வங்கிக்கும் இணைந்தே நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பதாக நோபல் பரிசு தேர்வுக்குழு கூறியுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் 10லிஆம் தேதி ஆஸ்லோவில் நடைபெறும் வண்ணமிகு விழாவில் முஹம்மது யூனுஸுக்கு ரூ. 25 கோடி பரிசாக வழங்கப்பட உள்ளது.
நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதைப் பற்றி யூனுஸ் பதிலளிக்கும் போது; இது மிகவும் அருமையான விஷயம் நம்ப முடியவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் வியப்பு தெரிவித்திருக்கிறார்.
கிராமிய வங்கியை உருவாக்கிய எமது முயற்சிக்கும் அதற்காக அரும் பாடுபட்ட தாய்மார்களின் உழைப்புக் கும் கிராமிய வங்கியை வெற்றிகர சாதனையாக்கிய தாய்மார்களுக்கும் கிடைத்த உலகளாவிய அங்கீகார மாகவே இதனைக் கருதுகிறேன். எனது எதிர்கால திட்டங்களை செழுமைப் படுத்த இந்நிகழ்வு எமக்கு ஊக்கம் வழங்குகிறது. இந்தப் பரிசுத் தொகை யையும் கிராமப்புற மக்களுக்கு கடன் வழங்குவதற்காக பயன்படுத்துவேன் என்கிறார் வறுமை ஒழிப்பு போராளி முஹம்மது யூனுஸ்.
வெளிநாட்டு கல்வி உதவியுடன் பொருளாதாரம் பயின்ற முஹம்மது யூனுஸ் கல்வி கற்று தனது தாயகம் திரும்பியபோது (1974) அங்கு பஞ்சமும், பட்டினியும் கோரதாண்டவமாடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஏங்கிய அவர் தனது கையிலிருந்த சிறு தொகையான 227 டாலர்களைக் கொண்டு சிறு கடன் வழங்கத் தொடங்கினார். அன்று உருவான சிறு முயற்சி, சிறிய ஜுவாலையாக உலக ஏழை மக்களை வசீகரிக்கும் வெளிச்சமாக மாறியது. 1976லில் கிராமிய வங்கி தொடங்கப்பட்டது. ஏழை உழைக்கும் பெண்களுக்கே கிராமிய வங்கி கடன் வழங்குவதில் முன்னு ரிமை வகித்தது.
பங்களாதேஷிலுள்ள வணிக வங்கிகளுக்கு இணையாக கிராமியன் வங்கி விரை வாக வளரத் தொடங்கியது.
1983லில் பங்களாதேஷ் அரசு ஓர் சட்டத்தை இயற்றி கிராமியன் வங்கியின் பாதுகாப்பை உறுதிபடுத்தியது. இன்று பங்களாதேஷ் முழுவதும் 71லிஆயிரம் கிராமங்களில் 2 ஆயிரத்து 200 கிளைகளுக்கு இந்த ஏழை உழைக்கும் மக்களுக் கான வங்கி விரிவடைந்துள்ளது.
வறுமை ஒழிப்புப் போராளி முஹம்மது யூனுஸ்லின் கிராமியன் வங்கி இதுவரை 66 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு கடன்களை வழங்கியுள்ளது. இதில் 97 சதவீதம் பேர் பெண்கள் என்பது ஆச்சரியப்படுத்தும் உண்மையாகும்.
இன்றுவரை 25 ஆயிரத்து 740 கோடி ரூபாயை இவ்வங்கி கடனாக வழங்கியுள்ளது. அதில் 22 ஆயிரத்து 815 கோடி ரூபாய் திரும்ப செலுத்தப்பட்டுள்ளது.
சற்று சிந்தித்துப் பார்த்தால் பெரும் தொழிலதிபர்கள் எல்லாம் வங்கிகளில் (அதாவது பெரிய பெரிய வங்கிகளில்) கோடிக்கணக்கில் கடன்களை வாங்கி விட்டு திரும்ப செலுத்தாமல் ஏப்பம் விட்ட, ஏப்பம் விட்டுக் கொண்டும் வரும் காட்சிகளை நாம் தொடர்ச்சியாக கண்டு வருகிறோம்.
ஆனால், ஏழை பாமர மக்கள் வாங்கிய சின்னஞ்சிறிய தொகைகளை நீதி நியாயத்திற்கு கட்டுப்பட்டு திரும்ப செலுத்தியுள்ளனர். இந்த வங்கியின் கடன் வசூல் விகிதம் 98.85 சதவீதமாகும். இது வங்கியின் சிறந்த செயல்பாட்டின் அடையாளமாகும்.
கிராமப்புற ஏழைப் பெண்களுக்கு சிறு கடன் வழங்கும் இத்திட்டம்தான் இந்தியா வில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்படுவதற்கு வழிவகுத்தது.
வறுமை ஒழிப்பு போராளி முஹம்மது யூனுஸின் இத்திட்டம் மேல்திசையில் அமெரிக்கா முதல் கிழக்கில் இந்தியா உள்பட ஆப்பிரிக்க கண்டத்தின் உகாண்டா வரை உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் பின்பற்றி நடக்கும் வழியாக மாறியுள்ளது.
உழைக்காமல் சோம்பித்திரியும் வீணர்கள் வெட்கப்படும் விதமாக, தன்மானத்தையும், சுய முன்னேற்றத் தையும் முன்னிலைப்படுத்தும் விதமாக பங்களாதேஷ் உழைக்கும் பெண்களின் சாதனைகள் அமைந்துள்ளது.
2004லில் அசோஷியேட் பிரஸ்க்கு முஹம்மது யூனுஸ் பேட்டியளித்தபோது: சூஃபியா பேகம் என்ற 21 வயது இளம்பெண் தனதுமென்கரங்களால் மூங்கில் கூடைகளை உருவாக்கிக் கொண்டிருந்தார். அந்த கூச்ச சுபாவமுடைய இளம் பெண்ணிடம் வறுமை ஒழிப்பு போராளி முஹம்மது யூனுஸ் மெல்ல பேச்சுக் கொடுத்தார்.
சூஃபியா பேகம் எவ்வளவு ரூபாய் சம்பாதிக்கிறார் என யூனுஸ் கேட்டபோது 5 டாகா (பங்களாதேஷ் நாணயம்) கடன் தருபவர்களிடம் கடன் வாங்கி இந்த மூங்கில் பொருட்களை செய்வதாகக் கூறியிருக்கிறார். அப்போது முஹம்மது யூனுஸ் நினைத்தாராம் யா அல்லாஹ் இந்த இளம் பெண் 5 டாகாவிற்காக கடன் கொடுத்தவனுக்கு அடிமையாக மாறும் அவல நிலை ஏற்பட்டுள்ளதே என்பதை எண்ணி மனம் வருந்திய யூனுஸ் எப்படி இந்த ஏழைப் பெண்கள் மேலும் மேலும் ஏழைகளாக மாறுகின்றனர் என்பதைப் புரியாத நிலையில் தனது மாணவர்களின் மூலம் திறந்த சர்வே ஒன்றை ஜெôப்ரா என்ற கிராமத்தில் நடத்தியபோது, 43 கிராமப் பெண்களின் நிதிநிலை மிகவும் மோசமாக இருந்ததை சர்வேயின் முடிவு கள் தெரிவித்தன. 27 அமெரிக்கன் டாலர் இருந்தால் அவர்கள் அனைவரும் கந்து வட்டிக்காரர்களின் கொடுமையிலிருந்து மீட்கப்படுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
உழைப்பிலும் உன்னத நோக்கத்திலும் சிறந்த அந்த மக்கள் ஓராண்டுக்குள் அந்தக் கடன் தொகையை முழுமையாக திருப்பிக் கொடுத்து வர்த்தகத்தில் உயர்வு கண்டார்கள்.
மைக்ரோசாஃப்ட் என்ற உலகின் மாபெரும் நிறுவனத்தையும் அதன் அதிபர் உலக பணக்காரர் பில்கேட்ஸை யும் பற்றி மட்டுமே அறிந்திருந்த உலகம் மைக்ரோ கிரெடிட் என்ற சிறு கடன்களை வழங்கும் வங்கியை அறிமுகப்படுத்தி உழைப்பு க்கு வலு சேர்த்து இல்லாமை இருளை அகற்ற போராடும் முஹம்மது யூனுஸின் பெயரை உச்சரிக்கத் தொடங்கியுள்ளது.
முஹம்மது யூனுஸ் 1940ல் சிட்டகாங் நகரில் தனது பெற்றோருக்கு மூன்றாவது மகனாக பிறந்தார். 14 பேரை உடன்பிறந்தவர்களாகக் கொண்டிருந்த முஹம்மது யூனுஸ் உடன்பிறந்த ஐவரை குழந்தைப் பருவத்திலேயே இழந்தார். யூனுஸின் தந்தை நகரில் பிரசித்த பெற்ற தங்க நகைத் தொழிலாளியாக இருந்ததால் தன் மகனின் உயர் படிப்புக்கு உரிய ஊக்கம் அளித்தார்.
பசிப்பிணி போக்கும் உயர் எண்ணத்தை தனது தாயார் சூஃபியா ஹாத்தூனிடம் இருந்து பெற்றுக் கொண்டதாகக் கூறும் யூனுஸ், ஏழைகளுக்கு உதவும் நோக்கம் கொண்டவர் அவர்களின் கதவுகளை உடைத்துக் கொண்டு சென்று உதவ வேண்டும், காலம் நேரம் பார்க்கக்கூடாது என்று தனது அன்னை சூஃபியா ஹாத்தூன் கூறுவார் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்.
டாக்காவில் கிரமின் வங்கியின் தலைமை அலுவலகத்தில் தனது பௌதிக பட்டதாரி மனைவி அஃப்ரோஜி மற்றும் ஒரே செல்ல மகள் தீனாவுடன் இரண்டு அறை கொண்ட எளிமையான ப்ளாட்டில் வசிக்கிறார்.
ஆயிரக்கணக்கில், பிச்சைக்காரர்கள் உலாவும் பங்களாதேஷில் இன்று கிரமின் வங்கியின் சேவையால் பிச்சைக்காரர்கள் ஒழிக்கப்பட்டு வருகின்றனர்.
9 டாலர் கிரமின் வங்கியில் கடனாகப் பெற்று சிறு பொருட்களை வாங்கி விற்று, பின்னர் கடனையும் கண்ணியமாக திருப்பிச் செலுத்துகின்றனர். இன்று கிரமின் வங்கியின் வாடிக்கை யாளர்களாக பங்களாதேஷின் 50,000 பிச்சைக்காரர்கள் வியாபாரிகளாக மாறிவிட்டனர். அவர்களை மாற்றியது வறுமை ஒழிப்புப் போராளி முஹம்மது யூனுஸும் அவரது மூளையில் உதித்த கிரமின் வங்கியுமாகும்.
முஹம்மது யூனுஸின் அனுபவங்களும், வெற்றிகளும் அமெரிக்காவின் புறநகர் பகுதிகளை கட்டமைக்க உதவும் பாடமாக அமையும் என அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன் கூறியிருக்கிறார்.
யூனுஸின் வறுமை ஒழிப்பு வங்கி திட்டம் உலகளாவிய ஒன்றாக மாறிவிட்டது. அவரது செயல்முறை இன்று 58 நாடுகளில் பின்பற்றப்படுகிறது. அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், நெதர்லாந்த், நார்வே போன்ற வளம் நிறைந்த நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது. யூனுஸின் ஒரே கனவு வறுமை என்ற கொடிய நோயை இந்த பூமியை விட்டே விரட்ட வேண்டும் என்பதுதான்.
வறுமையை ஒழிப்பதற்காக குளிர்சாதன மாளிகை வளாகங்களில் அடிக்குரலில் நுனிநாக்கு ஆங்கிலத்தில் கடந்த அரை நூற்றாண்டுகளாக பேசிக்கொண்..............டே இருந்த கோட் சூட் கனவான்களை கோமாளிகளாக்கி முப்பதாண்டு காலத்திற்குள் அரும்பெரும் சாதனைகளை நிகழ்த்திக்காட்டியுள்ளார் மனிதநேய அறிஞர் முஹம் மது யூனுஸ். இன்று நம்மூரில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக் களுக்கும் ஞானத்தந்தை யூனுஸ்தான்.
இதுவரை நோபல் பரிசுகளால் அதைப் பெற்றுக் கொண்ட அறிஞர்களுக்கு பெருமை சேர்ந்தது. நோபல் பரிசு முஹம்மது யூனுஸுக்கு வழங்கப்படுவதின் காரணமாக முதன்முறையாக நோபல்பரிசு பெருமை அடைகிறது.
நேற்றைய இந்தியன் (அறுபதாண்டு களுக்கு முன்பு இந்தியாவின் ஒரு துண்டாக இருந்தது பங்களாதேஷ்) இன்றைய பங்களாதேஷி என்றும் இந்த இஸ்லாமிய மனித நேயர் முஹம்மது யூனுஸை நாமும் வாழ்த்துவோம். ஈகைத்திருநாளை கொண்டாடும் முஸ்லிம் உலகத்திற்கு இதைவிட நற்செய்தி வேறென்ன இருக்க முடியும்
நோபல் பரிசு பெற்றார் வறுமை ஒழிப்பு போராளி முஹம்மது னுஸ்அபூசாலிஹ்
இன்றைய உலகின் மிகப்பெரிய கொடுமை, 'வறுமையாகும்'. மாறி வரும் பொருளா தாரச் சூழலில் தாக்குப்பிடிக்க முடியாத நிலையில் ஏழை மக்கள் வாழ்கின்றனர். ஏழைகளைச் சுரண்டும் கூட்டம் ஒன்று சுரண்டி சுரண்டி கொழுத்து வருகிறது. மற்றொன்று ஏழை பாமரர்கள் படும் சொல்லொணா வேதனைக் கண்டு வெம்பி, நெக்குருகி அவர்களுக்காக கண்ணீர் வடிக்கும் ஒரு சிறு கூட்டம், கொஞ்சம் பரோபகாரச் சிந்தனை உடையவர்களாக, இயன்ற அளவு இல்லாதவர்களுக்கு தம்மிடம் உள்ளதை கொடுத்து மகிழும் இயல்பினராக வாழ்ந்து வருகின்றனர்.
சொல்லிக் கொடுத்த பாடமும், கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளைக்குத் தாக்கு பிடிக்க முடியும். மீன் பிடித்துக் கொடுப்பதை விட மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்தலே சாலச்சிறந்தது என்பதைப் போல நிரந்தரத் தீர்வு நோக்கி நகர்ந்தவர் கள் யார்? யார்? என்றுத் தேடித் தேடிப் பார்க்கிறோம். தீர்வும் தென்படவில்லை. தீர்வாளர்களும் தென்படவில்லை.
நேற்றைய இந்தியாவின் ஒரு துண்டான வங்கக் கடலோரம், கங்கை நதி தீரத்தில் வறுமையை ஒழிக்கும் சூத்திரத்தை கையிலெடுத்துக் கொண்டு ஒரு தனி மனிதன் எழுந்தான். அவனது ஒவ்வொரு சம்பவங்களையும் சரித்திர சான்றுகளாக அவன் பிறந்த நாடும் பிறநாடுகளும் கொண்டாடி வருகின்றன. தொழில் தொடங்க கடன் வழங்குமாறு வங்கிகளை ஏழைகள் அணுக முடியுமா? ஏழைகளின் சொத்து எது? வறுமை மட்டும் தான். வறுமையை வைத்துக் கொண்டு கடன் கொடுக்க முடியுமா என்ன? ஏழைகள் மேலும் ஏழையாகவே மரித்துபோவதுதான் இன்றைய ஏழை பாமரர்களின் தலையெழுத்தா? என் றெல்லாம் எண்ணியபோதுதான் பொருளாதார ஊன்றுகோல் இன்றி தவித்துக் கொண்டிருந்த ஏழைத் தொழிலாளர்களுக்கு தாய்மார்களுக்கு தம்மால் ஏதும் செய்ய முடியுமா? என அந்த மனிதர் சிந்தித்தார். கந்து வட்டிக் கொடுமைக்காரர்களால் கசக்கி பிழியப்பட்ட ஏழைகளையும் ஏதுமற் றோரையும் அழைத்துக் கொண்டு பணக்காரர்களின் பகட்டுப் புகலிடங்களான வங்கிகளின் சொகுசு படிக்கட்டுகளில் ஏறி இறங்கினார். வங்கிகள் சொத்துக்கள் கேட்டது உத்தரவாதம் கேட்டு உசவியது. பத்திரங்களை காட்டுங்கள் என்று பாடாய்ப்படுத்தி எடுத்தது.
ஏழை பாமர மக்களின் வாழ்வில் வசந்தம் மலர என்ன வழி? என ஒருவர் சிந்தித்தார். அவர் அன்று சிந்தித்தது இன்று சரித்திரமாகி இருக்கிறது.
ஆம்! பங்களாதேஷின் வறுமை ஒழிப்பு போராளி முஹம்மது யூனுஸின் சிந்தனையும் செயல்பாடும் அதன் விளைவால் விளைந்த வெற்றியும் இன்று நோபல் சமாதான விருதுக்கும் உலகின் பாராட்டுக்கும் உரிய தாக மாறிவிட்டது. சுய உதவி குழுக்கள், கிராம வங்கிகள் என்ற மந்திரச் சொற்கள் உலகில் முதன் முதலில் அறிமுகமாகிறது.
மூங்கில் மூலம் பொருட்களை தயாரித்தல், கறவை மாடுகளை வாங்கி பால் பண்ணை கள் நடத்துவது, கோழிப்பண்ணைகளை நடத்துதல், மீன் பிடித்தொழில் போன்றவை களை ஏழைப்பெண்கள் நடத்த அவர்கள் வாழ்வில் வறுமை மெல்ல மெல்ல அகலும் அற்புத நிகழ்வு உலகின் கவனத்தை ஈர்த்து விட்டது. அமெரிக்கா, இந்தியா உள்பட ஏராளமான நாடுகள் இந்த சுய வங்கி திட்டத்தினை ஏற்று செயல்படுத்தத் தொடங்கி விட்டன.
பங்களாதேஷ் வறுமை பிடித்த பூமி. ஏழைகளையும், பாமரர்களையும் வறுமைப் பிடியிலிருந்து மீட்க முடியாது அந்த அரசு திணறியது.
பங்களாதேஷில் பிரதான துறைமுகம் சிட்டகாங். அது அழகிய, ஆனால் ஆபத் தான துறைமுகம். வருடம்தோறும் பலதடவை, வங்கக் கடல் குமுறும் போதெல் லாம் சிட்டகாங்க் துறைமுகம் சின்னா பின்னமாகி விடுவதுண்டு. அதனால் கடற்புர மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது.
கிராமங்களில் வாழும் கோடிக் கணக்கான ஏழைப் பெண்களுக்கு சிறு கடன் வழங்கும் கிராமிய வங்கியை அமைத்தவர். கிராமப்புற ஏழை மக்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்டெடுத் தவர். 'மகளிர் சுய உதவிக் குழுக்களின் தந்தை' என்றே அழைக்கப்படுகிறார் முஹம்மது யூனுஸ்.
அடிமட்டத்திலிருந்து பொருளாதார, சமுதாய, வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பில் சுயமுன்னேற்றத்தில் ஈடுபட்ட ஏழை பாமர மக்களை கைதூக்கி விடும் முயற்சி யாகவே கிராமியன் வங்கியை வறுமை ஒழிப்பு போராளி முஹம்மது யூனுஸ் அமைத்தார்.
தற்போது அவரது சாதனைக் கும், அவரது சாதனையின் சாதனமான கிராமியன் வங்கிக்கும் இணைந்தே நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பதாக நோபல் பரிசு தேர்வுக்குழு கூறியுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் 10லிஆம் தேதி ஆஸ்லோவில் நடைபெறும் வண்ணமிகு விழாவில் முஹம்மது யூனுஸுக்கு ரூ. 25 கோடி பரிசாக வழங்கப்பட உள்ளது.
நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதைப் பற்றி யூனுஸ் பதிலளிக்கும் போது; இது மிகவும் அருமையான விஷயம் நம்ப முடியவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் வியப்பு தெரிவித்திருக்கிறார்.
கிராமிய வங்கியை உருவாக்கிய எமது முயற்சிக்கும் அதற்காக அரும் பாடுபட்ட தாய்மார்களின் உழைப்புக் கும் கிராமிய வங்கியை வெற்றிகர சாதனையாக்கிய தாய்மார்களுக்கும் கிடைத்த உலகளாவிய அங்கீகார மாகவே இதனைக் கருதுகிறேன். எனது எதிர்கால திட்டங்களை செழுமைப் படுத்த இந்நிகழ்வு எமக்கு ஊக்கம் வழங்குகிறது. இந்தப் பரிசுத் தொகை யையும் கிராமப்புற மக்களுக்கு கடன் வழங்குவதற்காக பயன்படுத்துவேன் என்கிறார் வறுமை ஒழிப்பு போராளி முஹம்மது யூனுஸ்.
வெளிநாட்டு கல்வி உதவியுடன் பொருளாதாரம் பயின்ற முஹம்மது யூனுஸ் கல்வி கற்று தனது தாயகம் திரும்பியபோது (1974) அங்கு பஞ்சமும், பட்டினியும் கோரதாண்டவமாடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஏங்கிய அவர் தனது கையிலிருந்த சிறு தொகையான 227 டாலர்களைக் கொண்டு சிறு கடன் வழங்கத் தொடங்கினார். அன்று உருவான சிறு முயற்சி, சிறிய ஜுவாலையாக உலக ஏழை மக்களை வசீகரிக்கும் வெளிச்சமாக மாறியது. 1976லில் கிராமிய வங்கி தொடங்கப்பட்டது. ஏழை உழைக்கும் பெண்களுக்கே கிராமிய வங்கி கடன் வழங்குவதில் முன்னு ரிமை வகித்தது.
பங்களாதேஷிலுள்ள வணிக வங்கிகளுக்கு இணையாக கிராமியன் வங்கி விரை வாக வளரத் தொடங்கியது.
1983லில் பங்களாதேஷ் அரசு ஓர் சட்டத்தை இயற்றி கிராமியன் வங்கியின் பாதுகாப்பை உறுதிபடுத்தியது. இன்று பங்களாதேஷ் முழுவதும் 71லிஆயிரம் கிராமங்களில் 2 ஆயிரத்து 200 கிளைகளுக்கு இந்த ஏழை உழைக்கும் மக்களுக் கான வங்கி விரிவடைந்துள்ளது.
வறுமை ஒழிப்புப் போராளி முஹம்மது யூனுஸ்லின் கிராமியன் வங்கி இதுவரை 66 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு கடன்களை வழங்கியுள்ளது. இதில் 97 சதவீதம் பேர் பெண்கள் என்பது ஆச்சரியப்படுத்தும் உண்மையாகும்.
இன்றுவரை 25 ஆயிரத்து 740 கோடி ரூபாயை இவ்வங்கி கடனாக வழங்கியுள்ளது. அதில் 22 ஆயிரத்து 815 கோடி ரூபாய் திரும்ப செலுத்தப்பட்டுள்ளது.
சற்று சிந்தித்துப் பார்த்தால் பெரும் தொழிலதிபர்கள் எல்லாம் வங்கிகளில் (அதாவது பெரிய பெரிய வங்கிகளில்) கோடிக்கணக்கில் கடன்களை வாங்கி விட்டு திரும்ப செலுத்தாமல் ஏப்பம் விட்ட, ஏப்பம் விட்டுக் கொண்டும் வரும் காட்சிகளை நாம் தொடர்ச்சியாக கண்டு வருகிறோம்.
ஆனால், ஏழை பாமர மக்கள் வாங்கிய சின்னஞ்சிறிய தொகைகளை நீதி நியாயத்திற்கு கட்டுப்பட்டு திரும்ப செலுத்தியுள்ளனர். இந்த வங்கியின் கடன் வசூல் விகிதம் 98.85 சதவீதமாகும். இது வங்கியின் சிறந்த செயல்பாட்டின் அடையாளமாகும்.
கிராமப்புற ஏழைப் பெண்களுக்கு சிறு கடன் வழங்கும் இத்திட்டம்தான் இந்தியா வில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்படுவதற்கு வழிவகுத்தது.
வறுமை ஒழிப்பு போராளி முஹம்மது யூனுஸின் இத்திட்டம் மேல்திசையில் அமெரிக்கா முதல் கிழக்கில் இந்தியா உள்பட ஆப்பிரிக்க கண்டத்தின் உகாண்டா வரை உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் பின்பற்றி நடக்கும் வழியாக மாறியுள்ளது.
உழைக்காமல் சோம்பித்திரியும் வீணர்கள் வெட்கப்படும் விதமாக, தன்மானத்தையும், சுய முன்னேற்றத் தையும் முன்னிலைப்படுத்தும் விதமாக பங்களாதேஷ் உழைக்கும் பெண்களின் சாதனைகள் அமைந்துள்ளது.
2004லில் அசோஷியேட் பிரஸ்க்கு முஹம்மது யூனுஸ் பேட்டியளித்தபோது: சூஃபியா பேகம் என்ற 21 வயது இளம்பெண் தனதுமென்கரங்களால் மூங்கில் கூடைகளை உருவாக்கிக் கொண்டிருந்தார். அந்த கூச்ச சுபாவமுடைய இளம் பெண்ணிடம் வறுமை ஒழிப்பு போராளி முஹம்மது யூனுஸ் மெல்ல பேச்சுக் கொடுத்தார்.
சூஃபியா பேகம் எவ்வளவு ரூபாய் சம்பாதிக்கிறார் என யூனுஸ் கேட்டபோது 5 டாகா (பங்களாதேஷ் நாணயம்) கடன் தருபவர்களிடம் கடன் வாங்கி இந்த மூங்கில் பொருட்களை செய்வதாகக் கூறியிருக்கிறார். அப்போது முஹம்மது யூனுஸ் நினைத்தாராம் யா அல்லாஹ் இந்த இளம் பெண் 5 டாகாவிற்காக கடன் கொடுத்தவனுக்கு அடிமையாக மாறும் அவல நிலை ஏற்பட்டுள்ளதே என்பதை எண்ணி மனம் வருந்திய யூனுஸ் எப்படி இந்த ஏழைப் பெண்கள் மேலும் மேலும் ஏழைகளாக மாறுகின்றனர் என்பதைப் புரியாத நிலையில் தனது மாணவர்களின் மூலம் திறந்த சர்வே ஒன்றை ஜெôப்ரா என்ற கிராமத்தில் நடத்தியபோது, 43 கிராமப் பெண்களின் நிதிநிலை மிகவும் மோசமாக இருந்ததை சர்வேயின் முடிவு கள் தெரிவித்தன. 27 அமெரிக்கன் டாலர் இருந்தால் அவர்கள் அனைவரும் கந்து வட்டிக்காரர்களின் கொடுமையிலிருந்து மீட்கப்படுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
உழைப்பிலும் உன்னத நோக்கத்திலும் சிறந்த அந்த மக்கள் ஓராண்டுக்குள் அந்தக் கடன் தொகையை முழுமையாக திருப்பிக் கொடுத்து வர்த்தகத்தில் உயர்வு கண்டார்கள்.
மைக்ரோசாஃப்ட் என்ற உலகின் மாபெரும் நிறுவனத்தையும் அதன் அதிபர் உலக பணக்காரர் பில்கேட்ஸை யும் பற்றி மட்டுமே அறிந்திருந்த உலகம் மைக்ரோ கிரெடிட் என்ற சிறு கடன்களை வழங்கும் வங்கியை அறிமுகப்படுத்தி உழைப்பு க்கு வலு சேர்த்து இல்லாமை இருளை அகற்ற போராடும் முஹம்மது யூனுஸின் பெயரை உச்சரிக்கத் தொடங்கியுள்ளது.
முஹம்மது யூனுஸ் 1940ல் சிட்டகாங் நகரில் தனது பெற்றோருக்கு மூன்றாவது மகனாக பிறந்தார். 14 பேரை உடன்பிறந்தவர்களாகக் கொண்டிருந்த முஹம்மது யூனுஸ் உடன்பிறந்த ஐவரை குழந்தைப் பருவத்திலேயே இழந்தார். யூனுஸின் தந்தை நகரில் பிரசித்த பெற்ற தங்க நகைத் தொழிலாளியாக இருந்ததால் தன் மகனின் உயர் படிப்புக்கு உரிய ஊக்கம் அளித்தார்.
பசிப்பிணி போக்கும் உயர் எண்ணத்தை தனது தாயார் சூஃபியா ஹாத்தூனிடம் இருந்து பெற்றுக் கொண்டதாகக் கூறும் யூனுஸ், ஏழைகளுக்கு உதவும் நோக்கம் கொண்டவர் அவர்களின் கதவுகளை உடைத்துக் கொண்டு சென்று உதவ வேண்டும், காலம் நேரம் பார்க்கக்கூடாது என்று தனது அன்னை சூஃபியா ஹாத்தூன் கூறுவார் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்.
டாக்காவில் கிரமின் வங்கியின் தலைமை அலுவலகத்தில் தனது பௌதிக பட்டதாரி மனைவி அஃப்ரோஜி மற்றும் ஒரே செல்ல மகள் தீனாவுடன் இரண்டு அறை கொண்ட எளிமையான ப்ளாட்டில் வசிக்கிறார்.
ஆயிரக்கணக்கில், பிச்சைக்காரர்கள் உலாவும் பங்களாதேஷில் இன்று கிரமின் வங்கியின் சேவையால் பிச்சைக்காரர்கள் ஒழிக்கப்பட்டு வருகின்றனர்.
9 டாலர் கிரமின் வங்கியில் கடனாகப் பெற்று சிறு பொருட்களை வாங்கி விற்று, பின்னர் கடனையும் கண்ணியமாக திருப்பிச் செலுத்துகின்றனர். இன்று கிரமின் வங்கியின் வாடிக்கை யாளர்களாக பங்களாதேஷின் 50,000 பிச்சைக்காரர்கள் வியாபாரிகளாக மாறிவிட்டனர். அவர்களை மாற்றியது வறுமை ஒழிப்புப் போராளி முஹம்மது யூனுஸும் அவரது மூளையில் உதித்த கிரமின் வங்கியுமாகும்.
முஹம்மது யூனுஸின் அனுபவங்களும், வெற்றிகளும் அமெரிக்காவின் புறநகர் பகுதிகளை கட்டமைக்க உதவும் பாடமாக அமையும் என அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன் கூறியிருக்கிறார்.
யூனுஸின் வறுமை ஒழிப்பு வங்கி திட்டம் உலகளாவிய ஒன்றாக மாறிவிட்டது. அவரது செயல்முறை இன்று 58 நாடுகளில் பின்பற்றப்படுகிறது. அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், நெதர்லாந்த், நார்வே போன்ற வளம் நிறைந்த நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது. யூனுஸின் ஒரே கனவு வறுமை என்ற கொடிய நோயை இந்த பூமியை விட்டே விரட்ட வேண்டும் என்பதுதான்.
வறுமையை ஒழிப்பதற்காக குளிர்சாதன மாளிகை வளாகங்களில் அடிக்குரலில் நுனிநாக்கு ஆங்கிலத்தில் கடந்த அரை நூற்றாண்டுகளாக பேசிக்கொண்..............டே இருந்த கோட் சூட் கனவான்களை கோமாளிகளாக்கி முப்பதாண்டு காலத்திற்குள் அரும்பெரும் சாதனைகளை நிகழ்த்திக்காட்டியுள்ளார் மனிதநேய அறிஞர் முஹம் மது யூனுஸ். இன்று நம்மூரில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக் களுக்கும் ஞானத்தந்தை யூனுஸ்தான்.
இதுவரை நோபல் பரிசுகளால் அதைப் பெற்றுக் கொண்ட அறிஞர்களுக்கு பெருமை சேர்ந்தது. நோபல் பரிசு முஹம்மது யூனுஸுக்கு வழங்கப்படுவதின் காரணமாக முதன்முறையாக நோபல்பரிசு பெருமை அடைகிறது.
நேற்றைய இந்தியன் (அறுபதாண்டு களுக்கு முன்பு இந்தியாவின் ஒரு துண்டாக இருந்தது பங்களாதேஷ்) இன்றைய பங்களாதேஷி என்றும் இந்த இஸ்லாமிய மனித நேயர் முஹம்மது யூனுஸை நாமும் வாழ்த்துவோம். ஈகைத்திருநாளை கொண்டாடும் முஸ்லிம் உலகத்திற்கு இதைவிட நற்செய்தி வேறென்ன இருக்க முடியும்